அப்பீட் பிக்சர்ஸ் ( Upbeat Pictures ) சார்பில், தயாரிப்பாளர் VRV குமார் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் கௌதம் கணபதி இயக்கத்தில், தர்ஷன் நாயகனாக நடிக்க, காவல்துறை பின்னணியில், அதிரடி ஆக்சன் திரில்லராக உருவாகியுள்ள திரைப்படம் “சரண்டர்”. இப்படம் வரும் ஆகஸ்ட் […]
சினிமா
அமோகம் ஸ்டுடியோஸ் மற்றும் வொயிட் லேம்ப் பிக்சர்ஸ் கே. சுபாஷினி வழங்கிய ‘ஜென்ம நட்சத்திரம்’ படத்தை பி. மணிவர்மன் இயக்கி இருந்தார். தமன் ஆகாஷ் கதாநாயகனாக நடித்திருந்த இந்தப் படம் கடந்த ஜூலை 18 அன்று திரையரங்குகளில் வெளியானது. ரோமியோ பிக்சர்ஸ் […]
சினிமா
ஆர்ட் அப் ட்ரையாங்கிள்ஸ் ஃபிலிம் கம்பெனி தயாரிப்பில், தமிழ் தயாளன் இயக்கத்தில், ஆதவன், ஷீலா, ஜாக்குலின், சார்லஸ், விணோத் உள்ளிட்டோர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் “கெவி”. கதைப்படி.. கொடைக்கானல் அருகே உள்ள வெள்ள கெவி மலைக்கிராம மக்கள் சாலை, மருத்துவம் உள்ளிட்ட […]
விமர்சனம்
திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் பகுதியை சேர்ந்த முருகானந்தம் ( 23 ) இரு தினங்களுக்கு முன் மடத்துக்குளம் அடுத்துள்ள கே.டி.எல் பகுதியில் சாலையோரத்தில் நின்றிருந்த இரண்டு சக்கர வாகனத்தை திருடிய குற்றத்திற்காக போலீசாரால் கைது செய்யப்பட்டு, விசாரணைக்காக மடத்துக்குளம் காவல்நிலையம் அழைத்து […]
தமிழகம் மாவட்ட செய்திகள்திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் பகுதியை சேர்ந்த முருகானந்தம் ( 23 ) இரு தினங்களுக்கு முன் மடத்துக்குளம் அடுத்துள்ள கே.டி.எல் பகுதியில் சாலையோரத்தில் நின்றிருந்த இரண்டு சக்கர வாகனத்தை திருடிய குற்றத்திற்காக போலீசாரால் கைது செய்யப்பட்டு, விசாரணைக்காக மடத்துக்குளம் காவல்நிலையம் அழைத்து வந்துள்ளனர். பின்னர்
காவல்நிலைய வளாகத்தில் போலீசாரை தாக்கிவிட்டு தப்பியோடிவிட்டார்.

அதனைத்தொடர்ந்து தப்பியோடிய முருகானந்தம் என்பவரை பிடிக்க உடுமலை உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் வெற்றிவேந்தன் தலைமையில் தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும் அவர் மீது ஏற்கனவே பல்வேறு திருட்டு மற்றும் குற்ற வழக்குகள் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட நபர் தப்பியோடிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
– சாதிக் பாட்சா
ராகம் மூவீஸ் சார்பில், ராஜு மல்லையாத் மற்றும் கான்ஃபிடன்ட் குரூப் சி.ஜே.ராய் தயாரிப்பில், டோவினோ தாமஸ், திரிஷா, வினய் ராய் நடிப்பில், கடந்த வாரம் வெளியான திரில்லர் திரைப்படம் “ஐடென்டிட்டி” IDENTITY. இப்படம், மலையாளத்தில் மட்டுமல்லாது, தமிழிலும் நல்ல வரவேற்பைப் பெற்று […]
சினிமாராகம் மூவீஸ் சார்பில், ராஜு மல்லையாத் மற்றும் கான்ஃபிடன்ட் குரூப் சி.ஜே.ராய் தயாரிப்பில், டோவினோ தாமஸ், திரிஷா, வினய் ராய் நடிப்பில், கடந்த வாரம் வெளியான திரில்லர் திரைப்படம் “ஐடென்டிட்டி” IDENTITY. இப்படம், மலையாளத்தில் மட்டுமல்லாது, தமிழிலும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
இந்நிலையில் படக்குழுவினர் பத்திரிகையாளர்களைச் சந்தித்து, படம் குறித்த அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.

இயக்குநர் அகில் பேசும்போது…
‘எங்கள் படம் ஐடென்டிட்டி இங்கு தமிழ்நாட்டில், மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. ஒவ்வொரு நாளும் கலெக்சன் உயர்ந்து வருகிறது. இந்தப்படம் பார்த்து, பாராட்டி கருத்து தெரிவித்த, அனைத்து நண்பர்களுக்கும் நன்றி. இப்படத்தில் கதை, ஆக்சன் காட்சிகள் எல்லாம் ஒன்றரை வருடம் வருடம் கஷ்டப்பட்டு உருவாக்கியது என்றார்.

நடிகர் வினய் பேசியதாவது..
அகில் 2020ல் இந்தப்படத்தின் கதை சொன்னார். யார் வந்தாலும், யார் வராவிட்டாலும், இந்தப்படம் நான் செய்வேன் என்றேன். பின் திரிஷா கமிட்டானதாகச் சொன்னார்கள். அப்போதே இந்தப்படம் வெற்றி என்பது புரிந்து விட்டது. என்னுடைய கேரியரில் இந்தப்படம் மாதிரி கதை வந்ததில்லை, டொவினோ தேர்ந்தெடுத்து படங்கள் செய்பவர். டொவினோ, அகில் இருவருக்கும் இந்தப்படத்தில் என்னைத் தேர்ந்தெடுத்தற்கு நன்றிக் கூறிக்கொள்கிறேன். இந்தப்படம் என் வாழ்வில் மிக முக்கியமான கட்டத்தில் வந்தது. மிக மிக என்ஜாய் செய்தேன். தமிழ் ரசிகர்கள் இந்தப் படத்திற்குப் பெரிய வரவேற்பு தந்துள்ளீர்கள் நன்றி என்றார்.

நடிகர் டொவினோ தாமஸ் பேசும்போது. இந்தப்படம் 2020 லிருந்து நானும் அகிலும் பேசிக் கொண்டிருக்கிறோம். அப்போதே ஷாட் டிவிசனோடு தயாராக இருந்தார். இந்தப்படம் சீரியஸ் என்றாலும், ஷூட்டிங் ரொம்ப ரொம்ப ஜாலியாக இருந்தது. தமிழில் இந்தப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. என்னுடைய எந்தப்படம் தமிழில் வெளியானாலும், தமிழ் ரசிகர்கள் உற்சாகமான வரவேற்பு தருகிறார்கள். இன்னும் நல்ல தமிழ்ப்படங்களைத் தொடர்ந்து தருவேன். உங்களோடு என் படங்கள் பற்றி உரையாட எனக்கு அவ்வளவு பிடிக்கும். இந்த அன்பிற்கு நன்றி’ என்றார்.

நடிகை திரிஷா பேசும்போது..
‘நான் உங்களை நிறைய தமிழ்ப் படங்களுக்காகச் சந்தித்துள்ளேன், முதல் முறையாக, ஒரு மலையாளப்படத்திற்காக சந்திக்கிறேன். பொதுவாகவே மலையாளப்படங்கள் நல்ல கதையம்சம் கொண்டதாக உள்ளது. நான் நிறைய முறை சொல்லியுள்ளேன், எனக்கு மலையாளப்படங்கள் ரொம்பப் பிடிக்கும். நிறைய மரியாதை உள்ளது. வருடத்திற்கு ஒரு மலையாளப்படம் செய்ய வேண்டும் என நினைத்தேன். அந்த நேரத்தில் இந்த வாய்ப்பு வந்தது. ஐடென்டிட்டி டீமிற்கு மிகப்பெரிய நன்றி. மிக புத்திசாலித்தனமான திரைக்கதை. எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அகில் கதை சொன்ன விதமே பிரமாதமாக இருந்தது. டோவினோ மலையாளத்தில் மிகப்பெரிய ஹீரோ. அவர் தேர்ந்தெடுக்கும் படங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். அவருடன் நடித்தது மிக நல்ல அனுபவம். அகில் சிரித்துக் கொண்டே இருந்தாலும் மிக சீரியஸாக வேலை செய்வார். வினய் ரொம்ப காலமாகத் தெரியும். இந்தப்படம் மிக மிக நல்ல அனுபவமாக இருந்தது. நாங்கள் ஷூட் செய்யும் போதே வெற்றி பெறும் எனும் நம்பிக்கை இருந்தது. மலையாளத்தில் எப்போதும் பெண்களுக்கு நல்ல கேரக்டர்கள் எழுதுவார்கள். இங்கு ரிலீஸ் நாளிலிருந்து நல்ல ரெஸ்பான்ஸ் இருந்து வருகிறது. இப்போது தமிழில் கிடைத்து வரும் வரவேற்பு மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.
எஸ்.ஆர். புரொடக்ஷன்ஸ் சார்பில் B.ஜெகதீஷ் தயாரிப்பில், ரங்கோலி பட இயக்குநர் வாலி மோகன் தாஸ் இயக்கத்தில், மலையாள நடிகர் ஷேன் நிகம், கலையரசன், நிஹாரிகா நடிப்பில், புதுமையான ஆக்சன் டிராமாவாக உருவாகியுள்ளது “மெட்ராஸ்காரன்” திரைப்படம். இந்தப் பொங்கல் கொண்டாட்டமாக திரைக்கு வரவுள்ள […]
சினிமாஎஸ்.ஆர். புரொடக்ஷன்ஸ் சார்பில் B.ஜெகதீஷ் தயாரிப்பில், ரங்கோலி பட இயக்குநர் வாலி மோகன் தாஸ் இயக்கத்தில், மலையாள நடிகர் ஷேன் நிகம், கலையரசன், நிஹாரிகா நடிப்பில், புதுமையான ஆக்சன் டிராமாவாக உருவாகியுள்ளது “மெட்ராஸ்காரன்” திரைப்படம்.
இந்தப் பொங்கல் கொண்டாட்டமாக திரைக்கு வரவுள்ள நிலையில் இப்படத்தின் முன் வெளியீட்டுப் பணிகள் பரபரப்பாக நடந்து வருகிறது.
முன்னதாக இப்படத்தின் போஸ்டர்கள், டீசர் மற்றும் சிங்கிள் பாடல்கள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், படக்குழுவினர் டிரெய்லரை வெளியிட்டனர். டிரெய்லர் வெளியீட்டு விழாவில் படக்குழுவினர் கலந்துகொண்டு, படம் குறித்த அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர்.
இந்நிகழ்வினில்.. தயாரிப்பாளர் B.ஜெகதீஷ் பேசியதாவது.. இந்த படத்தின் டீசரை வெளியிட்டுத் தந்த எஸ் டி ஆருக்கும், டிரெய்லரை வெளியிட்டுத் தந்த விஜய் சேதுபதிக்கும் நன்றி. அடுத்ததாக விடாமுயற்சி டீமுக்கும் அஜித் சாருக்கும் நன்றி. அவர்களால் தான் இந்தப்படம் பொங்கலுக்கு வருகிறது. இந்தப்படத்தை ஆரம்பித்த போது பொங்கல் மாதிரி பண்டிகையில் வெளியிட வேண்டும் என நினைத்தோம், அது நடந்துள்ளது. இது பொங்கல் பண்டிகைக்கு ஏற்ற படம். காதல், ஆக்சன் என எல்லா அம்சங்களும் இப்படத்தில் உள்ளது. இந்தப்படத்தோடு பத்து படங்கள் பொங்கலுக்கு வருகிறது. வரட்டும் கண்டிப்பாக மெட்ராஸ்காரன் அனைவருக்கும் பிடிக்கும் என்றார்.

நடிகை ஐஸ்வர்யா தத்தா பேசியதாவது.. தயாரிப்பாளர் ஜெகதீஷ்க்கு வாழ்த்துக்கள். அவர் மிகச்சிறந்த தயாரிப்பாளர், மிகச் சிறந்த மனிதர். திரைத்துறைக்குத் தேவையான தயாரிப்பாளர். எனக்கு இந்த திரைப்படத்தில் வாய்ப்பு தந்ததற்கு நன்றி. இந்தப்படத்தில் மிக நல்ல நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர். ஷேன் நிகம் வெல்கம் டு தமிழ் சினிமா, வாழ்த்துக்கள். நிஹாரிகாவுக்கும் வாழ்த்துக்கள். கலையரசன் மிகச் சிறந்த கோ ஸ்டார், அவருக்கும் வாழ்த்துக்கள். ஜனவரி இந்த பொங்கலுக்கு மெட்ராஸ்காரன் படத்தைப் பார்த்து எல்லோரும் ஆதரவு தாருங்கள். இயக்குநர் வாலி மோகன் தாஸுக்கு வாழ்த்துக்கள். இந்த திரைப்படம் மிகப் பெரிய திருப்புமுனையாக அமையும் என்றார்.
நடிகை நிஹாரிகா பேசியதாவது..
எங்களது திரைப்படம் இறுதியாக இந்தப் பொங்கலுக்கு வெளியாகிறது. நான் நிறையப் பேருக்கு நன்றி சொல்ல வேண்டும், முதலில் தயாரிப்பாளர் ஜெகதீஷ்க்கு நன்றி. அவர் பல தடைகளைத் தாண்டி, இந்த திரைப்படத்தைத் திரைக்குக் கொண்டு வந்திருக்கிறார். ஒரு தயாரிப்பாளராக, ஒரு படத்தைத் தயாரிப்பது எவ்வளவு கஷ்டம் என்பது, எனக்கு தெரியும். இந்த நிலைக்கு இந்த படத்தைக் கொண்டு வந்ததே வெற்றியின் முதல் படி தான். ஒரு மிகச் சிறந்த திரைப்படத்தைத் தயாரித்திருக்கிறீர்கள். இதில் பணிபுரிந்த அனைத்து கலைஞர்களும் தங்களது முழு உழைப்பைத் தந்திருக்கிறார்கள். எடிட்டர் வசந்த் மிக அட்டகாசமாகப் படத்தைத் தொகுத்து இருக்கிறார். இசையமைப்பாளர் சாம் சி எஸ், உங்களின் மிகத் தீவிர ரசிகை நான், மிக அற்புதமான இசையைத் தந்து இருக்கிறீர்கள். காதல் சடுகுடு பாட்டைத் தந்த சரிகமா நிறுவனத்திற்கு நன்றி. என்னுடன் இணைந்து நடித்த நடிகர்கள் அனைவருக்கும் நன்றி. இயக்குநர் வாலி மோகன்தாஸ், இந்த படத்தில் இந்த கதாபாத்திரத்திற்காக என்னைத் தேர்ந்தெடுத்ததற்கு மிகப்பெரிய நன்றி என்றார்.

நடிகர் கலையரசன் பேசியதாவது,
மெட்ராஸ் என் சொந்த ஊர், எப்போதுமே எனக்கு மெட்ராஸ் பிடிக்கும். மெட்ராஸ்காரன் திரைப்படத்தில் ஒரு பங்காக நானும் இருப்பது, மகிழ்ச்சி. நடிகர் ஷேன் நிகம் வெல்கம் டு தமிழ் சினிமா. தயாரிப்பாளர் ஜெகதீஷ்க்கு வாழ்த்துக்கள். மிகச்சிறந்த படத்தைத் தந்துள்ளீர்கள், ஒரு படத்தைத் தயாரிப்பதை விட, அதை ரிலீஸ் செய்வது மிகவும் கஷ்டம். இன்றைய நிலைமையில், தியேட்டர், ஓடிடி என பிசினஸ் பார்ப்பது, திரையரங்குக்குத் திரைப்படத்தைக் கொண்டு வருவது, மிகப் பெரிய படங்களுக்கே சிக்கலாக உள்ளது, அந்த வகையில் இந்த படத்திற்கு டிரெய்லருக்கு ஒரு விழா, டீசருக்கு ஒரு விழா, என மிக சிறப்பாக விளம்பரப்படுத்தி வரும் தயாரிப்பாளருக்கு நன்றிகள். என்னிடம் சிலர், என்ன தயாரிப்பாளர் நிறையப் பணம் வைத்திருக்கிறாரா ? என்று கேட்டனர். இல்லை நல்ல மனது வைத்திருக்கிறார் என்று சொன்னேன். என்னுடன் இந்த படத்தில் நடித்த நடிகர்கள் அனைவருக்கும் நன்றி. எல்லோருமே மிகச் சிறந்த நடிப்பை வழங்கியிருக்கிறார்கள். ஒளிப்பதிவாளர் பிரசன்னா மிகச் சிறந்த ஒளிப்பதிவைத் தந்துள்ளார். என்னுடைய அடுத்த படத்திற்கும் சாம் சி எஸ் தான் இசையமைப்பாளர். சாம் சி எஸ் இசை எப்போதும் நம்முடைய நடிப்பை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும், அவருக்கு என் நன்றி. இந்த படத்தில் என் கதாபாத்திரமே மிக வித்தியாசமாக இருந்தது, எனக்கு மிகவும் பிடித்திருந்தது, கண்டிப்பாக மெட்ராஸ்காரன் உங்களை மகிழ்விக்கும் படைப்பாக இருக்கும். இந்த பொங்கலுக்கு நிறையத் திரைப்படங்கள் வருகிறது, ஒரு பெரிய படம் வரவில்லை என்றவுடன் இத்தனை திரைப்படங்கள் வருவது, நல்ல விஷயம் தான், ஆனால் இது நார்மலாகவே நடந்தால் நன்றாக இருக்கும். ஒரு பண்டிகையின் போது, முன்பெல்லாம் பல திரைப்படங்கள் வெளியாகும் நிலை இருந்தது, அந்த நிலை மீண்டும் வரவேண்டும் என்றார்.

இயக்குநர் வாலி மோகன் தாஸ் பேசியதாவது, இப்படத்திற்காக நிறையப் பேருக்கு நன்றி சொல்ல வேண்டும். தயாரிப்பாளர் ஜெகதீஷ், இப்படத்தை டீசரில் ஆரம்பித்து, சிங்கிள், டிரெய்லர் என ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு விழா எடுத்து, இப்படத்தை மிகச் சிறப்பாக எடுத்துச் சென்று கொண்டிருக்கிறார் அவருக்கு என் நன்றிகள். அடுத்ததாக ஐஸ்வர்யா தத்தா, அவர் எனது நெருங்கிய நண்பர், இந்த படம் அவரால் தான் துவங்கியது, அவருக்கு என் நன்றிகள். ஷேன் நிகம் என்னை நம்பி இந்த படத்திற்குள் வந்ததற்கு நன்றி. நிஹாரிகா உங்களுக்கு ஒரு முறை தான், கதை சொன்னேன், என்னை நம்பி வந்ததற்கு நன்றி. கலையரசனுடன் நிறைய உரையாடினேன், மிகச் சிறந்த மனிதர் அவருக்கு என் நன்றிகள். நடிகர் கருணாஸ் என் வாழ்க்கையிலும் அவர் மிக முக்கியமான நபர், இந்தப் படத்தில் மிக சீரியஸ் ரோல் அதை மிக அழகாகச் செய்து தந்தார். இந்தப் படத்திற்காக என்னுடன் உழைத்த அனைத்து படக்குழுவினருக்கும் நன்றி என்றார்.

நடிகர் ஷேன் நிகம் பேசியதாவது..
நான் ரொம்ப லக்கி, மலையாளத்தில் கூட எனக்கு இப்படிச் சிறப்பான அறிமுகம் கிடைக்கவில்லை. தமிழில் ஒரு மிகச் சிறப்பான திரைப்படம் கிடைத்திருக்கிறது. தயாரிப்பாளர் ஜெகதீஷ்க்கு நன்றி. அவர் இப்படத்திற்காகக் கடுமையாக உழைத்து வருகிறார். என்னை இந்த கதாபாத்திரத்திற்கு யோசித்த இயக்குநர் வாலி மோகன் தாஸுக்கு நன்றி. என்னுடன் இந்த திரைப்படத்தில் நடித்த நடிகர்கள் அனைவருக்கும் நன்றி. நடிகர் கலையரசன் மிக இயல்பானவர். பார்த்தவுடன் மச்சான் என அழைத்து, மிக இயல்பாகப் பழகுவார். அவ்வளவு எளிமையானவர். ஒளிப்பதிவாளர் பிரசன்னா மிகச் சிறந்த ஒளிப்பதிவு தந்துள்ளார். இவரை விட வெகு வேகமாக வேலை செய்யும் ஒளிப்பதிவாளரை நான் சந்தித்ததே இல்லை. எடிட்டர் வசந்த் மிக அற்புதமாகப் படத்தை எடிட் செய்துள்ளார். இசையமைப்பாளர் சாம் சி எஸ் அட்டகாசமான இசையைத் தந்துள்ளார். இப்படத்தில் அனைத்து கலைஞர்களும் மிகச் சிறப்பான உழைப்பைத் தந்து இருக்கிறார்கள். நிஹாரிகா மிகச்சிறந்த கோ ஸ்டார் அவருக்கு நன்றி. ஐஸ்வர்யா தத்தா மிகவும் அப்பாவி, இவ்வளவு இன்னொசன்ஸாக ஒருத்தரை நான் பார்த்ததில்லை, மனதில் பட்டதைப் பேசுவார். அவருக்கு இந்தப்படம் திருப்புமுனையாக இருக்கும். இந்த படம் கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும் படமாக இருக்கும். எனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி என்றார்.
இயக்குநர் சுந்தர் சி, விஷால் கூட்டணியில் உருவான படம் ‘மதகஜராஜா’. ஜெமினி பிலிம் சர்க்யூட் இந்தப்படத்தை தயாரித்துள்ளது. கடந்த 2012ல் துவங்கிய இந்தப்படம் 2013லேயே ரிலீஸுக்கு தயாரானாலும் சில சந்தர்ப்ப சூழ்நிலைகளால் வெளியாக முடியாத நிலை ஏற்பட்டு கிட்டத்தட்ட 12 வருடங்கள் […]
சினிமா சென்னைஇயக்குநர் சுந்தர் சி, விஷால் கூட்டணியில் உருவான படம் ‘மதகஜராஜா’. ஜெமினி பிலிம் சர்க்யூட் இந்தப்படத்தை தயாரித்துள்ளது. கடந்த 2012ல் துவங்கிய இந்தப்படம் 2013லேயே ரிலீஸுக்கு தயாரானாலும் சில சந்தர்ப்ப சூழ்நிலைகளால் வெளியாக முடியாத நிலை ஏற்பட்டு கிட்டத்தட்ட 12 வருடங்கள் கடந்துவிட்டன. இந்த நிலையில் தற்போது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 12ஆம் தேதி மதகஜராஜா வெளியாக இருக்கிறது.
இதில் கதாநாயகிகளாக அஞ்சலி மற்றும் வரலட்சுமி இருவரும் நடித்துள்ளனர். அப்போது முன்னணி காமெடி நடிகராக வலம் வந்த சந்தானம் இந்த படத்தில் விஷாலுடன் இணைந்து முழு நீள காமெடி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மணிவண்ணன் மற்றும் மனோபாலா போன்ற மறைந்த நட்சத்திரங்களும் இந்த படத்தில் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இயக்குநர் சுந்தர்சியுடன் அவருக்கு இது முதல் படம்.
பொங்கலுக்கு படம் வெளியாவதை தொடர்ந்து மதகஜராஜா படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்து இந்த படம் வெளியாவது குறித்த மகிழ்ச்சியையும் இந்த படம் குறித்த அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டனர்.

