0 15 hrs

விஜயாமேரி யுனிவர்சல் நிறுவனம் தயாரிப்பில், வடிவுக்கரசி, கஜராஜ், சிங்கம்புலி, திலீபன், ஆனந்த் நாக் உள்ளிட்டோர் நடிப்பில், விஜய குமாரன் இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் “க்ராணி”.

கதைப்படி.. இரவு நேரத்தில் காட்டுப்பகுதியில் ஒரு வயதான பாட்டி நடந்து செல்கிறார். பின்னால் பாட்டி.. பாட்டி என பெண் குழந்தை செல்கிறது. பின்னர் அதிகாலையில் தோட்டத்தில் பெண் சடலம் கிடக்கிறது. அதுவும் மிகவும் கொடூரமான முறையில் ரத்த வெள்ளத்தில் கிடக்கிறது. பின்னர் காவல்துறையினர் விசாரணையைத் தொடங்குகின்றனர். இதற்கிடையில் லண்டனில் இருந்து மனைவி, இரு குழந்தைகளுடன், சாஃப்ட் வேர் வேலையை விட்டுவிட்டு விவசாயம் செய்ய வேண்டும் என அந்த ஊரில் உள்ள பெரிய வீட்டில் தங்குகிறார் ஆனந்த் நாக். அந்த சமயத்தில் வயதான பாட்டி அந்த வீட்டிற்கு வரும்போது, மயங்கி கீழே விழுகிறார். அந்த தம்பதியினர் அவரை உள்ளே கொண்டுவந்து அவர்மீது கரிசனம் காட்டுகிறார்கள்.

இதற்கிடையில் ஊரில் உள்ளவர்கள் கடந்த நூறு ஆண்டுகளுக்கு முன்பு அந்த ஊரில் நடந்த சம்பவங்களை கூறுகின்றனர். அதனை நம்ப மறுக்கிறார் ஆனந்த் நாக். பின்னர் வீட்டிற்குச் செல்கிறார். அங்கு பல அதிர்ச்சிகரமான சம்பவங்கள் நிகழ்ந்திருப்பதை பார்க்கிறார். அதன்பிறகு என்னானது என்பது மீதிக்கதை…

படத்தின் தொடக்கத்திலிருந்து இறுதிவரை எதிர்பார்ப்புடன் பார்வையாளர்களை அமர வைத்திருக்கிறார் இயக்குநர்.

வடிவுக்கரசிக்கு மேக்கப் சிறப்பாக அமைந்திருக்கிறது. அவருக்கு வசனங்கள் குறைவாக இருந்தாலும், தனது நடிப்பின் மூலம் நிறைய பேசியிருக்கிறார். அதேபோல் சிங்கம்புலிக்கு கொடுக்கப்பட்ட கதாப்பாத்திரத்தில் வாழ்ந்திருக்கிறார். மாற்றுத்திறனாளிகளாக நடித்துள்ள இரண்டு குழந்தைகளின் நடிப்பு சிறப்பு. படத்தில் நடித்துள்ள நடிகர், நடிகைகள் அனைவரும் அவரவருக்கு கொடுக்கப்பட்ட பணிகளைச் சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *