அறிமுக நடிகர் எஸ். கார்த்தீஸ்வரன் கதையின் நாயகனாக நடித்து இயக்கியிருக்கும் ‘நிர்வாகம் பொறுப்பல்ல’ திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியிட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் இயக்குநர் கே. பாக்யராஜ் படத்தின் இசை மற்றும் முன்னோட்டத்தை வெளியிட, விருகம்பாக்கம் சட்டமன்ற […]
சினிமா
IDAA Productions மற்றும் Think Studios சார்பில் இயக்குநர் வினீத் வரபிரசாத் இணைந்து தயாரிக்க, ஹரீஷ் கல்யாண், ப்ரீத்தி முகுந்தன் நடிப்பில், இயக்குநர் வினீத் வரபிரசாத் இயக்கத்தில், வட சென்னையின் பின்னணியில், ராப் இசைக் கலையை மையமாக வைத்து உருவாகி வரும் […]
சினிமா
டிரம்ஸ்டிக் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் வெடிக்காரன்பட்டி எஸ்.சக்திவேல் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் கலையரசன் தங்கவேல் இயக்கத்தில் ரியோ ராஜ், மாளவிகா மனோஜ், ஆர் ஜே விக்னேஷ் காந்த், ஷீலா, ஜென்சன் திவாகர் ஆகியோரின் நடிப்பில் ஏஜிஎஸ் சினிமாஸ் வெளியிட்ட ‘ஆண்பாவம் […]
சினிமா
அறிமுக நடிகர் எஸ். கார்த்தீஸ்வரன் கதையின் நாயகனாக நடித்து இயக்கியிருக்கும் ‘நிர்வாகம் பொறுப்பல்ல’ திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியிட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் இயக்குநர் கே. பாக்யராஜ் படத்தின் இசை மற்றும் முன்னோட்டத்தை வெளியிட, விருகம்பாக்கம் சட்டமன்ற […]
சினிமாஅறிமுக நடிகர் எஸ். கார்த்தீஸ்வரன் கதையின் நாயகனாக நடித்து இயக்கியிருக்கும் ‘நிர்வாகம் பொறுப்பல்ல’ திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியிட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் இயக்குநர் கே. பாக்யராஜ் படத்தின் இசை மற்றும் முன்னோட்டத்தை வெளியிட, விருகம்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் ஏ எம் வி பிரபாகர் ராஜா மற்றும் இயக்குநரும், நடிகருமான கௌரவ் நாராயணன் ஆகியோர் இணைந்து பெற்றுக் கொண்டனர்.
எஸ். கார்த்தீஸ்வரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘நிர்வாகம் பொறுப்பல்ல’ திரைப்படத்தில் எஸ் கார்த்தீஸ்வரன், லிவிங்ஸ்டன், இமான் அண்ணாச்சி, பிளாக் பாண்டி, ராணா, ஆதவன், அகல்யா வெங்கடேசன், ஸ்ரீ நிதி, கோதை சந்தானம், அம்மன்புரம் சரவணன், ராதாகிருஷ்ணன், எம் ஆர் அர்ஜுன், மிருதுளா சுரேஷ், ஜெய ஸ்ரீ சசிதரன், தீக்ஷன்யா, மஞ்சு, சர்க்கார் மீனா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். என். எஸ். ராஜேஷ் குமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்திருக்கிறார்.
மோசடிகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் படைப்பாக உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஆர் கே ட்ரிம் ஃபேக்டரி நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் டி. ராதாகிருஷ்ணன் தயாரித்திருக்கிறார். மேலும் கே எம் பி புரொடக்ஷன்ஸ் மற்றும் எஸ் பி எம் ஸ்டுடியோஸ் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் எம் புவனேஸ்வரன் மற்றும் சி சாஜு – ஜோதிலட்சுமி ஆகியோர் இணை தயாரிப்பாளர்களாக பங்காற்றியுள்ளனர். இந்த திரைப்படத்தை சோரியன் மீடியா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தமிழகம் முழுவதும் வெளியிடுகிறது.

இந்நிகழ்வில் தயாரிப்பாளர் ராதாகிருஷ்ணன் பேசுகையில், ‘சினிமாவிற்கும், எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லாமல் இருந்தது. சினிமா குடும்பத்திற்கு என்னை அழைத்து வந்த ‘நிர்வாகம் பொறுப்பல்ல’ படக்குழுவினருக்கு நன்றி. இங்கு வருகை தந்திருக்கும் சிறப்பு விருந்தினர்கள், உறவினர்கள், நண்பர்கள், இப்படத்தில் பணியாற்றிய நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி என்றார் .
பாடலாசிரியர் கருணாகரன் பேசுகையில், இந்தப் படத்தில் இடம்பெறும் அனைத்துப் பாடல்களையும் எழுதுவதற்கு வாய்ப்பளித்த இயக்குநருக்கும் , இசையமைப்பாளருக்கும் என் மனமார்ந்த நன்றி. 2004ம் ஆண்டில் வெளியான ‘ஏய்’ படத்தில் இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா உடன் இணைந்து பணியாற்றிய வேண்டிய தருணம். ஆனால் அந்த வாய்ப்பு தவறிப் போனது. அதன் பிறகு அவருடைய இசையில் இப்போது அனைத்து பாடல்களையும் எழுதி இருக்கிறேன். இது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது என்றார்.
நடிகை மஞ்சு பேசுகையில், எல்லோரும் ஏதோ ஒரு சூழலில் மோசடிக்கு ஆளாகி இருப்போம். இதுபோன்ற உண்மை சம்பவத்தை தழுவி தான் இந்த படம் உருவாகி இருக்கிறது. அதனால் இந்தப் படத்தை திரையரங்கத்திற்கு வருகை தந்து பார்த்து ரசித்து ஆதரவை தர வேண்டும் என்றார்.

நடிகர் பிளாக் பாண்டி பேசுகையில், நானும் ஆன்லைன் மோசடியால் பாதிக்கப்பட்டிருக்கிறேன். நானும், எனது மனைவியும் என்னுடைய இரண்டாவது மகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக மருத்துவமனைக்கு சென்று கொண்டிருந்தோம். அந்தத் தருணத்தில் மருத்துவமனைக்கு கட்டணம் செலுத்துவதற்காக என்னுடைய வங்கி கணக்கில் குறிப்பிட்ட தொகையை வைத்திருந்தேன். நானும் என் மனைவியும் வாகனத்தில் பயணித்துக் கொண்டிருந்தபோது என் மனைவி அவருடைய செல்போனுக்கு வந்த ஒரு லிங்கை தவறுதலாக தொட்டுவிட, என்னுடைய வங்கி கணக்கில் இருந்த அனைத்து பணமும் திருடப்பட்டிருந்தது. எனக்கு அந்த நெருக்கடியான சூழலில் இந்த மோசடி நடைபெற்ற போது அதை எப்படி எதிர்கொள்வது என்று தெரியவில்லை. மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானேன். இதை பகிர்ந்து கொள்வதில் தயக்கம் இருக்கிறது. இருந்தாலும் நானும் மோசடியால் பாதிக்கப்பட்டேன் என்பதற்காக இந்த விஷயத்தை பகிர்ந்து கொள்கிறேன். வாழ்க்கையில் நிறைய மக்கள் பணத்தை மோசடி பேர்வழிகளிடம் இழந்து இருப்பார்கள். தற்போது ஒவ்வொருவரும் வாட்ஸ்அப்பை பயன்படுத்துகிறார்கள். அதில் ஏடிகே ஃபைல்ஸ் என்று ஒரு லிங்க் வருகிறது. நீங்கள் எந்த சூழலில் இருந்தாலும் முழுமையான விழிப்புணர்வுடன் இதனை எதிர்கொள்ளுங்கள். நீங்கள் உங்களுடைய சொந்த புகைப்படத்தை பகிர்ந்து கொள்ளும் போதும் கவனத்துடன் இருங்கள். இந்தப் படமும் இதைத்தான் சொல்கிறது.
நான் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இயக்குநர் கார்த்திக் மற்றும் படக் குழுவினருடன் தொடர்ந்து பழகி வருகிறேன். அற்புதமான குழு. கடுமையாக உழைத்து படத்தை உருவாக்கி இருக்கிறார்கள். இந்தப் படம் வெற்றி பெற வேண்டும் என வாழ்த்துகிறேன் என்றார்.
தணிக்கை குழு உறுப்பினர் சௌதாமணி பேசுகையில், நான் தொலைக்காட்சிகளில் செய்தி வாசிக்கும் வாசிப்பாளர். தற்போது மத்திய திரைப்பட தணிக்கை வாரியத்தின் ஆலோசனைக் குழு உறுப்பினராக பணியாற்றுகிறேன். வாரத்திற்கு மூன்று அல்லது நான்கு திரைப்படங்களை தணிக்கை சான்றிதழுக்காக பார்ப்போம். இந்த சமுதாயத்தில் புரையோடி இருக்கின்ற, அனைவரும் பாதிக்கப்பட்டிருக்கும் ஒரு விஷயத்தை படக் குழுவினர் கையாண்டிருக்கிறார்கள். இதற்காக படக்குழுவினரை பாராட்டுகிறேன்.

கடந்த ஒரு ஆண்டில் மட்டும் இந்தியாவில் 17,000 கோடி ரூபாய் அளவிற்கு சைபர் குற்றங்கள் நடைபெற்று இருக்கின்றன. இது தொடர்பாக தினந்தோறும் செய்திகள் நாளிதழ்களில் வெளியாகிறது. ஆன்லைன் மோசடி, டிஜிட்டல் அரெஸ்ட், டிரேடிங் ஸ்கேம், முதலீடு தொடர்பான மோசடி என நாள்தோறும் விதவிதமாக மக்களை ஏமாற்றுகிறார்கள். நம் நாட்டின் பட்ஜெட்டிற்கு நிகராக மக்கள் தங்களுடைய பணத்தை இழந்திருக்கிறார்கள். சைபர் மோசடியால் பணத்தை இழந்தவர்கள் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். தங்களது வாழ்வாதாரத்தை இழந்திருக்கிறார்கள். இந்தப் படத்தை சமூகத்திற்கு ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் உருவாக்கி இருக்கிறார்கள்.
தணிக்கை குழுவை பொருத்தவரை கெட்ட வார்த்தைகளை பேசக்கூடாது, யாரையும் அவமதிக்கக்கூடாது, அரசியல் தலைவர்களை பற்றி தவறாக பேசுவதோ சித்தரிப்பதோ கூடாது. எங்களைப் பொருத்தவரை படைப்பாளிகள் கொடுக்கும் ஒரு படம் சமூகத்தில் மக்களுக்கு படிப்பினையையும், விழிப்புணர்வையும், நல்லதொரு சிந்தனையையும் கொடுக்க வேண்டும் என்பதற்கு நாங்கள் முன்னுரிமை வழங்குவோம். அப்படிப்பட்டதொரு படத்தை எடுத்ததற்காக இந்த படக் குழுவினரை மீண்டும் பாராட்டுகிறேன் என்றார் .
நடிகர் இமான் அண்ணாச்சி பேசுகையில், புதுமுக நடிகர் மற்றும் இயக்குநர் மீது நம்பிக்கை வைத்து இந்த படத்தை தயாரித்த தயாரிப்பாளருக்கு முதலில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இது போன்ற திரைப்பட விழாக்களில் அணிவிக்கப்படும் சால்வையால் எந்த பயனும் இல்லை. இதை யாருக்கும் அன்பளிப்பாக கொடுக்கவும் முடியவில்லை. அதனால் சால்வைக்கு பதிலாக துண்டினை (டர்க்கி டவல் – குற்றால துண்டு ) பரிசாக அளிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கிறேன் என்றார்.
நடிகை மிருதுளா சுரேஷ் பேசுகையில், இந்த திரைப்படம் சமூகத்திற்கு தேவையான அழுத்தமான செய்தியையும், பொழுதுபோக்கையும் கொண்ட திரைப்படம். அனைவரும் நிச்சயமாக திரையரங்கத்திற்கு வருகை தர வேண்டும் என்றார்.

இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா பேசுகையில், என் தந்தை தேவாவின் எழுபத்தைந்தாவது பிறந்த நாளான இன்று அவர் பாடிய ஒரு பாடலை இங்கு திரையிட்டு, அவரை கௌரவப்படுத்தியதற்காக அனைவருக்கும் என் தந்தையின் சார்பில் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தப் படத்தின் தயாரிப்பாளர் வேறு துறையை சார்ந்தவராக இருந்தாலும் பொருத்தமான கதையை தேர்வு செய்து அதற்கு தேவையான பொருட்செலவில் படத்தை உருவாக்கியிருக்கிறார். இந்தப் படம் அவருக்கு நிச்சயமாக நஷ்டத்தை தராது. லாபத்தை அள்ளித் தரும். அதற்கு என் வாழ்த்துகள்.
நானும், பாடலாசிரியர் கருணாகரனும் ஏற்கனவே இணைந்து பணியாற்றி இருக்க வேண்டும். ஆனால் இந்தப் படத்தில் தான் இணைந்திருக்கிறோம். அவரை பார்க்கும் போதெல்லாம் இவரைப் போல் தொடர்ந்து உழைக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு ஏற்படும். அவரிடமிருந்து இதை கற்றுக் கொண்டேன் என்றார்.
இயக்குநர் கௌரவ் நாராயணன் பேசுகையில், இந்த ஆண்டு தேசிய விருதுக்கான நடுவர் குழுவில் தென்னிந்திய பிரதிநிதியாக தமிழ்நாடு சார்பில் நான் இடம் பெற்றிருந்தேன். இந்த நடுவர் குழுவில் நான் தான் மிகவும் இளையவன். சிறந்த திரைக்கதைக்கான தேசிய விருது வழங்கும் பட்டியலில் ‘பார்க்கிங்’ படத்துடன் வேறு சில படங்களும் போட்டியில் இருந்தன. இந்தத் தருணத்தில் கே. பாக்யராஜ் படங்களில் இடம் பிடித்திருக்கும் திரைக்கதை நுட்பங்களால் உந்தப்பட்ட நான் அவருடைய திரைக்கதை மேஜிக்கை உதாரணமாக பேசி தான் ‘பார்க்கிங்’ படம் தேசிய விருதுக்கு தேர்வானது. எனவே ‘பார்க்கிங்’ படம் சிறந்த திரைக்கதைக்கான தேசிய விருதுக்கு தேர்வு செய்யப்பட்டதன் பின்னணியில் கே. பாக்யராஜ் இருக்கிறார். திரைக்கதை என்றால் தமிழ் சினிமா தான் நிகரற்றது. இத்தனை ஆண்டு காலம் தமிழ் சினிமாவிற்கு சிறந்த திரைக்கதைக்கான தேசிய விருது வழங்கப்படவில்லை போன்ற சில விஷயங்களை பேசி பரிந்துரைத்தேன்.
அப்பா அம்மாவை நேசிப்பவர்கள் யாரும் தோற்க மாட்டார்கள். இப்படத்தின் தயாரிப்பாளரும் அவருடைய தந்தை மீது அளவற்ற நேசம் கொண்டவர். இதற்காகவே இந்த படம் வெற்றி பெறுவதற்கு அவருடைய தந்தையின் பரிபூரண ஆசி உண்டு என்பதை உறுதியாக தெரிவித்துக் கொள்கிறேன். எதிர்மறை எங்கும் இருக்கக் கூடாது என விரும்பும் நான் என் படத்தின் டைட்டிலில் கூட ‘தூங்கா நகரம்’, ‘சிகரம் தொடு’, ‘இப்படை வெல்லும்’ என பெயர் வைத்திருப்பேன். ஆனால் இப்படத்தின் இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா பேசும் ஒவ்வொரு வார்த்தையிலும் பாசிட்டிவிட்டி இருக்கும். அவர் இந்த படத்தில் பங்களிப்பு வழங்கியது இப்படத்திற்காக வெற்றியை குறிக்கிறது.
மோசடி குறித்து படம் இயக்குவது கடினம். ஏடிஎம் பண மோசடி குறித்து நான் முதன்முதலாக ‘சிகரம் தொடு’ படத்தை உருவாக்கினேன். ஒரே ஒரு விசிட்டிங் கார்டை வைத்துக்கொண்டு ஒரு நபர் 70 லட்சம் ரூபாயை மோசடி செய்து சம்பாதித்து இருக்கிறார் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? அவர்தான் சிகரம் தொடு படத்தை உருவாக்குவதற்கான இன்ஸ்பிரேஷன். இதற்காக சிறையில் அடைக்கப்பட்டிருந்த அந்த நபரை சந்தித்து பல விஷயங்களை கேட்டு அந்த படத்தை உருவாக்கினேன். அந்த நபர் ராஜஸ்தான் மாநிலத்தை சார்ந்தவர் இங்கு 70 லட்சம் ரூபாயை மோசடி செய்து சம்பாதித்து அவர் அங்கு பிரம்மாண்டமான வீட்டை கட்டியிருந்தார். சம்பாதிப்பது கடினம், அதை செலவழிப்பது எளிது, அதை திருடுவது அதைவிட எளிது. ஆனால் இதற்கு மூளை அதிகமாக வேண்டும். அதனால் இந்தப் படத்திலும் மோசடிகள் பற்றி நிறைய விவரங்களை சொல்லி இருப்பார்கள். இவை மக்களுக்கு பிடித்தவையாகவும், பயனுள்ளதாகவும் இருந்தால் இந்த படம் நிச்சயம் மிகப்பெரிய வெற்றியை பெறும். இன்று கன்டென்ட் உள்ள படங்கள் தான் வெற்றி பெறுகிறது என்றார்.

விருகம்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் ஏ எம் வி பிரபாகர் ராஜா பேசுகையில், இந்த நிகழ்விற்கும், மேடையில் வீற்றிருக்கும் படக்குழுவினருக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. என் தொகுதி அருகில் உள்ளதாலும், என்னுடைய நண்பர்களின் அழைப்பின் காரணமாகவும் இதில் கலந்து கொண்டிருக்கிறேன். இருந்தாலும் இது போன்ற நிகழ்வில் கலந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். ஏனென்றால் எங்கள் கட்சியின் மறைந்த தலைவர் கலைஞர் ஐயா, தமிழக முதல்வர், தமிழகத்தின் துணை முதல்வர் அனைவரும் திரைத்துறையில் இருந்து தான் வளர்ச்சி அடைந்திருக்கிறார்கள். அந்தக் கட்சியில் இருந்து வந்தவன் என்பதால் இந்த மேடையில் இருப்பதை பெருமிதமாக கருதுகிறேன்.
இயக்குநர் கே .பாக்யராஜின் காலகட்டத்தில் ஒவ்வொரு திரைப்படங்களும் ஆண்டு கணக்கில் ஓடும். ஆனால் இன்று மூன்று நாள் ஓடிய படங்களுக்கு மெகா ஹிட் என விளம்பரம் செய்கிறார்கள். அந்த அளவிற்கு கால சூழல் மாறி இருக்கிறது.
இன்றுள்ள இளைய தலைமுறையினர் மற்றும் மாணவர்கள் சினிமாவில் இருக்கும் நடிகர்களை பார்த்து தான் தங்களை வழி நடத்திக் கொள்கிறார்கள். இதற்காகத்தான் படத்தில் தோன்றும் கதாபாத்திரங்கள் சிகரெட் பிடித்தால் அதற்கு கீழே எச்சரிக்கை வாசகம் இடம்பெறுகிறது. இருந்தாலும் இன்று கருத்துள்ள படங்கள் அதிகம் வருவதில்லை. இந்தப் படத்தில் மோசடி குறித்து பேசி இருக்கிறார்கள். இன்று அனைத்து துறையிலும் மோசடி இருக்கிறது. இதில் யார் அதிகம் ஏமாறுகிறார்கள் என்றால், படித்தவர்கள் தான் அதிகம். இதற்கு அடிப்படை காரணம் என்னவென்றால் நம்மிடம் இருக்கும் பேராசை தான்.
சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் என்னை தேடி வந்து பலரும் பத்து லட்சம் கட்டினோம் மோசடி செய்து விட்டார்கள் என்று புலம்புவார்கள், புகார் அளிப்பார்கள். நான் காவல்துறையில் புகார் அளிக்குமாறு பரிந்துரைப்பேன். நமக்கு எது தேவை என்பதை நன்றாக திட்டமிட்டு அளவுடன் வாழ்ந்தால் மோசடியில் சிக்க மாட்டோம். மேலும் மோசடி குறித்து அரசாங்கம் மட்டுமே பணியாற்றினால் இதை தடுக்க முடியாது. மக்களும் ஒருங்கிணைந்து ஆதரவு தர வேண்டும். தமிழக மக்கள் மிகவும் விழிப்பானவர்கள். சிறப்பானவர்கள். இந்த படத்தை பார்த்து, எதிர்காலத்தில் எந்த மோசடியிலும் சிக்காமல் இருக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என்றார்.
இயக்குநர்- நடிகர் எஸ். கார்த்தீஸ்வரன் பேசுகையில், எல்லோரும் ஏதேனும் ஒரு மோசடியில் தெரிந்தோ, தெரியாமலோ சிக்கி இருப்போம். இந்த படத்தை உருவாக்கி சிலரிடம் காண்பித்த போது அவர்கள் நாங்களும் ஐந்து லட்சத்தை இழந்திருக்கிறோம், பத்து லட்சத்தை இழந்திருக்கிறோம் என சொன்னார்கள். இவர்கள் எல்லாம் தெரிந்து எப்படி ஏமாறுகிறார்கள் என்று எனக்குப் புரியவில்லை. இதுபோல் ஏமாற்றுகிறார்கள் என்று தெரிந்தும் மீண்டும் மீண்டும் நாம் ஏமாறிக் கொண்டிருக்கிறோம். மோசடியாளர்கள் வெவ்வேறு பாணியில் தங்களுடைய மோசடியை தொடர்ந்து செய்து கொண்டு தான் இருக்கிறார்கள். இதையெல்லாம் திரைப்படமாக உருவாக்க வேண்டும் என்றால் ‘நிர்வாகம் பொறுப்பல்ல’ படத்திற்கு பத்து பாகத்தை எடுக்கலாம். என்னால் முடிந்த அளவிற்கு நான்கு வகையான மோசடிகளை இந்த படத்தில் இடம்பெறச் செய்திருக்கிறேன். அதை நேரடியாக சொல்லாமல் பொழுதுபோக்கு அம்சங்களுடன் இணைத்து சொல்லி இருக்கிறேன்.

இந்த படத்தில் நாயகனாகவும் நடித்து இயக்குநராகவும் பணியாற்றி இருக்கிறேன். இதற்கு விதை போட்டவர் இங்கு சிறப்பு விருந்தினராக வருகை தந்து வாழ்த்தும் கே. பாக்யராஜ் அவர்கள் தான். ஹீரோவாகவும் நடித்து, இயக்கவும் முடியும் என்ற அவர் கொடுத்த நம்பிக்கையில் தான் நானும் இப்படத்தை இயக்கி நடித்திருக்கிறேன் என்றார்.
இயக்குநர் கே. பாக்யராஜ் பேசுகையில், பொதுவாக எல்லாப் புகழும் இறைவனுக்கே என்று தான் சொல்வார்கள். ஆனால் உண்மையில் எல்லாப் புகழும் ரசிகப் பெருமக்களுக்கே என்றுதான் சொல்ல வேண்டும். ஏனெனில் அவர்கள் இல்லை என்றால் இங்கு யாரும் இல்லை.
சினிமாவில் ஆபத்பாந்தவன் என்ற பெயரை ஸ்ரீகாந்த் தேவாவின் தந்தையான தேவா பெற்றிருக்கிறார். நட்சத்திர நடிகர்களுக்கும் இசையமைப்பார். சிறிய முதலீட்டு தயாரிப்பாளர்களுக்கும் இசையமைப்பார். தந்தை வழியில் இன்று ஸ்ரீகாந்த் தேவாவும் பயணிக்கிறார், அவருக்கு என்னுடைய வாழ்த்துகள். மோசடி பேர்வழிகளுக்கு சாதாரண மக்களை விட மூளை அதிகம். அதனை சமூகத்திற்கு நேர்மறையாக பயன்படுத்தாமல் எதிர்மறையாக பயன்படுத்துகிறார்கள். நான் ‘பாக்யா’ இதழில் கேள்வி பதில் எழுதும் போது இது போன்ற விஷயங்களை நிறைய வாசித்திருக்கிறேன். மோசடிகளை பற்றி நினைத்துப் பார்க்கும்போது ஆச்சரியமாக இருக்கும். இது இங்கு மட்டுமல்ல வெளிநாட்டிலும் உண்டு.
இந்தப் படத்தின் கதை என்ன? என்று இயக்குநரிடம் கேட்டபோது அவர் சொன்ன விஷயம் சுவாரசியமாக இருந்தது. நான் ஏமாற்ற பட்டேன். அதனால் மற்றவர்களை ஏமாற்ற நினைத்தேன். இதுதான் சார் லைன் என்றார். அதாவது முள்ளை முள்ளால் எடுக்கும் விஷயம். இது மிகவும் சுவாரசியமாக இருக்கும் என்ற நம்பிக்கை எனக்கு ஏற்பட்டது.
உண்மை சம்பவத்தை படமாக எடுக்கும் போது நிச்சயமாக ரசிகர்களுக்கு பிடிக்கும். ஆகவே இந்த படம் நிச்சயம் வெற்றி பெறும் என்றார்.
IDAA Productions மற்றும் Think Studios சார்பில் இயக்குநர் வினீத் வரபிரசாத் இணைந்து தயாரிக்க, ஹரீஷ் கல்யாண், ப்ரீத்தி முகுந்தன் நடிப்பில், இயக்குநர் வினீத் வரபிரசாத் இயக்கத்தில், வட சென்னையின் பின்னணியில், ராப் இசைக் கலையை மையமாக வைத்து உருவாகி வரும் […]
சினிமாIDAA Productions மற்றும் Think Studios சார்பில் இயக்குநர் வினீத் வரபிரசாத் இணைந்து தயாரிக்க, ஹரீஷ் கல்யாண், ப்ரீத்தி முகுந்தன் நடிப்பில், இயக்குநர் வினீத் வரபிரசாத் இயக்கத்தில், வட சென்னையின் பின்னணியில், ராப் இசைக் கலையை மையமாக வைத்து உருவாகி வரும் திரைப்படம் “தாஷமக்கான்”. சென்னையின் மற்றொரு முகத்தைக் காட்டும் வகையில், மாறுபட்ட களத்தில் புதுமையான அனுபவமாக இப்படத்தை உருவாக்கி வருகிறார். ஹரீஷ் கல்யாண் இப்படத்தில் ராப் இசைக் கலைஞராக நடித்து வருகிறார். படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், இறுதி கட்ட post production பணிகள் நடந்து வருகிறது, இப்படத்தின் டைட்டில் புரமோ மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியீட்டு விழா நடைபெற்றது.

இந்நிகழ்வினில் நடிகர் ஹரீஷ் கல்யாண் பேசியதாவது.., தாஷமக்கான் பற்றி நாம் கேள்விப்பற்றிருபோம், தமிழ்நாட்டிற்கு கறி சப்ளை செய்யும் இடம் தான் தாஷமக்கான். நான் இப்படத்தில் ராப்பராக நடித்துள்ளேன். தமிழில் ராப் இசைக்கு பெரிய வரலாறு உள்ளது. பலர் இதற்கு முன் ராப் இசையில் கலக்கியுள்ளனர். இண்டி மியூசிக்கிலும் பலர் கலக்கி வருகின்றனர். எனக்கு அவர்கள் எல்லோரும் தான் இன்ஸ்பிரேஷன். இந்த மாதிரி திறமையாளர்களை அடையாளப்படுத்திய இயக்குநருக்கு நன்றி. இசை இந்தப்படத்தில் மிக முக்கியம். ராப், பேட்டில் இசை, ரொமான்ஸ் என பல ஜானரில் பாடல்கள் உள்ளது. சூப்பராக இசையமைத்துள்ளார். இந்த கதாபாத்திரத்திற்கு நான் செட்டாவேனா எனச் சந்தேகம் இருந்தது. இயக்குநர் எல்லோருமே தயங்கினார்கள் என்றார், அப்போதே நாம் செய்ய வேண்டும் என முடிவு செய்துவிட்டேன். எல்லோருமே பெரும் உழைப்பைத் தந்துள்ளனர். மதன் லப்பர் பந்துவிற்கு பிறகு என்னுடன் மீண்டும் இணைந்துள்ளார். அவருக்கு நன்றி. அமீர் நடிகராக வந்து, ஒரு பாடல் கொரியோகிராஃபும் செய்துள்ளார். அவருக்கு இந்தப்படம் திருப்புமுனையாக இருக்கும். ஸ்டண்ட் மிகச்சிறப்பாக செய்து தந்த ஓம் பிரகாஷ் மாஸ்டர், தினேஷ் சுப்பராயன் மாஸ்டர் இருவருக்கும் நன்றி. சுனில், சத்யராஜ் இருவரும் முக்கியமான ரோல் செய்துள்ளனர். ஃப்ரீத்தி நன்றாக நடித்துள்ளார். இந்தப்படம் கண்டிப்பாக அனைவருக்கும் புது அனுபவம் தரும் என்றார்.

இயக்குநர் வினீத் வரபிரசாத் பேசியதாவது, எனது முதல் படத்தில் எனக்கு இந்த மேடை கிடைக்கவில்லை, ஏன் என்பதை ஆராய்வதை விட்டுவிட்டு, நமக்கான மேடையை நாமே உருவாக்கலாம் என ஆரம்பித்தது தான் இந்தப்படம். இந்தப்படத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட நடிகர்கள் அறிமுகமாகியிருக்கிறார்கள். 8 க்கும் மேற்பட்ட ராப் கலைஞர்கள் அடையாளப்பட்டுள்ளார்கள். ஹரீஷ் இப்படத்தில் ராப்பராக நடித்துள்ளார். நிறைய பேர் தயங்கிய ரோல் இது. அவர் வந்ததே எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி. இசை சம்பந்தமான படம், நிறைய விவாதித்து, அலைந்து தேடி, இப்படத்தில் ராப் இசையைக் கொண்டுவந்துள்ளோம். எனக்குத் தெரிந்த சென்னையை, அதன் வாழ்க்கையை இப்படத்தில் கொண்டுவந்துள்ளோம். இப்படத்தில் உழைத்த அனைத்து உதவியாளர்கள், கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி. அமீர் நடித்த ரோலுக்கு முதலில் வேறு வேறு நபர்களை அறிமுகம் செய்து கொண்டிருந்தார், நம்ம படத்திற்கு இவர் வேலை பார்க்கிறாரே எனக் கடைசியில் அவரையே நடிக்க வைத்துவிட்டோம். அவர் மிகச்சிறந்த கலைஞர். அவருக்கு இந்தப்படம் முக்கியமானதாக இருக்கும். இந்தப்படம் எல்லோருக்கும் பெரிய வெற்றியைத் தரட்டும் என்றார்.
ஸ்டண்ட் இயக்குநர் ஓம் பிரகாஷ் பேசியதாவது, தாஷமக்கான் வட சென்னையின் மைய பகுதியாக இருக்கும் ஒரு ஏரிவை இயக்குநர் பலமுறை சுற்றிக்காட்டினார், க்ளைமாக்ஸ் சண்டை காட்சியில் 1000 பேர் கலந்துகொள்ளும் ஒரு ஃபைட், அதை சிங்கிள் ஷாட்டில் எடுத்தோம். சிங்கிள் ஷாட் எடுக்கும் போது நிறைய ஒத்துழைப்பு தந்து அசத்தினார் ஹரீஷ். சிங்கிள் ஷாட் அவ்வளவு பெரிய ஃபைட் சீன் எடுக்கக் காரணம் இயக்குநர் வினீத் தான் என்றார்.

எடிட்டர் மதன் பேசியதாவது.., 2019 வரை வெறும் டிரெய்லர்கள் தான் செய்து கொண்டிருந்தேன். நண்பர் ரஞ்சித் மூலம் வினீத் அறிமுகமானார். அவரை சந்தித்த 10 நிமிடத்தில் லிஃப்ட் பட வாய்ப்பை தந்தார். அவர் தந்த வாய்ப்பு தான் தமிழ் சினிமாவில் எனக்கு வாழ்க்கை தந்தது. இப்படத்தில் நிறைய சர்ப்ரைஸ் இருக்கிறது. மிகக்கடினமாக உழைத்துள்ளார். ஹரீஷ் உடன் லப்பர் பந்து படத்திற்குப் பிறகு இணைந்துள்ளேன். இப்படத்திற்காக முழுதாக உடலை மாற்றியுள்ளார். இந்தப்படம் அவருக்கு மிகப்பெரும் திருப்புமுனையாக இருக்கும். ஹீரோயினும் நன்றாகச் செய்துள்ளார். எல்லோருமே மிகுந்த அர்ப்பணிப்புடன் உழைத்துள்ளார்கள் என்றார்.
இசையமைப்பாளர் பிரிட்டோ மைக்கேல் பேசியதாவது.., ஹரீஷ் வந்தபிறகு தான் இந்தப்படம் மாறியது. அண்ணாநகரில் இளைஞர்கள் ராப் செய்து கொண்டிருந்ததை வீடியோ எடுத்து வந்து இது போல செய்யலாம் என்றார். அந்த ராப் கலைஞர்களுடன் வேலை பார்த்தது எனக்கு புது அனுபவமாக இருந்தது. அமீர் இப்படத்தில் சிறப்பாகச் செய்துள்ளார். எல்லா காட்சியிலும் நிறையக் கூட்டம் இருக்கும். இவ்வளவு பேரை வைத்து எடுப்பது எவ்வளவு கஷ்டம் எனத் தோன்றும். படத்தில் நிறைய ஆச்சரியங்கள் இருக்கிறத என்றார்.
நடன இயக்குநர் அமீர் பேசியதாவது.., இந்தப்படத்தில் வேறொருவரை அறிமுகம் செய்யத் தான் இயக்குநரைச் சந்தித்தேன், அவர் என்னை நம்பி வாய்ப்பு தந்தார். அவர் கொடுத்த பவுண்ட் படித்த பிறகு, இதைவிட ஒரு பெரிய வாய்ப்பு கிடைக்காது எனத் தோன்றியது. எனக்கு கோரியோகிராஃபர் ஆக ஆசை, ராஜுசுந்தரம் மாஸ்டர் பாபா பாஸ்கர் மாஸ்டர் பெயருக்கு அடுத்து, அமீர் என்ற பெயர் இருப்பது எனக்குப் பெருமை. ஹரீஷ் கல்யாணுடன் நடித்துள்ளேன், நடன இயக்கமும் செய்துள்ளேன் என்பது மிகப்பெரிய மகிழ்ச்சி என்றார்.
டிரம்ஸ்டிக் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் வெடிக்காரன்பட்டி எஸ்.சக்திவேல் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் கலையரசன் தங்கவேல் இயக்கத்தில் ரியோ ராஜ், மாளவிகா மனோஜ், ஆர் ஜே விக்னேஷ் காந்த், ஷீலா, ஜென்சன் திவாகர் ஆகியோரின் நடிப்பில் ஏஜிஎஸ் சினிமாஸ் வெளியிட்ட ‘ஆண்பாவம் […]
சினிமாடிரம்ஸ்டிக் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் வெடிக்காரன்பட்டி எஸ்.சக்திவேல் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் கலையரசன் தங்கவேல் இயக்கத்தில் ரியோ ராஜ், மாளவிகா மனோஜ், ஆர் ஜே விக்னேஷ் காந்த், ஷீலா, ஜென்சன் திவாகர் ஆகியோரின் நடிப்பில் ஏஜிஎஸ் சினிமாஸ் வெளியிட்ட ‘ஆண்பாவம் பொல்லாதது’ திரைப்படம் ரசிகர்களின் பேராதரவுடன் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
தயாரிப்பாளர்கள் டி. கே. டி. நந்தகுமார் மற்றும் எம். எஸ். கே. ஆனந்த் ஆகியோரின் இணை தயாரிப்பில் பிளாக் ஷீப் ஃபைண்ட்ஸ் ( Black Sheep Finds) நிறுவனத்தின் படைப்பு பங்களிப்புடன் வெளியான இந்த திரைப்படம் உலகம் முழுவதும் பதினைந்து கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து சாதனை படைத்து வரும் நிலையில் படத்தின் பிரம்மாண்டமான வெற்றிக்கு காரணமாக அமைந்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் படக்குழுவினர் பிரத்யேக நிகழ்வை ஒருங்கிணைத்தனர். சென்னையில் நடைபெற்ற இந்நிகழ்வில் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் நடிகர் ஆர்.ஜே.விக்னேஷ் காந்த் பேசுகையில், நேற்றைய நினைவுகள் இனிமையாக, இன்றைய நினைவுகள் அனுபவங்களாக நாளைய கனவுகள் நிஜமாக நாங்கள் வித்திட்ட இந்த விதைக்கு ஆதரவு அளித்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் மீண்டும் ஒருமுறை நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தப் படத்தின் வெற்றி நிறைய விசயங்களை பார்க்க வைத்திருக்கிறது. நான் பார்க்காத பல விசயங்களை இந்தப் படத்தின் மூலம் பார்த்தேன். ஒரு படத்தை உருவாக்கினாலும், அந்தப் படத்தை நாம் பலமுறை பார்த்தாலும், இந்த இடத்தில் திரையரங்கத்தில் ரசிகர்கள் சிரிப்பார்களா..! என்ற தயக்கம் இருந்து கொண்டே இருக்கும். மக்கள் இதனை ஏற்றுக்கொண்டு திரையரங்கத்திற்கு வருகை தந்து இப்படத்தை மிகப்பெரிய அளவில் வெற்றி அடையச் செய்திருக்கிறார்கள். இதுதான் இந்த பிரம்மாண்டமான வெற்றிக்கு காரணம்.
ஆண்களின் அக வாழ்க்கையை பற்றி பேச வேண்டும். இதற்கு முன் இதைப் பற்றி பேசிய படங்கள் குறைவு. இன்றைய சமூகத்திற்கு அது அவசியம் தேவைப்படுவதால், இதைப் பற்றிய முதல் விதையை பிளாக் ஷீப் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பாலகிருஷ்ணன் தான் எங்களிடம் சொன்னார். அதன் பிறகு இதனை வலைத்தொடராக உருவாக்கலாம் என திட்டமிட்டோம். அதன் பிறகு இதற்கான கதையை எழுதுவதற்காக கதாசிரியர் சிவக்குமார் முருகேசனிடம் கொடுத்தோம். அவர் திரைக்கதையை முழுவதுமாக எழுதி முடித்த பிறகு அதை வாசிக்கும் போது இதை திரைப்படமாக உருவாக்கலாம் என திட்டமிட்டோம். அதனைத் தொடர்ந்து இந்த கதை இயக்குநர் கலையரசன் தங்கவேலிடம் செல்கிறது. பிறகு ரியோ ராஜிடம் செல்கிறது. பிறகு டிரம்ஸ்டிக் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்திற்கு செல்கிறது. அங்கு இது இறுதி வடிவம் பெறுகிறது. இவர்கள் அனைவரும் வைத்த நம்பிக்கையால் தான் இப்படம் உருவானது. அதன் பிறகு இதில் நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் என அனைவரும் இணைந்தனர்.
இந்தப் படத்தின் வெற்றியின் மூலம் பிளாக் ஷீப் நிறுவனத்திலிருந்து ஏராளமான கலைஞர்கள் உருவாகி திரையுலகில் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தி இருக்கிறார்கள். தொடர்ந்து நாங்கள் ட்ரம்ஸ்டிக் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து பணியாற்ற திட்டமிட்டுள்ளோம். அவர்களுக்கும் எங்களுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா படத்தில் நடிப்பதற்கு முன்பிருந்தே நடிகர் ரியோ ராஜை நான் ஸ்டார் என்று தான் குறிப்பிடுவேன். அவர்தான் நான் ஒரு நடிகர் என்று சொல்வார். இந்த படத்தின் மூலம் ஸ்டாராகி இருக்கிறார். இதற்கு ஆண்பாவம் பொல்லாதது அழுத்தமான காரணமாகி இருக்கிறது என்றார்.

இயக்குநர் கலையரசன் தங்கவேல் பேசுகையில், கதாசிரியர் சிவக்குமார் முருகேசனுடன் இப்படத்தின் வெற்றியை பகிர்ந்து கொள்கிறேன். அவருடைய எழுத்தை நான் படமாக்கினேன். இப்படத்தில் பணியாற்றிய நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள், படத்தை பார்த்து விமர்சனம் செய்த விமர்சகர்கள், திரையுலக பிரபலங்கள், டிஜிட்டல் திரை பிரபலங்கள் உள்ளிட்ட அனைவருக்கும் தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். எனக்கு இந்த படத்தில் தயாரிப்பாளர்கள் எந்த அளவிற்கு உறுதுணையாக இருந்தார்கள் என்பது பற்றி மூன்று நிகழ்வுகளை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
இந்தப் படத்தில் எங்கும் விலங்குகள் தொடர்பான காட்சிகள் இல்லை. ஒரே ஒரு இடத்தில் மட்டும் ஆடு கத்தும் காட்சி இடம் பிடித்திருக்கும். ஆடு கத்தும் குரல் இடம் பெற்றால் நன்றாக இருக்கும் என்று தயாரிப்பாளரிடம் சொன்னேன். ஆனால் இதற்கான பணிகள் அதிகம். செலவும் அதிகம். இருந்தாலும் என்னுடைய விருப்பத்திற்கு முக்கியத்துவம் அளித்து விலங்குகள் நல வாரியத்திடம் முறையாக அனுமதி பெற்று அந்த காட்சிக்கு ஆதரவளித்தார்கள். இந்தப்படம் கியூப் எனும் திரையிடும் தொழில்நுட்பம் மூலம் தமிழகம் முழுவதும் 180 திரையரங்குகளுக்கும் சென்று விட்டது. இதற்குப் பிறகு திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என்றால், ஒரு பிரதிக்கு குறைந்தபட்சம் 15,000 செலவாகும். நான் இது தொடர்பாக கேட்டபோது என்னுடைய விருப்பத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து அந்த நெருக்கடியான தருணத்திலும் எனக்கு ஆதரவளித்து திருத்தத்தை மேற்கொண்டார்கள்.
என் சொந்த ஊருக்கு அருகில் இருக்கும் சிறிய நகரம் என்றால் அது ஒட்டன்சத்திரம் தான். அங்கு இந்தப் படம் வெளியானால் நன்றாக இருக்கும் என்று தயாரிப்பாளரிடம் கோரிக்கை வைத்தேன். அதற்கும் அவர்கள் சம்மதம் தெரிவித்து எங்கள் ஊர் திரையரங்கில் இந்தப் படம் வெளியானது. தயாரிப்பாளர்கள் சினிமாவை வணிகமாக கருதாமல்.. நேசத்திற்குரிய படைப்பாக கருதியதால் தான் இது நடைபெற்றது. படத்தை திரையரங்கத்திற்கு வருகை தந்து பார்த்து ரசித்து கொண்டாடி வரும் அனைத்து ரசிகர்களுக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

நடிகை மாளவிகா மனோஜ் பேசுகையில், ஜோ படத்திற்குப் பிறகு நான் தமிழில் நடிக்கவில்லை. என்னிடம் பலரும் ஏன் அதற்குப் பிறகு தமிழில் நடிக்கவில்லை? என கேட்டார்கள். அதற்கு பதில் தான் இந்த படத்தில் நான் நடித்திருக்கிறேன். இதற்காக நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். நான் குறைவான படங்களில் நடித்திருந்தாலும் என்னுடைய சிறந்த சக நடிகராக ரியோ ராஜை பார்க்கிறேன். படத்திற்கு பேராதரவு அளித்த தயாரிப்பாளருக்கும், தயாரிப்பு நிறுவனத்திற்கும் நன்றி. ஜோ படத்திற்கும் சித்து குமார் தான் இசை. இந்தப் படத்திற்கும் அவர்தான் இசை. என்னுடைய கலைப் பயணத்தில் எனக்காக சிறந்த இசையை வழங்கியவர் அவர். அவருக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் படத்தை வெற்றி பெறச் செய்த அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
தயாரிப்பாளர்கள் வெடிகாரன்பட்டி எஸ். சக்திவேல் மற்றும் விஜயன் பேசுகையில்,
இந்தப் படத்தில் பணியாற்றிய அனைவரும் ஒரே குடும்பமாக இணைந்து பணியாற்றினார்கள். அவர்களுக்குள் ஒரு இணைப்பு இருந்தது. அவர்கள் அனைவரும் ஒன்றாக இருந்து வளர்ந்தவர்கள் போல் தான் எங்களுக்கு தோன்றியது. இது போன்றதொரு குழுவினை நாங்கள் இதுவரை கண்டதில்லை. குழுவாக தொடரும் வரை இவர்கள் வெற்றி கூட்டணியாக வலம் வருவார்கள்.
படத்தை தயாரித்து சம்பாதிப்பது என்பது வேறு. சில படங்கள் எதிர்மறையான அல்லது கலவையான விமர்சனங்களை எதிர் கொண்டாலும் எங்களுடைய முதலீடு கிடைத்து விடுகிறது. ஆனால் அந்தப் படத்தை பற்றி எங்களால் பகிரங்கமாக பகிர்ந்து கொள்ள இயலாது. ஆனால் ஆண்பாவம் பொல்லாதது எனும் இந்த திரைப்படத்தை பொறுத்தவரை என்னை சந்திக்கும் ஒவ்வொரு நபர்களும் நல்லதொரு படத்தை தயாரித்திருக்கிறீர்கள் என வாழ்த்தும்போது பெருமிதமாக இருக்கிறது. இந்தப் படம் ஒரு வணிக ரீதியான வெற்றியை விட எங்களுக்கு மரியாதையை சம்பாதித்துக் கொடுத்த படம் என்று குறிப்பிடலாம். இது எங்களுக்கு மகிழ்ச்சியை அளித்தது. இந்தப் படத்தை பார்த்தவர்கள் நிறைய பேர் எங்களின் வாழ்க்கையில் மாற்றம் ஏற்பட்டிருப்பதாக எங்களிடமும் சொன்னார்கள். இதை கேட்கும்போது பெருமையாக இருந்தது. இந்த வாய்ப்பை எங்களுக்கு வழங்கிய பிளாக் ஷீப் குழுவிற்கும் நன்றி. தொடர்ந்து இவர்களுடன் பயணிக்கவும் விரும்புகிறோம்.

இந்தப் படத்தை வெளியிடுவதில் பங்களிப்பு செய்த ஏஜிஎஸ் சினிமாஸ்- ஏபி இன்டர்நேஷனல் மற்றும் உலகம் முழுவதும் இப்படத்தை திரையிட்ட திரையரங்கு உரிமையாளர்கள் அனைவருக்கும் எங்களுடைய நன்றி. வெளிநாடுகளில் ஒரு வாரம் கழித்து இப்படம் வெளியிடப்பட்டிருக்கிறது. இப்படத்தில் குறிப்பிடப்படும் கணவன்- மனைவி பிரச்சினை இங்கு மட்டுமல்ல நாடு கடந்து உலகம் முழுவதும் உள்ளது. அவர்களுக்கும் நாங்கள் ஒரு மெசேஜ் சொல்லி இருக்கிறோம் என்பதில் சந்தோஷமாக இருந்தது. இதற்காக உழைத்த அனைவருக்கும் இந்த தருணத்தில் எங்களின் நன்றியை மீண்டும் ஒருமுறை தெரிவித்துக் கொள்கிறோம் என்றார்.
நாயகன் ரியோ ராஜ் பேசுகையில்,
இதிலிருந்து எம்மாதிரியான கதைகளை தேர்வு செய்து நடிக்க வேண்டும் என்பதை உணர்ந்து கொண்டேன். ஒரு நல்ல பொழுதுபோக்கு அம்சம் உள்ள படங்களை ரசிகர்களுக்கு கொடுத்தால் கலவையான விமர்சனங்கள் காணாமல் போய்விடும் என்பதை இதன் மூலம் தெரிந்து கொண்டேன். இந்தப் படம் ஆண்களுக்கானது என்று தான் நாங்கள் சொல்லிக் கொண்டிருந்தோம். ஆண்களுக்கு என்ன தேவை? என்பதை சொல்வதற்கு தான் நாங்கள் முயற்சி செய்தோம். ஒரு குடும்பத்தில் குடும்பஸ்தனாக இருக்கும் ஆண்களுக்கு என்ன தேவை என்றால், ஒரு ஃபர்பெக்ட்டான பார்ட்னர் தேவை என்பதைத்தான் நாங்கள் இந்த படத்தில் சொல்ல முயற்சித்தோம். எல்லா குடும்பமும் நன்றாக இருக்க வேண்டும் என்றால் அந்த குடும்பத்தில் உள்ள கணவனும் மனைவியும் தங்களை ஒருவருக்கொருவர் நன்றாக புரிந்து கொண்டு, உச்சகட்ட காட்சியில் வக்கீல் நாராயணன் சொல்வது போல் 50 :50 என்பது கிடையவே கிடையாது என்பதை அழுத்தம் திருத்தமாக சொல்ல வேண்டும் என நினைத்தோம். இது நிறைய பேருக்கு சென்றடைந்திருக்கிறது என்பதை நினைக்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. குடும்பத்தில் ஒரு சமயத்தில் கணவன் எழுபது என்றால் மனைவி முப்பதாகவும், சில தருணங்களில் மனைவி எழுபது என்றால் கணவன் முப்பதாகவும் இருப்பது தான் யதார்த்தமான நடைமுறை. இதுதான் 50 :50 என்பதை ஏராளமானவர்களுக்கு புரிய வைத்தது இந்த திரைப்படம். இதை நேரில் ரசிகர்கள் எங்களுடன் கலந்துரையாடும் போது தெரிவித்த போது மகிழ்ச்சியாக இருந்தது.
ரசிகர்கள் என்னை தொடர்பு கொண்டு பாராட்டும் போது படம் நன்றாக இருந்தது என்பதை கடந்து நான் இந்த படத்தை என் மனைவியுடன் பார்த்தேன். இருவரும் படத்தைப் பார்த்து விழுந்து விழுந்து சிரித்தோம். திரையில் எங்களைப் பார்ப்பது போல் இருந்தது என பாராட்டினார்கள். இதுவும் எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது. இதை தெரிந்து கொண்டு திரையரங்கத்திற்கு வந்து இப்படத்தினை கொண்டாடிய அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அதிலும் திரையரங்கத்திற்கு குடும்பம் குடும்பமாக வருகை தந்த அனைவருக்கும் சிறப்பான நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஒவ்வொரு படத்தின் வெளியீட்டிற்கு பிறகும் ரசிகர்களின் எதிர்வினையை காண்பதற்காக திரையரங்கத்திற்கு செல்வதுண்டு, அதேபோல் இந்தப் படத்தின் வெளியீட்டிற்கு பிறகு திரையரங்கத்திற்கு செல்லும் போது அங்கு அழகான, அப்பாவித்தனமான, மகிழ்ச்சியான ஏராளமான முகங்களை காண முடிந்தது. நாங்கள் திரையரங்கத்திற்கு வருகை தருவது ஜாலியாக இருப்பதற்காகவும், மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வதற்காகத்தான் வருகிறோம் என்பதை சொல்லாமல் சொல்வது போல் இருந்தது. ஒவ்வொரு திரையரங்கத்திற்கு செல்லும் போதும் எங்களை உற்சாகத்துடன் வரவேற்றனர். இதற்காக இந்தத் தருணத்தில் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் படத்தில் என்னுடன் இணைந்து பணியாற்றிய நடிகர், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த படத்தின் மூலமாக ஆர் ஜே விக்னேஷ் காந்தை ரசிகர்கள் அனைவரும் நடிகராக அதிலும் சிறந்த குணசித்திர நடிகராக ஏற்றுக் கொண்டதை தான் நான் அளவற்ற மகிழ்ச்சியாக கருதுகிறேன். அவர் வழக்கமான காமெடியை தவிர்த்து இந்தப் படத்தில் ஒரு கேரக்டர் ஆர்டிஸ்ட்டாக ஜெயித்திருக்கிறார். தன்னுடைய திறமையை நிரூபித்து இருக்கிறார். அவருடைய ஆசையும் அதுவாகத்தான் இருந்தது. அவர் ஒரு சிறந்த நடிகர். அதனை இந்தப் படத்தில் நிரூபித்திருந்தார். அதற்காக அவரையும் வாழ்த்துகிறேன் என்றார்.
ஜி. எஸ். ஆர்ட்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜி. அருள்குமார் தயாரிப்பில், ‘ஆக்சன் கிங்’ அர்ஜுன்- ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில், அறிமுக இயக்குநர் தினேஷ் லெட்சுமணன் இயக்கத்தில், அதிரடி ஆக்சன் திரில்லராக உருவாகியிருக்கும் திரைப்படம் ‘தீயவர் குலை நடுங்க’. இப்படம் வரும் […]
சினிமாஜி. எஸ். ஆர்ட்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜி. அருள்குமார் தயாரிப்பில், ‘ஆக்சன் கிங்’ அர்ஜுன்- ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில், அறிமுக இயக்குநர் தினேஷ் லெட்சுமணன் இயக்கத்தில், அதிரடி ஆக்சன் திரில்லராக உருவாகியிருக்கும் திரைப்படம் ‘தீயவர் குலை நடுங்க’. இப்படம் வரும் நவம்பர் 21 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் படக்குழுவினர் படம் குறித்தான தகவல்களைப் பகிர்ந்து கொண்டனர்.
இந்நிகழ்வினில் தயாரிப்பாளர் ஜி அருள்குமார் பேசியதாவது..,
இப்படத்தில் எனக்கு ஒப்புதல் தந்து உழைத்த அனைவருக்கும் நன்றி. நான் பூ வித்து வளர்ந்தவன், நான் அர்ஜுனின் ஜெண்டில்மேன் படம் பார்த்துள்ளேன். அவரின் ரசிகன் இன்று அவரை வைத்துப் படமெடுத்துள்ளேன் என்பது மிகப்பெரிய மகிழ்ச்சி. எனக்குத் தேதி தந்து படத்தில் நடித்த ஐஸ்வர்யா, அபிராமி மற்ற நடிகர்கள் அனைவருக்கும் நன்றி. இப்படத்தில் உழைத்த அனைத்து தொழில் நுட்ப கலைஞர்களுக்கும் நன்றி. அண்ணன் லோகு எனக்கு நிறைய உதவிகள் செய்தார். படத்தை வெளியிட உதவிய தேவராஜ் அண்ணாவுக்கு நன்றி என்றார்.
ஒளிப்பதிவாளர் சரவணன் அபிமன்யு பேசியதாவது.., ஒரு படத்தின் டிரெய்லர் எவ்வளவு முக்கியம் என எல்லோருக்கும் தெரியும். படம் மிக நன்றாக வந்துள்ளது. அர்ஜூன் , ஐஸ்வர்யா நிறைய சப்போர்ட் செய்தார்கள் என்றார்.
நடிகர் லோகு பேசியதாவது.., ஒரு பெரிய படத்தில், இவ்வளவு பெரிய நட்சத்திர பட்டாளம் உள்ள படத்தில், எனக்கு வாய்ப்பு தந்த இயக்குநர் தினேஷுக்கு என் நன்றிகள். தயாரிப்பாளர் அருள்குமார் பட்ட கஷ்டத்தை நான் நேரில் பார்த்துள்ளேன், அவர் குழந்தை மனதுக்காரர், அவர் மனதுக்கு இப்படம் பெரிய வெற்றி பெற வேண்டும் என்றார்.

இசையமைப்பாளர் பரத் ஆசிவகன் பேசியதாவது.., தினேஷ் அண்ணனை பல வருடங்களாகத் தெரியும். நான் அஸிஸ்டெண்டாக வேலை பார்த்து வந்தேன். நிறையப் படத்தில் வேலை பார்த்தாலும் கிரடிட் கிடைக்காது. எனக்கு வாய்ப்பு தந்ததற்கு தினேஷ் அண்ணனுக்கு நன்றி. தயாரிப்பாளர் அருள்குமார் சாருக்கு நன்றி. நான் நன்றாக வேலை பார்த்துள்ளேன் என நம்புகிறேன். அர்ஜூன் சார் படம் பார்த்து வளர்ந்தவன் நான் அவர் படத்திற்கு வேலை பார்த்தது மகிழ்ச்சி. படத்தில் நாலு பாடல்கள், எல்லாம் நன்றாக வந்துள்ளது. சமீபத்தில் அர்ஜூன் சாருக்காக ஒரு பாடல் செய்தோம், கெனிஷா பாடித்தந்தார். பாடல் அனைவருக்கும் பிடிக்கும், படம் நன்றாக வந்துள்ளது என்றார்.
தயாரிப்பாளர் பி எல் தேனப்பன் பேசியதாவது.., இயக்குநர் தினேஷ் மிகக் கடின உழைப்பாளி. அவருக்கு இந்தப்படம் வெற்றி பெற வாழ்த்துக்கள். தயாரிப்பாளர் பூ வியாபாரி என்றார்கள். அவர் பெரிய வெற்றி பெற்று கோயம்பேட்டில் கடை போட வாழ்த்துக்கள். அர்ஜூன் சார் படம் பார்த்ததாக சொன்னார்கள். நான் சின்ன வயதில் சங்கர் குரு பார்த்தேன் இன்றும் அப்படியே இருக்கிறார். ஐஸ்வர்யா ராஜேஷ் ஒரு படம் ஒத்துக்கொள்வது கடினம். இருவரும் சேர்ந்துள்ள இப்படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் என்றார்.
பிராங்ஸ்டர் ராகுல் பேசியதாவது.., தினேஷ் எவ்வளவு கஷ்டப்பட்டார் என எனக்குத் தெரியும். இந்தப்படத்தில் ஒரு காமெடி கேரக்டர் செய்துள்ளேன், வாய்ப்பு தந்ததற்கு நன்றி. அர்ஜூன் சாருடன் நடித்தது மிகப்பெரிய மகிழ்ச்சி. அனைவருக்கும் நன்றி. நான் ஒரு படம் இயக்கி வருகிறேன் அதற்கும் ஆதரவு தாருங்கள், இப்படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் என்றார்.

நடிகை அபிராமி பேசியதாவது..,
இயக்குநர் தயாரிப்பாளர் அனைவருக்கும் நன்றி. எனக்கு வாய்ப்பு தந்ததற்கு நன்றி. ஐஸ்வர்யா எப்போதும் மிக இனிமையானவர். அவருடன் நடித்தது மகிழ்ச்சி. அர்ஜூன் சாரை எப்போது பார்த்தாலும் ஸ்டைலாக இருக்கிறார். அவர் படத்தில் இருப்பது மகிழ்ச்சி. நான் ஒரு அம்மாவாக நடித்துள்ளேன். குழந்தைகள் வளர்ப்பு பற்றி விழிப்புணர்வை இப்படம் தரும் என்றார்.
நடிகர் தங்கதுரை பேசியதாவது..,
இயக்குநர் தினேஷ் இப்படத்திற்காகக் கடுமையாக உழைத்துள்ளார். இப்படத்தில் எனக்கே தெரியாத பல லோகேஷன்களை சென்னையில் காட்டினார். எனக்கு நல்ல ரோல் தந்துள்ளார். அர்ஜூன் சாரின் தீவிர ரசிகன். சின்ன வயதில் அவரை நானும், என் நண்பர்களும் போலீஸ் எனத்தான் நினைத்தோம். அவர் படம் பார்த்தால் நாட்டுப்பற்று வரும். அவருடன் நான் நடித்தது எனக்கு பெருமை. ஐஸ்வர்யா ஒரு வெர்சடைல் ஆக்டர் அவரை எனக்கு மிகவும் பிடிக்கும். அவருடன் நடித்தது மகிழ்ச்சி. இப்படம் மிக நன்றாக வந்துள்ளது என்றார்.
நடிகை பிரியதர்ஷிணி பேசியதாவது.., தீயவர்கள் குலை நடுங்க இந்தப்படத்திற்காக நான் நீண்ட காலம் காத்திருந்தேன், தயாரிப்பாளர் பேசியது மிக உணர்வுப்பூர்வமாக இருந்தது. நான் ஒரு அம்மாவாக நடித்துள்ளேன் மிக நல்ல ரோல். படத்தில் நடித்தது மிக நல்ல அனுபவமாக இருந்தது. அர்ஜூன் சார் எல்லோருக்கும் மிகப்பெரிய இன்ஸ்பிரேஷன். ஐஸ்வர்யா மேடம் நேச்சுரல் ஆக்டர் அவர்களுடன் நடித்தது மகிழ்ச்சி. சமூகத்திற்கு முக்கியமான கருத்தைச் சொல்லும் படம். அனைவரும் இப்படம் பிடிக்கும் என்றார்.

பிரவீன் ராஜா பேசியதாவது.., சில நேரங்களில் சில மனிதர்கள் படத்தில் நடித்திருந்தேன். அதைப்பார்த்த என் நண்பர் மூலம் இப்பட வாய்ப்பு கிடைத்தது. இயக்குநர் ஓகே சொன்ன பிறகு தான் அர்ஜூன் சார் ஐஸ்வர்யா மேடமுடன் நடிக்கப் போகிறேன் எனத் தெரிந்தது. உண்மையில் கொஞ்சம் பயமாக இருந்தது. ஆனால் உடன் நடித்த போது இருவரும் அவ்வளவு ஆதரவாக இருந்தார்கள். படம் மிக நன்றாக வந்துள்ளது. 4 மொழிகளில் படம் வருகிறது என்றார்.
எழுத்தாளர் அஜயன் பாலா பேசியதாவது.., தமிழில் வரவர எல்லாம் ஆங்கிலத்தில் தலைப்பு வைக்கும் போது, தமிழ் தலைப்பு வைத்துள்ள இந்த குழுவிற்கு நன்றி. தயாரிப்பாளரைப் பார்க்க மிக மகிழ்ச்சியாக உள்ளது. இம்மாதிரி தயாரிப்பாளர்கள் பெரிய அளவில் வர வேண்டும். அர்ஜூன் சாரை திரையில் பார்க்கப் பொறாமையாக உள்ளது. உடலை அவ்வளவு கட்டுக்கோப்பாக வைத்துள்ளார். எல்லோருக்கும் முன்னுதாரணமாக இருக்கிறார். ஐஸ்வர்யா ராஜேஷ் மிக நல்ல நடிகை. இசையமைப்பாளர் மிக அற்புதமான பாடல்களைத் தந்துள்ளார். இந்தப்படம் வெற்றி பெற எல்லா அம்சங்களும் படத்தில் உள்ளது என்றார்.

இயக்குநர் எஸ் ஆர் பிரபாகரன் பேசியதாவது.., அறிமுக இயக்குநர் தினேஷுக்கு வாழ்த்துக்கள். அவருக்கு வாய்ப்பு தந்த தயாரிப்பாளருக்கு நன்றி. அர்ஜூன் சாரின் மிகப்பெரிய ரசிகன், தமிழ் நாட்டிற்கு சூப்பர் ஸ்டார் ரஜினியாக இருக்கலாம் தென்னிந்தியாவில் மிகப்பெரிய ஸ்டார் அர்ஜூன் சார் தான். அட்டகத்தி படத்திலிருந்து ஐஸ்வர்யா மேடம் வளர்ச்சியைப் பார்த்து வருகிறேன். இன்று சோலோ ஹீரோயினாக வளர்ந்துள்ளதற்கு அவரின் நம்பிக்கையும் உழைப்பும் தான் காரணம். அவர் ஒரு படத்தை ஓகே செய்தால் அந்தப்படம் வெற்றி எனலாம். சரியானதை மட்டுமே செய்யும் இருவர் இப்படத்தில் இருக்கிறார்கள். படம் கண்டிப்பாக வெற்றி பெற வாழ்த்துக்கள். தமிழ் தயாரிப்பாளர் சங்கத்தில் பெரிய ஹீரோக்கள் படத்தில் வெற்றி தோல்வியில் பங்கு கொள்ள வேண்டும் என தீர்மானம் போட்டுள்ளார்கள் அதை நான் வரவேற்கிறேன். தமிழ் திரையுலகில் நிறையப் பிரச்சனைகளைச் சரி செய்ய வேண்டியுள்ளது. புது தயாரிப்பாளர்கள் பலர் திணறுகிறார்கள். இந்த நிலை மாற வேண்டும். இதற்குத் தீர்வு காண வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன் என்றார்.
வேலூர் திரையரங்கு உரிமையாளர் வி எம் தேவராஜ் பேசியதாவது.., நான் படம் பார்த்துவிட்டேன் அர்ஜூன் சார் மிக அற்புதமாக நடித்துள்ளார். படம் அருமையாக வந்துள்ளது. சக்ஸஸ் மீட்டில் இன்னும் அதிகம் பேசுகிறேன். தயாரிப்பாளருக்கு இந்தப்படம் மிகப்பெரிய வெற்றியைத் தரும் என்றார்.

தவெக கொள்கை பரப்பு செயலாளர் ராஜ் மோகன் பேசியதாவது.., சினிமாவில் கனவுகளோடு அலைபவர் தான் தம்பி தினேஷ். அவர் சொன்ன கதையை நம்பி அவருக்கு வாய்ப்பு தந்த அர்ஜூன் சாருக்கு நன்றி. நடிகைக்கென போடப்பட்ட வட்டத்திற்குள் சிக்காத ஐஸ்வர்யா ராஜேஷ் இப்படத்தில் சிறப்பாக நடித்துள்ளார். இப்படத்தில் குழந்தை நட்சத்திரம் மிக அற்புதமாக நடித்துள்ளார். வீடும் நாடும் நன்றாக இருக்க வேண்டுமானால் குழந்தைகள் நலமாக இருக்க வேண்டும் என ஒரு கருத்தைச் செய் நேர்த்தியுடன் செய்துள்ள தினேஷுக்கு வாழ்த்துக்கள். இப்படத்தில் உழைத்த அனைத்து கலைஞர்களுக்கும் வாழ்த்துக்கள் என்றார்.
விசிக கட்சி துணை பொதுச் செயலாளர் வன்னியரசு பேசியதாவது.., தினேஷ் இலெட்சுமணனுக்கு என் வாழ்த்துக்கள். இப்படத்தில் உழைத்த அனைத்து கலைஞர்களுக்கு வாழ்த்துக்கள். கலைஞர் தமிழில் தலைப்பு வைத்தால் வரிவிலக்கு என அறிவித்தார். இப்போது அவரது மகன் ஆட்சியில் இருக்கிறார். இன்று அருமையான தமிழில் தலைப்பு வைத்துள்ள, நல்ல கருத்தைச் சொல்லும் இம்மாதிரி படங்களுக்கு வரிவிலக்கு தர வேண்டுமென முதல்வரைக் கேட்டுக்கொள்கிறேன். குற்றவாளிகள் எப்படி எளிதாக தப்பிக்கிறார்கள், அரசும் அதிகார வர்க்கம் எப்படி துணை போகிறது என்பதை இப்படம் பேசுகிறது. இதில் உண்மையான நாயகி ஐஸ்வர்யா ராஜேஷ் மிகச்சிறப்பான ஆக்சன் நாயகியாக நடித்துள்ளார். ஆக்சன் கிங் அர்ஜூனை பக்கத்தில் வைத்து அவர் ஆக்சனில் நடித்திருப்பது சிறப்பு. ஆக்சன் கிங் அர்ஜூன், இப்படத்திற்கு முழு ஆதரவு தரும் அவரது பண்புக்கு வாழ்த்துக்கள். அடுத்தடுத்து இப்படக்குழு மிகப்பெரிய படங்கள் செய்து ஜெயிக்க வாழ்த்துக்கள் என்றார்.

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பேசியதாவது.., இப்படம் ஒரு உண்மையான சம்பவம், இயக்குநர் சொன்ன போது எனக்கு உடல் நடுங்கி விட்டது. உண்மையான கதையைச் சொல்லும் போது மக்கள் நெருக்கமாக உணர்வார்கள். அவர்களுக்குப் பெரிய விழிப்புணர்வை அது தரும். கமர்ஷியல் சினிமா உலகில் இப்படி உண்மைக் கதையை சொல்ல முயற்சித்த தினேஷுக்கு நன்றி. அர்ஜூன் சார் ரியல் லைஃபில் உண்மையாகவே ஜெண்டில்மேன். அவர் மேஜிக்கை நேரில் பார்த்தது நல்ல அனுபவம். நான் நன்றாக ஃபைட் செய்ய அவர் தான் காரணம். அவர் தான் இந்தப்படத்தில் ஹீரோ என்றார்.

இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன் பேசியதாவது.., என் 15 வருட ஏக்கம் தான் இந்தப்படம். என்னவாக வந்தோம், என்னவாக இருக்கிறோம் என்னவாக போகிறோம் என்பது முக்கியம், என என்னை இந்த இடத்திற்கு அழைத்து வந்த அனைவருக்கும் நன்றி. என் அப்பா அம்மாவிற்கு நன்றி. என் அப்பா தான் சினிமா ஆசையை என்னுள் தூண்டியவர். தயாரிப்பாளர் அருள்குமார் அவருக்கு ஊரில் அவ்வளவு மரியாதை, அவர் ரெண்டு படம் சரியாகப் போகவில்லை. ஆனால் அவர் உனக்கு ஒரு படம் தருகிறேன் என்றார். எனக்கு அவர் மேல் இருந்த நம்பிக்கையை விட அவர் என் மேல் வைத்த நம்பிக்கை அதிகம். என்னிடம் எந்த கேள்வியும் கேட்க மாட்டார். அவர் நம்பிக்கைக்கு நன்றி. டெக்னீஷியன்ஸ் எல்லோரும் எனக்கு முழு ஒத்துழைப்பு தந்தார்கள். இப்படம் பார்க்கும் போது இசையமைப்பாளரின் திறமை உங்களுக்குப் புரியும். எடிட்டர் லாரன்ஸ் கிஷோர் முழு உழைப்பைத் தந்தார். எழுத்தாளர் நவனீத்திற்கு நன்றி. அர்ஜூன் சார் ஷீட்டிங்கில் நிறைய கரக்சன் சொல்வார், அப்போது நிறைய விவாதிப்போம். அதெல்லாம் படம் முடிந்து பார்க்கும் போது தான் அவரின் எக்ஸ்பீரியன்ஸ் எனக்குப் புரிந்தது. அவ்வளவு ஆதரவாக இருந்தார். ஐஸ்வர்யா மேடம் மிகக் கடுமையாக உழைத்துள்ளார். அர்ஜூன் சாருக்கு சமமான பாத்திரம். மிகச்சிறப்பாக நடித்துள்ளார். இப்படத்தில் நிறைய நடிகர்கள் எல்லோரும் கதைக்கு முக்கியத்துவமாக இருப்பார்கள். இந்தப்படத்தில் அனிகா குழந்தை நட்சத்திரம் முக்கியமான கேரக்டர் அதை அவ்வளவு தத்ரூபமாக சூப்பராக நடித்துள்ளார். லோகு சார் இப்படத்தில் அருமையாக நடித்துள்ளார். இங்கு வாழ்த்த வந்த அனைவருக்கும் நன்றி. படம் கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும் என்றார்.

நடிகர் அர்ஜூன் பேசியதாவது..,
எனக்கு இது மிக முக்கியமான படம், எனக்கு எல்லா படமுமே முதல் படம் போலத்தான். தயாரிப்பாளர் அருள்குமார் பூ வித்தாகச் சொன்னார்கள், ஆனால் அவர் சினிமா மீது வைத்திருக்கும் அன்பு தான் அவரை தயாரிப்பாளர் ஆக்கியுள்ளது. எல்லோரையும் மதிக்கும் அவரது பண்பு எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் மனதிற்காகவே இப்படம் பெரிய வெற்றி பெற வேண்டும். நான் நிறைய புதிய இயக்குநர்களுடன் பணிபுரிந்துள்ளேன், இயக்குநர் தினேஷ், என்னுடன் நிறைய விவாதித்தாக சொன்னார் ஆனால் எல்லாமே படத்திற்காகத் தான், படத்தை மிகச்சிறப்பாக எடுத்துள்ளார். இப்படத்தில் ஹீரோ அவர் தான், இவர் தான் என்றார்கள், ஆமாம் இப்படத்தில் மூன்று ஹீரோ, பிரவீன் ஒரு ஹீரோ, ஐஸ்வர்யா ராஜேஷ் இன்னொரு ஹீரோ. ராஜேஷ் அவரது தந்தையின் பெயர், அவர் சின்ன வயதில் தவறிவிட்டார். அவரும் நடிகர் தான், அவருடன் நான் சில படங்களில் நடித்துள்ளேன் அவர் எனக்கு சிறந்த நண்பர். ஐஸ்வர்யா ராஜேஷ் மிகச்சிறந்த நடிகை, அவர் இன்னும் வளர வாழ்த்துக்கள். தங்கதுரையுடன் ஷீட்டிங்கில் அதிகம் சுற்றிக்கொண்டிருப்பேன் நல்ல மனிதர். எல்லோருடைய ஆசீர்வாதமும் அன்பும் இப்படத்திற்கு கிடைக்க வேண்டும் என்றார்.
The Show Must Go On & Black Madras Films நிறுவனங்கள் சார்பில், ஆண்ட்ரியா ஜெரேமியா, S P சொக்கலிங்கம் தயாரிப்பில், இயக்குநர் வெற்றிமாறன் மேற்பார்வையில், கவின், ஆண்ட்ரியா ஜெரேமியா, ருஹானி சர்மா நடிப்பில், அறிமுக இயக்குநர் விகர்ணன் அசோக் இயக்கத்தில் […]
சினிமாThe Show Must Go On & Black Madras Films நிறுவனங்கள் சார்பில், ஆண்ட்ரியா ஜெரேமியா, S P சொக்கலிங்கம் தயாரிப்பில், இயக்குநர் வெற்றிமாறன் மேற்பார்வையில், கவின், ஆண்ட்ரியா ஜெரேமியா, ருஹானி சர்மா நடிப்பில், அறிமுக இயக்குநர் விகர்ணன் அசோக் இயக்கத்தில் மாறுபட்ட களத்தில், உருவாகியிருக்கும் திரைப்படம் மாஸ்க். 2025 நவம்பர் 21 ஆம் தேதி திரைக்குவரவுள்ள நிலையில் இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா, படக்குழுவினருடன் திரை பிரபலங்கள் கலந்துகொள்ள, கோலாகலமாக நடைபெற்றது.

இவ்விழாவினில்.., நடிகை ருஹானி சர்மா பேசியதாவது.., இது எனக்கு மிகவும் ஸ்பெஷல் டே, இந்த நாளுக்காக இரண்டு வருடம் காத்திருந்தேன். வெற்றிமாறன் முன்னால் பேசக் காத்திருந்தேன். அவர் தந்த ஆதரவுக்கு நன்றி. இன்னும் சில நாட்களில் படம் வரப்போகிறது. மகிழ்ச்சியாக இருக்கிறது. விஜய் சேதுபதியின் தீவிர ரசிகை நான், அவர் வாழ்த்த வந்திருப்பது மகிழ்ச்சி. இயக்குநர் விகர்னன் எனக்கு நல்ல கதாப்பாத்திரம் தந்ததற்கு நன்றி. என் கோ ஸ்டார் கவின் அவர் எனக்கு நிறைய ஆதரவாக இருந்தார். கவினுடன் நடித்தது மிக மகிழ்ச்சியான அனுபவம். ஆண்ட்ரியா மிகச்சிறந்த நடிகை, இப்படத்தைத் தயாரித்துள்ளார். அவர் இன்னும் நல்ல படங்கள் தயாரிக்க வாழ்த்துக்கள். ஜீவி பிரகாஷ் எனக்கு டான்ஸ் ஆட மிகச்சிறந்த பாடல்கள் தந்ததற்கு நன்றி. என்னை மிக அழகாகக் காட்டிய ஒளிப்பதிவாளருக்கு நன்றி. படத்தில் வேலை செய்த அனைவருக்கும் நன்றி என்றார்.
நடிகர் பவன் பேசியதாவது…,
இந்தப்படத்தில் நான் கஷ்டப்படவே இல்லை, கஷ்டப்பட்டதெல்லாம் தயாரிப்பாளர், இயக்குநர் தான். எனக்கு அரசியல்வாதி கேரக்டர் ஏசியில் தான் முழுக்க நடித்தேன். கிளைமாக்ஸ் மட்டும் என்னால் மறக்க முடியாது. ரெடின் கிங்ஸ்லியின் ஒரு காட்சி பார்த்தேன் மிக அருமையாக இருந்தது. கவின் சூப்பராக நடித்துள்ளார். வெற்றிமாறன் கடையைச் சாத்துகிறேன் என்றார், ஆனால் இந்த படத்திற்குப் பிறகு நிறையக் கடைகள் திறப்பார். ஆண்ட்ரியா மேடம் தயாரிப்பாளராக மாறிவிட்டார் வாழ்த்துக்கள். படம் மிகச்சிறப்பாக வந்துள்ளது என்றார்.
இயக்குநர் சுப்பிரமணியம் சிவா பேசியதாவது.., இயக்குநர் வெற்றிமாறனை வழிகாட்டியாக எடுத்துக்கொண்டு விகர்ணன் இப்படத்தை இயக்கியுள்ளார். எனக்கு விகர்ணன் என்ற பெயர் கேட்டவுடன் அவரைப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் தோன்றியது. மகாபாரத கௌரவர்களின் பெயர், அதை வைத்துக்கொண்டதற்கு வாழ்த்துக்கள். எம் ஆர் ராதா மிகப்பெரிய ஆளுமை, அவரை மீண்டும் தமிழ் சினிமாவில் கொண்டு வந்ததற்கு நன்றி. ஆண்ட்ரியா மேடம் ஒரு படத்தை இயக்கி விட்டால், நடிகை பானுமதி சாதனையைச் சமம் செய்துவிடுவார். பாடுகிறார், நடிக்கிறார் இப்போது தயாரித்துள்ளார் அவர் வெல்ல வாழ்த்துக்கள். சொக்கலிங்கம் மிக நல்ல மனிதர், மிகப்பெரிய தயாரிப்பாளராக வாழ்த்துக்கள். ஒரு கவிதைக்கு ஆண் பால் இருந்தால் அது தான் கவின். டாடாவுக்கு பிறகு மிகப்பெரிய வெற்றிப்படமாக மாஸ்க் அமைய வாழ்த்துக்கள். ஜீவி பிரகாஷ் எங்களுடனே இருப்பவர். குழந்தை தொழிலாளராக சினிமாவுக்குள் வந்தவர். சின்ன வயதில் சிக்கு புக்கு சிக்கு புக்கு பாடல் பாடியவர், இப்போது அவர் இரண்டு தேசிய விருதுகள் வாங்கிவிட்டார். ஆர் டி ராஜசேகர் என் குருநாதர் அவர் மாதிரி கேமரா யாராலும் பண்ண முடியாது. கேமரா மாஸ்டர்களில் ஒருத்தர் அவர். மனதால் மிக உற்சாகமான மனிதர். அனைவருக்கும் வாழ்த்துக்கள். மாஸ்க் மிகப்பெரிய வெற்றி பெறட்டும் நன்றி என்றார்.

ஒளிப்பதிவாளர் ஆர் டி ராஜசேகர் பேசியதாவது.., இந்தப்படம் ஆரம்பித்ததிலிருந்து, நாம் செய்யும் உழைப்பிற்கு எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என நினைத்துக்கொண்டே இருந்தேன். டிரெய்லர் வந்த பிறகு எல்லோரும் பாராட்டினார்கள். படத்தின் வெற்றி இயக்குநரின் கையில் உள்ளது. கவின் மிகச்சிறப்பாக நடித்துள்ளார். ஆண்ட்ரியா இதுவரை செய்யாத ரோல் செய்துள்ளார். ருஹானி சர்மா மிக அழகாக இருக்கிறார். வெற்றிமாறன் ஷுட்டிங்க் ஸ்பாட்டுக்கு அதிகம் வரமாட்டார். ஆனால் அவர் வழிகாட்டுதல் இருந்தது. ஜீவி ரசிகன் நான், அவர் இசை அருமையாக வந்துள்ளது. சொக்கு சாருடன் நிறையப் பழகியுள்ளேன் அவர் தயாரிப்பாளராக வெற்றி பெற வேண்டும் என்றார்.

இயக்குநர் நெல்சன் பேசியதாவது.., நான் அதிகம் விழாக்களுக்குச் செல்வதில்லை, இந்த விழாவிற்கு வரவேண்டுமென 6 மாதம் முன்பே வெற்றிமாறன் சொல்லி விட்டார். இந்த கதை கேட்ட போது, இதற்கும் வெற்றிமாறனுக்கும் சம்பந்தமே இல்லையே என நினைத்தேன். படுபயங்கர குதர்க்கமான கதையாக இருந்தது. இயக்குநரைப் பார்த்தே ஆக வேண்டும் என நினைத்தேன், விகர்ணன் எல்லா க்ரைமுக்கும் செட்டாவது போல் தான் இருந்தார். அவர் சொன்னதையெல்லாம் எடுக்கவே முடியாது. இந்தக்கதை ஐடியா எல்லாம் மிகவும் புதுசாக இருந்தது. விகர்ணன் கதை, கவின் கதாப்பாத்திரம் செய்தால் எப்படி இருக்குமோ அப்படி இருந்தது. ஆனால் வெற்றிமாறன் அதைக் கொஞ்சம் மாற்றியிருக்கிறார். இது ரசிகர்களுக்கு புது எக்ஸ்பீரியன்ஸாக இருக்கும். ஜீவி மியூசிக் சூப்பாராக வந்துள்ளது. கவின் எதற்கும் தயாராக இருக்கிறான். அவன் இன்று மேலே, கீழே போய் வந்தாலும், நல்ல கதைகளைத் தேர்ந்தெடுக்கிறான் சினிமாவில் நீண்ட காலம் நிலைத்து இருப்பான். ஆண்ட்ரியா மேடமுக்கு சவாலான கேரக்டர் வாழ்த்துக்கள். ரெடினை கண்ட்ரோலாக நடிக்க வைத்திருந்தார்கள் வாழ்த்துக்கள். ஒரு குழுவாக அனைவரும் மிகப்பெரிய வெற்றியைப் பெற வாழ்த்துக்கள் என்றார்.

ஜீவி பிரகாஷ்குமார் பேசியதாவது
மாஸ்க் டீமில் எல்லோருமே எனக்கு நெருங்கிய நண்பர்கள், நான் கடைசியாக தான் வந்தேன். ஆண்ட்ரியா மேடமுக்கு வாழ்த்துக்கள். அந்நியன் படத்தில் அவர் முதன் முதலில் பாடும் போது நான் அவர் அருகிலிருந்தேன், அப்போதிலிருந்து அவரைத் தெரியும். அவர் தயாரிப்பாளராக மாறியிருக்கிறார், அவருக்கும் சொக்கலிங்கம் சாருக்கும் வாழ்த்துக்கள். வெற்றிமாறன், பவன் சொன்ன மாதிரி திரும்ப கடையை திறக்க வாழ்த்துக்கள். விகர்ணன் வெற்றிமாறன் சாயலே இல்லாமல் கதை சொன்னார், ஆச்சரியமாக இருந்தது. இந்தப்படம் பரபரவென இருக்கும். ஆர் டி ராஜசேகர் நாங்கள் சினிமாவுக்கு வரும்போதே பெரிய கேமராமேன், அவருடன் வேலை பார்த்தது மகிழ்ச்சி. கவின் சூப்பராக நடித்துள்ளார். ருஹானி பெரிய ஹீரோயினாக வாழ்த்துக்கள். மாஸ்க் படம் மிகப்பெரிய வெற்றி பெற வாழ்த்துக்கள் என்றார்.

நடிகை, தயாரிப்பாளர் ஆண்ட்ரியா ஜெரேமியா பேசியதாவது.., நான் ஒரு விழாவில் பங்கு கொண்டு நீண்ட வருடம் ஆகிவிட்டது. எனக்கு ஒரு படம் விரைவில் வருகிறது மகிழ்ச்சி. கவினுக்கு இது மிகவும் முக்கியமான படம். ருஹானிக்கு முதல் படம். சொக்கு சாருக்கு தயாரிப்பாளராக முக்கியமான படம். எங்கள் அனைவருக்கும் மெண்டார் வெற்றிமாறன், அவர் தான் எங்களின் பப்பெட் மாஸ்டர். ஆர் டி ராஜசேகர் அவர் கேமரா செய்தால் எல்லோரும் அழகாக இருப்பார்கள். என்னோடு உழைத்த அனைத்து நடிகர்கள், தொழில் நுட்ப கலைஞர்களுக்கு நன்றிகள் என்றார்.

இயக்குநர் விகர்ணன் பேசியதாவது.., என்னுடைய உதவி இயக்குநர்களுக்கும் படத்தில் உதவிய வெற்றிமாறன் உதவியாளர்களுக்கும் நன்றிகள். நான் இங்கு நிற்க காரணமான ஆண்ட்ரியா மேடமுக்கு நன்றி. அவர் தான் வெற்றிமாறன் சாரிடம் என் கதையைப் படிக்கத் தந்தார். சொக்கலிங்கம் அண்ணா நிறையப்பேரை வளர்த்துவிட்டுள்ளார், என்னையும் வளர்த்துவிட்டதற்கு நன்றி. ஆர் டி ராஜசேகர் அவர் ஒரு ட்ரீட். ஷீட்டிங்கில் அவர் இருந்தாலே ஜாலியாக இருக்கும். நெல்சன் அண்ணாவே ஒரு ஜானர் தான் அவர் இந்தப்படத்தில் இருக்கிறார் ஆனால் யாருக்கும் தெரியமாட்டார். அவருக்கு நான் நிறையக் கடமைப்பட்டுள்ளேன். விஜய் சேதுபதி அண்ணா.. அசோக் செல்வன் என் நண்பன், உங்களைப் பற்றி நிறையப் பேசுவான். நீங்கள் நல்ல இதயம் கொண்ட மனிதர். வாழ்த்த வந்ததற்கு நன்றி. ருஹானி சர்மா திறமையானவர் சிறப்பாக நடித்துள்ளார். நண்பர் ஜீவி, நீங்கள் நான் மிகவும் பாதுகாப்பாக இருப்பதாக உணர வைத்தீர்கள். நீங்கள் தந்த இசைக்கு நன்றி. ரெடின் ஒரு அழகான ரோல் செய்துள்ளார். ராமரை எடிட்டிங்கிற்கு கூட்டி வந்ததற்கு வெற்றிமாறன் சாருக்கு நன்றி. ஸ்டைலீஷாக எடிட் செய்துள்ளார். ஐயப்பன் அண்ணாவுடன் நிறையப்படம் சேர்ந்து செய்வேன் என் கூடவே இருந்தார் அவருக்கு நன்றி. கவின் படத்தில் அவர் பெயர் வேலு. இவனுடன் சேர்ந்தால் உருப்பட மாட்டாய் என்பார்களே, அந்த மாதிரி ஒரு ரோல். அவருக்குள் ஒரு கெட்டவனும் இருப்பான், நல்லவனும் ஓரத்தில் இருப்பான். அதை மிக அழகாகத் திரையில் கொண்டு வந்துள்ளார். அவர் தந்த ஆதரவிற்கு நன்றி. பீட்டர் ஹெய்ன் மாஸ்டருக்கு நன்றி. அவர் மாதிரி ஒரு லெஜண்ட் நம் திரைத்துறையில் இருப்பது நமக்குப் பெருமை. வெற்றிமாறன் அட்வைஸ் கேட்டால் நீங்கள் வாழ்க்கையில் வளர்வீர்கள். அவர் தந்த வழிகாட்டுதலுக்கு நன்றி. நான் உங்களுடன் படம் செய்வதை என் வீட்டிலேயே யாரும் நம்பவில்லை எனக்கு நீங்கள் தந்த வாய்ப்புக்கு நன்றி என்றார்.

நடிகர் விஜய் சேதுபதி பேசியதாவது.., விகர்னன் மிக அருமையாகப் பேசினார். வெற்றிமாறன் மெண்டார் என்றார்கள். பேச்சுக்கும் அவர் தான் மெண்டார் போல. இந்தப்படத்தின் டிரெய்லர் பார்த்தேன் மிக மிகப் பிடித்திருந்தது. விடுதலை ஷீட்டிங்கில் இந்தப்படம் ஆரம்பிப்பதாகச் சொன்னார். மாஸ்க் கதை, எம் ஆர் ராதா, என ஒவ்வொரு ஐடியாவும் நன்றாக இருந்தது. இந்த விழாவில் எல்லோரும் அட்டகாசமாகப் பேசினார்கள். ராமரில் ஆரம்பித்து எல்லோரும் அசத்தலாகப் பேசினார்கள். வெற்றி மாறன் மாஸ்கே இல்லாத எல்லோரையும் சமமாக நடத்தும் ஒரு மனிதர். விடுதலை ஷீட்டிங்கில் வெற்றிமாறன் சாரிடம் ராமர் மாட்டியிருப்பதாக நினைத்தேன், ஆனால் அவர் பேசியதைக் கேட்ட பிறகு தான் ராமரிடம் தான் வெற்றிமாறன் மாட்டியிருக்கிறார் எனத் தோன்றியது. கவினுக்கு வாழ்த்துக்கள் திரையில் அவர் வசீகரமாக இருக்கிறார். அவரை திரையில் பார்க்க பிடித்திருக்கிறது. இன்று வித்தியாசமான கதையைத் தேர்ந்தெடுப்பதில் மேலே கீழே போகலாம், ஆனால் இது தான் பயிற்சி. இது நீண்ட காலம் தாங்கும் வாழ்த்துக்கள். சின்ன வயதில் பீச்சில் சிலை பார்த்தேன் அப்புறம் ஆண்ட்ரியாவைப் பார்த்தேன் இன்னும் அப்படியே இருக்கிறார். அதே அழகு. ருஹானி அழகாக இருக்கிறீர்கள் வாழ்த்துக்கள். ஜீவி நான் எந்தப்படம் கேட்டாலும் ஒத்துக்கொண்டதே இல்லை அவர் இசை ரொம்ப பிடிக்கும் அவருடன் படம் செய்ய ஆசை வாழ்த்துக்கள். சொக்கலிங்கம் சாருக்கு வாழ்த்துக்கள். அர்ச்சனா நிறையப் படம் நடிக்க வாழ்த்துக்கள். படம் மிகப்பெரிய வெற்றி பெற வாழ்த்துக்கள் என்றார்.

நடிகர் கவின் பேசியதாவது.., என் லைஃபில் நான் நம்பும் விசயம்,, அன்றைய நாள் நல்லபடியாக போக வேண்டும் என்பது தான், அதில் செய்ய வேண்டியதையெல்லாம் செய்து முடித்தால், எல்லாம் நன்றாக நடக்கும் என நம்புகிறேன். விஜய் சேதுபதி அண்ணாவுக்கு நன்றி. அவரின் பீட்சா படத்தில் தான் நான் அறிமுகமானேன். நாம் விரும்புவதை விருப்பத்துடன் செய்தால் அது நடக்கும் என நிரூபித்தவர். அவர் வந்து வாழ்த்தியதற்கு நன்றி. வெற்றிமாறன் அவரெல்லாம் கூப்பிடுவார் என நான் நினைத்ததில்லை. அவர் ஆபிஸில் இருந்து கால் வந்தது. அவரே தான் கதை சொன்னார், அவரே கதை சொல்கிறார் என்றால் அவர் கதை மேல் வைத்திருக்கும் நம்பிக்கை எனக்கு முக்கியமாகப் பட்டது. உங்களை நம்பி வருகிறேன் பார்த்துக்கொள்ளுங்கள் என்றேன். இன்று வரை பார்த்துக்கொண்டிருக்கிறார். அவர் மிக ஜாலியானவர் அவரை நான் நண்பராகவே நினைத்துவிட்டேன். அவர் சொக்கலிங்கம் பற்றி மிகப்பெருமையாக சொன்னார். இந்தப்படம் ஜெயித்தே ஆக வேண்டும் என்றார், அது ஆடுகளம் இண்டர்வெல் மாதிரி இருந்தது. கண்டிப்பாகப் பந்தயம் அடித்துவிடுவோம். ஆண்ட்ரியா மேடம் தான் முதலில் கதை கேட்டார். அவர் நடிப்பு மிகச்சிறப்பாகப் பேசப்படும். ஜீவி இத்தனை வேலைகளை எப்படிச் செய்கிறார் என ஆச்சரியமாக இருக்கும். விகர்னன் மிகச்சரியாகப் பேசினார். எல்லாவற்றையும் மிகச்சரியாகச் செய்து படத்தைக் காப்பாற்றித் தந்துள்ளார். பவன், ரெடின் நடிப்பு கண்டிப்பாக பேசப்படும். படத்தில் வேலை பார்த்த அனைவருக்கும் நன்றி. நெல்சன் அண்ணன் வாழ்க்கையில் என்னைச் சரியாக வழிநடத்தி என்னைக் கூட இருந்து பார்த்துக் கொள்வதற்கு நன்றி. நவமபர் 21 படம் திரைக்கு வருகிறது. அனைவரும் பார்த்து ரசிப்பீர்கள் என நம்புகிறேன் என்றார்.

இயக்குநர் வெற்றிமாறன் பேசியதாவது.., மாஸ்க் படத்தை நான் புதிதாக ஒரு விசயம் பற்றி கற்றுக்கொள்ளவும், தெரிந்து கொள்ளவும் முடிந்த வாய்ப்பாக நினைக்கிறேன். ஆண்ட்ரியா ஒரு திரைக்கதை அனுப்பி இதைத் தயாரிக்கிறேன் என்றார், அவர் தயாரிக்கும் அளவு என்ன கதை என்று தான் படித்தேன். அதில் சில மூமெண்ட்ஸ் மிக மிகப் பிடித்திருந்தது. சொக்கலிங்கம் ஒரு படம் தயாரிப்பதாக இருந்தார். நான் ஆண்ட்ரியாவுடன் சேர்ந்து தயாரியுங்கள் என்றேன். அப்படி தான் மாஸ்க் ஆரம்பித்தது. பின்னர் யாரையெல்லாம் இப்படத்தில் நடிக்க வைக்கலாம் என ஆரம்பித்து கவினை அழைத்தோம். ஸ்டார் படத்திற்கு முன்பே அவரை இப்படத்தில் நடிக்கக் கேட்டோம். விகர்னன் எந்த ஒரு சூழ்நிலையையும் சமாளித்து எளிதாகக் கையாள்வார். அது எனக்குப் பிடித்திருந்தது. சொக்கு தான் ஆர் டி ராஜசேகரை அழைக்கலாம் என்றார். அவர் கிளைமாக்ஸுல் செய்த லைட்டிங் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ஜீவி இப்படத்தில் செய்ய இசை மிக மிகக் கச்சிதமாக இருக்கிறது, மிக அற்புதமாக இருக்கிறது. விகர்னன் இப்படத்தில் பேப்பரில் இருந்ததை மிக அற்புதமாகத் திரைக்குக் கொண்டு வந்துள்ளார். கலை இயக்கம் அருமையாகச் செய்துள்ளார் ஐயப்பன். ராமர் மனதில் பட்டதை அப்படியே பேசக்கூடியவர். அவர் கடைசி சில நாட்களில் அவர் எடிட் செய்த விசயம் மிக நன்றாக இருந்தது. நடிகர்கள் எல்லோர் நடிப்பும் ஸ்பெஷலாக இருந்தது. பவன் டான்ஸ் அருமையாக இருந்தது. நெல்சன் இதில் வாய்ஸ் ஓவர் செய்துள்ளார். சமீபத்தில் நான் சினிமாவில் பார்த்ததில் நிஜமான மனிதர், மனதில் பட்டதைப் புண்படாமல் சொல்பவர். மாஸ்க் படம் மூலம் அவரிடம் நிறையப் பேசினேன். கவின் தான் அதற்குக் காரணம். கவின் அவருக்குத் தம்பி மாதிரி. அவர் அறிவுரை இப்படத்தில் இருக்கிறது. சொக்கலிங்கம் நான் அஸிஸ்டெண்ட்டாக இருக்கும் போது அவர் அஸிஸ்டெண்ட் மேனேஜர். மிகவும் அர்ப்பணிப்பான உழைப்பாளி. அவர் தயாரிப்பாளராக மாறியிருப்பது மகிழ்ச்சி. ஆண்ட்ரியா இப்படத்தை ஏன் தயாரிக்கிறீர்கள் இது நெகடிவ் பாத்திரம், இந்தக்கதை ஏன் என்றேன். இது செய்தால் இது மாதிரி ரோல் தான் வரும் என்றேன். இப்போதும் யாரும் என்னைக் கூப்பிடவில்லை இந்தக்கதை எனக்குப் பிடித்திருக்கிறது. நான் செய்கிறேன் என்றார். இருவரும் ஜெயிக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன் வாழ்த்துக்கள். படத்தில் எல்லா கலைஞர்களும் மிகச் சிறப்பாக பணியாற்றியிருக்கிறார்கள். எம் ஆர் ராதா ஒரு ரிபெல், அவர் நிறைய விசயங்களைப் பேசியிருக்கிறார். அவர் இந்தப்படத்திற்குள் வந்தது மிக மகிழ்ச்சி. ராதாரவி சாரிடம் அனுமதி கேட்டேன், அவர் நன்றாகக் காட்டுவீர்கள் என்றால் ஓகே என்றார் நன்றி. எம் ஆர் ராதா பேசிய விசயம் தான் இப்படத்தின் ஆன்மாவாக இருக்கிறது. குரலற்றவர்களின் குரல் தான் இந்தப்படம். எல்லோருக்கும் நன்றி என்றார்.
The Show Must Go On & Black Madras Films நிறுவனங்கள் சார்பில், ஆண்ட்ரியா ஜெரேமியா, S P சொக்கலிங்கம் தயாரிப்பில், இயக்குநர் வெற்றிமாறன் மேற்பார்வையில், கவின், ஆண்ட்ரியா ஜெரேமியா, ருஹானி சர்மா நடிப்பில், அறிமுக இயக்குநர் விகர்ணன் அசோக் இயக்கத்தில் […]
சினிமாThe Show Must Go On & Black Madras Films நிறுவனங்கள் சார்பில், ஆண்ட்ரியா ஜெரேமியா, S P சொக்கலிங்கம் தயாரிப்பில், இயக்குநர் வெற்றிமாறன் மேற்பார்வையில், கவின், ஆண்ட்ரியா ஜெரேமியா, ருஹானி சர்மா நடிப்பில், அறிமுக இயக்குநர் விகர்ணன் அசோக் இயக்கத்தில் மாறுபட்ட களத்தில், உருவாகியிருக்கும் திரைப்படம் மாஸ்க். 2025 நவம்பர் 21 ஆம் தேதி திரைக்குவரவுள்ள நிலையில் இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா, படக்குழுவினருடன் திரை பிரபலங்கள் கலந்துகொள்ள, கோலாகலமாக நடைபெற்றது.

இவ்விழாவினில்.., நடிகை ருஹானி சர்மா பேசியதாவது.., இது எனக்கு மிகவும் ஸ்பெஷல் டே, இந்த நாளுக்காக இரண்டு வருடம் காத்திருந்தேன். வெற்றிமாறன் முன்னால் பேசக் காத்திருந்தேன். அவர் தந்த ஆதரவுக்கு நன்றி. இன்னும் சில நாட்களில் படம் வரப்போகிறது. மகிழ்ச்சியாக இருக்கிறது. விஜய் சேதுபதியின் தீவிர ரசிகை நான், அவர் வாழ்த்த வந்திருப்பது மகிழ்ச்சி. இயக்குநர் விகர்னன் எனக்கு நல்ல கதாப்பாத்திரம் தந்ததற்கு நன்றி. என் கோ ஸ்டார் கவின் அவர் எனக்கு நிறைய ஆதரவாக இருந்தார். கவினுடன் நடித்தது மிக மகிழ்ச்சியான அனுபவம். ஆண்ட்ரியா மிகச்சிறந்த நடிகை, இப்படத்தைத் தயாரித்துள்ளார். அவர் இன்னும் நல்ல படங்கள் தயாரிக்க வாழ்த்துக்கள். ஜீவி பிரகாஷ் எனக்கு டான்ஸ் ஆட மிகச்சிறந்த பாடல்கள் தந்ததற்கு நன்றி. என்னை மிக அழகாகக் காட்டிய ஒளிப்பதிவாளருக்கு நன்றி. படத்தில் வேலை செய்த அனைவருக்கும் நன்றி என்றார்.
நடிகர் பவன் பேசியதாவது…,
இந்தப்படத்தில் நான் கஷ்டப்படவே இல்லை, கஷ்டப்பட்டதெல்லாம் தயாரிப்பாளர், இயக்குநர் தான். எனக்கு அரசியல்வாதி கேரக்டர் ஏசியில் தான் முழுக்க நடித்தேன். கிளைமாக்ஸ் மட்டும் என்னால் மறக்க முடியாது. ரெடின் கிங்ஸ்லியின் ஒரு காட்சி பார்த்தேன் மிக அருமையாக இருந்தது. கவின் சூப்பராக நடித்துள்ளார். வெற்றிமாறன் கடையைச் சாத்துகிறேன் என்றார், ஆனால் இந்த படத்திற்குப் பிறகு நிறையக் கடைகள் திறப்பார். ஆண்ட்ரியா மேடம் தயாரிப்பாளராக மாறிவிட்டார் வாழ்த்துக்கள். படம் மிகச்சிறப்பாக வந்துள்ளது என்றார்.
இயக்குநர் சுப்பிரமணியம் சிவா பேசியதாவது.., இயக்குநர் வெற்றிமாறனை வழிகாட்டியாக எடுத்துக்கொண்டு விகர்ணன் இப்படத்தை இயக்கியுள்ளார். எனக்கு விகர்ணன் என்ற பெயர் கேட்டவுடன் அவரைப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் தோன்றியது. மகாபாரத கௌரவர்களின் பெயர், அதை வைத்துக்கொண்டதற்கு வாழ்த்துக்கள். எம் ஆர் ராதா மிகப்பெரிய ஆளுமை, அவரை மீண்டும் தமிழ் சினிமாவில் கொண்டு வந்ததற்கு நன்றி. ஆண்ட்ரியா மேடம் ஒரு படத்தை இயக்கி விட்டால், நடிகை பானுமதி சாதனையைச் சமம் செய்துவிடுவார். பாடுகிறார், நடிக்கிறார் இப்போது தயாரித்துள்ளார் அவர் வெல்ல வாழ்த்துக்கள். சொக்கலிங்கம் மிக நல்ல மனிதர், மிகப்பெரிய தயாரிப்பாளராக வாழ்த்துக்கள். ஒரு கவிதைக்கு ஆண் பால் இருந்தால் அது தான் கவின். டாடாவுக்கு பிறகு மிகப்பெரிய வெற்றிப்படமாக மாஸ்க் அமைய வாழ்த்துக்கள். ஜீவி பிரகாஷ் எங்களுடனே இருப்பவர். குழந்தை தொழிலாளராக சினிமாவுக்குள் வந்தவர். சின்ன வயதில் சிக்கு புக்கு சிக்கு புக்கு பாடல் பாடியவர், இப்போது அவர் இரண்டு தேசிய விருதுகள் வாங்கிவிட்டார். ஆர் டி ராஜசேகர் என் குருநாதர் அவர் மாதிரி கேமரா யாராலும் பண்ண முடியாது. கேமரா மாஸ்டர்களில் ஒருத்தர் அவர். மனதால் மிக உற்சாகமான மனிதர். அனைவருக்கும் வாழ்த்துக்கள். மாஸ்க் மிகப்பெரிய வெற்றி பெறட்டும் நன்றி என்றார்.

ஒளிப்பதிவாளர் ஆர் டி ராஜசேகர் பேசியதாவது.., இந்தப்படம் ஆரம்பித்ததிலிருந்து, நாம் செய்யும் உழைப்பிற்கு எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என நினைத்துக்கொண்டே இருந்தேன். டிரெய்லர் வந்த பிறகு எல்லோரும் பாராட்டினார்கள். படத்தின் வெற்றி இயக்குநரின் கையில் உள்ளது. கவின் மிகச்சிறப்பாக நடித்துள்ளார். ஆண்ட்ரியா இதுவரை செய்யாத ரோல் செய்துள்ளார். ருஹானி சர்மா மிக அழகாக இருக்கிறார். வெற்றிமாறன் ஷுட்டிங்க் ஸ்பாட்டுக்கு அதிகம் வரமாட்டார். ஆனால் அவர் வழிகாட்டுதல் இருந்தது. ஜீவி ரசிகன் நான், அவர் இசை அருமையாக வந்துள்ளது. சொக்கு சாருடன் நிறையப் பழகியுள்ளேன் அவர் தயாரிப்பாளராக வெற்றி பெற வேண்டும் என்றார்.

இயக்குநர் நெல்சன் பேசியதாவது.., நான் அதிகம் விழாக்களுக்குச் செல்வதில்லை, இந்த விழாவிற்கு வரவேண்டுமென 6 மாதம் முன்பே வெற்றிமாறன் சொல்லி விட்டார். இந்த கதை கேட்ட போது, இதற்கும் வெற்றிமாறனுக்கும் சம்பந்தமே இல்லையே என நினைத்தேன். படுபயங்கர குதர்க்கமான கதையாக இருந்தது. இயக்குநரைப் பார்த்தே ஆக வேண்டும் என நினைத்தேன், விகர்ணன் எல்லா க்ரைமுக்கும் செட்டாவது போல் தான் இருந்தார். அவர் சொன்னதையெல்லாம் எடுக்கவே முடியாது. இந்தக்கதை ஐடியா எல்லாம் மிகவும் புதுசாக இருந்தது. விகர்ணன் கதை, கவின் கதாப்பாத்திரம் செய்தால் எப்படி இருக்குமோ அப்படி இருந்தது. ஆனால் வெற்றிமாறன் அதைக் கொஞ்சம் மாற்றியிருக்கிறார். இது ரசிகர்களுக்கு புது எக்ஸ்பீரியன்ஸாக இருக்கும். ஜீவி மியூசிக் சூப்பாராக வந்துள்ளது. கவின் எதற்கும் தயாராக இருக்கிறான். அவன் இன்று மேலே, கீழே போய் வந்தாலும், நல்ல கதைகளைத் தேர்ந்தெடுக்கிறான் சினிமாவில் நீண்ட காலம் நிலைத்து இருப்பான். ஆண்ட்ரியா மேடமுக்கு சவாலான கேரக்டர் வாழ்த்துக்கள். ரெடினை கண்ட்ரோலாக நடிக்க வைத்திருந்தார்கள் வாழ்த்துக்கள். ஒரு குழுவாக அனைவரும் மிகப்பெரிய வெற்றியைப் பெற வாழ்த்துக்கள் என்றார்.

ஜீவி பிரகாஷ்குமார் பேசியதாவது
மாஸ்க் டீமில் எல்லோருமே எனக்கு நெருங்கிய நண்பர்கள், நான் கடைசியாக தான் வந்தேன். ஆண்ட்ரியா மேடமுக்கு வாழ்த்துக்கள். அந்நியன் படத்தில் அவர் முதன் முதலில் பாடும் போது நான் அவர் அருகிலிருந்தேன், அப்போதிலிருந்து அவரைத் தெரியும். அவர் தயாரிப்பாளராக மாறியிருக்கிறார், அவருக்கும் சொக்கலிங்கம் சாருக்கும் வாழ்த்துக்கள். வெற்றிமாறன், பவன் சொன்ன மாதிரி திரும்ப கடையை திறக்க வாழ்த்துக்கள். விகர்ணன் வெற்றிமாறன் சாயலே இல்லாமல் கதை சொன்னார், ஆச்சரியமாக இருந்தது. இந்தப்படம் பரபரவென இருக்கும். ஆர் டி ராஜசேகர் நாங்கள் சினிமாவுக்கு வரும்போதே பெரிய கேமராமேன், அவருடன் வேலை பார்த்தது மகிழ்ச்சி. கவின் சூப்பராக நடித்துள்ளார். ருஹானி பெரிய ஹீரோயினாக வாழ்த்துக்கள். மாஸ்க் படம் மிகப்பெரிய வெற்றி பெற வாழ்த்துக்கள் என்றார்.

நடிகை, தயாரிப்பாளர் ஆண்ட்ரியா ஜெரேமியா பேசியதாவது.., நான் ஒரு விழாவில் பங்கு கொண்டு நீண்ட வருடம் ஆகிவிட்டது. எனக்கு ஒரு படம் விரைவில் வருகிறது மகிழ்ச்சி. கவினுக்கு இது மிகவும் முக்கியமான படம். ருஹானிக்கு முதல் படம். சொக்கு சாருக்கு தயாரிப்பாளராக முக்கியமான படம். எங்கள் அனைவருக்கும் மெண்டார் வெற்றிமாறன், அவர் தான் எங்களின் பப்பெட் மாஸ்டர். ஆர் டி ராஜசேகர் அவர் கேமரா செய்தால் எல்லோரும் அழகாக இருப்பார்கள். என்னோடு உழைத்த அனைத்து நடிகர்கள், தொழில் நுட்ப கலைஞர்களுக்கு நன்றிகள் என்றார்.

இயக்குநர் விகர்ணன் பேசியதாவது.., என்னுடைய உதவி இயக்குநர்களுக்கும் படத்தில் உதவிய வெற்றிமாறன் உதவியாளர்களுக்கும் நன்றிகள். நான் இங்கு நிற்க காரணமான ஆண்ட்ரியா மேடமுக்கு நன்றி. அவர் தான் வெற்றிமாறன் சாரிடம் என் கதையைப் படிக்கத் தந்தார். சொக்கலிங்கம் அண்ணா நிறையப்பேரை வளர்த்துவிட்டுள்ளார், என்னையும் வளர்த்துவிட்டதற்கு நன்றி. ஆர் டி ராஜசேகர் அவர் ஒரு ட்ரீட். ஷீட்டிங்கில் அவர் இருந்தாலே ஜாலியாக இருக்கும். நெல்சன் அண்ணாவே ஒரு ஜானர் தான் அவர் இந்தப்படத்தில் இருக்கிறார் ஆனால் யாருக்கும் தெரியமாட்டார். அவருக்கு நான் நிறையக் கடமைப்பட்டுள்ளேன். விஜய் சேதுபதி அண்ணா.. அசோக் செல்வன் என் நண்பன், உங்களைப் பற்றி நிறையப் பேசுவான். நீங்கள் நல்ல இதயம் கொண்ட மனிதர். வாழ்த்த வந்ததற்கு நன்றி. ருஹானி சர்மா திறமையானவர் சிறப்பாக நடித்துள்ளார். நண்பர் ஜீவி, நீங்கள் நான் மிகவும் பாதுகாப்பாக இருப்பதாக உணர வைத்தீர்கள். நீங்கள் தந்த இசைக்கு நன்றி. ரெடின் ஒரு அழகான ரோல் செய்துள்ளார். ராமரை எடிட்டிங்கிற்கு கூட்டி வந்ததற்கு வெற்றிமாறன் சாருக்கு நன்றி. ஸ்டைலீஷாக எடிட் செய்துள்ளார். ஐயப்பன் அண்ணாவுடன் நிறையப்படம் சேர்ந்து செய்வேன் என் கூடவே இருந்தார் அவருக்கு நன்றி. கவின் படத்தில் அவர் பெயர் வேலு. இவனுடன் சேர்ந்தால் உருப்பட மாட்டாய் என்பார்களே, அந்த மாதிரி ஒரு ரோல். அவருக்குள் ஒரு கெட்டவனும் இருப்பான், நல்லவனும் ஓரத்தில் இருப்பான். அதை மிக அழகாகத் திரையில் கொண்டு வந்துள்ளார். அவர் தந்த ஆதரவிற்கு நன்றி. பீட்டர் ஹெய்ன் மாஸ்டருக்கு நன்றி. அவர் மாதிரி ஒரு லெஜண்ட் நம் திரைத்துறையில் இருப்பது நமக்குப் பெருமை. வெற்றிமாறன் அட்வைஸ் கேட்டால் நீங்கள் வாழ்க்கையில் வளர்வீர்கள். அவர் தந்த வழிகாட்டுதலுக்கு நன்றி. நான் உங்களுடன் படம் செய்வதை என் வீட்டிலேயே யாரும் நம்பவில்லை எனக்கு நீங்கள் தந்த வாய்ப்புக்கு நன்றி என்றார்.

நடிகர் விஜய் சேதுபதி பேசியதாவது.., விகர்னன் மிக அருமையாகப் பேசினார். வெற்றிமாறன் மெண்டார் என்றார்கள். பேச்சுக்கும் அவர் தான் மெண்டார் போல. இந்தப்படத்தின் டிரெய்லர் பார்த்தேன் மிக மிகப் பிடித்திருந்தது. விடுதலை ஷீட்டிங்கில் இந்தப்படம் ஆரம்பிப்பதாகச் சொன்னார். மாஸ்க் கதை, எம் ஆர் ராதா, என ஒவ்வொரு ஐடியாவும் நன்றாக இருந்தது. இந்த விழாவில் எல்லோரும் அட்டகாசமாகப் பேசினார்கள். ராமரில் ஆரம்பித்து எல்லோரும் அசத்தலாகப் பேசினார்கள். வெற்றி மாறன் மாஸ்கே இல்லாத எல்லோரையும் சமமாக நடத்தும் ஒரு மனிதர். விடுதலை ஷீட்டிங்கில் வெற்றிமாறன் சாரிடம் ராமர் மாட்டியிருப்பதாக நினைத்தேன், ஆனால் அவர் பேசியதைக் கேட்ட பிறகு தான் ராமரிடம் தான் வெற்றிமாறன் மாட்டியிருக்கிறார் எனத் தோன்றியது. கவினுக்கு வாழ்த்துக்கள் திரையில் அவர் வசீகரமாக இருக்கிறார். அவரை திரையில் பார்க்க பிடித்திருக்கிறது. இன்று வித்தியாசமான கதையைத் தேர்ந்தெடுப்பதில் மேலே கீழே போகலாம், ஆனால் இது தான் பயிற்சி. இது நீண்ட காலம் தாங்கும் வாழ்த்துக்கள். சின்ன வயதில் பீச்சில் சிலை பார்த்தேன் அப்புறம் ஆண்ட்ரியாவைப் பார்த்தேன் இன்னும் அப்படியே இருக்கிறார். அதே அழகு. ருஹானி அழகாக இருக்கிறீர்கள் வாழ்த்துக்கள். ஜீவி நான் எந்தப்படம் கேட்டாலும் ஒத்துக்கொண்டதே இல்லை அவர் இசை ரொம்ப பிடிக்கும் அவருடன் படம் செய்ய ஆசை வாழ்த்துக்கள். சொக்கலிங்கம் சாருக்கு வாழ்த்துக்கள். அர்ச்சனா நிறையப் படம் நடிக்க வாழ்த்துக்கள். படம் மிகப்பெரிய வெற்றி பெற வாழ்த்துக்கள் என்றார்.

நடிகர் கவின் பேசியதாவது.., என் லைஃபில் நான் நம்பும் விசயம்,, அன்றைய நாள் நல்லபடியாக போக வேண்டும் என்பது தான், அதில் செய்ய வேண்டியதையெல்லாம் செய்து முடித்தால், எல்லாம் நன்றாக நடக்கும் என நம்புகிறேன். விஜய் சேதுபதி அண்ணாவுக்கு நன்றி. அவரின் பீட்சா படத்தில் தான் நான் அறிமுகமானேன். நாம் விரும்புவதை விருப்பத்துடன் செய்தால் அது நடக்கும் என நிரூபித்தவர். அவர் வந்து வாழ்த்தியதற்கு நன்றி. வெற்றிமாறன் அவரெல்லாம் கூப்பிடுவார் என நான் நினைத்ததில்லை. அவர் ஆபிஸில் இருந்து கால் வந்தது. அவரே தான் கதை சொன்னார், அவரே கதை சொல்கிறார் என்றால் அவர் கதை மேல் வைத்திருக்கும் நம்பிக்கை எனக்கு முக்கியமாகப் பட்டது. உங்களை நம்பி வருகிறேன் பார்த்துக்கொள்ளுங்கள் என்றேன். இன்று வரை பார்த்துக்கொண்டிருக்கிறார். அவர் மிக ஜாலியானவர் அவரை நான் நண்பராகவே நினைத்துவிட்டேன். அவர் சொக்கலிங்கம் பற்றி மிகப்பெருமையாக சொன்னார். இந்தப்படம் ஜெயித்தே ஆக வேண்டும் என்றார், அது ஆடுகளம் இண்டர்வெல் மாதிரி இருந்தது. கண்டிப்பாகப் பந்தயம் அடித்துவிடுவோம். ஆண்ட்ரியா மேடம் தான் முதலில் கதை கேட்டார். அவர் நடிப்பு மிகச்சிறப்பாகப் பேசப்படும். ஜீவி இத்தனை வேலைகளை எப்படிச் செய்கிறார் என ஆச்சரியமாக இருக்கும். விகர்னன் மிகச்சரியாகப் பேசினார். எல்லாவற்றையும் மிகச்சரியாகச் செய்து படத்தைக் காப்பாற்றித் தந்துள்ளார். பவன், ரெடின் நடிப்பு கண்டிப்பாக பேசப்படும். படத்தில் வேலை பார்த்த அனைவருக்கும் நன்றி. நெல்சன் அண்ணன் வாழ்க்கையில் என்னைச் சரியாக வழிநடத்தி என்னைக் கூட இருந்து பார்த்துக் கொள்வதற்கு நன்றி. நவமபர் 21 படம் திரைக்கு வருகிறது. அனைவரும் பார்த்து ரசிப்பீர்கள் என நம்புகிறேன் என்றார்.

இயக்குநர் வெற்றிமாறன் பேசியதாவது.., மாஸ்க் படத்தை நான் புதிதாக ஒரு விசயம் பற்றி கற்றுக்கொள்ளவும், தெரிந்து கொள்ளவும் முடிந்த வாய்ப்பாக நினைக்கிறேன். ஆண்ட்ரியா ஒரு திரைக்கதை அனுப்பி இதைத் தயாரிக்கிறேன் என்றார், அவர் தயாரிக்கும் அளவு என்ன கதை என்று தான் படித்தேன். அதில் சில மூமெண்ட்ஸ் மிக மிகப் பிடித்திருந்தது. சொக்கலிங்கம் ஒரு படம் தயாரிப்பதாக இருந்தார். நான் ஆண்ட்ரியாவுடன் சேர்ந்து தயாரியுங்கள் என்றேன். அப்படி தான் மாஸ்க் ஆரம்பித்தது. பின்னர் யாரையெல்லாம் இப்படத்தில் நடிக்க வைக்கலாம் என ஆரம்பித்து கவினை அழைத்தோம். ஸ்டார் படத்திற்கு முன்பே அவரை இப்படத்தில் நடிக்கக் கேட்டோம். விகர்னன் எந்த ஒரு சூழ்நிலையையும் சமாளித்து எளிதாகக் கையாள்வார். அது எனக்குப் பிடித்திருந்தது. சொக்கு தான் ஆர் டி ராஜசேகரை அழைக்கலாம் என்றார். அவர் கிளைமாக்ஸுல் செய்த லைட்டிங் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ஜீவி இப்படத்தில் செய்ய இசை மிக மிகக் கச்சிதமாக இருக்கிறது, மிக அற்புதமாக இருக்கிறது. விகர்னன் இப்படத்தில் பேப்பரில் இருந்ததை மிக அற்புதமாகத் திரைக்குக் கொண்டு வந்துள்ளார். கலை இயக்கம் அருமையாகச் செய்துள்ளார் ஐயப்பன். ராமர் மனதில் பட்டதை அப்படியே பேசக்கூடியவர். அவர் கடைசி சில நாட்களில் அவர் எடிட் செய்த விசயம் மிக நன்றாக இருந்தது. நடிகர்கள் எல்லோர் நடிப்பும் ஸ்பெஷலாக இருந்தது. பவன் டான்ஸ் அருமையாக இருந்தது. நெல்சன் இதில் வாய்ஸ் ஓவர் செய்துள்ளார். சமீபத்தில் நான் சினிமாவில் பார்த்ததில் நிஜமான மனிதர், மனதில் பட்டதைப் புண்படாமல் சொல்பவர். மாஸ்க் படம் மூலம் அவரிடம் நிறையப் பேசினேன். கவின் தான் அதற்குக் காரணம். கவின் அவருக்குத் தம்பி மாதிரி. அவர் அறிவுரை இப்படத்தில் இருக்கிறது. சொக்கலிங்கம் நான் அஸிஸ்டெண்ட்டாக இருக்கும் போது அவர் அஸிஸ்டெண்ட் மேனேஜர். மிகவும் அர்ப்பணிப்பான உழைப்பாளி. அவர் தயாரிப்பாளராக மாறியிருப்பது மகிழ்ச்சி. ஆண்ட்ரியா இப்படத்தை ஏன் தயாரிக்கிறீர்கள் இது நெகடிவ் பாத்திரம், இந்தக்கதை ஏன் என்றேன். இது செய்தால் இது மாதிரி ரோல் தான் வரும் என்றேன். இப்போதும் யாரும் என்னைக் கூப்பிடவில்லை இந்தக்கதை எனக்குப் பிடித்திருக்கிறது. நான் செய்கிறேன் என்றார். இருவரும் ஜெயிக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன் வாழ்த்துக்கள். படத்தில் எல்லா கலைஞர்களும் மிகச் சிறப்பாக பணியாற்றியிருக்கிறார்கள். எம் ஆர் ராதா ஒரு ரிபெல், அவர் நிறைய விசயங்களைப் பேசியிருக்கிறார். அவர் இந்தப்படத்திற்குள் வந்தது மிக மகிழ்ச்சி. ராதாரவி சாரிடம் அனுமதி கேட்டேன், அவர் நன்றாகக் காட்டுவீர்கள் என்றால் ஓகே என்றார் நன்றி. எம் ஆர் ராதா பேசிய விசயம் தான் இப்படத்தின் ஆன்மாவாக இருக்கிறது. குரலற்றவர்களின் குரல் தான் இந்தப்படம். எல்லோருக்கும் நன்றி என்றார்.
The Show Must Go On & Black Madras Films நிறுவனங்கள் சார்பில், ஆண்ட்ரியா ஜெரேமியா, S P சொக்கலிங்கம் தயாரிப்பில், இயக்குநர் வெற்றிமாறன் மேற்பார்வையில், கவின், ஆண்ட்ரியா ஜெரேமியா, ருஹானி சர்மா நடிப்பில், அறிமுக இயக்குநர் விகர்ணன் அசோக் இயக்கத்தில் […]
சினிமாThe Show Must Go On & Black Madras Films நிறுவனங்கள் சார்பில், ஆண்ட்ரியா ஜெரேமியா, S P சொக்கலிங்கம் தயாரிப்பில், இயக்குநர் வெற்றிமாறன் மேற்பார்வையில், கவின், ஆண்ட்ரியா ஜெரேமியா, ருஹானி சர்மா நடிப்பில், அறிமுக இயக்குநர் விகர்ணன் அசோக் இயக்கத்தில் மாறுபட்ட களத்தில், உருவாகியிருக்கும் திரைப்படம் மாஸ்க். 2025 நவம்பர் 21 ஆம் தேதி திரைக்குவரவுள்ள நிலையில் இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா, படக்குழுவினருடன் திரை பிரபலங்கள் கலந்துகொள்ள, கோலாகலமாக நடைபெற்றது.

இவ்விழாவினில்.., நடிகை ருஹானி சர்மா பேசியதாவது.., இது எனக்கு மிகவும் ஸ்பெஷல் டே, இந்த நாளுக்காக இரண்டு வருடம் காத்திருந்தேன். வெற்றிமாறன் முன்னால் பேசக் காத்திருந்தேன். அவர் தந்த ஆதரவுக்கு நன்றி. இன்னும் சில நாட்களில் படம் வரப்போகிறது. மகிழ்ச்சியாக இருக்கிறது. விஜய் சேதுபதியின் தீவிர ரசிகை நான், அவர் வாழ்த்த வந்திருப்பது மகிழ்ச்சி. இயக்குநர் விகர்னன் எனக்கு நல்ல கதாப்பாத்திரம் தந்ததற்கு நன்றி. என் கோ ஸ்டார் கவின் அவர் எனக்கு நிறைய ஆதரவாக இருந்தார். கவினுடன் நடித்தது மிக மகிழ்ச்சியான அனுபவம். ஆண்ட்ரியா மிகச்சிறந்த நடிகை, இப்படத்தைத் தயாரித்துள்ளார். அவர் இன்னும் நல்ல படங்கள் தயாரிக்க வாழ்த்துக்கள். ஜீவி பிரகாஷ் எனக்கு டான்ஸ் ஆட மிகச்சிறந்த பாடல்கள் தந்ததற்கு நன்றி. என்னை மிக அழகாகக் காட்டிய ஒளிப்பதிவாளருக்கு நன்றி. படத்தில் வேலை செய்த அனைவருக்கும் நன்றி என்றார்.
நடிகர் பவன் பேசியதாவது…,
இந்தப்படத்தில் நான் கஷ்டப்படவே இல்லை, கஷ்டப்பட்டதெல்லாம் தயாரிப்பாளர், இயக்குநர் தான். எனக்கு அரசியல்வாதி கேரக்டர் ஏசியில் தான் முழுக்க நடித்தேன். கிளைமாக்ஸ் மட்டும் என்னால் மறக்க முடியாது. ரெடின் கிங்ஸ்லியின் ஒரு காட்சி பார்த்தேன் மிக அருமையாக இருந்தது. கவின் சூப்பராக நடித்துள்ளார். வெற்றிமாறன் கடையைச் சாத்துகிறேன் என்றார், ஆனால் இந்த படத்திற்குப் பிறகு நிறையக் கடைகள் திறப்பார். ஆண்ட்ரியா மேடம் தயாரிப்பாளராக மாறிவிட்டார் வாழ்த்துக்கள். படம் மிகச்சிறப்பாக வந்துள்ளது என்றார்.
இயக்குநர் சுப்பிரமணியம் சிவா பேசியதாவது.., இயக்குநர் வெற்றிமாறனை வழிகாட்டியாக எடுத்துக்கொண்டு விகர்ணன் இப்படத்தை இயக்கியுள்ளார். எனக்கு விகர்ணன் என்ற பெயர் கேட்டவுடன் அவரைப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் தோன்றியது. மகாபாரத கௌரவர்களின் பெயர், அதை வைத்துக்கொண்டதற்கு வாழ்த்துக்கள். எம் ஆர் ராதா மிகப்பெரிய ஆளுமை, அவரை மீண்டும் தமிழ் சினிமாவில் கொண்டு வந்ததற்கு நன்றி. ஆண்ட்ரியா மேடம் ஒரு படத்தை இயக்கி விட்டால், நடிகை பானுமதி சாதனையைச் சமம் செய்துவிடுவார். பாடுகிறார், நடிக்கிறார் இப்போது தயாரித்துள்ளார் அவர் வெல்ல வாழ்த்துக்கள். சொக்கலிங்கம் மிக நல்ல மனிதர், மிகப்பெரிய தயாரிப்பாளராக வாழ்த்துக்கள். ஒரு கவிதைக்கு ஆண் பால் இருந்தால் அது தான் கவின். டாடாவுக்கு பிறகு மிகப்பெரிய வெற்றிப்படமாக மாஸ்க் அமைய வாழ்த்துக்கள். ஜீவி பிரகாஷ் எங்களுடனே இருப்பவர். குழந்தை தொழிலாளராக சினிமாவுக்குள் வந்தவர். சின்ன வயதில் சிக்கு புக்கு சிக்கு புக்கு பாடல் பாடியவர், இப்போது அவர் இரண்டு தேசிய விருதுகள் வாங்கிவிட்டார். ஆர் டி ராஜசேகர் என் குருநாதர் அவர் மாதிரி கேமரா யாராலும் பண்ண முடியாது. கேமரா மாஸ்டர்களில் ஒருத்தர் அவர். மனதால் மிக உற்சாகமான மனிதர். அனைவருக்கும் வாழ்த்துக்கள். மாஸ்க் மிகப்பெரிய வெற்றி பெறட்டும் நன்றி என்றார்.

ஒளிப்பதிவாளர் ஆர் டி ராஜசேகர் பேசியதாவது.., இந்தப்படம் ஆரம்பித்ததிலிருந்து, நாம் செய்யும் உழைப்பிற்கு எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என நினைத்துக்கொண்டே இருந்தேன். டிரெய்லர் வந்த பிறகு எல்லோரும் பாராட்டினார்கள். படத்தின் வெற்றி இயக்குநரின் கையில் உள்ளது. கவின் மிகச்சிறப்பாக நடித்துள்ளார். ஆண்ட்ரியா இதுவரை செய்யாத ரோல் செய்துள்ளார். ருஹானி சர்மா மிக அழகாக இருக்கிறார். வெற்றிமாறன் ஷுட்டிங்க் ஸ்பாட்டுக்கு அதிகம் வரமாட்டார். ஆனால் அவர் வழிகாட்டுதல் இருந்தது. ஜீவி ரசிகன் நான், அவர் இசை அருமையாக வந்துள்ளது. சொக்கு சாருடன் நிறையப் பழகியுள்ளேன் அவர் தயாரிப்பாளராக வெற்றி பெற வேண்டும் என்றார்.

இயக்குநர் நெல்சன் பேசியதாவது.., நான் அதிகம் விழாக்களுக்குச் செல்வதில்லை, இந்த விழாவிற்கு வரவேண்டுமென 6 மாதம் முன்பே வெற்றிமாறன் சொல்லி விட்டார். இந்த கதை கேட்ட போது, இதற்கும் வெற்றிமாறனுக்கும் சம்பந்தமே இல்லையே என நினைத்தேன். படுபயங்கர குதர்க்கமான கதையாக இருந்தது. இயக்குநரைப் பார்த்தே ஆக வேண்டும் என நினைத்தேன், விகர்ணன் எல்லா க்ரைமுக்கும் செட்டாவது போல் தான் இருந்தார். அவர் சொன்னதையெல்லாம் எடுக்கவே முடியாது. இந்தக்கதை ஐடியா எல்லாம் மிகவும் புதுசாக இருந்தது. விகர்ணன் கதை, கவின் கதாப்பாத்திரம் செய்தால் எப்படி இருக்குமோ அப்படி இருந்தது. ஆனால் வெற்றிமாறன் அதைக் கொஞ்சம் மாற்றியிருக்கிறார். இது ரசிகர்களுக்கு புது எக்ஸ்பீரியன்ஸாக இருக்கும். ஜீவி மியூசிக் சூப்பாராக வந்துள்ளது. கவின் எதற்கும் தயாராக இருக்கிறான். அவன் இன்று மேலே, கீழே போய் வந்தாலும், நல்ல கதைகளைத் தேர்ந்தெடுக்கிறான் சினிமாவில் நீண்ட காலம் நிலைத்து இருப்பான். ஆண்ட்ரியா மேடமுக்கு சவாலான கேரக்டர் வாழ்த்துக்கள். ரெடினை கண்ட்ரோலாக நடிக்க வைத்திருந்தார்கள் வாழ்த்துக்கள். ஒரு குழுவாக அனைவரும் மிகப்பெரிய வெற்றியைப் பெற வாழ்த்துக்கள் என்றார்.

ஜீவி பிரகாஷ்குமார் பேசியதாவது
மாஸ்க் டீமில் எல்லோருமே எனக்கு நெருங்கிய நண்பர்கள், நான் கடைசியாக தான் வந்தேன். ஆண்ட்ரியா மேடமுக்கு வாழ்த்துக்கள். அந்நியன் படத்தில் அவர் முதன் முதலில் பாடும் போது நான் அவர் அருகிலிருந்தேன், அப்போதிலிருந்து அவரைத் தெரியும். அவர் தயாரிப்பாளராக மாறியிருக்கிறார், அவருக்கும் சொக்கலிங்கம் சாருக்கும் வாழ்த்துக்கள். வெற்றிமாறன், பவன் சொன்ன மாதிரி திரும்ப கடையை திறக்க வாழ்த்துக்கள். விகர்ணன் வெற்றிமாறன் சாயலே இல்லாமல் கதை சொன்னார், ஆச்சரியமாக இருந்தது. இந்தப்படம் பரபரவென இருக்கும். ஆர் டி ராஜசேகர் நாங்கள் சினிமாவுக்கு வரும்போதே பெரிய கேமராமேன், அவருடன் வேலை பார்த்தது மகிழ்ச்சி. கவின் சூப்பராக நடித்துள்ளார். ருஹானி பெரிய ஹீரோயினாக வாழ்த்துக்கள். மாஸ்க் படம் மிகப்பெரிய வெற்றி பெற வாழ்த்துக்கள் என்றார்.

நடிகை, தயாரிப்பாளர் ஆண்ட்ரியா ஜெரேமியா பேசியதாவது.., நான் ஒரு விழாவில் பங்கு கொண்டு நீண்ட வருடம் ஆகிவிட்டது. எனக்கு ஒரு படம் விரைவில் வருகிறது மகிழ்ச்சி. கவினுக்கு இது மிகவும் முக்கியமான படம். ருஹானிக்கு முதல் படம். சொக்கு சாருக்கு தயாரிப்பாளராக முக்கியமான படம். எங்கள் அனைவருக்கும் மெண்டார் வெற்றிமாறன், அவர் தான் எங்களின் பப்பெட் மாஸ்டர். ஆர் டி ராஜசேகர் அவர் கேமரா செய்தால் எல்லோரும் அழகாக இருப்பார்கள். என்னோடு உழைத்த அனைத்து நடிகர்கள், தொழில் நுட்ப கலைஞர்களுக்கு நன்றிகள் என்றார்.

இயக்குநர் விகர்ணன் பேசியதாவது.., என்னுடைய உதவி இயக்குநர்களுக்கும் படத்தில் உதவிய வெற்றிமாறன் உதவியாளர்களுக்கும் நன்றிகள். நான் இங்கு நிற்க காரணமான ஆண்ட்ரியா மேடமுக்கு நன்றி. அவர் தான் வெற்றிமாறன் சாரிடம் என் கதையைப் படிக்கத் தந்தார். சொக்கலிங்கம் அண்ணா நிறையப்பேரை வளர்த்துவிட்டுள்ளார், என்னையும் வளர்த்துவிட்டதற்கு நன்றி. ஆர் டி ராஜசேகர் அவர் ஒரு ட்ரீட். ஷீட்டிங்கில் அவர் இருந்தாலே ஜாலியாக இருக்கும். நெல்சன் அண்ணாவே ஒரு ஜானர் தான் அவர் இந்தப்படத்தில் இருக்கிறார் ஆனால் யாருக்கும் தெரியமாட்டார். அவருக்கு நான் நிறையக் கடமைப்பட்டுள்ளேன். விஜய் சேதுபதி அண்ணா.. அசோக் செல்வன் என் நண்பன், உங்களைப் பற்றி நிறையப் பேசுவான். நீங்கள் நல்ல இதயம் கொண்ட மனிதர். வாழ்த்த வந்ததற்கு நன்றி. ருஹானி சர்மா திறமையானவர் சிறப்பாக நடித்துள்ளார். நண்பர் ஜீவி, நீங்கள் நான் மிகவும் பாதுகாப்பாக இருப்பதாக உணர வைத்தீர்கள். நீங்கள் தந்த இசைக்கு நன்றி. ரெடின் ஒரு அழகான ரோல் செய்துள்ளார். ராமரை எடிட்டிங்கிற்கு கூட்டி வந்ததற்கு வெற்றிமாறன் சாருக்கு நன்றி. ஸ்டைலீஷாக எடிட் செய்துள்ளார். ஐயப்பன் அண்ணாவுடன் நிறையப்படம் சேர்ந்து செய்வேன் என் கூடவே இருந்தார் அவருக்கு நன்றி. கவின் படத்தில் அவர் பெயர் வேலு. இவனுடன் சேர்ந்தால் உருப்பட மாட்டாய் என்பார்களே, அந்த மாதிரி ஒரு ரோல். அவருக்குள் ஒரு கெட்டவனும் இருப்பான், நல்லவனும் ஓரத்தில் இருப்பான். அதை மிக அழகாகத் திரையில் கொண்டு வந்துள்ளார். அவர் தந்த ஆதரவிற்கு நன்றி. பீட்டர் ஹெய்ன் மாஸ்டருக்கு நன்றி. அவர் மாதிரி ஒரு லெஜண்ட் நம் திரைத்துறையில் இருப்பது நமக்குப் பெருமை. வெற்றிமாறன் அட்வைஸ் கேட்டால் நீங்கள் வாழ்க்கையில் வளர்வீர்கள். அவர் தந்த வழிகாட்டுதலுக்கு நன்றி. நான் உங்களுடன் படம் செய்வதை என் வீட்டிலேயே யாரும் நம்பவில்லை எனக்கு நீங்கள் தந்த வாய்ப்புக்கு நன்றி என்றார்.

நடிகர் விஜய் சேதுபதி பேசியதாவது.., விகர்னன் மிக அருமையாகப் பேசினார். வெற்றிமாறன் மெண்டார் என்றார்கள். பேச்சுக்கும் அவர் தான் மெண்டார் போல. இந்தப்படத்தின் டிரெய்லர் பார்த்தேன் மிக மிகப் பிடித்திருந்தது. விடுதலை ஷீட்டிங்கில் இந்தப்படம் ஆரம்பிப்பதாகச் சொன்னார். மாஸ்க் கதை, எம் ஆர் ராதா, என ஒவ்வொரு ஐடியாவும் நன்றாக இருந்தது. இந்த விழாவில் எல்லோரும் அட்டகாசமாகப் பேசினார்கள். ராமரில் ஆரம்பித்து எல்லோரும் அசத்தலாகப் பேசினார்கள். வெற்றி மாறன் மாஸ்கே இல்லாத எல்லோரையும் சமமாக நடத்தும் ஒரு மனிதர். விடுதலை ஷீட்டிங்கில் வெற்றிமாறன் சாரிடம் ராமர் மாட்டியிருப்பதாக நினைத்தேன், ஆனால் அவர் பேசியதைக் கேட்ட பிறகு தான் ராமரிடம் தான் வெற்றிமாறன் மாட்டியிருக்கிறார் எனத் தோன்றியது. கவினுக்கு வாழ்த்துக்கள் திரையில் அவர் வசீகரமாக இருக்கிறார். அவரை திரையில் பார்க்க பிடித்திருக்கிறது. இன்று வித்தியாசமான கதையைத் தேர்ந்தெடுப்பதில் மேலே கீழே போகலாம், ஆனால் இது தான் பயிற்சி. இது நீண்ட காலம் தாங்கும் வாழ்த்துக்கள். சின்ன வயதில் பீச்சில் சிலை பார்த்தேன் அப்புறம் ஆண்ட்ரியாவைப் பார்த்தேன் இன்னும் அப்படியே இருக்கிறார். அதே அழகு. ருஹானி அழகாக இருக்கிறீர்கள் வாழ்த்துக்கள். ஜீவி நான் எந்தப்படம் கேட்டாலும் ஒத்துக்கொண்டதே இல்லை அவர் இசை ரொம்ப பிடிக்கும் அவருடன் படம் செய்ய ஆசை வாழ்த்துக்கள். சொக்கலிங்கம் சாருக்கு வாழ்த்துக்கள். அர்ச்சனா நிறையப் படம் நடிக்க வாழ்த்துக்கள். படம் மிகப்பெரிய வெற்றி பெற வாழ்த்துக்கள் என்றார்.

நடிகர் கவின் பேசியதாவது.., என் லைஃபில் நான் நம்பும் விசயம்,, அன்றைய நாள் நல்லபடியாக போக வேண்டும் என்பது தான், அதில் செய்ய வேண்டியதையெல்லாம் செய்து முடித்தால், எல்லாம் நன்றாக நடக்கும் என நம்புகிறேன். விஜய் சேதுபதி அண்ணாவுக்கு நன்றி. அவரின் பீட்சா படத்தில் தான் நான் அறிமுகமானேன். நாம் விரும்புவதை விருப்பத்துடன் செய்தால் அது நடக்கும் என நிரூபித்தவர். அவர் வந்து வாழ்த்தியதற்கு நன்றி. வெற்றிமாறன் அவரெல்லாம் கூப்பிடுவார் என நான் நினைத்ததில்லை. அவர் ஆபிஸில் இருந்து கால் வந்தது. அவரே தான் கதை சொன்னார், அவரே கதை சொல்கிறார் என்றால் அவர் கதை மேல் வைத்திருக்கும் நம்பிக்கை எனக்கு முக்கியமாகப் பட்டது. உங்களை நம்பி வருகிறேன் பார்த்துக்கொள்ளுங்கள் என்றேன். இன்று வரை பார்த்துக்கொண்டிருக்கிறார். அவர் மிக ஜாலியானவர் அவரை நான் நண்பராகவே நினைத்துவிட்டேன். அவர் சொக்கலிங்கம் பற்றி மிகப்பெருமையாக சொன்னார். இந்தப்படம் ஜெயித்தே ஆக வேண்டும் என்றார், அது ஆடுகளம் இண்டர்வெல் மாதிரி இருந்தது. கண்டிப்பாகப் பந்தயம் அடித்துவிடுவோம். ஆண்ட்ரியா மேடம் தான் முதலில் கதை கேட்டார். அவர் நடிப்பு மிகச்சிறப்பாகப் பேசப்படும். ஜீவி இத்தனை வேலைகளை எப்படிச் செய்கிறார் என ஆச்சரியமாக இருக்கும். விகர்னன் மிகச்சரியாகப் பேசினார். எல்லாவற்றையும் மிகச்சரியாகச் செய்து படத்தைக் காப்பாற்றித் தந்துள்ளார். பவன், ரெடின் நடிப்பு கண்டிப்பாக பேசப்படும். படத்தில் வேலை பார்த்த அனைவருக்கும் நன்றி. நெல்சன் அண்ணன் வாழ்க்கையில் என்னைச் சரியாக வழிநடத்தி என்னைக் கூட இருந்து பார்த்துக் கொள்வதற்கு நன்றி. நவமபர் 21 படம் திரைக்கு வருகிறது. அனைவரும் பார்த்து ரசிப்பீர்கள் என நம்புகிறேன் என்றார்.

இயக்குநர் வெற்றிமாறன் பேசியதாவது.., மாஸ்க் படத்தை நான் புதிதாக ஒரு விசயம் பற்றி கற்றுக்கொள்ளவும், தெரிந்து கொள்ளவும் முடிந்த வாய்ப்பாக நினைக்கிறேன். ஆண்ட்ரியா ஒரு திரைக்கதை அனுப்பி இதைத் தயாரிக்கிறேன் என்றார், அவர் தயாரிக்கும் அளவு என்ன கதை என்று தான் படித்தேன். அதில் சில மூமெண்ட்ஸ் மிக மிகப் பிடித்திருந்தது. சொக்கலிங்கம் ஒரு படம் தயாரிப்பதாக இருந்தார். நான் ஆண்ட்ரியாவுடன் சேர்ந்து தயாரியுங்கள் என்றேன். அப்படி தான் மாஸ்க் ஆரம்பித்தது. பின்னர் யாரையெல்லாம் இப்படத்தில் நடிக்க வைக்கலாம் என ஆரம்பித்து கவினை அழைத்தோம். ஸ்டார் படத்திற்கு முன்பே அவரை இப்படத்தில் நடிக்கக் கேட்டோம். விகர்னன் எந்த ஒரு சூழ்நிலையையும் சமாளித்து எளிதாகக் கையாள்வார். அது எனக்குப் பிடித்திருந்தது. சொக்கு தான் ஆர் டி ராஜசேகரை அழைக்கலாம் என்றார். அவர் கிளைமாக்ஸுல் செய்த லைட்டிங் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ஜீவி இப்படத்தில் செய்ய இசை மிக மிகக் கச்சிதமாக இருக்கிறது, மிக அற்புதமாக இருக்கிறது. விகர்னன் இப்படத்தில் பேப்பரில் இருந்ததை மிக அற்புதமாகத் திரைக்குக் கொண்டு வந்துள்ளார். கலை இயக்கம் அருமையாகச் செய்துள்ளார் ஐயப்பன். ராமர் மனதில் பட்டதை அப்படியே பேசக்கூடியவர். அவர் கடைசி சில நாட்களில் அவர் எடிட் செய்த விசயம் மிக நன்றாக இருந்தது. நடிகர்கள் எல்லோர் நடிப்பும் ஸ்பெஷலாக இருந்தது. பவன் டான்ஸ் அருமையாக இருந்தது. நெல்சன் இதில் வாய்ஸ் ஓவர் செய்துள்ளார். சமீபத்தில் நான் சினிமாவில் பார்த்ததில் நிஜமான மனிதர், மனதில் பட்டதைப் புண்படாமல் சொல்பவர். மாஸ்க் படம் மூலம் அவரிடம் நிறையப் பேசினேன். கவின் தான் அதற்குக் காரணம். கவின் அவருக்குத் தம்பி மாதிரி. அவர் அறிவுரை இப்படத்தில் இருக்கிறது. சொக்கலிங்கம் நான் அஸிஸ்டெண்ட்டாக இருக்கும் போது அவர் அஸிஸ்டெண்ட் மேனேஜர். மிகவும் அர்ப்பணிப்பான உழைப்பாளி. அவர் தயாரிப்பாளராக மாறியிருப்பது மகிழ்ச்சி. ஆண்ட்ரியா இப்படத்தை ஏன் தயாரிக்கிறீர்கள் இது நெகடிவ் பாத்திரம், இந்தக்கதை ஏன் என்றேன். இது செய்தால் இது மாதிரி ரோல் தான் வரும் என்றேன். இப்போதும் யாரும் என்னைக் கூப்பிடவில்லை இந்தக்கதை எனக்குப் பிடித்திருக்கிறது. நான் செய்கிறேன் என்றார். இருவரும் ஜெயிக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன் வாழ்த்துக்கள். படத்தில் எல்லா கலைஞர்களும் மிகச் சிறப்பாக பணியாற்றியிருக்கிறார்கள். எம் ஆர் ராதா ஒரு ரிபெல், அவர் நிறைய விசயங்களைப் பேசியிருக்கிறார். அவர் இந்தப்படத்திற்குள் வந்தது மிக மகிழ்ச்சி. ராதாரவி சாரிடம் அனுமதி கேட்டேன், அவர் நன்றாகக் காட்டுவீர்கள் என்றால் ஓகே என்றார் நன்றி. எம் ஆர் ராதா பேசிய விசயம் தான் இப்படத்தின் ஆன்மாவாக இருக்கிறது. குரலற்றவர்களின் குரல் தான் இந்தப்படம். எல்லோருக்கும் நன்றி என்றார்.
டாக்டர் ஜெயந்தி லால் காடா ( பென் ஸ்டூடியோஸ் ) வழங்க, தவல் காடா தயாரிப்பில் உருவான கும்கி-2 படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. பிரபு சாலமன் இயக்கியிருக்கும் இப்படத்தில் அறிமுக நாயகன் மதி, ஸ்ரீதா ராவ், ஆண்ட்ரூஸ், அர்ஜுன் தாஸ், […]
சினிமாடாக்டர் ஜெயந்தி லால் காடா ( பென் ஸ்டூடியோஸ் ) வழங்க, தவல் காடா தயாரிப்பில் உருவான கும்கி-2 படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. பிரபு சாலமன் இயக்கியிருக்கும் இப்படத்தில் அறிமுக நாயகன் மதி, ஸ்ரீதா ராவ், ஆண்ட்ரூஸ், அர்ஜுன் தாஸ், ஆகாஷ், ஸ்ரீநாத், ஹரிஷ் பெரடி மற்றும் இயக்குனர் திருச்செல்வம் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்திருக்கிறார். சுகுமார் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இந்த விழாவில் கலந்து கொண்ட சிறப்பு விருந்தினர்கள் மற்றும் படக்குழுவினர்கள் பேசியதாவது.

நடிகை ஸ்ரீதா ராவ் பேசும்போது,
என்னுடைய கனவு நனவானதில் மகிழ்ச்சி. இயக்குனர் பிரபு சாலமனிடம் பணியாற்றியதில் மிகவும் மகிழ்ச்சி. காட்டில் படப் பிடிப்பு நடத்தும் போது வெளிச்சம் இருக்காது. கைபேசியில் நெட்வொர்க் இருக்காது. இதுபோன்ற பல பிரச்னைகளுக்கு இடையில் படத்தில் பணியாற்றியிருக்கிறோம். நாயகன் மதி மிகவும் உறுதுணையாக இருந்தார். சுகுமாரின் ஒளிப்பதிவைப் பார்க்கும்போது அழகான கனவு போல இருக்கும். லிங்குசாமி, போஸ் மற்றும் அனைவருக்கும் நன்றி என்றார்.

இயக்குனர் நிதிலன் பேசும்போது,
இயக்குனர் பிரபு சாலமன் மிகவும் யதார்த்தமான, நேர்மையான மனிதர். அவர் மனதில் பட்டதை தயங்காமல் வெளிப்படையாக கூறி விடுவார். ஒரு தொலைக்காட்சி விவாதத்தில், ஓடாத நல்ல படம் வேண்டாம், ஓடுகின்ற மோசமான படம் வேண்டாம், ஓடுகின்ற நல்ல படம் வேண்டும் என்று பேசினார். அது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. நாளைய இயக்குனர் நிகழ்ச்சியில் நீதிபதிகளில் ஒருவராக இருந்தார். அப்போது குறை நிறைகளை அழகாக எடுத்துக் கூறுவார். குறைகளைக் கூட நேர்மறையாக கூறுவார். நான் இந்த இடத்தில் நிற்பதற்கு பிரபு சாலமன் முக்கிய காரணம். அவருக்கு என்னுடைய நன்றி.
கும்கி தமிழ் சினிமாவில் முக்கியமான படம் என்று எல்லோருக்கும் தெரியும். அதேபோல ஃபேன் பாய் சம்பவம் என்று கூறுவார்கள் அல்லவா? அதுபோல ஃபேன் சம்பவம் என்று ஒன்றை கூறினார். அவர் கூறியதை போல அப்படம் மாபெரும் வெற்றியடைந்தால் இன்னொரு அமைதிப்படை படமாக இருக்கும் என்று நம்புகிறேன். அப்படம் கும்கி-2 படத்திற்கு பிறகு வெளியாகும் என்று நினைக்கிறேன். பைசன் படத்தில் மாஸ் காட்டிய நண்பர் பிரசன்னா, சுகுமார், மதி மற்றும் இப்படத்தில் பணியாற்றிய அசோசியேட் அனைவருக்கும் வாழ்த்துகள். கும்கி -1 படம் வெற்றிபெற்றது போல, அதைவிட பெரிதாக கும்கி-2 வெற்றிபெறும் என்று வாழ்த்துகிறேன் என்றார்.

இயக்குனர் மடோன் அஸ்வின் பேசும்போது, நாளைய இயக்குனர் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட உணர்வு இப்போதும் வருகிறது. ஏனென்றால், நீதிபதியாக இருந்த பிரபு சாலமன் இருக்கிறார். அந்நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய கீகீ-யும் இருக்கிறார். அந்த சீசனில் கலந்து கொண்ட நான், நிதிலன், பாக்கியராஜ் கண்ணன், அஸ்வத் மாரிமத்து போன்ற ஒரு குழுவை வழி நடத்தி இயக்குனர் ஆவதற்கு காரணமாக இருந்தவர் பிரபு சாலமன் தான்.
என்னுடைய குறும்படத்தை பார்த்துவிட்டு எனக்கு ஒரு கதை சொல், நான் தயாரிக்கிறேன் என்றார். நான் வேலையை விட்டுவிட்டு வந்தேன். ஆனால், என்னிடம் இப்போது கதை இல்லை, ஆகவே உங்களிடம் உதவி இயக்குனராக பணிபுரிகிறேன் என்றேன். அவருக்கு பிடித்த கதை சொல்லும் இடம் அவருடைய இன்னோவா கார் தான். தொடரி படம் முதல் இன்னும் வெளியாகாத மேம்போ படம் வரை ஒரு வரி கதை தெரியும். அதில் கும்கி -2 மட்டும் பேசவில்லை. பேசியிருந்தால் இந்த கதையையும் நான் படித்திருப்பேன்.
கும்கி-1 படத்தை திரையரங்கில் பார்த்து மகிழ்ந்தது போல இப்படத்தையும் திரையரங்கிற்கு சென்று மக்கள் கொண்டாடுவதை பார்க்க ஆவலாக உள்ளேன். என்னுடைய மண்டேலா மற்றும் மாவீரன் படங்களில் இருக்கும் குறை நிறைகளை கூறிய லிங்குசாமிக்கு நன்றி இப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றியடைய வாழ்த்துகள் என்றார்.
இயக்குனர் பிருந்தா சாரதி பேசும்போது, லிங்குசாமி படத்திற்கு தொடர்ந்து நான் தான் வசனம் எழுதி வருகிறேன். நன்றாக எழுதுவேன் என்பதற்காக மட்டுமல்ல, அவருடைய நண்பன் என்ற காரணத்தினால் எனக்கு வாய்ப்பு கொடுத்து வருகிறார்.
அவரது குடும்பத்தில் இருந்து மதி இரண்டாவது தலைமுறையாக சுலபமாக சினிமாவிற்கு வந்தாலும் வெற்றிபெறுவது எளிதல்ல என்பதை கொரோனா சொல்லியிருக்கிறது. மதி இதுபோல நல்ல கதைகளைக் கேட்டு நிறைய படங்கள் நடித்து வெற்றிபெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.
ஒரு காட்டில் பறவைகள், விலங்குகள், அணில் போன்றவை எங்கிருக்கும். காட்டில் ஒரு மழைத்துளி விழுந்தால் எப்படி இருக்கும் என்பது முதற்கொண்டு காட்டைப் பற்றி நுணுக்கமாக அறிந்து வைத்து அழகாக காட்டியிருக்கிறார் சுகுமார். வீரப்பனை விட பிரபு சாலமன் நன்றாக காட்டை அறிந்து வைத்திருக்கிறார். சமீபத்தில் நான் அதிகமாக கேட்ட பாடல் தீக்கொளுத்தி. இப்பாடலும், பைசன் படமும் நிவாஸ் கே பிரசன்னாவிற்கு மிகப்பெரிய கதவு திறந்திருக்கிறது. இந்த சமயத்தில் கும்கி-2 வருவது இன்னமும் சிறப்பு. நிவாஸ் கே பிரசன்னாவிற்கு வாழ்த்துகள்.
மனிதர்களை விட விலங்குகளுக்கு உணர்வும், அறிவும் அதிகம். இப்படம் ஒரு சிறுவனுக்கும், யானைக்கும் இடையேயான பந்தத்தை சிறப்பாக காட்டியிருக்கிறார் பிரபு சாலமன் என்றார்.

இயக்குனர் சரண் பேசும்போது,
இப்படம் தயாரிப்பில் இருக்கும்போது லிங்குசாமி அலுவலகத்தில் பார்த்தேன். படம் முழுவதும் காடாகவே இருக்கிறதே என்று நினைத்தேன். பிறகு தான் ஜெயந்தி லால் காடா காரணம் என்று தெரிந்தது. நான் கதாநாயகன் மதி சார்பாக இங்கு நிற்கிறேன். ஒவ்வொரு நாயகனும் வளரும் நேரத்தில் கிடைக்கும் வாய்ப்பு, அவர்கள் ஆர்வத்திற்கு தீனி போடும் இயக்குனர், எந்த தடையும் சொல்ல தயங்காத தயாரிப்பாளர் என்று இவ்வளவும் கிடைப்பது சாதாரணமான விஷயம் கிடையாது. இவை அனைத்தும் மதிக்கு கிடைத்திருக்கிறது.
பிரபு சாலமன் படத்தில் உணர்வுபூர்வமாக இருக்கும். அவர் கைப்பட்டவர்கள் அனைவரும் நீண்ட தூர பயணத்திற்கு செல்வார்கள் என்பதற்கு பல உதாரணங்கள் இருக்கின்றது. அது போல மதியும் செல்வார் என்பதில் சந்தேகமில்லை. 10 வருடமாக மறைந்திருந்து இசையமைத்துக் கொண்டிருந்த நிவாஸ் கே பிரசன்னா இன்று பாடுகிறார். நீண்ட வருடத்திற்குப் பிறகு நல்ல இசையை பைசன் படத்தில் தான் கேட்டேன். அதேபோல், மண்டேலா படத்தைப் பார்த்து வியந்தேன். பல இளம் இயக்குனர்கள் இங்கு வந்து இந்த விழாவை ஆரம்பித்து வைத்தது மகிழ்ச்சியாக இருக்கிறது. கும்கி-1 படத்தை என்னுடைய படத்தின் படப்பிடிப்பில் திருநெல்வேலியில் இருந்தேன். திரையரங்கில் சென்று பார்க்கும் போது நீர்வீழ்ச்சி காட்சியில், சூப்பர் ஸ்டார் படத்திற்கு போடுவது போல திரையை சுற்றி லைட் போட்டு இப்பாடலை படமாக்கியவர் சுகுமார் என்று பெயர் போட்டார்கள். திரையரங்கில் அனைவரும் கொண்டாடினார்கள். யானை இருக்கும் படம் என்றும் தோற்காது. இப்படம் நிச்சயம் வெற்றியடையும் என்றார்.

நடிகர் மதி பேசும்போது, இது என்னுடைய முதல் மேடை. இந்த படத்தில் என்னை நாயகனாக அறிமுகப்படுத்திய ஜெயந்தி லால் காடா சாருக்கு நன்றி. பிரபு சாலமன் படத்தின் நாயகனாக, அவருடைய பூமியாக நடிக்க வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றி. அவர் கூறியதை கேட்டு நன்றாக நடித்திருக்கிறேன் என்று நினைக்கிறேன். இங்கு வந்திருக்கும் இயக்குனர் அஸ்வின், நிதிலன், பிருந்தா சாரதி, சரண், ஜெகன், விஜய் பாலாஜி, என் நண்பன் உன்னி அனைவருக்கும் நன்றி. என்னை இப்படத்திற்கு அழைத்து வந்தது லிங்குசாமி தான். சினிமாத் துறைக்கு என்னை அழைத்து வந்தது லிங்குசாமி மற்றும் போஸ் தான்.
சினிமாத்துறைக்கு வருவதற்கு முன்பே நிவாஸ் கே பிரசன்னாவின் இசையை கேட்டிருக்கிறேன். அவருடைய இசையில் இப்படம் அமைந்திருக்கிறது. பொத்தி பொத்தி பாடலை கேட்ட அனைவரும் நன்றாக இருக்கிறது என்றார்கள். பைசன் படம் போல இப்படமும் வெற்றியடையும் என்று நம்புகிறேன். எனக்கு எப்போதும் உறுதுணையாக இருக்கும் சரண்யாவிற்கு மிக்க நன்றி என்றார்.

இசையமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னா பேசும்போது, என்னை கதாநாயகன் என்று கூறுகிறார்கள். ஆனால், இசையில் நான் ஆன்மாவோடு கலந்து இன்னும் ஆழமாக செல்ல வேண்டும் என்று நினைக்கிறேன். இதெல்லாம் நடப்பதற்கு ஆரம்ப புள்ளியாக இருந்தது பிரபு சாலமன் தான். 2020 கொரோனா காலத்தில் சென்னையில் சாலையில் யாரும் இருக்க மாட்டார்கள். காலையிலேயே வீட்டிலிருந்து சாப்பாடு எடுத்துக் கொண்டு போய் விடுவோம். ஒரு நாளைக்கு 2 வேளை தான் சாப்பாடு. ஒவ்வொரு காட்சியாக ஒவ்வொரு நாளும் எடுத்துக் கொண்டே இருப்போம்.
இப்படம் எனக்கு மிகவும் சிறப்பு வாய்ந்தது. இதற்கு முன் வந்த கும்கி-யில் இமான் கூட்டணியில் மிகப்பெரிய பெயர் வாங்கிக் கொடுத்தது. அந்த படத்தில் இருந்து தான் இப்படத்திற்கான ஆன்மாவை எடுத்துக் கொண்டேன். ஆனால், என்னுடைய தனித்தன்மையை வெளிப்படுத்த வாய்ப்பு கொடுக்கப்பட்டதற்கு நன்றி. நாயகன் மதி நேரத்தை மிகச் சரியாக கையாள்வதில் ஒழுக்கத்தை பார்த்தேன். 7 மணி என்றால், 7.01 மணிக்கோ, 6.59 மணிக்கோ வரமாட்டார். சரியாக 7 மணிக்கு தான் வருவார். இந்த வாய்ப்பு கிடைத்தது மிகப் பெரிய சக்தியாக நினைக்கிறேன் என்றார்.

தயாரிப்பாளர் டாக்டர் ஜெயந்திலால் காடா பேசும்போது, கும்கி-2 பட தலைப்பை பென் ஸ்டூடியோஸ்-க்கு கொடுத்ததற்காக லிங்குசாமி சாருக்கும் போஸ் சாருக்கும் நன்றி. இந்த சிறிய படத்திற்கு மிகப்பெரிய ஆதரவு கொடுத்து இங்கு வந்திருக்கும் மிகப்பெரிய இயக்குனர்கள் அனைவருக்கும் நன்றி. கும்கி-2 படத்தை பார்த்தேன். எனக்கு பிடித்திருக்கிறது. காட்டில் படப்பிடிப்பு நடத்துவது மிகவும் சிரமம். ஆனால், அனைவரும் கடுமையாக உழைத்திருக்கிறார்கள். குறிப்பாக மதி மிகவும் போராடி நடித்திருக்கிறார். அவர் தமிழ் சினிமாவின் ஹ்ரித்திக் ரோஷன்.
இசைக்கு மொழி கிடையாது. கும்கி முதல் படத்தில் இசை நன்றாக இருந்தது. அதுபோல, கும்கி-2 படத்தில் நிவாஸ் கே பிரசன்னாவின் இசை மிக நன்றாக இருக்கிறது என்றார்.

இயக்குனர் பிரபு சாலமன் பேசும்போது, என்னுடைய நண்பர்கள், அனைத்து தயாரிப்பாளர்கள், குடும்ப உறவினர்கள் என என்னை வாழ்த்த வந்திருக்கும் அனைவருக்கும் நன்றிகள். இப்படத்திற்காக நாங்கள் கடந்து வந்த பாதைகள், பட்ட பாடுகள் சொல்லி முடியாது. இதற்காக என்னுடன் உழைத்த என்னுடைய தொழில்நுட்ப கலைஞர்கள் எடிட்டர் புவன், கலை இயக்குனர் தென்னரசு, நான் நினைப்பதை எடுத்துக் கொடுக்கும் ஒளிப்பதிவாளர் சுகுமார் கடின உழைப்பைக் கொடுத்திருக்கிறார்கள். மதி, ஆன்ட்ரோ, ஷ்ரதா, அர்ஜுன் தாஸ் மற்றும் நிறைய நடிகர்கள் பங்கெடுத்திருக்கிறார். இது சாதாரண விஷயமல்ல. நெல்லையம்புதி என்ற இடத்தில் படப்பிடிப்பிற்காக காட்டிற்குள் ஜீப்பில் செல்ல 4 முதல் 5 மணி நேரங்கள் ஆகும். முதன்முதலில் லோகேஷன் பார்க்க போகும்போது உடலில் உள்ள உள்உறுப்புகள் அனைத்தும் குலுங்கி போனது.
அந்த இடத்தில் மின்சாரம் இல்லாமல், மொபைல் நெட்வொர்க் இல்லாமல் தான் படப்பிடிப்பு நடத்தினோம். பழைய பிரிட்டிஷ் விருந்தினர் வீடு. ஒரு டார்மென்ட்ரிகுள்ள குளிரில் முழு படக்குழுவினரும் மிகவும் சிரமப்பட்டார்கள். அங்கிருக்கும் உன்னி கடித்து பலருக்கும் தோல் பிரச்னை வந்து அவஸ்தைப்பட்டார்கள். இப்படம் நீளமான பயணம். 2018-ல் தொடங்கி, 2019-ல் முடித்துவிட்டு டிசம்பரில் போட்டு காட்டினோம். ஆனால் 2020-2021ல் ஊரடங்கு. கொரோனா வந்து அனைத்தையும் புரட்டி போட்டுவிட்டது. ஆனால், இதற்கெல்லாம் மிகவும் உறுதுணையாக இருந்தது லிங்குசாமி மற்றும் ஜெயந்திலால் காடா தான். முதல் ரீல் ஹார்ட் டிஸ்க் பெங்களுருவில் இருக்கும். அடுத்த ரீல் எந்த இன்ஜினியரிடம் இருக்கிறது என்று தெரியாது. அதன் பிறகு 2023ஆம் ஆண்டு இப்படத்திற்கான் அடுத்தகட்ட வேலைகளை தொடங்கினோம். எனக்கு எப்போதும் வேலை கச்சிதமாக இருக்க வேண்டும். அதற்காக நான் நிறைய சண்டைபோட வேண்டியிருந்தது.
தயாரிப்பாளருக்கு எவ்வளவு நன்றி கூறினாலும் போதாது. இத்தனை ஆண்டுகாலம் நீண்ட பொறுமை காத்துள்ளார். என்னுடைய பிள்ளைகளான அஸ்வின், நிதிலன், இயக்குனர் பிருந்தா சாரதி, ஜெகன், சரண் ஆகியோர் இங்கு என்னை வாழ்த்த வந்திருக்கிறீர்கள், நன்றி. அதேபோல், பாரதி கண்ணன், இயக்குனர் திருச்செல்வம், ஆகாஷ் வந்திருக்கிறார்கள். மேலும், இப்படத்தில் பணியாற்றிய இருவர் கொரோனா காலத்தில் இறந்துவிட்டார்கள்.
டைட்டானிக் படத்தை இயக்கிய ஜேம்ஸ் கேமரூன் 11 ஆஸ்காரை கையில் வைத்துக் கொண்டு இதையெல்லாம் இசையமைப்பாளருக்கு அளிக்கிறேன் என்றார். ஏனென்றால், இந்த கப்பலை நான் கட்டினேன், ஆனால் அவர் தான் உயிர் கொடுத்தார் என்றார். அதுபோல, அனைவரும் தங்களால் இயன்ற அளவிற்கு உழைப்பைக் கொடுத்திருக்கிறார்கள். ஆனால், நிவாஸ் கே பிரசன்னாவிற்கு ஆன்மாவை கொடுத்திருக்கிறார்.
படம் பார்க்கும் போது பல இடங்களில் அவருடைய இசை கதையை மீண்டும் எழுதியிருப்பது தெரியும். நிவாஸ் கே பிரசன்னாவை நான் மிகவும் தொந்தரவு செய்திருக்கிறேன். அவர் துயரத்தை நான் பார்த்திருக்கிறேன். இருப்பினும், படம் நன்றாக வருவதற்காகத்தான் என்று அவரும் புரிந்துகொண்டார். இது அவர் ஜொலிப்பதற்கான நேரம் என்றார்.

இயக்குனர் லிங்குசாமி பேசும்போது, காடா எங்களுக்கு காட் மாதிரி தான். அவருக்கு தமிழ் தெரியாது, எனக்கு ஹிந்தி தெரியாது. ஆனாலும், நாங்கள் 2 முதல் 3 மணி நேரம் பேசிக்கொண்டிருப்போம். ஆனால், சினிமாவிற்கு மொழி கிடையாது என்பதை நான் உணர்ந்தேன். காடா இல்லையென்றால் ரஜினி முருகன் படம் வெளியாகி இருக்காது. பையா இந்தி படத்திற்காக சந்திக்கும் போது, 14 கோடி ரூபாய் கொடுத்தார். ஒரு வருடத்திற்கு ஹிந்தியில் 189 படங்கள் வெளியிட கூடிய மாபெரும் தயாரிப்பாளர் காடா அவர்கள். கும்கி-1 படத்தின் விழாவிற்கு ரஜினி மற்றும் கமல் வந்து வாழ்த்தினார்கள். ஆனால், அவர்களுடைய படங்களை ஹிந்தியில் வெளியிட கூடியவர் ஜெயந்திலால் காடா சார். அவர் மதியை அறிமுகப்படுத்தியிக்கிறார். ஹிருத்திக் ரோஷன் என்று மதியை ஆசிர்வாதம் செய்திருக்கிறார்.
இப்படம் மிகவும் காலதாமதமாகியிருக்கலாம். ஆனால், காடா படத்தைப் பார்த்துவிட்டு பிரபு சாலமனை சிறந்த இயக்குனர் என்று பாராட்டினார். கும்கி-1 படம் திருவண்ணாமலையில் எப்படி ஓடிக் கொண்டிருக்கிறது என்று பார்ப்பதற்காக போய் இருந்தேன். எங்கள் திரையரங்கில் இதற்கு முன் உலகம் சுற்றும் வாலிபன், திரிசூலம், ஒரு தலை ராகம், 16 வயதினிலே, முரட்டுக் காளை இதுபோன்ற படங்களுக்குத்தான் இதுபோன்ற கூட்டம் வந்தது. அந்த பட்டியல் கும்கி படமும் இடம்பெற்றிருக்கிறது என்று கூறினார்கள். கும்கி-1 படத்தின் பாடல்களை விட கும்கி-2வில் இருக்குமா என்று தெரியாது. ஆனால், நிவாஸ் கே பிரசன்னாவின் முந்தைய படம் போல இப்படத்தில் இருந்துவிட்டாலே போதும். சினிமாவின் ஒட்டுமொத்த வெளிச்சமும் நிவாஸ் கே பிரசன்னா மீது தான் இருக்கிறது.
நிதிலன் இயக்கிய மகாராஜா படம் என்னுடைய 10 சிறந்த படங்களில் ஒன்றாக இருக்கும். கும்கி-2 நிச்சயம் மாபெரும் வெற்றியடையும் என்றார்.
அண்ணா புரொடக்ஷன்ஸ் சார்பில் வி. சுகந்தி அண்ணாதுரை தயாரிப்பில், இயக்குநர் ஏ.எஸ். முகுந்தன் இயக்கத்தில், ஆனந்த் ராஜ், பிக்பாஸ் சம்யுக்தா இணைந்து நடிக்க, கலக்கலான கமர்ஷியல் படமாக உருவாகியுள்ள படம் ‘மெட்ராஸ் மாஃபியா கம்பெனி’. விரைவில் திரைக்கு வரவுள்ள நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு […]
சினிமாஅண்ணா புரொடக்ஷன்ஸ் சார்பில் வி. சுகந்தி அண்ணாதுரை தயாரிப்பில், இயக்குநர் ஏ.எஸ். முகுந்தன் இயக்கத்தில், ஆனந்த் ராஜ், பிக்பாஸ் சம்யுக்தா இணைந்து நடிக்க, கலக்கலான கமர்ஷியல் படமாக உருவாகியுள்ள படம் ‘மெட்ராஸ் மாஃபியா கம்பெனி’. விரைவில் திரைக்கு வரவுள்ள நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா, படக்குழுவினருடன் திரையுலக பிரபலங்கள் கலந்துகொள்ள, கோலாகலமாக நடைபெற்றது.

இந்நிகழ்வினில், அண்ணா புரொடக்ஷன்ஸ் சார்பில் அண்ணாதுரை பேசியதாவது.., இந்தப் படத்தை அழகாக உருவாக்கித் தந்த இயக்குநர் ஏ.எஸ்.முகுந்தன், இப்படத்திற்கு வலுவான இசையைத் தந்த ஶ்ரீகாந்த் தேவா, இப்படத்தில் அருமையாக நடித்துத் தந்த ஆனந்த் ராஜ், சம்யுக்தா ஆகியோருக்கு நன்றி. திரைத்துறையில் வருடத்திற்கு வெளியாகும் 240 படங்களில் 5 சதவீத படங்கள் தான் வெற்றி பெறுகிறது. ஆனாலும் வருடத்திற்கு வருடம் புதிய தயாரிப்பாளர்கள் எண்ணிக்கை கூடிக்கொண்டே போகிறது. திரைப்படம் மீது இருக்கும் மோகம் தான் இதற்குக் காரணம். நாம் தினசரி செய்தித்தாளில் படிக்கும் ஒரு விசயத்தை, அது நிஜத்தில் நடந்திருந்தால் என்னவாகும் என்பது தான் இப்படம். கண்டிப்பாக மக்கள் ரசிக்கும் படமாக இருக்கும் என்றார்.

நடிகை ஆராதியா பேசியதாவது.., நான் திரையில் நன்றாக நடிக்க என்னோட டீமின் உழைப்பு தான் காரணம். என் இயக்குநர் தொழில் நுட்ப கலைஞர்கள் எல்லோருக்கும் நன்றி. ஶ்ரீகாந்த தேவாவின் இசையில் எனக்கு நாளாவது படம். ஆனந்த்ராஜ் சாரை சின்ன வயதிலிருந்து பார்த்து ரசித்துள்ளேன், அவருடன் நடித்தது மகிழ்ச்சி. சம்யுக்தா மேடமுடன் நடித்தது மகிழ்ச்சி. எனக்கு ஆங்கிலோ இண்டியன் கேரக்டர், ஆனால் ஒரு தமிழ்பெண்ணான என்னை நடிக்க வைத்த இயக்குநருக்கு நன்றி. மாரி செல்வராஜ் இண்டர்வியூவில் டெடிக்கேடிவாக இருந்ததால் நடிகைகளை மலையாளம் எனப் பார்க்காமல் நடிக்க வைத்தேன் என சொல்லியிருந்தார். நாங்களும் டெடிக்கேடிவாக தான் நடிக்கிறோம். தமிழிலும் நல்ல நடிகைகள் இருக்கிறோம் அவரது பார்வைக்குச் செல்லவில்லை என நினைக்கிறேன் என்றார்.

நடிகை தீபா பேசியதாவது.., நானும் சின்ன பிள்ளையிலிருந்து ஆனந்த்ராஜ் சாரை பார்த்து வருகிறேன். அவருக்கு மனைவியாக நடித்துள்ளேன். படத்தில் தான் வில்லன், நிஜத்தில் அவர் குழந்தை. இந்தப்படம் மிகச் சிறந்த அனுபவமாக இருந்தது. எனக்கு வாய்ப்பு தந்த இயக்குநருக்கும் தயாரிப்பாளருக்கும் நன்றி. மண், பெண், பொன் மூன்றைத் தேடித் தான் மனிதன் அலைகிறான். மனிதன் தேடித் தேடி அலைந்து வாழ்வை தொலைக்கிறான் அதைத்தான் இந்தப்படத்தில் சொல்லியுள்ளார்கள். இப்படத்தில் நான் ஒரு மனைவி இன்னொரு மனைவி வந்தால் என்னாகும் என்பதை நகைச்சுவையாகச் சொல்லியுள்ளார்கள் என்றார்.

நடிகை ஷகீலா பேசியதாவது..,
இப்படத்தில் மிக அழகான ஒரு கேரக்டர் செய்துள்ளேன். இயக்குநர் முகுந்தன் அவர்களுக்கு நன்றி. தோழி விஷ்ணுபிரியா தான் இந்த வாய்ப்பை வாங்கித் தந்தார். எனக்கு மேடை மேல் பேச பயம், ஆனால் ஆராதியா வேற லெவலில் பேசினார். என்னையும் எல்லோரும் சின்ன வயதிலிருந்து பார்த்து ரசிப்பதாகச் சொல்வார்கள், அதைப்பற்றிக் கவலைப்பட வேண்டாம் ஆனந்த்ராஜ் அண்ணா, நமக்கு எப்போதும் சின்ன வயசு தான். இந்தப்படம் கண்டிப்பாக மக்களுக்குப் பிடிக்கும் என்றார்.

நடிகை சம்யுக்தா பேசியதாவது..,
தயாரிப்பாளர் அண்ணாதுரை அதிகம் பேசி இன்று தான் கேட்டேன். அவர் மிக அமைதியான மனிதர். மிக நல்ல குணம் கொண்டவர், அவர் மனதுக்கு இப்படம் ஜெயிக்க வேண்டும். முகுந்தன் இப்படத்தை முழுக்க முழுக்க தன் தோளில் தாங்கியுள்ளார். ஆராதியா சொன்னது உண்மைதான். இன்று திரை வாய்ப்பு கிடைப்பது அவ்வளவு பிரச்சனையாக உள்ளது. கலர், மொழி, மட்டுமல்ல, திருமணம் ஆகியிருந்தால் நடிக்கக் கூப்பிடமாட்டார்கள். இது மாற வேண்டும். ஆனந்த்ராஜ் சாருடன் நடித்தது மகிழ்ச்சி. அவர் மிக ஜாலியானவர். எங்கள் எல்லோரையும் எப்போதும் சந்தோசமாக வைத்துக்கொள்வார். ஷகீலா மேடம் வேற லெவல் காமெடி செய்துள்ளார். ஶ்ரீகாந்த் தேவா நல்ல இசையைத் தந்துள்ளார். படம் நன்றாக வந்துள்ளது என்றார்.

இசையமைப்பாளர் ஶ்ரீகாந்த் தேவா பேசியதாவது.., ஒரு படத்தின் பாடல்கள் ஹிட்டாக முக்கிய காரணம் வரிகள் தான் பாடலாசிரியர் கு கார்த்திக் அவர்களுக்கு என் நன்றிகள். படத்தில் இரண்டு பாடல்தான், ஒரு இடத்தில் இன்னொரு பாடல் வைக்கலாம் எனத் தோன்றியது முகுந்தன் பட்ஜெட் இடிக்கும் என்றார், நான் செய்து தருகிறேன் என்று செய்துள்ளேன். முகுந்தன் முதல் படத்திலேயே எல்லா கமர்ஷியல் அம்சங்களுடன் படத்தை அழகாக இயக்கியுள்ளார். ஆனந்த்ராஜ் மிக நன்றாகச் செய்துள்ளார் அவருக்கு நானும் ரசிகன். இந்தப்படத்தில் அப்பா ஒரு பாடல் பாடியுள்ளார். முதல் படம் எடுக்கும் அண்ணாதுரை, நீங்கள் தொடர்ந்து படமெடுப்பீர்கள் வாழ்த்துக்கள் என்றார்.

இயக்குநர் பேரரசு பேசியதாவது..,
நான் கைக்குழந்தையாக இருக்கும் போது அம்மா என்னை அழைத்துப் போன படம் ஆனந்த்ராஜ் படம் தான். அவர் படங்கள் பார்த்துத் தான் வளர்ந்தேன். ஶ்ரீகாந்த் தேவா பாடல்களில் அசத்திவிடுவார். மெலடி பாடல் கேட்டால் மட்டும் எனக்கு போட்டு தர மாட்டார். சிவகாசி படத்தில் ஒரு அழகான மெலடி பாடல் தந்தார் ஆனால் அதைப் படத்தில் வைக்கவில்லை. நான் படத்தில் வைக்கமாட்டேன் என மெலடி போட்டுத்தர மாட்டார். ஆராதியா தீயாக பேசினார். எந்த பயமும் இல்லாமல் பேசினார். தமிழில் உங்களுக்கு நல்ல வாய்ப்புகள் வரும். ஆனந்த்ராஜ் சாரை அப்போதெல்லாம் பார்த்தால் பயமாக இருக்கும் அவர் ஹீயுமர் செய்ய ஆரம்பித்த பிறகு, இப்போது பார்க்கும் போது புன்னகை வருகிறது. இந்தப்பட வெற்றிக்குப்பிறகு மதுரை மாஃபியா கம்பெனி, கோவை மாஃபியா கம்பெனி எனத் தொடர்ந்து நடிக்க வாழ்த்துக்கள். படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் என்றார்.

இயக்குநர் ஆர் வி உதயகுமார் பேசியதாவது.., நான் சின்ன வயதில் முதல் படம் செய்த போது, என்னுடைய அஸிஸ்டெண்ட் ஒருவரைக் கூட்டி வந்து நடிக்க வைத்தார். உரிமை கீதம் ஆனந்த்ராஜுக்கு முதல் படம் அது தான். அதில் இருவரும் கலக்கினோம். திரைப்பட கல்லூரியில் படித்தவர் ஆனந்த்ராஜ், அங்கிருந்து நடிக்க வந்தவர்கள் யாரும் சோடை போனதில்லை. ரஜினி, ரகுவரன் என எல்லோருமே பெரிய அளவில் கலக்கியுள்ளார்கள். தலைவாசல் விஜய், அருண் பாண்டியன் அந்த வரிசையில் ஆனந்த்ராஜ், இன்றும் நடித்துக்கொண்டுள்ளார். இந்த மாஃபியா கம்பெனி மிகப்பெரிய வெற்றி பெறட்டும். தயாரிப்பாளரை எல்லோரும் பாராட்டுகிறார்கள். நடிகை ஆராதியா நன்றாகப் பேசினார். நன்றாக நடித்தால் நம் இயக்குநர்கள் கண்டிப்பாக வாய்ப்பு தந்துவிடுவார்கள். இக்காலத்தில் நல்ல படங்கள் மக்களிடம் போய் சேருவது பெரிய பிரச்சனையாக இருக்கிறது. சம்யுக்தா படத்தில் சிறப்பாக நடித்துள்ளார். இப்படத்தில் பணியாற்றியுள்ள அனைத்து கலைஞர்களுக்கும் வாழ்த்துக்கள். இப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக என் வாழ்த்துக்கள் என்றார்.

நடிகர் ஆனந்த்ராஜ் பேசியதாவது.., எனக்குக் கிடைத்த எல்லா இயக்குநர்களும் நல்ல இயக்குநர்கள் தான், அவர்களால் தான் நான் இந்த அளவு வளர்ந்துள்ளேன். நானும் ஆர் கே செல்வமணி எல்லாம் ஒன்றாகப் படித்தவர்கள். அப்போது என்னை யாருக்கும் பிடிக்காது, அப்போதே ரௌடித்தனம் பண்ண ஆரம்பித்தது தான் காரணம். ஆர் கே செல்வமணி, ஆர் வி உதயகுமாரிடம் பல மலரும் நினைவுகள் உள்ளது. எனக்கு வாய்ப்பு தந்த இருவருக்கும் நன்றி. அண்ணாதுரை அவர்கள் முதலில் அணுகி, இந்தக்கதை சொல்ல வந்த போது, நான் வேண்டாம் என்று சொல்லி விட்டேன். மீண்டும் மீண்டும் கேட்டதால் கதை கேட்க ஒத்துக்கொண்டேன். அது தான் இன்று மெட்ராஸ் மாஃபியா கம்பெனி. எனக்கு சம்பளம் தந்துவிடுவீர்கள், டெக்னீஷின்களுக்கும் சரியாகத் தந்துவிடுவீர்களா? எனக்கேட்டேன், அதைச் சரியாகச் செய்துவிட்டார். மிக நல்ல மனது கொண்ட தயாரிப்பாளர். அவருக்கு என் மனமார்ந்த நன்றிகள். என்னுடன் இணைந்து பணியாற்றிய மனைவியாக நடித்த தீபா, சம்யுக்தா, ஆராதியா, என எல்லோருமே மிகச்சிறப்பாகச் செய்துள்ளனர். டெக்னீஷியன்கள் எல்லோருக்கும் நன்றி. ஶ்ரீகாந்த் தேவாவின் தாத்தாவோடு வேலை செய்துள்ளேன். அவரை சின்ன வயதிலிருந்து பார்த்து வருகிறேன். நல்ல திறமைசாலி என்னால் பயந்து நடிக்கவும் முடியும், பயமுறுத்தவும் முடியும். அந்த திறமை உள்ளது. குழந்தையாக இருந்து பார்க்கிறோம் என எல்லோரும் சொல்வது பெருமையாக உள்ளது. பணம் மட்டும் முக்கியமில்லை, பணம் இருந்தால் மகிழ்ச்சியாக இருக்கலாம், பணம் நிறைய வந்துவிட்டால் அது முக்கியமாகிவிடும் மகிழ்ச்சி போய்விடும். நான் நானாக வந்தவன் தான். என்னைப் பல பேர் முதுகில் குத்தியுள்ளார்கள், அதையெல்லாம் தாண்டித்தான் வந்துள்ளேன். மெட்ராஸ் மாஃபியா கம்பெனி குறித்த நேரத்தில் முடிக்கக் காரணம் இயக்குநர் தான். அவருக்கு நன்றி. கதைக்கு நாயகனாக நடித்துள்ளேன் என்றார்.