இயக்குனர் சுந்தர்.சி பேசும்போது, “மதகஜராஜா” வெளியாவதில் ஒரு இயக்குனராக அவ்வளவு சந்தோஷம் இருக்கிறது. எதிர்பாராமல் ஆரம்பித்த ஒரு சந்தோஷமான நிகழ்வு இது. சில தினங்களுக்கு முன்பு ஒரு நாள் இரவு 12 மணி அளவில் திருப்பூர் சுப்பிரமணியம் எனக்கு போன் செய்தார். இந்நேரத்தில் அழைக்கிறாரே என நினைத்தால் மதகஜராஜா படத்தை பார்க்க தயாரிப்பாளர் அழைத்தார், பல வருடங்கள் ஆகிவிட்டதால் படம் எப்படி இருக்குமோ என்று நினைத்தபடி பார்க்க சென்றால் படம் சூப்பராக இருப்பதாக கூறி, படத்தைப் பற்றி அரை மணி நேரம் ரசித்து பேசினார். இந்த முப்பது வருடங்களில் என்னிடம் படங்களின் வசூல் நிலவரங்கள் பற்றி தான் பேசுவாரே தவிர படத்தின் விமர்சனம் பற்றி எதுவும் சொல்ல மாட்டார். அப்படிப்பட்டவர் இந்த படத்தை பற்றி பாராட்டி பேசினார் என்கிறபோது எனக்கு ரொம்பவே சந்தோஷமாக இருந்தது. அதோடு நிற்காமல் அந்த படம் சம்பந்தப்பட்டவர்களிடம் அவர் பேசி இதோ பொங்கல் வெளியீடாக ஜனவரி 12-ம் தேதி மதகஜராஜா ரிலீஸ் ஆகப் போகிறது. இந்த படம் எனக்கு ரொம்பவே ஸ்பெஷல். இந்த படம் துவங்கிய போது தான் எனக்கு என் குடும்பத்தில் ஒரு நபராக விஷால் கிடைத்தார். அப்போது முரட்டுக்காளை, போக்கிரி ராஜா போன்ற ஒரு ஜனரஞ்சகமான, குடும்பத்துடன் அனைவரும் பார்த்து ரசிக்கக்கூடிய படமாக எடுக்கலாமே என்று ஆசைப்பட்டோம்.

இந்தப் படம் சில பிரச்சினைகளை தாண்டி இப்போது பொங்கல் ரிலீஸ் ஆக வெளியிடலாம் என முடிவு செய்யப்பட்ட போது சிறிய தயக்கம் இருந்தது. காரணம் பல வருடங்கள் கழித்து இந்த படம் வருகிறது. படத்திற்கு வரவேற்பு எப்படி இருக்கும் ? சிலபேர் இப்போது இந்த படத்தை ரிலீஸ் பண்ண வேண்டியது ரொம்ப அவசியமா என்று கிண்டல் செய்வார்களோ என்றெல்லாம் தோன்றியது. ஆனால் இந்த படத்தின் ரிலீஸ் போஸ்டர் வெளியானதுமே சோசியல் மீடியாவில் அவ்வளவு பாசிட்டிவான வரவேற்பு கிடைத்தது. இத்தனை வருடங்கள் தாமதம் ஆனாலும் இந்த படத்திற்கு ஒரு எதிர்பார்ப்பு இருக்கிறது என்று நினைக்கும்போது படத்தின் இயக்குனராக எனக்கு சந்தோசம். முதலில், பொங்கல் ரிலீஸ் என்று தான் ஆரம்பித்தோம். அப்போது மிஸ் ஆனாலும் இதோ இந்த பொங்கலுக்கு ரிலீஸாகிறது. பொங்கலுக்கான ஒரு கொண்டாட்டமான படமாகத்தான் இது இருக்கும்.

மேலும் சென்டிமென்டாக என்னுடைய குருநாதர் மணிவண்ணன் கடைசியாக நடித்த படம் இது. அவர் நிச்சயமாக மேலிருந்து என்னை ஆசிர்வாதம் செய்வார் என நினைக்கிறேன். அதேபோல மறைந்த நடிகர் மனோபாலா இந்த படம் எப்போது ரிலீஸ் ஆகும், ரிலீஸானால் என்னுடைய ரேஞ்சே வேற என்று சொல்லிக் கொண்டிருப்பார். குறிப்பாக இந்த படத்தில் விஷால், சந்தானம், மனோபாலா மூவரும் இடம் பெறும் ஒரு 15 நிமிட காட்சி இருக்கிறது. என்னுடைய படங்களிலேயே என் ஃபேவரைட் காமெடி காட்சி என்றால் இதுதான் என்று சொல்வேன்.
இந்தப் படம் துவங்குவதற்கு முன்பு வரை மதகஜராஜா என்கிற டைட்டிலுக்கு நாங்கள் வைத்திருந்த கதை வேறு. ஆனால் அது கொஞ்சம் கடினமான ஸ்கிரிப்ட் என்பதால் படம் துவங்குவதற்கு கொஞ்சம் முன்பாக தான் இப்போது எடுக்கப்பட்டுள்ள கதையை முடிவு செய்தோம். அந்த சமயத்தில் கலகலப்பு, தீயா வேலை செய்யணும் குமாரு படங்களில் சந்தானம் என்னுடன் பணியாற்றி இருந்தார். அந்த படங்களில் எல்லாம் வெறும் ஐந்து, ஆறு நாட்கள் தான் அவர் நடித்திருந்தார். ஆனால் இந்த படத்தில் படம் முழுவதும் வரும் விதமாக அவரது கதாபாத்திரம் அமைக்கப்பட்டுள்ளது. இன்னும் ஒரு ஆச்சரியமான விஷயம், இந்த படத்தில் தான் மொட்ட ராஜேந்திரன் முதன்முதலாக காமெடி நடிகராக அறிமுகமானார். அதுமட்டுமல்ல நடிகர் ஆர்யாவும் இதில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.

நானும் விஜய் ஆண்டனியும் முதன்முதலாக இணைந்தது இந்த படத்தில் தான். அவர் தோற்றத்திற்கும் அவருக்கும் சம்பந்தமில்லை. அவர் ஒரு குழந்தை போல. இது போன்ற படங்களுக்கு இசையமைக்கும் போது தான் அவரிடம் இருந்து இன்னும் துள்ளலான இசை எங்களுக்கு கிடைக்கும். ஒரு இசையமைப்பாளராக அவர் மீண்டும் இதுபோன்று துள்ளலான இசையுடன் திரும்பி வரவேண்டும்.
இந்த படத்தில் என்னை விட கஷ்டப்பட்ட ஆத்மா என்றால் அது விஷால் தான். கிளைமாக்ஸில் ‘எய்ட் பேக்ஸ்’ உடலமைப்புடன் வரவேண்டும் என தெரியாத்தனமாக சொல்லிவிட்டேன். அவரும் தயாராகி விட்டார். ஆனால் எதிர்பாராத விதமாக அப்படிப்பட்ட ‘எய்ட் பேக்ஸ்’ உடலமைப்புடன் எடுக்க வேண்டிய காட்சிகள் தள்ளிப்போய் மீண்டும் அதை எடுக்க ஒரு வருடம் ஆகிவிட்டது. அதுவரை அந்த கட்டமைப்பை பராமரிப்பது கடினம். ஆனாலும் விஷால் அதை கடைபிடித்தார். 99 சதவீதம் எந்த காட்சிகளிலும் அவர் டூப் போடவே இல்லை.

மொட்ட ராஜேந்திரன் உடன் மோதும் ஒரு காட்சியில் கொஞ்சம் டைமிங் மிஸ் ஆகி கிட்டத்தட்ட விஷால் கழுத்து முறிவு ஏற்படும் சூழல் உன்டானது. உடனடியாக அப்போது அருகில் இருந்த அப்பல்லோ மருத்துவமனைக்கு அழைத்து சென்றோம்.. நல்லபடியாக அவர் உடம்பை ஃபிட்னஸ் ஆக வைத்திருந்ததால் அவருக்கு எதுவும் ஆகவில்லை என்று டாக்டர்கள் கூறியதும் தான் எங்களுக்கு உயிரே திரும்பி வந்தது. கிளைமாக்ஸில் சோனு சூட், விஷால் இருவரும் மோதிக் கொள்வது இரண்டு மலைகள் மோதிக் கொள்வது போல இருக்கும். இந்த சண்டைக் காட்சியை படமாக்கும்போது பெண்கள் கூட்டமே இவர்களை பார்ப்பதற்காக வந்துவிட்டார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். இந்த காட்சியை படமாக்கி முடிந்ததும் விஷால் தன்னுடைய எய்ட் பேக்ஸை முடிவுக்கு கொண்டு வந்தார். அன்று மாலையே எங்கெங்கிருந்தோ கடைகளில் இருந்து பிரியாணி, நான் வெஜ் கொண்டு வரச்சொல்லி அனைவருக்கும் கொடுத்து தானும் தனது எய்ட் பேக்ஸ் விரதத்தை முடித்தார். இந்த மதகஜராஜா எப்படியாவது வெளிவர வேண்டும் என நான் விரும்பியதற்கு ஒரே ஒரு காரணம் விஷால் இந்த படத்திற்காக பட்ட கஷ்டங்களை மக்கள் பார்க்க வேண்டும். அது வெளியே தெரியாமலேயே போய் விடக்கூடாது என்பதுதான்.

ஆரம்பத்தில் எனக்கும் விஷாலுக்கும் அவ்வளவு பழக்கமில்லை. குஷ்புவுக்கு தான் அவர் நண்பராக இருந்தார். அந்த சமயத்தில் அவருக்காக வேறு ஒரு ஸ்கிரிப்ட்டுடன் அவரை சந்திக்க அவரது அலுவலகத்திற்கு சென்றிருந்தோம் எங்களை வரச் சொன்னவர் நாங்கள் சென்ற அதே நேரத்தில் வெளியே கிளம்பி போய்விட்டார். எனக்கு அப்போது அவர் மீது மிகப்பெரிய கோபம் வந்துவிட்டது. அவர் முகத்தில் இனி முழிக்கவே கூடாது என்று நினைத்தேன். இரண்டு மாதம் கழித்து ஒரு பொதுவான பங்ஷனில் கலந்து கொண்டபோது அவரும் வந்திருந்தார். அவரை பார்க்காதவாறு நான் ஒதுக்கி சென்றேன். ஆனால் விடாமல் என்னை தேடி வந்து அவராகவே பேசினார். அன்றைய தினம் ஒரு மருத்துவ வேலை காரணமாக அவசரமாக செல்ல வேண்டியதாகிவிட்டது,. உங்களை தொடர்பு கொள்ள முடியவில்லை, நீங்கள் எப்போது சொன்னாலும் நான் உங்களை தேடி வந்து கதை கேட்கிறேன் என்று கூறினார், அப்போது ஆரம்பித்த நட்பு இப்போது வரை தொடர்கிறது. பழகப்பழக தான் அவர் ஒரு நல்ல ஆத்மா என்பதை புரிந்து கொள்ள முடிந்தது. கார்த்திக் முத்துராமன் சாரை என் அண்ணன் என்று சொன்னால் எனது தம்பி விஷால் என்பேன்.

இந்த படத்தில் விஷாலை ஒரு பாடல் பாட வைத்திருக்கிறோம். அதற்காக அவர் ஜானகி அம்மாவை விட ராகத்தை இழுத்து ஒரு ஆலாபனை எல்லாம் செய்திருக்கிறார். இதில் இன்னொரு விஷயம் என்னவென்றால் இந்த பாடலை பாடி முடித்ததும் விஷால் இப்போது வரை தன்னை ஒரு சீரியஸான பாடகராகவே நினைத்துக் கொண்டிருக்கிறார். இந்த படம் வெளியானால் எனக்கு கட்டாயம் பாடகருக்கான விருது கிடைக்கும் பாருங்கள் என்று சொல்லி வருகிறார்.
இந்த படத்தை தயாரித்த ஜெமினி நிறுவனத்தில் அனைத்து இயக்குநர்களுமே படம் இயக்க வேண்டும் என்பதை கனவாக வைத்திருப்பார்கள். இந்த படத்திற்காக அவர்கள் எனக்கு கேட்டதை எல்லாம் கொடுத்தார்கள். சில காரணங்களால் பட ரிலீஸில் இப்படி ஒரு தடங்கல் ஏற்பட்டு விட்டது. ஆனால் இந்த மதகஜராஜா படத்திற்கு கிடைக்கும் வரவேற்பு, வெற்றி மூலமாக மீண்டும் ஜெமினியின் கொடி பறக்க வேண்டும் என விரும்புகிறேன் என்றார்.

இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி பேசும்போது, இந்த படத்திற்கு எனக்கு இசையமைக்க வாய்ப்பு கொடுத்து, எந்த ஒரு அழுத்தமோ, நெருக்கடியோ கொடுக்காமல் ஒவ்வொரு பாடலையும் சுந்தர்.சி கூட இருந்தே வாங்கிய விதம் அவ்வளவு அழகாக இருந்தது. இந்த படத்தில் பாடலை உருவாக்கும் போது சுந்தர் சி தான் பாடலின் முதல் வரிகளை எல்லாம் எடுத்துக் கொடுப்பார். அப்போது நானும் அவரும் இந்த படத்திற்கு ஒரு வித்தியாசமான பாடலை உருவாக்க வேண்டும், ஏடாகூடமான வார்த்தைகளை எல்லாம் போட்டு ஜாலியாக இருக்க வேண்டும், மிகப்பெரிய இசை மேதைகள் எல்லாம் இந்த பாடலைப் பார்த்து டென்ஷன் ஆகி இது என்னடா இசைக்கு வந்த சோதனை என்கிற அளவுக்கு பேச வேண்டும் என ஒரு பாடலை உருவாக்க முடிவு செய்தோம்.
அதற்காக விஷாலை பாடவைப்பது என முடிவுசெய்தோம். சிங்கிள் டேக் ஆர்ட்டிஸ்ட் என்பார்களே அதே மாதிரி விஷால் சிங்கிள் டேக் பாடகர். ஒரே டேக்கில் சரியாக பாடிவிட்டாரா என்று கேட்காதீர்கள். இந்த பாடலை சொதப்ப வேண்டும் என முடிவு செய்து தான் உருவாக்கினோம். அதனால் விஷால் முதல் டேக்கில் பாடுவதையே ஓகே என எடுத்துக்கொண்டோம். இரண்டாவது டேக்கில் ஒருவேளை நன்றாக பாடிவிட்டால் என்ன செய்வது ? அந்த பாடலை தான் விஷால் பாடியுள்ளார்.

இந்தப் படம் ரிலீஸ் ஆகப்போகிறது என இரண்டு நாட்களுக்கு முன்பு அறிவித்தாலும் கூட, ஒரு பிரஷ்ஷான படத்திற்கான விஷுவல்ஸ் அனைத்தையும் சுந்தர்.சி அப்போதே பண்ணியிருக்கிறார். இத்தனை வருடங்கள் தாண்டி இவ்வளவு வெற்றி கொடுத்தும் நீங்கள் எவ்வளவு பணிவாக இருக்கிறீர்கள் என்பதை பார்த்து உங்களிடம் நிறைய கற்றுக் கொண்டேன். உங்களை பார்க்கும்போது தான், சீரியஸான படங்களில் இருந்து கொஞ்சம் விலகி கலகலப்பான படங்களையும் கொடுக்க வேண்டும் என்கிற எண்ணம் தோன்றுகிறது. நிச்சயமாக முயற்சிப்பேன். அதேபோல என்னுடைய நண்பன் விஷாலுக்கு வெடி படத்தை தொடர்ந்து நான் இசையமைத்துள்ள இரண்டாவது படம் இது. வெடி படத்தை போல இந்த படத்தின் பாடல்களும் ஹிட் ஆகும். இந்த பொங்கல் பண்டிகைக்கு குடும்பமாக போய் ரசிக்க வேண்டும் என நினைப்பவர்களுக்கு இந்த மதகஜராஜா ஒரு கொண்டாட்டமான படமாக இருக்கும். விஷாலுக்கு நிச்சயமாக எதிர்காலத்தில் நான் படம் பண்ணுவேன் என்று கூறினார்.

நடிகர் விஷால் பேசும்போது,
இப்போது படைப்பாளிகளுக்கு சுதந்திரம் கொடுத்து படம் தயாரிக்கும் ஜெமினி போன்ற நிறுவனங்கள் இங்கே இல்லை. அதனால் ஜெமினி போன்ற நிறுவனங்கள் மீண்டும் பட தயாரிப்பில் முழுமூச்சுடன் இறங்க வேண்டும். இந்த வருடம் எனக்கு சிறந்த நடிகர் விருது கிடைக்கிறதோ இல்லையோ சிறந்த பாடகர் விருது கிடைக்கும். அதற்கு விஜய் ஆண்டனிக்கு நன்றி. இந்த படத்தில் ஒரு பாடலைப் பாட விஜய் ஆண்டனியும், சுந்தர்சியும் பேசிக் கொண்டிருந்தபோது, இந்த பாடலை வழக்கமான ஒரு பாடகர் பாடக்கூடாது.. ஒரு புதியவர் பாட வேண்டும்.. ஆனால் இந்த பாடலை பாடிய பிறகு அவர் வாழ்க்கையில் பாடவே கூடாது என்று பேசிக் கொண்டிருந்தபோது சரியாக நான் உள்ளே நுழைந்தேன். உடனே இவர் தான் அந்த பாடகர் என என்னை முடிவு செய்து விட்டார்கள்.
இந்த படத்தில் நான், சந்தானம், மொட்ட ராஜேந்திரன், மனோபாலா பங்கு பெற்ற ஒரு 15 நிமிட காட்சி படத்தில் மிகப்பெரிய ஹைலைட்டாக இருக்கும். பார்க்கும் அனைவரும் 100% சிரித்துக்கொண்டு தான் வெளியே வருவார்கள். அதற்கு சுந்தர்.சி க்கு நன்றி. குறிஞ்சி பூ 12 வருடத்திற்கு ஒரு முறை பூக்கும் என்பார்கள். அதுபோல 12 வருடம் கழித்து இந்த மதகஜராஜா ரிலீஸ் ஆக இருக்கிறது. பழைய படம் போலவே இருக்காது. அப்படியே பிரஷ்ஷாக இருக்கும் என்றார்.

நடிகை குஷ்பு பேசும்போது, இந்த 30 வருட வாழ்க்கையில் என் கணவர் சுந்தர் சி தூக்கமில்லா இரவுகளை கழித்தது என்றால் இந்த மதகஜராஜா படத்திற்காக தான். இந்த படத்திற்காக அவ்வளவு கடின உழைப்பை எல்லோருமே கொடுத்திருக்கிறார்கள். அந்த சமயத்தில் இதற்கான அங்கீகாரம் கிடைக்கவில்லையே என்கிற வருத்தம் நிச்சயமாக இருந்தது. சில நேரங்களில் இந்த படம் ரிலீசாக போகிறது என்று சொல்வார்கள். பின்னர் அது அப்படியே நின்றுவிடும். ஆனால் எது எப்போது நடக்க வேண்டுமோ, எல்லாம் நன்மைக்கே என்பது போல இந்த பொங்கல் பண்டிகைக்கு விருந்தாக மதகஜராஜா ரிலீஸ் ஆகிறது. இந்த படம் துவங்குவதற்கு முன்பு நானும் விஷாலும் தான் திக் ஃப்ரெண்ட்ஸ் ஆக இருந்தோம். ஆனால் இந்த படத்திற்குப் பிறகு ஆம்பள, ஆக்சன் ஆகிய படங்களில் இருவரும் இணைந்து பணியாற்ற துவங்கியபோது என்னை கழட்டி விட்டு அவர்கள் இருவரும் காதலர்கள் போல மாறிவிட்டார்கள் என்றார்.
உத்ரா ப்ரொடக்ஷன்ஸ் மற்றும் More 4 Production தயாரிப்பில், இயக்குநர் கதிரவென் எழுதி இயக்கி, நாயகனாக நடித்துள்ள படம் “கண்நீரா”. மாறுப்பட்ட களத்தில் வித்தியாசமான காதல் கதையாக உருவாகியுள்ள இப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ள நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா, […]
சினிமாஉத்ரா ப்ரொடக்ஷன்ஸ் மற்றும் More 4 Production தயாரிப்பில், இயக்குநர் கதிரவென் எழுதி இயக்கி, நாயகனாக நடித்துள்ள படம் “கண்நீரா”. மாறுப்பட்ட களத்தில் வித்தியாசமான காதல் கதையாக உருவாகியுள்ள இப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ள நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா, படக்குழுவினருடன் திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ள, கோலாகலமாக நடைபெற்றது.
இந்நிகழ்வினில்.. கதையாசிரியர் கௌசல்யா நவரத்தினம் பேசியதாவது.. இந்த தருணம் மிக மகிழ்ச்சியாக உள்ளது. எங்களை மாதிரி வெளிநாட்டு வாழ் தமிழர்களுக்கு இத்தனை ஆதரவு கிடைப்பது மகிழ்ச்சி. உத்ரா புரொடக்ஷன்ஸ் மற்றும் கதிரவென் ஆகியோருக்கு நன்றி. என்னை நம்பி நான் எழுதிய கதையை, இத்தனை பெரிய படைப்பாக, இங்கு கொண்டு வந்து சேர்த்ததற்கு நன்றி. இந்தப்படம் வெற்றியடைய வேண்டுமெனக் கடவுளை வேண்டிக்கொள்கிறேன் என்றார்.