இயக்குநர் ஏ எஸ் முகுந்தன் பேசியதாவது.., மெட்ராஸ் மாஃபியா கம்பெனி எனது முதல் படம். என் தயாரிபபாளர் அண்ணாதுரை ஒரு வழக்கறிஞர், ஆனால் சினிமாவை காதலிப்பவர். இந்தப்படம் இந்த அளவு சிறப்பாக முடியக் காரணம் அவர் தான். சம்பளத்தை அன்றைக்குக் கொடுத்துவிடுவார். அவர் நல்ல மனதுக்குப் படம் வெற்றி பெற வேண்டும். அவர் காசோடு மட்டுமில்லை கதையோடு வந்தார். அவர் சொன்ன லைன் நன்றாக இருந்தது. 6 மாதத்தில் படத்தை முடித்துவிட்டோம். இந்தக்கதைக்கு ஆனந்த்ராஜ் சார் நன்றாக இருப்பார் என்றேன், உடனே ஓகே சொல்லி அவரை அணுகினோம், முதலில் மறுத்தவர் கதை கேட்டு வந்தார். அவரால் என்ன வேண்டுமானாலும் நடிக்க முடியும். அற்புதமாக நடிப்பார். சம்யுக்தா போலீஸ் கதாபாத்திரத்திற்குச் சரியாக இருக்கும் என்று அணுகினோம் சிறப்பாகச் செய்துள்ளார். தீபா, ஆராதியா நன்றாக நடித்துள்ளார்கள். ஶ்ரீகாந்த் தேவா சம்பளமே வாங்காமல் ஒரு பாடல் செய்து தந்தார். நன்றி. குறித்த நேரத்தில் முடிக்கக் காரணமான கேமராமேன் அசோக்ராஜ் அவர்களுக்கு நன்றி. இந்த படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் நன்றி என்றார்.
ஸ்ரீ லட்சுமி ட்ரீம் ஃபேக்டரி நிறுவனம் சார்பில் டாக்டர் ஆர். பிரபாகர் ஸ்தபதி தயாரிப்பில், இயக்குநர் எஸ்.ஜே.என். அலெக்ஸ் பாண்டியன் இயக்கத்தில் கௌஷிக் ஸ்ரீ ராம், பிரதீபா நடிப்பில் மிஸ்டர் டெல்டா கிரியேசன்ஸ் வழங்கும் ‘கிறிஸ்டினா கதிர்வேலன்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு […]
சினிமாஸ்ரீ லட்சுமி ட்ரீம் ஃபேக்டரி நிறுவனம் சார்பில் டாக்டர் ஆர். பிரபாகர் ஸ்தபதி தயாரிப்பில், இயக்குநர் எஸ்.ஜே.என். அலெக்ஸ் பாண்டியன் இயக்கத்தில் கௌஷிக் ஸ்ரீ ராம், பிரதீபா நடிப்பில் மிஸ்டர் டெல்டா கிரியேசன்ஸ் வழங்கும் ‘கிறிஸ்டினா கதிர்வேலன்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் இயக்குநர்கள் எஸ்.ஆர். பிரபாகரன், விஜய் ஸ்ரீ, மைக்கேல் கே. ராஜா, ‘பிக்பாஸ்’ பிரபலங்கள் விஷ்ணு, சிபி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
அறிமுக இயக்குநர் எஸ்.ஜே.என். அலெக்ஸ் பாண்டியன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கிறிஸ்டினா கதிர்வேலன்’ திரைப்படத்தில் கௌஷிக் ராம், பிரதீபா, சிங்கம் புலி, கஞ்சா கருப்பு, ஜெயக்குமார், அருள் டி. சங்கர், டி எஸ் ஆர், ‘சில்மிஷம்’ சிவா, ஜனனி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பிரஹத் முனியசாமி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு என். ஆர். ரகுநந்தன் இசையமைத்திருக்கிறார். நவம்பர் 7ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்ட இயக்குநர்கள் எஸ். ஆர். பிரபாகரன், விஜய் ஸ்ரீ, மைக்கேல் கே. ராஜா ஆகியோர் படத்தின் இசையை வெளியிட, படக் குழுவினர் பெற்றுக் கொண்டனர்.
இந்நிகழ்வில் தயாரிப்பாளர் டாக்டர் ஆர். பிரபாகர் ஸ்தபதி பேசுகையில், இப்படத்தில் பணியாற்றிய கலைஞர்கள் புதியவர்கள் என்பதால் அனுபவம் புதிதாக இருந்தது. தரமான படைப்பை உருவாக்கி இருக்கிறார்கள். அனைவரும் திரையரங்கத்திற்கு வருகை தந்து ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

இணை தயாரிப்பாளர் கார்த்திக் வீரப்பன் பேசுகையில், தமிழ் திரை உலகில் சமீபகாலமாக கிராமிய பின்னணியிலான காதல் கதைகள் வெளியாவது குறைவாக இருந்தது. அந்த குறையை கிறிஸ்டினா கதிர்வேலன் போக்கும் என நம்புகிறோம். இந்தப் படத்தின் கதை நம் வீட்டில் இயல்பாக நடக்கும் சம்பவங்களைப் போல் இருக்கும். ஆனால் வலி நிறைந்த யதார்த்தமானதாக இருக்கும். இதனை அடுத்த தலைமுறையினருக்கு எப்படி சொல்லப்பட வேண்டும் என்பதை இயக்குநர் அழகாக சொல்லி இருக்கிறார். இந்த திரைப்படத்தை அனைவரும் திரையரங்கத்திற்கு வருகை தந்து பார்த்து ரசிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என்றார்.
ஒளிப்பதிவாளர் பிரஹத் முனியசாமி பேசுகையில், இயக்குநர் அலெக்ஸ் பாண்டியன் இயக்கத்தில் வெளியான குறும்படம் ஒன்றில் ஆறாண்டுகளுக்கு முன் பணியாற்றினேன். அதற்காக அவரிடம் இருந்து முதல்முறையாக 1500 ரூபாயை சம்பளமாக பெற்றுக் கொண்டேன். அப்போது நான் படம் இயக்கினால் நீங்கள்தான் ஒளிப்பதிவாளர் என வாக்குறுதி அளித்தார். அதன் பிறகு இரண்டு ஆண்டு காலம் கழித்து அவருடன் பயணித்து ஏராளமான லொகேஷன்களை பார்வையிட்டோம். மூன்று ஆண்டுகள் வரை இந்த பணி தொடர்ந்தது. அங்கு சென்று இந்தந்த காட்சிகளை இந்த இடங்களில் படப்பிடிப்பு நடத்தலாம் என விவாதித்தோம். படப்பிடிப்பில் சந்தோஷமாக பணியாற்றினோம். உச்சகட்ட காட்சியை படமாக்கும் போது எங்களுக்கும் எமோஷனலாக இருந்தது. படம் சிறப்பாக வந்திருப்பதாக நம்புகிறோம். இந்தப் படத்திற்காக இசையமைப்பாளர் ரகுநந்தன் அற்புதமாக பணியாற்றியிருக்கிறார் என்றார்.
இயக்குநர் மைக்கேல் கே. ராஜா பேசுகையில், சின்ன சின்ன படங்களை இயக்கி தான் எண்பது சதவீதத்திற்கும் அதிகமான இயக்குநர்கள் இங்கு வெற்றி பெற்று இருக்கிறார்கள். படத்தின் பாடல் காட்சிகள், முன்னோட்டத்தை பார்த்தவரை அனைத்து நடிகர்களும், நடிகைகளும் இயல்பாக நடித்திருக்கிறார்கள். படத்தின் நாயகனான கௌஷிக் ராம் நேரில் பார்க்கும்போது ஸ்மார்ட் ஆக இருக்கிறார். இவர் எப்படி அந்த கதாபாத்திரத்தில் நடித்திருக்க முடியும் என்று தோன்றியது. ஆனால் திரையில் அவர் அற்புதமாக நடித்திருக்கிறார். அவருக்கும் சிறந்த எதிர்காலம் இருக்கிறது. வாழ்த்துக்கள். நாயகி பிரதீபாவும் நன்றாக நடித்திருக்கிறார். அவருக்கும் என் வாழ்த்துக்கள். படத்தின் இயக்குநரின் பெயர் அலெக்ஸ் பாண்டியன். அந்த பெயரிலேயே கம்பீரம் இருக்கிறது. படமும் அதே அளவு இருக்கும் என்று நம்புகிறோம். பாடல்கள் அனைத்தும் நன்றாக இருக்கின்றன. அதிலும் உருமி.. பாடல் நல்லதொரு அதிர்வை ஏற்படுத்தியது. படம் வெற்றி பெற படத்தில் பணியாற்றிய படக் குழுவினர் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள் என்றார்.

இயக்குநர் விஜய் ஸ்ரீ பேசுகையில், கிறிஸ்டினா கதிர்வேலன் படத்தின் பணிகள் தொடங்கிய தருணத்திலிருந்து எனக்கு எல்லா விஷயங்களும் தெரியும். காரணம் இயக்குநர் அலெக்ஸ் பாண்டியன் என்னுடைய உதவியாளர். ‘பவுடர்’ படத்தில் அவர் என்னுடன் பணியாற்றும்போது தான் ஒளிப்பதிவாளர் பிரஹத் முனியசாமி அறிமுகமானார். அவர் நான் இயக்கிய ‘ஹரா’ படத்திற்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றினார். படத்திற்கு ஹீரோவாக ஒரு புதுமுகம் வேண்டும் என்று தேடிய போது ‘ஹரா’ படத்தில் சிறிய வேடத்தில் நடித்திருந்த கௌஷிக் ராம் தேர்வானார்.
படத்தை உருவாக்கும் போது நிறைய சவால்கள் இருக்கும். அதனை இயக்குநர் அலெக்ஸ் எதிர்கொண்டார். இதற்கு அவரது பெயரில் இருக்கும் பாண்டியன் என்ற ஒரு நண்பர் உதவி புரிந்தார். அவர் தான் அலெக்ஸை இந்த மேடையில் அமர வைத்திருக்கிறார். அதனால் அலெக்ஸ் பாண்டியன் இருவரையும் வெற்றி பெற மனதார வாழ்த்துகிறேன் என்றார்.
‘பிக்பாஸ்’ பிரபலம் நடிகர் சிபி பேசுகையில், இந்தப் படத்தின் பாடல்களையும், முன்னோட்டத்தையும் பார்க்கும்போது இயக்குநர் பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் வெளியான ‘காதல்’ படத்தை பார்க்கும் போது ஏற்பட்ட உணர்வு உண்டாகிறது. ஏனென்று தெரியவில்லை, அந்தப் படத்தை பார்க்கும் போதும் இதே போன்றதொரு ஃபீல் இருந்தது. இந்தப் படத்திற்கு இசை மிகப் பெரிய பலம். ரகுநந்தன் அற்புதமாக பாடல்களை வழங்கி இருக்கிறார். பின்னணி இசையும் நன்றாக வழங்கி இருப்பார். காதல் திரைப்படம் எப்படி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதோ, அதேபோல் இந்த திரைப்படமும் பெரிய வெற்றி பெற வேண்டும் என வாழ்த்துகிறேன் என்றார்.

நடிகர் விஷ்ணு பேசுகையில், இந்தப் படத்தை சின்னப் படம் என்று சொன்னார்கள். இந்த கதையை இயக்குநர் எத்தனையோ தயாரிப்பாளரிடம் சொல்லி, அவர்களால் நிராகரிக்கப்பட்டு இறுதியாக இந்த தயாரிப்பாளர் தயாரிக்க ஒப்புக் கொண்டிருப்பார். அதனால் முதலில் தயாரிப்பாளருக்கு தான் நன்றி தெரிவிக்க வேண்டும். அந்த வகையில் இயக்குநருக்கு தயாரிப்பாளர் வாய்ப்பை வழங்கியிருக்கிறார். இந்த படம் நன்றாக இருக்கிறது. திரையரங்கில் நன்றாக ஓடக்கூடும் என்றும் தெரிகிறது. படக்குழுவினர் அனைவரும் உற்சாகத்துடன் உள்ளனர். படத்தின் நாயகியான பிரதிபாவின் ரீல்ஸ்களை பார்த்திருக்கிறேன். அதில் அவர்கள் எனர்ஜியுடன் நடனம் ஆடியிருப்பார்கள். அவர் ராப்பும் பாடியிருப்பார். மிகுந்த திறமைசாலி. அவர் திரைப்படத்தில் நடிகையாக நடிப்பார் என்று எதிர்பார்த்து இருந்தேன். அது இன்று நடந்தேறி இருக்கிறது. அவருக்கும் என் வாழ்த்துக்கள்.
கதையின் நாயகனான கௌஷிக் ராமிக்கும் என் வாழ்த்துக்கள். நன்றாக நடித்திருக்கிறார். ஹீரோ வெள்ளையாக இருக்கிறாரே, இவர் எப்படி இந்த கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் என்று என்னிடம் கேட்டனர். இதே விமர்சனத்தை நானும் எதிர்கொண்டேன். வெள்ளையாக பிறந்தது எங்களுடைய தப்பா? அதே தருணத்தில் சிலர் பார்த்தவுடன் ஸ்மார்ட்டாக இருக்கிறாய் என்றும் சொல்வார்கள். வெள்ளையாக இருப்பதில் எந்த தவறும் இல்லை. ஆனால் அவர் ஏற்றிருக்கும் கதாபாத்திரத்திற்கு அவர் எவ்வளவு தூரம் நியாயம் சேர்க்கும் வகையில் நடித்திருக்கிறார் என்பதை மட்டும் பார்த்து ரசிக்க வேண்டும்.

இசையமைப்பாளர் ரகுநந்தன் அளவற்ற நகைச்சுவை உணர்வு கொண்டவர். அவருடன் பழகியவர்களுக்கு இது தெரியும். அவருடைய ‘ட்ரேட்மார்க்’ சிரிப்பு தனித்துவமானது. அவர் இயக்குநர்களுக்கு பிரியமான இசையமைப்பாளர். இயக்குநர்கள் எதை கேட்கிறார்களோ, அதை தரக்கூடிய திறமை மிக்கவர். இந்த திரைப்படத்திற்கு அதிக திரையரங்குகளும், காட்சிகளும் கிடைக்க வேண்டும் என இறைவனை பிரார்த்தித்துக் கொள்கிறேன் என்றார்.
இசையமைப்பாளர் ரகுநந்தன் பேசுகையில், என்னிடம் இசையமைப்பதற்காக வரும் படங்கள் அனைத்தும் படப்பிடிப்பு நிறைவு செய்த பிறகு தான் வருகின்றன. கிறிஸ்டினா கதிர்வேலன் படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்த பிறகு தான் படத்தை காண்பித்தார்கள். படத்தில் நிறைய வேரியேஷன்ஸ் இருந்தது. ஒரு கிராமத்தில் தொடங்கி, கல்லூரியில் பயணித்து, அதன் பிறகு வேறு ஒரு ஜோடி திரைக்கதையில் அறிமுகம் ஆகிறார்கள். இப்படி இருந்ததால் இதற்கு பின்னணி இசை தாமதமாகும் என இயக்குநரிடம் தெரிவித்திருந்தேன். இயக்குநரோ முதலில் பாடலை உருவாக்கி விடலாம் என்றார். நிறைய மாண்டேஜ் காட்சிகளை படமாக்கி இருந்தார். அதை வைத்து காதல் பாட்டை முதலில் உருவாக்கினோம். அந்த வகையில் ‘செல்லாட்டி..’ என்ற பாடலை உருவாக்கினோம். அந்தப் பாடலுக்காக ஒரே ஒரு டியூன் மட்டும் தான் அமைத்தேன். இயக்குநர் அதைக் கேட்டு விட்டு ஓகே சொன்னார். அவர் பாடல்கள் அனைத்தும் எனர்ஜிட்டிக்காக இருக்க வேண்டும். எங்கும் போர் அடிக்கக் கூடாது என்ற அவரது விருப்பத்தை தெரிவித்தார். அதே போல் எல்லா பாடல்களையும் ஒரே ஒரு டியூனில் ஓகே சொன்னார். இப்படத்திற்கான பின்னணி இசை எனக்கு சவாலாக இருந்தது. ‘தென்மேற்கு பருவக்காற்று ‘ படத்தைப் போலவே இதிலும் சவாலாக பணியாற்றினேன். அதிலும் குறிப்பாக உச்சகட்ட காட்சியில் இயக்குநரின் மெனக்கடல் வியக்க வைத்தது. இதை நீங்கள் படம் பார்க்கும்போது உணர்வீர்கள். இந்த படத்தின் ஒலி அமைப்பு தொடர்பாக நான் கூறிய பல ஆலோசனைகளை இயக்குநர் ஏற்றுக்கொண்டார். இந்த படம் நிறைய விஷயங்களை பேசுகிறது. இளைய தலைமுறையினருக்கு நல்ல விஷயங்களை கற்றுக் கொடுக்கிறது. இந்தப் படத்தில் மிகப்பெரிய அளவில் கருணை இருக்கிறது. ‘அயோத்தி’ படத்தைப் பற்றி இதே மேடையில் தான் சிலாகித்து பாராட்டினேன். நான் படத்தை பார்க்கும் போது நடிகர்கள் எங்கேயும் செயற்கையாக நடித்திருக்கிறார்களா என்பதைத்தான் உன்னிப்பாக கவனிப்பேன். இந்தப் படத்தில் நடிகர், நடிகைகள் அனைவரும் மிக இயல்பாக நடித்திருந்தார்கள். அதனால் அவர்களுக்கும் என் வாழ்த்துக்கள் என்றார்.

நடிகை பிரதீபா பேசுகையில், கிறிஸ்டினா கதாபாத்திரத்திற்காக என்னை தேர்வு செய்து வாய்ப்பளித்ததற்காக இயக்குநருக்கு நன்றி. ‘நீர்ப்பறவை படத்திலிருந்து நான் இசையமைப்பாளர் ரகுநந்தனின் ரசிகை. அவருடன் இந்த படத்தில் இணைந்து பணியாற்றியது பெருமிதமாக இருக்கிறது.
கிராமிய பின்னணியிலான கல்லூரி காதல் கதையாக உருவாகி இருக்கிறது. இந்தப் படம் ‘பருத்திவீரன்’, ‘மைனா’ படங்கள் ஏற்படுத்திய பாதிப்பை போல் ரசிகர்களுக்கு ஒரு பாதிப்பை ஏற்படுத்தும். படத்தில் இயக்குநர் ஒரு கருத்தை முன் வைத்திருக்கிறார். அதாவது இந்த படம் பார்க்கிற அனைத்து ஆண்களுக்கும் ஒரு கேள்வியாக அந்தக் கருத்து தோன்றும். அதற்குரிய விடை என்ன என்பது உங்களுக்கு மட்டும் தான் தெரியும் என்றார்.
நடிகர் கௌஷிக் ராம் பேசுகையில், இந்த படத்தில் நடிப்பதற்காக வாய்ப்பளித்த இயக்குநருக்கும் அதற்கு காரணமாக இருந்த நிகில் முருகனுக்கும் நன்றி. இந்தப் படத்தில் பணியாற்றிய அனுபவம் சுவாரசியமானதாக இருந்தது. கும்பகோணத்தில் தங்கி அங்குள்ள மக்களுடன் பழகி இப்படத்தில் நடித்தேன். எனக்கு சொந்த ஊர் மயிலாடுதுறை தான். ஆனால் கும்பகோணத்திற்கு பயணித்ததில்லை. அங்குள்ள மக்களின் பாசமும், அன்பும் என்னை வியக்க வைத்தது.
இந்த படத்தில் லேயர் லேயராக பணியாற்றி இருக்கிறோம். இது கிராமத்து காதல் கதை. அதிலும் ஒன் சைட் லவ் ஸ்டோரி. ஒரு காதலன் தன் காதலை சொல்வதற்கு எப்படி தவிக்கிறான், எப்படி அதனை தனக்குள்ளேயே வைத்துக் கொள்கிறான். இதனை இந்த படத்தில் இயக்குநர் காட்சிப்படுத்தியிருக்கிறார். அத்துடன் சமூகத்திற்கு தேவையான பல விஷயங்களையும் இயக்குநர் சொல்லி இருக்கிறார். அதனால் இந்தப் படம் அனைவருக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன்.
இந்தப் படத்தில் எந்த சினிமா பின்புலமும் இல்லாத புதிய இளம் திறமைசாலிகள் பணியாற்றியிருக்கிறார்கள். இதை நான் மிகப்பெரிய விஷயமாக பார்க்கிறேன். 2019ம் ஆண்டிலிருந்து நான் வாய்ப்புகளை தேடிக் கொண்டிருக்கிறேன். இந்தப் படத்தின் மூலம் பல விஷயங்களை கற்றுக் கொண்டிருக்கிறேன் என்றார்.

இயக்குநர் S J N அலெக்ஸ் பாண்டியன் பேசுகையில், கிறிஸ்டினா கதிர்வேலன் என்ற பெயர் வைத்து விட்டு படத்தின் பணிகள் தொடங்கி இதுவரையிலான பயணம் என்பது விமானத்தின் மேற்கூரை பகுதியில் அமர்ந்து பயணிப்பது போன்றதொரு பயணமாக எனக்கு இருந்தது. இரண்டு ஆண்டு காலம் இதற்காக உழைத்திருக்கிறோம். இத்தனைக்கும் தயாரிப்பாளர்கள் தங்கமானவர்கள்.
தயாரிப்பாளர் பிரபாகர் ஸ்தபதி உலக புகழ்பெற்ற ஸ்தபதி. அவருக்கும் இந்த துறைக்கும் தொடர்பே இல்லை. அவரை இத்துறைக்கு அழைத்து வந்திருக்கிறோம். ஒவ்வொரு முறை அவர்களின் வீட்டிற்கு செல்லும் போது அவர்களின் விருந்தோம்பல் பண்பு எங்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தும். அவர்கள் எங்களை கொண்டாடுவார்கள்.
தயாரிப்பாளர் என்னிடம் பணத்தை கொடுத்து விட்டு என்ன ஏது என்று கூட கேட்க மாட்டார். அதேபோல் இணை தயாரிப்பாளர் கார்த்திக் வீரப்பனும் பிரச்சனை என்று அவரிடம் செல்லும்போது எல்லாம் அவரும் பணம் கொடுத்து உதவினார். இருந்தாலும் இந்த திரைப்படத்தை உருவாக்கி இந்த நிலைக்கு எடுத்து வருவதற்கு எனக்கு இரண்டு ஆண்டுகள் ஆனது. ஏனெனில் தமிழ் சினிமா அத்தகைய நிலையில் தான் இன்று இருக்கிறது.
புதுமுகமாக இருக்கும் கௌஷிக் ராமை தேர்வு செய்தேன். அவரும் எங்களுக்கு எல்லா வகையிலும் முழு ஒத்துழைப்பை வழங்கினார்.
பிரதீபா அவர்களிடம் கதையை சொன்ன போது கதை அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. ஏராளமான கேள்விகளை கேட்டார். அத்துடன் சம்பளம் எனக்கு முக்கியமில்லை. கதை நன்றாக இருக்கிறது நடிக்கிறேன் என ஒப்புக்கொண்டார். அவரிடம் ஏராளமான திறமைகள் கொட்டி கிடக்கிறது. அவரும் எதிர்காலத்தில் மிகப்பெரும் கதாநாயகியாக வருவார்கள். அவருக்கும் என் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஒளிப்பதிவாளர் பிரஹத் முனியசாமி நான் பார்க்கும் போது அவருக்கு 15,16 வயது தான் இருக்கும். அப்போதே அவர் 40 குறும்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்திருந்தார். நான் திரைப்பட பயிற்சி நிறுவனத்தில் இயக்குநர் மற்றும் திரைக்கதை எழுதுதல் குறித்த பயிற்சி பெற்றேன். என்னுடைய திட்டமே தாமதமாக இயக்குநராக வேண்டும் என்பதுதான்.
இப்படத்தின் இருபது நிமிட காட்சிகளை செல்போனில் தான் எனது நண்பரும், இப்படத்தின் இணை தயாரிப்பாளருமான கார்த்திக் வீரப்பனிடம் காண்பித்தேன். அதை பார்த்துவிட்டு எமோஷனலாகி இப்படத்திற்கு தற்போது வரை ஆதரவு அளித்துக் கொண்டிருக்கிறார். இந்தப் படத்திற்காக மதுரையில் நடைபெற்ற விளம்பரப்படுத்தும் நிகழ்வை மிக சிறப்பாக நடத்திக் காட்டினார். தொடர்ந்து நேரு கல்லூரியிலும் பிரம்மாண்டமான விளம்பரப்படுத்தும் நிகழ்வை நடத்திக் காட்டினார். அவருடைய உழைப்பு சாதாரணமானது இல்லை. அதற்காக அவருக்கு இந்த தருணத்தில் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
நான் இந்தப் படத்திற்கான திரைக்கதையை எழுதி முடித்தவுடன் நான் எழுதிய முதல் தொழில்நுட்பக் கலைஞரின் பெயர் என். ஆர். ரகுநந்தன். நான் ‘நீர்ப்பறவை’ எனும் படத்தை பார்த்தேன். அந்தப் படத்தின் பின்னணி இசையை பார்த்தவுடன் இவர் தான் என் முதல் படத்திற்கு இசையமைக்க வேண்டும் என்று தீர்மானித்தேன். இந்தப் படத்தில் அவருடைய அற்புதமான திறமையை பார்க்கலாம். அதிலும் 25 நிமிடம் கொண்ட உச்சகட்ட காட்சியில் அவருடைய பின்னணி இசை நிச்சயமாக பேசப்படும். அந்த வகையில் இது சின்ன படம் அல்ல. பெரிய படம்தான். ஒலி அமைப்புக்காக அவர் நிறைய உழைத்திருக்கிறார். அத்துடன் இந்தப் படத்திற்கான வியாபாரத்திலும் அவர் தன்னுடைய பங்களிப்பை வழங்கியிருக்கிறார்.
என்னுடைய குருநாதர் விஜய் ஸ்ரீ. நான் திரைப்பட பயிற்சி நிறுவனத்தில் பயிற்சி பெற்றாலும் கிடைத்த இடைவெளியில் அவரின் அறிமுகம் கிடைத்து அவருடன் பவுடர் படத்தில் உதவியாளராக பணியாற்றினேன். ‘பவுடர்’, ‘ஹரா’ ஆகிய இரண்டு படத்தின் வெளியீட்டின் போதும் அவருடன் இருந்தேன். அதனால் படத்தை வெளியிடுவதற்கான திரையரங்க ஒருங்கிணைப்பு விசயத்தைப் பற்றிய வழிமுறையை தெரிந்து கொண்டேன். அதனால் இந்த திரைப்படம் தமிழகத்தில் அதிக அளவில் நல்லபடியான திரையரங்குகளில் வெளியாகிறது. அத்துடன் கேரளாவில் 20 திரையரங்குகளில் வெளியாகிறது. கர்நாடகாவிலும் இப்படத்தை வெளியிடுவதற்கான பேச்சு வார்த்தைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதற்கான வாய்ப்புகளை என் ஆர் ரகுநந்தன் உருவாக்கி தந்தார். எந்த ஒரு சின்ன படத்திற்கும் இத்தகைய வரவேற்பு இருக்காது. அதனால் இது சின்ன படம் இல்லை பெரிய படம்தான். இந்தப் படத்தில் நடித்த நடிகர்களுக்கும், நடிகைகளுக்கும், தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

இயக்குநர் எஸ். ஆர். பிரபாகரன் பேசுகையில், ”கிறிஸ்டினா கதிர்வேலன் அழகான தலைப்பு. இது நான் இயக்கிய இது கதிர்வேலன் காதல் என்ற படத்தை நினைவு படுத்தியது. இப்படத்தை தயாரித்த தயாரிப்பாளருக்கும், இயக்கிய இயக்குநருக்கும் பணியாற்றிய அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள். தயாரிப்பாளர் ஸ்தபதி என்றார்கள். சிற்பி நல்ல கதையை தான் தேர்ந்தெடுத்து இருப்பார். அதனால் இந்த படம் மிகச்சிறந்த படமாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்.
இசையமைப்பாளர் என் ஆர் ரகுநந்தன் இசையில் வெளியான ‘தென்மேற்கு பருவக்காற்று’, ‘நீர்ப்பறவை’, ‘சுந்தரபாண்டியன்’ ஆகிய படங்களில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் ஆல்பமாக வெற்றி பெற்றவை. சமீபத்தில் ‘அயோத்தி’ படத்தில் கூட ‘காற்று ஒரு பட்டம் போல..’ பாடலை வெற்றி பெற வைத்தார். இந்தப் பாடலை அண்மையில் கேட்டேன். உடனே தொடர்பு கொண்டு ஒரு மணி நேரம் அந்தப் பாடலைப் பற்றி அவருடன் பேசினேன். மிகுந்த இசைஞானம் உள்ளவர்களால் தான் இது போன்ற பாடல்களை உருவாக்க முடியும். அவருக்குள்ள திறமைக்கு அவர் செல்ல வேண்டிய உயரம் இன்னும் அதிகம். இந்தப் படத்தில் இடம்பெற்ற திருவிழா பாடல் சிறப்பாக இருக்கிறது.
இந்தப் படத்தின் தலைப்பை பார்த்தவுடன் ஒரு கிறிஸ்தவ பெண்ணிற்கும், ஒரு இந்து பையனுக்கும் இடையே ஏற்பட்ட காதலாக தோன்றுகிறது. பொதுவாக ஒரு எழுத்தாளர் கதையை எழுதும்போது சமூகம் சார்ந்து சாதி சார்ந்து மதம் சார்ந்து கதை எழுதும்போது சாதாரண கதையை எழுதுவதை விட கூடுதல் பொறுப்புணர்வுடன் எழுத வேண்டி இருக்கும்.
காதலைப் பற்றி எழுதும் தருணத்தில் காதலர்களின் பெற்றோர்களை பற்றி எழுத தவறி விடுவோம். எங்கு கைத்தட்டல்கள் கிடைக்குமோ அதைத்தான் எழுதுவோம். அதே தருணத்தில் சமூகம் சார்ந்து மதம் சார்ந்து சாதி சார்ந்து கதை எழுதும் போது ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்களைப் போல் சமமாக இருக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன். அப்படித்தான் இந்த படத்தின் கதை இருக்கும் என்று நம்புகிறேன். அனைவருக்கும் பிடித்த நியாயமான தீர்வும் இதில் இருந்தால் நிச்சயமாக வெற்றிப்படமாக இருக்கும். இந்த மேடையில் படத்தில் இடம்பெறும் உச்சகட்ட காட்சியை பற்றி பேசும்போது எமோஷனலாக பேசினார்கள். இது படம் பார்க்கும் ரசிகர்களையும் பாதிக்கும் பிடிக்கும் என நம்புகிறேன். இந்த படம் பெரிய வெற்றியை பெற வாழ்த்துக்கள் என்றார்.