நடிகர் ரோபோ சங்கர் பேசியதாவது… கண்நீரா படக் குழுவிற்கு என் வாழ்த்துக்கள். கதாசிரியர் பேசும்போது, இயக்குநருக்குத் தனியாக நன்றி சொன்னார். இயக்குநர் அவருடைய கணவர் தான், ஆனால் யாரோ போல அவர் பேசி நன்றி சொன்னது ஆச்சரியம் தான். இருவரும் இணைந்து இந்தப் படத்தை உருவாக்கி இருக்கிறார்கள். இடையில் குழந்தையையும் உருவாக்கி இருக்கிறார்கள், இந்த படத்தை முடித்துவிட்டு, அவர்கள் அடுத்த குழந்தைக்கான வேலையைப் பார்க்கட்டும். வாழ்த்துக்கள். முதல் படத்திலேயே இசை வெளியீட்டு விழா நடத்தும்போது, இரண்டாவது பாகத்தையும் முடித்து, மிகத் தயாராக வைத்துள்ளார்கள். அவர்களின் வேகத்திற்கு மூன்றாம் பாகமே எடுக்கலாம். மலேசியாவில் படத்தை எடுத்து, தென்னிந்தியாவில் ரிலீஸ் செய்கிறார்கள், இங்குள்ள அனைத்து சங்கங்களும் உங்களை வரவேற்று ஆதரவு தருவார்கள், வாழ்த்துக்கள். இப்படம் பெரிய வெற்றி பெற வாழ்த்துக்கள் என்றார்.

உத்ரா புரொடக்ஷன்ஸ் ஹரி உத்ரா பேசியதாவது… உத்ரா ப்ரொடக்ஷன்ஸ் செய்யும் மூன்றாவது படம் இது. இந்த வருடத்தில் முதல் படம். மலேசியாவில் எடுத்த படத்தை, இங்கு பெரிய அளவில் வெளியிடுகிறோம். More 4 Production மிகச்சிறப்பாகப் படத்தை எடுத்துள்ளனர். மலேசியாவில் எடுத்ததால், இங்குள்ள ரசிகர்கள் ரசிக்கும் வண்ணம் பல விசயங்களை மாற்றியுள்ளோம். முக்கியமான இப்படத்தின் இசை, அனைவரும் ரசிக்கும் வண்ணம் இருக்கும். இப்படம் மிகப் புதுமையாக இருக்க, இயக்குநர் கதிரவென் தான் காரணம். அவர் நாங்கள் சொன்ன அனைத்தையும் ஏற்றுக்கொண்டு, முழு ஒத்துழைப்பு தந்தார். படத்தில் இன்னும் பல ஆச்சரியங்கள் காத்திருக்கிறது, ஒவ்வொன்றாக வெளியாகும் என்றார்.

இயக்குநர் கதிரவென் பேசியதாவது… எங்களுக்கு ஆதரவு தந்து, இங்கு இந்த விழாவிற்கு வருகை தந்திருக்கும் திரையுலக ஜாம்பவான்கள் அனைவருக்கும் என் நன்றிகள். இவர்களுடன் அமர்ந்திருப்பதே மிக மகிழ்ச்சியாக உள்ளது. மலேசியாவில் தான் முழுமையாக இப்படத்தை, கஷ்டப்பட்டு உருவாக்கி உள்ளோம். எங்களுக்கு முழு ஆதரவைத் தந்த உத்ரா ப்ரொடக்ஷனுக்கு என் நன்றிகள். என் மனைவிதான் இப்படத்திற்குக் கதை எழுதி உள்ளார். மலேசியாவிலிருந்தபோது, இந்த கதையை என்னிடம் சொன்னார் மிக அருமையாக இருந்தது. இந்தப் படத்தை உருவாக்கலாம் என்று ஆரம்பித்தபோது, என் மனைவி கர்ப்பமானார், ஆனால் அப்போது கூட கண்நீரா படம் தான், என் முதல் குழந்தை என்று சொன்னார். அப்போதே இந்த படம் பெரிய வெற்றி பெறும் என்ற நம்பிக்கை வந்து விட்டது. என் மனைவி தான் இப்படத்தை இயக்கியிருக்க வேண்டும் ஆனால் சில காரணங்களால் அவர் என்னையே இயக்கச் சொன்னார். ஒரு மிகச்சிறப்பான படமாக இப்படத்தை உருவாக்கியுள்ளோம். அனைவரும் ரசிக்கும் வண்ணத்தில் இப்படம் உருவாகியுள்ளது. இரண்டாம் பாகத்திற்குக் கதை இருப்பதாகச் சொன்னார், அந்தக்கதையும் மிக அருமையாக இருந்தது. அந்தப்படத்தை மனைவி தான் இயக்கியுள்ளார். அந்தப்படத்தையும் முடித்து விட்டோம் என்றார்.

இயக்குநர் பேரரசு பேசியதாவது..
கண்நீரா தலைப்பே மிக அருமையாக உள்ளது. படம் சிறப்பாக வந்திருக்கிறது. இதில் சிறப்பு என்னவென்றால் மனைவி கதை எழுதியுள்ளார், கணவர் இயக்குநராகப் படம் எடுத்திருக்கிறார். சாதாரணமாக குடும்பங்களில் திரைப்படத்திற்கு எதிராகத் தான் பேசுவார்கள், ஆனால் இப்படத்தில் அவரது மனைவி அவருக்கு உறுதுணையாக நின்று, படத்தை உருவாக்கியுள்ளார். இருவருக்கும் என் மனதார வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். ரொமான்ஸ் படங்கள் வருவது இப்போது குறைந்து விட்டது. அந்த வகையில் இந்த திரைப்படத்தினை காதலை மையமாக வைத்து மிகச் சிறப்பாக எடுத்துள்ளனர். நீண்ட நாள் கழித்து நல்ல காதல் படம் வருகிறது. மலேசியாவில் எடுத்து, இங்கு வெளியிடுகிறார்கள். அனைவரும் ஆதரவு தர வேண்டும். சின்ன படங்கள் ஓடவில்லை என சொல்கிறார்கள், சின்னப்படங்கள் பார்க்கத் திரையரங்கிற்குக் கூட்டமே வருவதில்லை என திரையரங்கில் சொல்கிறார்கள். இதைக் கண்டிப்பாகப் பேசித் தான் தீர்க்க வேண்டும். சினிமா பெரிய ஆபத்தில் இருக்கிறது. இன்று சின்னப்பட்டங்கள் பார்க்க ஆட்கள் இல்லை, தியேட்டரும் இல்லை, படம் நேரத்திற்கு ஒர்த்தாக இருந்தால் மட்டுமே மக்கள் வருகிறார்கள். பெரிய ஹீரோ படங்களுக்கு இந்த பிரச்சனையில்லை. சின்னப்படங்களுக்கு மக்களை வரவைக்க, என்ன செய்ய வேண்டும். இதை அனைவரும் அமர்ந்து பேச வேண்டும். திரையரங்கில் மக்கள் வாங்கும் பொருட்கள் கொள்ளை விலையில் இருக்கிறது. கார் பார்க்கிங்க் கொள்ளை இப்படி இருந்தால், மக்கள் எப்படி வருவார்கள். நம் மீது குறை வைத்துக்கொண்டு மக்களைக் குறை சொல்லக்கூடாது. இவர்கள் பல கஷ்டப்பட்டு இப்படத்தைத் திரைக்குக் கொண்டு வருகிறார்கள். இந்தப்படம் பெரிய வெற்றி பெற வாழ்த்துக்கள் என்றார்.

தயாரிப்பாளர் கே ராஜன் பேசியதாவது… கண்நீரா படக்குழு குடும்பமாக இப்படத்தை எடுத்துள்ளார்கள். கௌசல்யா நவரத்தினம் குழந்தையை மட்டுமல்ல, இந்தப்படத்தையும் கருவாகச் சுமந்துள்ளார். கணவனுக்கு உறுதுணையாக இருந்து படத்தை இருவரும் இணைந்து உருவாக்கியுள்ளனர். பெண்கள் அவ்வளவு சாதாரணமாக சினிமாவுக்கு ஒப்புக்கொள்ள மாட்டார்கள், ஆனால் கதிரவெனுக்கு பின்னால் தூணாக கௌசல்யா இருக்கிறார். அதனால் கண்டிப்பாக இப்படம் கதிரவென் ஜெயிப்பார். மலேசியாவில் இப்படத்தை எடுத்து தமிழ் நாட்டில் இப்படத்தை வெளியிடும் அவர்கள் ஜெயிக்க வேண்டும். கண்நீரா அருமையான காதல் கதையை சொல்கிறது. கண்நீரா பெண்களின் கண்ணீரை பேசுகிறதா சந்தோசத்தைப் பேசுகிறதா என படம் வந்தால் தெரியும். பெண்களின் பாதுகாப்பைப் பற்றி அதன் அவசியம் பற்றி பேசியிருக்கும் இந்த கண்நீரா படம் பெரிய வெற்றி பெறட்டும். சினிமா சில நேரங்களில் நன்றாக இருக்கிறது பல நேரங்களில் நன்றாக இல்லை. கடந்த வருடம் தமிழ் சினிமாவில் ஆயிரம் கோடி நட்டம். மக்கள் சின்னப்படங்களுக்கு செலவு செய்வதில்லை. படம் எடுக்க முடிகிறது ஆனால் வியாபாரம் இல்லை. க்யூபிற்கு, விளம்பரத்துக்குப் பணம் இல்லாமல் 200 படங்கள் நிற்கிறது. சின்னப்படங்களுக்கு திரையரங்குகளில் தனி விலை வையுங்கள். சின்னப்படங்களுக்கு 40, 50,70 என வையுங்கள். அப்போது மக்கள் வருவார்கள். சின்னப்படங்கள் நன்றாக இருந்தால் ஓடுகிறது. பெரிய படங்களை விட சின்னப்படங்கள் தான் அதிகம் ஜெயிக்கிறது. மலேசியாவிலிருந்து நம்பி வந்துள்ள இந்த படக்குழு ஜெயிக்க வேண்டும் என்றார்.

இயக்குநர் ஆர் வி உதயகுமார் பேசியதாவது, என்னுடைய முதல் வாழ்த்து, இசையமைப்பாளருக்கும், பாடலாசிரியருக்கும் பாடல் மிக நன்றாக இருந்தது. இயக்குநருக்கு முதல் படம் போலவே இல்லை. முதல் படத்தில் பாடலெழுதிக் காதலித்து கல்யாணம் பண்ணிக்கொண்டு விட்டார்கள் கதிரவென், கௌசல்யா தம்பதி. அந்த தம்பதிகளுக்கு வாழ்த்துக்கள். என் மனைவி எழுதிய கதை தான் எஜமான். பொன்னுமனி அவர் எழுதிய கதை தான். அது போல் உங்கள் மனைவி எழுதிய கதையும் வெற்றி பெறும். டிரெய்லர் மிக அற்புதமாக இருக்கிறது. கண்ணெல்லாம் நீராக சுமந்து கொண்டு இருக்கிறது, விட்டுக்கொடுத்தலைப் பேசுகிறது இந்தப்படம். மலேசியா தமிழர்களுக்கு நாம் எப்போதும் அன்பும் ஆதரவும் காட்டியே வருகிறோம். மலேசியாவில் எனக்கு நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள். அவர்கள் மீது எனக்குத் தனி அன்பு உண்டு. அதே போல் மக்களும் உங்கள் படத்தை நேசிப்பார்கள். மலேசியாவில் இப்படத்தை ரசித்ததாகச் சொன்னீர்கள் அதே போல் கண்டிப்பாக மக்கள் இங்கும் ரசிப்பார்கள். நல்ல கதையுள்ள படங்களுக்கு மக்கள் கூட்டம் கூட்டமாக வருகிறார்கள். சினிமா இப்போது நன்றாக இல்லை, அரசாங்கத்திடம் எப்போதும் முறையிட்டுக் கொண்டு தான் உள்ளோம். சினிமாவும் அரசியலும் கலந்ததுதான் பிரச்சனை. சினிமாவில் அரசியல் இருக்கலாம் அரசியலில் சினிமா இருக்கக் கூடாது, இருந்தால் சினிமா உருப்படாது என்றார்.
இந்த படத்தை கதிரவென் இயக்கி நாயகனாக நடித்துள்ளார்.
நயாகியாக சாந்தினி கவுர், மாயா கிளம்மி, நந்தகுமார் NKR ஆகியோர் நடித்துள்ளனர்.
எக்ஸ்.பி பிலிம் கிரியேட்டர்ஸ் சேவியர் பிரிட்டோ தயாரிப்பில், விஷ்ணு வர்தன் இயக்கத்தில், ஆகாஷ் முரளி, அதிதி ஷங்கர், சரத்குமார், குஷ்பு உள்ளிட்டோர் நடிப்பில் ஜனவரி 14 அன்று வெளியாக இருக்கும் திரைப்படம் ‘நேசிப்பாயா’. இதன் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவில் […]
சினிமாஎக்ஸ்.பி பிலிம் கிரியேட்டர்ஸ் சேவியர் பிரிட்டோ தயாரிப்பில், விஷ்ணு வர்தன் இயக்கத்தில், ஆகாஷ் முரளி, அதிதி ஷங்கர், சரத்குமார், குஷ்பு உள்ளிட்டோர் நடிப்பில் ஜனவரி 14 அன்று வெளியாக இருக்கும் திரைப்படம் ‘நேசிப்பாயா’. இதன் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.
இவ்விழாவில் இணைத்தயாரிப்பாளர் சிநேகா பிரிட்டோ பேசுகையில், எங்கள் படம் ‘நேசிப்பாயா’ வருகிற 14ஆம் தேதி வெளியாகிறது. இந்தப் படம் நன்றாக உருவாக முக்கிய காரணம் சேவியர் பிரிட்டோ. அடுத்தது படத்தின் இயக்குநர் விஷ்ணு வர்தன். அவருடைய கனவுதான் இந்தப் படம். இந்தப் படத்தைப் பார்க்க நான் ஆவலுடன் காத்திருக்கிறேன். விஷ்ணு வர்தன் ஸ்டைலிஷான இயக்குநர். இந்தப் படமும் அப்படியே வந்திருக்கிறது. கேமரூன் அழகாக ஒளிப்பதிவு செய்திருக்கிறார். கலை இயக்குநர் சரவண வசந்தும் சிறப்பாக செய்திருக்கிறார். சரத்குமார், குஷ்பு, அதிதி என படத்தில் பணிபுரிந்த அனைவருக்கும் வாழ்த்துக்கள். ஆகாஷின் அறிமுகப் படம் இது. படத்தில் யுவனின் இசை இன்னொரு ஹீரோ. விழாவிற்கு சிறப்பு விருந்தினராக வந்திருக்கும் சிவகார்த்திகேயனுக்கு நன்றி என்றார்.
தயாரிப்பாளர் கலைப்புலி தாணு பேசுகையில், மாஸ்டர்’ தந்து மாஸ்டராக விளங்கி வருபவர் சேவியர் பிரிட்டோ. அவரின் மகள் சிநேகா இந்தத் தொழிலின் அத்தனை நுணுக்கங்களையும் கற்று ‘நேசிப்பாயா’ படத்தைக் கொடுத்திருக்கிறார். இந்தப் படம் மூலம் நல்ல கதாநாயகனாக ஆகாஷ் முரளி அறிமுகமாகிறார். அவருக்கு வாழ்த்துக்கள். யுவனின் இசை நிச்சயம் இளைஞர்களைக் கவரும். வட இந்தியாவிலும் வெற்றிக்கொடி நாட்டிவிட்டு மீண்டும் தென்னிந்திய சினிமாவுக்கு வந்திருக்கிறார் விஷ்ணு வர்தன். நிச்சயம் படம் வெற்றியடையும் என்றார்.

நடிகர் சரத்குமார் பேசுகையில், முரளி எனக்கு நல்ல நண்பர். அவரின் மகன் படத்தின் விழாவிற்கு வந்திருக்கிறேன். படத்திலும் முக்கியமான வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். யுவன் இசையில் முதல் முறையாக நடித்திருக்கிறேன். ஆகாஷூக்கு நிச்சயம் நல்ல எதிர்காலம் உண்டு. ‘நேசிப்பாயா’ படத்தை நிச்சயம் நீங்களும் நேசிப்பீர்கள் என்றார்.
இயக்குநர் இளன் பேசுகையில், “நேசிப்பாயா’ படத்தை நான் பார்த்துவிட்டேன். அருமையாக வந்திருக்கிறது. ஆகாஷிடம் இயல்பாகவே ஒரு இன்னொசண்ட் இருக்கிறது. அது இந்த கதாபாத்திரத்திற்கு சிறப்பாக பொருந்தி வந்திருக்கிறது. அதிதியும் நன்றாக நடித்திருக்கிறார். பல லொகேஷனில் ஸ்டைலிஷாக விஷ்ணு இயக்கி இருக்கிறார். விஷ்ணு- யுவன் காம்போ மீண்டும் வந்திருப்பது மகிழ்ச்சி. தயாரிப்பாளர்கள் சிநேகா மற்றும் பிரிட்டோ கடுமையான உழைப்பைக் கொடுத்திருக்கிறார்கள் என்றார்.

நடிகர் அதர்வா முரளி பேசுகையில், ’நேசிப்பாயா’ படம் எங்களுக்கு நெருக்கமான படம். ஆகாஷின் அறிமுகப் படம் இது. இதற்காக பிரிட்டோ மற்றும் சிநேகாவுக்கு நன்றி. கதைக்கு மகிழ்ச்சியுடன் செலவு செய்வார் பிரிட்டோ. விஷ்ணு வர்தனின் ஹீரோ ஆகாஷ் என்பது எங்களுக்கு பெருமையான விஷயம். அதிதி சிறப்பாக நடித்திருக்கிறார். என் முதல் படத்தில் நடந்த லக் என் தம்பிக்கும் அவரின் முதல் படத்தில் நடந்திருக்கிறது. ஆமாம்! ஆகாஷின் முதல் படத்திற்கும் யுவன் தான் இசை. நிச்சயம் படம் வெற்றி பெறும். விழாவிற்கு வருகை தந்திருக்கும் சிவகார்த்திகேயனுக்கும் சரத் சாருக்கும் நன்றி. ஜனவரி 14 அன்று படம் வெளியாவது மகிழ்ச்சி. மகன்களின் கனவை தன் கனவாக நினைக்கும் அம்மாக்களில் எங்கள் அம்மாவும் ஒருவர். அவரது வாழ்த்து நிச்சயம் ஆகாஷூக்கு உண்டு. படக்குழுவுக்கு வாழ்த்துக்கள் என்றார்.

நடிகை அதிதி ஷங்கர் பேசுகையில், இந்தப் படம் எப்போது வெளியாகும் என எதிர்பார்த்திருந்தேன். இன்னும் பத்து நாட்களில் வெளியாக இருப்பது மகிழ்ச்சி. இயக்குநர் விஷ்ணு வர்தனுக்காகதான் கதை கூட கேட்காமல் இந்தப் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டேன். விஷ்ணு சாரும் என் மேல் முழு நம்பிக்கை வைத்தார். ’விருமன்’ படத்தின் போது முழுக்கதையும் எனக்கு கொடுத்தார்கள். ‘மாவீரன்’ படத்தில் நடிக்கும் போது ஒருநாளுக்கு முன்பாக எனக்கு காட்சிகளை பிடிஎஃப்பில் அனுப்புவார்கள். விஷ்ணு எனக்கு இரண்டு முறை கதை சொன்னார். பின்பு, ஷூட் சென்று விட்டோம். ஆன் தி ஸ்பாட்டில்தான் எனக்கு வசனம், காட்சி சொல்வார் விஷ்ணு. நிறைய கற்றுக் கொண்டேன். ஆகாஷின் அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள். என் முதல் விருது சிவகார்த்திகேயன் கையால்தான் வாங்கினேன். இரண்டாவது படத்தில் அவருடன் இணைந்து நடித்தேன். இந்த விழாவிற்கு அவர் வந்திருப்பது மகிழ்ச்சி. படம் உங்களுக்குப் பிடிக்கும் என நம்புகிறோம் என்றார்.

நடிகர், இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி பேசுகையில், சிநேகாவுக்கு அவரது கணவரை ஹீரோவாக்கி பார்க்க வேண்டும் என்பது கனவு. அவரது கனவு ‘நேசிப்பாயா’ படம் மூலம் நிறைவேறி இருக்கிறது. என் நண்பர்கள்தான் விஷ்ணுவும் அனுவும். விஷ்ணுவின் ஸ்டைலிஷான இயக்கத்தில் ஆகாஷ் அறிமுகமாகிறார். அதிதியும் சிறப்பாக நடித்திருக்கிறார். பொங்கலில் வெளியாகும் இந்தப் படத்திற்கு வாழ்த்துக்கள் என்றார்.

இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா பேசுகையில், நாங்கள் எல்லோரும் இந்தப் படத்திற்கு சிறப்பாக உழைத்திருக்கிறோம். இந்தப் படத்தின் கதை கேட்டதில் இருந்து நிச்சயம் ரசிகர்களுக்குப் பிடிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. ஆகாஷ், அதிதி அழகாக நடித்திருக்கிறார்கள். நானும் விஷ்ணுவும் பள்ளிக் காலத்தில் இருந்தே ஒன்றாக பணிபுரிகிறோம். இந்தப் படத்தில் பணிபுரிந்தது மகிழ்ச்சி என்றார்.

இயக்குநர் விஷ்ணு வர்தன் பேசுகையில், சரத்குமார், அழைத்ததும் வருவதற்கு உடனே ஒத்துக்கொண்ட சிவகார்த்திகேயன் இருவருக்கும் நன்றி. இந்த படம் எனக்கு ரொம்பவே ஸ்பெஷல். ஏனெனில், இந்த படத்தின் ஜானர் இதற்கு முன்பு நான் முயற்சி செய்யாதது. அதனால், நீங்கள் எப்படி வரவேற்பு கொடுக்கிறீர்கள் என்பதை தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கிறேன். இந்த வாய்ப்பு கொடுத்த பிரிட்டோ மற்றும் சிநேகா பிரிட்டோவுக்கு நன்றி. ஆகாஷ் முதல் நாளிலிருந்து ஒரு நடிகராக தன்னை நிலை நிறுத்திக் கொண்டுள்ளார். சரத், குஷ்பு, கல்கி, ஸ்ரீகர் என இந்தப் படத்திற்காக உழைத்த அனைவருக்கும் நன்றி. அழைப்பை ஏற்று வந்த விஜய் ஆண்டனிக்கும் நன்றி. அதிதியின் நடிப்பு என் இதயத்தை தொட்டுவிட்டது. யுவனின் இசை என் படத்திற்கு பெரும் பலம். படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி என்றார்.

நடிகர் ஆகாஷ் முரளி பேசுகையில், நிகழ்வு முழுவதும் இருந்து எங்கள் படத்திற்கு ஆதரவு கொடுத்திருக்கும் சிவகார்த்திகேயனுக்கு நன்றி. படத்தின் தயாரிப்பாளர் பிரிட்டோ மற்றும் சிநேகா பிரிட்டோவிற்கு நன்றி. என் மேல் நம்பிக்கை வைத்த என் குரு விஷ்ணுவர்தனுக்கு நன்றி. அற்புதமான அனுபவமாக இந்த படம் இருந்தது. நிறைய கற்றுக் கொண்டேன். அற்புதமான பாடல்கள் கொடுத்த யுவன் சாருக்கு நன்றி. அதிதி, சரத், கல்கி எல்லோருக்கும் நன்றி. அண்ணா, அம்மா, அக்கா எல்லோருக்கும் நன்றி. என் தாத்தாவும் அப்பாவும் என்னையும் என் அண்ணனையும் சினிமாவில் பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டார்கள். அவர்கள் இப்போது இல்லை என்றாலும் நிச்சயம் சந்தோஷம் அடைந்து இருப்பார்கள். படம் ஜனவரி 14 அன்று வெளியாகிறது என்றார்.

நடிகர் சிவகார்த்திகேயன் பேசுகையில், இந்த வருடம் நான் கலந்து கொள்கிற முதல் நிகழ்ச்சி இது. இந்த நிகழ்வுக்கு நான் வர முக்கிய காரணம் சிநேகா பிரிட்டோ மற்றும் விஷ்ணு வர்தன் தான். பிரிட்டோ மிக நல்ல மனிதர். நம் எல்லோர் வாழ்விலும் மாமனார் மிகவும் ஸ்பெஷலான ஒரு உறவு. அது ஆகாஷுக்கு ஸ்பெஷலாக அமைந்திருக்கிறது. ஆகாஷுக்கு நல்ல படங்கள் செய்ய வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. அதற்கு சப்போர்ட் செய்யும் மாமனார் கிடைத்திருக்கிறார். அத்தனை உழைப்பையும் கொடுத்து விடுங்கள். தமிழ்நாட்டு மக்கள் நிச்சயம் உங்கள் அப்பாவுக்கு கொடுத்த இடத்தை உங்களுக்கும் தருவார்கள். என்னுடைய மாமனார் எனக்கு ரொம்பவே ஸ்பெஷல் ! தொலைக்காட்சியில் ஆங்கரிங் பண்ணிக்கொண்டு இருந்த சமயத்தில் என்னை நம்பி அவரது பெண்ணை கல்யாணம் செய்து கொடுத்தார். அது மட்டும் இல்லாமல் என்னுடைய கனவை அடையவும் மனோகர் மாமா ஆதரவு கொடுத்தார். அப்படியான ஒரு மாமனார் ஆகாஷூக்கு கிடைத்திருக்கிறார். யுவன் இசையில் பாடல்கள் அருமையாக வந்திருக்கிறது. விஷ்ணு இயக்கியிருக்கிறார் என்பதற்காகவே அவருடைய படங்களைத் தியேட்டரில் பார்த்திருக்கிறேன். ஆகாஷூக்கு முதல் படமே பொங்கல் ரிலீஸாக அமைந்திருக்கிறது. எல்லாமே சரியாக இருப்பதால் முதல் பாலிலேயே சிக்சர் அடித்து விடுங்கள். அதிதி இதுபோன்ற நல்ல கதாபாத்திரம் இருக்கும் கதைகளில் நடிக்க வேண்டும். சரத் சாரிடம் சூப்பரான ஒரு எனர்ஜி இருக்கிறது. அவருடன் சேர்ந்து சீக்கிரம் ஒரு படம் நடிக்க வேண்டும். யுவன் GOAT. சின்ன படம், புது ஹீரோ, இயக்குநர் என்று எதுவும் பார்க்காமல் அவருடைய கரியர் முழுவதுமே நல்ல இசையைக் கொடுத்துள்ளார். யுவன்- முத்துக்குமார் காம்பினேஷனை நான் இப்போதும் மிஸ் செய்கிறேன். இன்னும் நிறைய நல்ல பாடல்கள் நீங்கள் கொடுக்க வேண்டும். ஜனவரி 14 பொங்கல் அன்று தியேட்டரில் இந்தப் படம் பாருங்கள். எல்லாப் படங்களும் வெற்றி பெற எனது வாழ்த்துக்கள் என்றார்.
மணி மூர்த்தி இயக்கத்தில், அசோக்குமார், அனுஷ்ரேயா ராஜன், வெண்மதி, மேத்யூ வர்கீஸ், வர்ஷினி உள்ளிட்டோர் நடிப்பில், கார்த்திகேசன் தயாரித்து நடித்துள்ள படம் “லாரா”. கதைப்படி… காரைக்கால் பகுதியில் உள்ள நிரவி காவல் நிலையத்திற்கு, ஒரு பெண்ணின் உடல் கடற்கரையில் ஒதுங்கிக் கிடப்பதாக […]
விமர்சனம்மணி மூர்த்தி இயக்கத்தில், அசோக்குமார், அனுஷ்ரேயா ராஜன், வெண்மதி, மேத்யூ வர்கீஸ், வர்ஷினி உள்ளிட்டோர் நடிப்பில், கார்த்திகேசன் தயாரித்து நடித்துள்ள படம் “லாரா”.
கதைப்படி… காரைக்கால் பகுதியில் உள்ள நிரவி காவல் நிலையத்திற்கு, ஒரு பெண்ணின் உடல் கடற்கரையில் ஒதுங்கிக் கிடப்பதாக தகவல் வருகிறது.
அந்த சமயத்தில் லாரன்ஸ் என்பவன் தனது மனைவி ஸ்டெல்லாவை காணவில்லை என, காவல் நிலையத்தில் புகார் கொடுக்கிறான். அந்த புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அடிக்கடி வந்து குறைப்பட்டுக் கொள்கிறான். இந்நிலையில்தான் அந்தச் சடலம் கிடைக்கிறது. அதை இனம் காண முடியாமல் முகம் சிதைவுற்று, உடலில் சில பாகங்கள் சேமடைந்த நிலையில் இருக்கிறது. அதைப் பார்த்த லாரன்ஸ் தனது மனைவி அதுவல்ல என்கிறான். ஆனால் தன் மனைவியை அவனே கொலை செய்துவிட்டு நாடகம் ஆடுகிறான் என்று ஒரு மர்ம தொலைபேசி காவல் நிலையத்திற்கு வருகிறது.

லாரன்ஸை சந்தேகித்த போலீஸ் அவனது நடவடிக்கைகளைக் கண்காணிக்கிறது. அவன் மர்மமாகத் தெரிகிறான். அவனுக்குள் ஏதோ ரகசியம் ஒளிந்து இருப்பதாக போலீஸ் சந்தேகப் படுகிறது. ஆனால் அதற்கான ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை. போலீஸ் விசாரணையில், அடுத்தடுத்து நடக்கும் சம்பவங்கள் விசாரணையை வெவ்வேறு திசைகளுக்கு இட்டுச் செல்கிறது. அப்படி போகும் வழியில் தோண்டத் தோண்ட மர்மங்கள் தென்படுகிறது. ஹவாலா பணம் மோசடி செய்பவர்கள், பாலியல் தொழில் செய்யும் பெண்கள், அவர்களைக் கொடுமைப்படுத்தப்படும் மர்ம மனிதர்கள், லாராவின் காதல் கதை, ஆதரவற்றோர் இல்லம், ஆயுதங்கள் தயாரிப்பு என்று கதை கிளைக் கதைகளாகப் பிரிகிறது. பரபரப்பாக படம் போய்க் கொண்டிருக்கும் போது லாராவின் காதல் கதை அத்தியாயம் விரிகிறது. அந்தக் காதல் கதைக்கும் இந்த கொலை கதைக்கும் என்ன தொடர்பு ?

போலீசின் சந்தேக வளையத்தில் உள்ளூர் கவுன்சிலர் வருகிறார், அவருக்கு எம்எல்ஏ ஆதரவாக இருக்கிறார். போலீஸ் சந்தேகப்படும் ஒவ்வொருவர் மீதும் சந்தேகப்பட்டால் ஆதாரங்கள் இல்லாமல் இருக்கிறது. போலீஸ் விழிபிதுங்கி நிற்கிறது. ஒரு கட்டத்தில் போலீஸின் அத்தனை சந்தேகங்களையும் தவிடு பொடியாக்கி விட்டு வேறொரு திருப்பம் நிகழ்கிறது. அது என்ன என்பது மீதிக்கதை.
நாயகனாக அசோக்குமார் குறைவான காட்சிகளில் வந்தாலும், அவருக்கு கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாக செய்துள்ளார். அதேபோல் காவல் ஆய்வாளர் காதாப்பாத்திரத்தில் தயாரிப்பாளர் கார்த்திகேசன், நாயகி அனுஷ்ரேயா ராஜன் ஆகிய இருவரும் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். மேலும் படத்தில் நடித்துள்ள நடிகர் நடிகைகள் அனைவரும் அவரவருக்கு கொடுக்கப்பட்ட பணிகளைச் சிறப்பாக செய்திருக்கிறார்கள்.
வேலம்மாள் நெக்ஸஸ் குழுமத்தின் தாளாளர் எம்.வி.எம். வேல்மோகன், உலக கேரம் சாம்பியன்களான திருமதி.எம்.காசிமா, செல்வி மித்ரா மற்றும் திருமதி.கே. நாகஜோதி ஆகியோரைப் பெருமையுடன் பாராட்டி ஊக்கப்படுத்தினார். இன்று நடைபெற்ற பாராட்டு விழா, கேரம் விளையாட்டில் சாம்பியன்களின் அர்ப்பணிப்பு, விடாமுயற்சி மற்றும் குறிப்பிடத்தக்க […]
சென்னைவேலம்மாள் நெக்ஸஸ் குழுமத்தின் தாளாளர் எம்.வி.எம். வேல்மோகன், உலக கேரம் சாம்பியன்களான திருமதி.எம்.காசிமா, செல்வி மித்ரா மற்றும் திருமதி.கே. நாகஜோதி ஆகியோரைப் பெருமையுடன் பாராட்டி ஊக்கப்படுத்தினார். இன்று நடைபெற்ற பாராட்டு விழா, கேரம் விளையாட்டில் சாம்பியன்களின் அர்ப்பணிப்பு, விடாமுயற்சி மற்றும் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை எடுத்துக்காட்டுகிறது.

தங்களது சிறப்பான ஆட்டத்தால் தேசத்திற்குப் பெருமை சேர்த்த சாம்பியன்கள், வேலம்மாள் நெக்ஸஸ் குழுமத்தால் தலா ஐம்பது லட்சம் ரூபாய் ரொக்கப் பரிசாக வழங்கப்பட்டது. இந்தப் பாராட்டுச் சின்னம், இந்தியாவில் விளையாட்டுத் திறமையை அங்கீகரிப்பதிலும் ஊக்குவிப்பதிலும் அமைப்பின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பைக் குறிக்கிறது.

இந்நிகழ்ச்சியில் பேசிய வேலம்மாள் நெக்ஸஸ் குழுமத்தின் பிரதிநிதி, நாடு முழுவதும் உள்ள எண்ணற்ற இளம் விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கமளித்த சாம்பியன்களின் கடின உழைப்பு மற்றும் உறுதியை பாராட்டினார். தங்கள் துறையில் சிறந்து விளங்குவது மட்டுமல்லாமல், கேரம் விளையாட்டில் இந்தியாவை உலக வரைபடத்தில் நிலைநிறுத்தியுள்ள இந்த விதிவிலக்கான திறமையாளர்களை கௌரவிப்பதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். அவர்களின் சாதனைகள் நாடு முழுவதும் ஆர்வமுள்ள விளையாட்டு வீரர்களுக்கு உத்வேகமாக விளங்குகின்றன என்று பிரதிநிதி கூறினார்.

இந்த பாராட்டு விழாவில் மாணவர்கள், ஊழியர்கள் மற்றும் விளையாட்டு ஆர்வலர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று, விளையாட்டை ஊக்குவிப்பதிலும் திறமைகளை வளர்ப்பதிலும் வேலம்மாள் நெக்ஸஸ் குழுமத்தின் துடிப்பான உணர்வை பிரதிபலிக்கிறது. ஒற்றுமை மற்றும் சிறந்து விளங்குவதற்கான ஒரு ஊடகமாக விளையாட்டின் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டும் உரைகள், நிகழ்ச்சிகள் மற்றும் கொண்டாட்டமான சூழல் ஆகியவற்றால் நிகழ்வு குறிக்கப்பட்டது.

வேலம்மாள் நெக்ஸஸ் குழுமம், கல்வி, விளையாட்டு மற்றும் சாராத செயல்பாடுகள் உட்பட பல்வேறு துறைகளில் இளம் திறமையாளர்களை ஊக்குவிப்பதில் எப்போதும் முன்னணியில் உள்ளது. மாணவர்கள் தேசிய மற்றும் சர்வதேச தளங்களில் சிறந்து விளங்கக்கூடிய மற்றும் பிரகாசிக்கக்கூடிய ஒரு முழுமையான சூழலை வளர்ப்பதில் குழு உறுதியாக நம்புகிறது.

இந்த உலக சாம்பியன்களை கௌரவிப்பதன் மூலம். வேலம்மாள் நெக்ஸஸ் குழுமம், விளையாட்டு வீரர்களை அவர்களின் வெற்றியை நோக்கிய பயணத்தில் ஊக்குவித்து ஆதரிப்பதில் அதன் அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகிறது. திருமதி.எம். காசிமா, செல்வி.வி. மித்ரா மற்றும் திருமதி.கே. நாகஜோதி ஆகியோரின் முன்மாதிரியான சாதனைகளுக்காக இந்த அமைப்பு மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது மேலும் அவர்களின் எதிர்கால முயற்சிகள் தொடர்ந்து வெற்றிபெற வாழ்த்துகிறது.
GPRK சினிமாஸ் நிறுவனம் தயாரிப்பில், சமுத்திரக்கனி, அனன்யா, பாரதிராஜா, வடிவுக்கரசி, இளவரசு, நாசர், சின்னி ஜெயந்த், தம்பி ராமையா உள்ளிட்டோர் நடிப்பில், நந்தா பெரியசாமி இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் “திரு மாணிக்கம்”. கதைப்படி… தமிழக, கேரள எல்லைப் பகுதியான குமுளியில் மாணிக்கம் […]
விமர்சனம்GPRK சினிமாஸ் நிறுவனம் தயாரிப்பில், சமுத்திரக்கனி, அனன்யா, பாரதிராஜா, வடிவுக்கரசி, இளவரசு, நாசர், சின்னி ஜெயந்த், தம்பி ராமையா உள்ளிட்டோர் நடிப்பில், நந்தா பெரியசாமி இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் “திரு மாணிக்கம்”.
கதைப்படி… தமிழக, கேரள எல்லைப் பகுதியான குமுளியில் மாணிக்கம் ( சமுத்திரக்கனி ), சுமதி ( அனன்யா ) தம்பதியர் இரண்டு பெண் குழந்தைகள் மற்றும் மாமியாருடன் கூட்டுக் குடும்பமாக வசித்து வருகின்றனர். மாணிக்கத்தின் இரண்டாவது மகளுக்கு சரியாக பேச்சு வராததால் சிகிச்சை அளித்தும், பேச்சுப் பயிற்சி கொடுத்தும் சரியாகத காரணத்தால் அறுவைச் சிகிச்சை செய்ய சில லட்சங்கள் தேவைப்படும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். மாணிக்கம் குமுளி பேருந்து நிலையத்தில், வாடகைக்கு கடையை எடுத்து லாட்டரி சீட்டு விற்பனை செய்து வருகிறார். இந்நிலையில் கடையை காலி செய்யுமாறு அதன் உரிமையாளர் கூற, என்ன செய்வதென தெரியாமல் குழப்பத்தில் இருந்து வருகிறார்.

இந்நிலையில் மாதவப்பெருமாள் ( பாரதிராஜா ) மாணிக்கத்தின் லாட்டரி கடையில், ஓனம் பம்பர் சிறப்பு லாட்டரி சீட்டினை வாங்கிக்கொண்டு, பரிசு விழுந்தால், தனது மகளுக்கு வரதட்சணை கொடுக்க முடியாததால், சம்பந்தி வீட்டாரின் ஏளனமாகப் பேச்சு, மனைவிக்கு ( வடிவுக்கரசி ) மருத்துவச் செலவு, ஓனம் பண்டிகை செலவு என இவை அனைத்தையும் தீர்த்து விடலாம் என நம்பிக்கையுடன் பேசுகிறார்.
பின்னர் லாட்டரி சீட்டுக்கான பணம் இல்லாததால், பணம் கொடுத்துவிட்டு வாங்கிக்கொள்வதாக கூறி, மாணிக்கத்திடம் தனியாக எடுத்து வைக்குமாறு கொடுத்துவிட்டு செல்கிறார்.

பணம் கொடுக்காமல் பெரியவர் எடுத்துவைத்த லாட்டரி சீட்டுக்கு ஒன்றரைக் கோடி பரிசு விழ, அதனை அவரிடம் ஒப்படைக்க மாணிக்கம் கிளம்பிச் செல்கிறார். இதனையறிந்த அவரது மனைவி உள்ளிட்ட குடும்பத்தினர், குடும்ப கஷ்டத்தை கூறி, மாணிக்கத்திடம் உள்ள லாட்டரிச் சீட்டினை பிடுங்க முயற்சிக்கின்றனர். பணம் கொடுக்காவிட்டாலும், அவரது நம்பிக்கையை வீணடிக்க விரும்பாமல், பெரியவரைத் தேடி செல்கிறார் மாணிக்கம்.
மாணிக்கத்தின் நேர்மை வென்றதா ? குடும்ப உறவுகளின் முயற்சி வென்றதா ? என்பது மீதிக்கதை…

பொறுப்பான கணவன், பாசமுள்ள தந்தை, நடத்தையில் நேர்மை என தனது அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் சமுத்திரக்கனி. அவரது மனைவியாக அனன்யா, இளவரசு, குழந்தை நட்சத்திரங்கள் மற்றும் நாசர், கருணாகரன் உள்ளிட்டோர் அவரவருக்கு கொடுக்கப்பட்ட பணிகளைச் சிறப்பாக செய்திருக்கிறார்கள்.
படத்தில் தம்பி ராமையாவின் கதாப்பாத்திரம் கதையோடு கனெக்ட் ஆகாமல், எரிச்சல் ஏற்படும் விதமாகவே அமைந்துள்ளது.
இதே கதையம்சம் கொண்ட படம் ஏற்கனவே பம்பர் என்கிற பெயரில் வெளிவந்துள்ள நிலையில், அதே கதையை சில மாற்றங்கள் செய்து, இயக்குநர் திரைக்கதை அமைத்துள்ளாரோ என்கிற சந்தேகம் எழுகிறது !
மேக்னம் மூவிஸ் நிறுவனம் தயாரிப்பில், சரத்குமார், ஶ்ரீ குமார், சிஜா ரோஸ், இனியா உள்ளிட்டோர் நடிப்பில், ஷியாம் பிரவின் இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் “ஸ்மைல் மேன்”. கதைப்படி… சிபிசிஐடி யில் உயர் பொறுப்பில் நேர்மையான அதிகாரியாக இருப்பவர் சிதம்பரம் நெடுமாறன் ( […]
விமர்சனம்மேக்னம் மூவிஸ் நிறுவனம் தயாரிப்பில், சரத்குமார், ஶ்ரீ குமார், சிஜா ரோஸ், இனியா உள்ளிட்டோர் நடிப்பில், ஷியாம் பிரவின் இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் “ஸ்மைல் மேன்”.
கதைப்படி… சிபிசிஐடி யில் உயர் பொறுப்பில் நேர்மையான அதிகாரியாக இருப்பவர் சிதம்பரம் நெடுமாறன் ( சரத்குமார் ). குற்றவாளியை பிடிக்கும் முயற்சியில், விபத்தில் சிக்கி சில வருடங்கள் ஓய்வில் இருந்து வருகிறார். அவருக்கு ஞாபகமறதி ( அல்சைமர் ) நோய் பாதிப்பால் ஒரு வருடத்தில், பழைய நினைவுகள் அனைத்தும் மறந்து போகும் என மருத்துவர் கூற, அன்றாட சம்பவங்களை பதிவு செய்து கொள்வதோடு. பழைய சம்பவங்களில் தனது அனுபவங்களை புத்தகமாகவும் வெளியிடுகிறார். இந்நிலையில் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சீரியல் கொலைகள் ( ஸ்மைல் மேன் ) தற்போதும் நடைபெறுகிறது.

இந்த கொலை வழக்கு மீண்டும் சிபிசிஐடி க்கு மாற்றப்பட்டு, விசாரணை அதிகாரியாக அரவிந்த் ( ஶ்ரீ குமார் ) நியமிக்கப்படுகிறார். இதுபோன்ற வழக்குகளை கையாண்ட மூத்த அதிகாரியின் அனுபவம் இருந்தால், வழக்கை விரைவாக முடிக்கலாம் என சரத்குமாரை மீண்டும் அழைத்து அவரது தலைமையில் ஒரு குழு விசாரணையைத் தொடங்குகிறது.
மீண்டும் பழைய பானியியிலேயே சீரியல் கொலைகள் செய்யும் குற்றவாளியை கண்டுபிடித்தார்களா ?இல்லையாயா ? என்பது மீதிக்கதை..

சரத்குமார் இதுபோன்ற கதாப்பாத்திரங்களில் நிறைய படங்களில் நடித்திருந்தாலும், இது அவரது 150 வது படம் என்பதால், அவரது ரசிகர்கள் மத்தியில் நிறையவே எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் அந்தளவுக்கு இந்தப் படம் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.
திரைக்கதையும் விறுவிறுப்பில்லாமல் நகர்வதால் பார்வையாளர்களை சோர்வடைய வைத்துள்ளார் இயக்குநர். மற்றபடி படத்தில் நடித்துள்ள நடிகர் நடிகைகள் அனைவரும் அவரவருக்கு கொடுக்கப்பட்ட பணிகளைச் சிறப்பாக செய்திருக்கிறார்கள்.