கன்னட திரையுலகின் முன்னணி திரைப்பட நிறுவனமான KVN புரொடக்ஷன்ஸ் வெங்கட் கே.நாராயணா தயாரிப்பில், இயக்குநர் பிரேம் இயக்கத்தில், ஆக்சன் பிரின்ஸ் துருவ் சர்ஜா, சஞ்சய் தத், ஷில்பா ஷெட்டி நடிப்பில் பிரம்மாண்ட ஆக்சன் படமாக உருவாகியுள்ள திரைப்படம் கேடி தி டெவில் […]
சினிமா
ராம் ஃபிலிம் ஃபேக்டரி சார்பில், தயாரிப்பாளர் மீனாட்சி ஆனந்த் தயாரிப்பில், இயக்குநர் சிவராஜ் இயக்கத்தில், கலையரசன், பிரியாலயா நடிப்பில், இன்றைய சோஷியல் மீடியா உலகின் முகத்தைக் காட்டும், பரபரப்பான திரில்லராக உருவாகியுள்ள படம் “டிரெண்டிங்”. வரும் ஜூலை 18 ஆம் தேதி […]
சினிமா
பரமு, செல்பிஷ் படங்களை இயக்கிய மாணிக் ஜெய்.N இயக்கத்தில் மூன்றாவதாக உருவாகியுள்ள படம் ‘கைமேரா’. ‘வச்சுக்கவா’ படத்தில் கதாநாயகனாக நடித்த இவர் ‘பரமு’ என்கிற படத்தின் மூலம் இயக்குனராக மாறினார். தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கு ஹிந்தி மொழியில் உருவாகி வரும் […]
சினிமா
தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தேர்தல் வருகிற 30 ஆம் தேதி நடைபெற உள்ளதை அடுத்து, தயாரிப்பாளர்களிடம் வாக்குகள் சேகரிக்கும் பணியில் இரு அணிகளும் ஈடுபட்டு வருகின்றனர். தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தேர்தல் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு சில மாதங்களாக சங்கத்தின் […]
சினிமா தமிழகம்தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தேர்தல் வருகிற 30 ஆம் தேதி நடைபெற உள்ளதை அடுத்து, தயாரிப்பாளர்களிடம் வாக்குகள் சேகரிக்கும் பணியில் இரு அணிகளும் ஈடுபட்டு வருகின்றனர்.
தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தேர்தல் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு சில மாதங்களாக சங்கத்தின் சட்டதிட்டங்களில் மாற்றங்கள் செய்தது சம்பந்தமாக வழக்குகள், வழக்குகளை காரணம் காட்டி பதவிக்காலம் முடிந்தும், இதே நிர்வாகிகள் சங்கத்தை நிர்வகித்து கட்டப்பஞ்சாயத்து செய்வது, நிர்வாகத்தில் பல்வேறு குளறுபடிகள் என சர்ச்சைகள் நிறைந்த சங்கமாக மாறியிருக்கிறது தயாரிப்பாளர்கள் சங்கம்.
இது சம்பந்தமாக விசாரித்தபோது… இந்த தேர்தலில் தற்போது தலைவராக இருக்கும் முரளி தலைமையில் ஒரு அணியும், மன்னன் தலைமையில் ஒரு அணியும், போட்டியிடுகின்றனர். முரளி அணியில் துணைத் தலைவர் பதவிக்கு கல்பாத்தி அர்ச்சனா, லைகா தமிழ்க்குமரன் ஆகிய இருவரும் போட்டியிடுகின்றனர். இதேபோல் மன்னன் தலைமையிலான அணியில் துணைத் தலைவர் பதவிக்கு மைக்கேல் ராயப்பன், விடியல் ராஜ் ஆகிய இருவரும் போட்டியிட்டனர்.
இந்நிலையில் திடீரென மைக்கேல் ராயப்பன் முரளியைச் சந்தித்து அவரது அணியில் துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிடும் இருவரும் வெற்றிபெறுவதற்கு ஆதரவு தெரிவித்ததோடு, தான் தேர்தலில் இருந்து விலகிக் கொள்வதாக தெரிவித்துள்ளார்.
தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தேர்தல் வரலாற்றில் இதுவரை எத்தனை அணிகள் போட்டியிட்டாலும், இறுதிவரை அதே அணியில் தான் தேர்தலைச் சந்திப்பார்களே தவிர இதுபோன்று குதிரை பேரம் பேசி ஆட்களைத் தூக்கியதில்லை என்கிறார்கள்.
தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தற்போதைய தலைவர் முரளி அணியில் துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிடும் இருவரும் கார்பரேட் நிறுவனத்தினர். இவர்கள் ஏன் திடீரென தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தேர்தலில் போட்டியிடுகிறார்கள் என்றால், முரளியும், வி. கிரியேஷன்ஸ் தாணுவும் தற்போது கடனில் தத்தளித்து வருகிறார்களாம். ஆகையால் கார்பரேட் நிறுவனங்களில் பலகோடி கடன் பெறும் நோக்கத்தில் கல்பாத்தி அர்ச்சனா, லைகா தமிழ்க்குமரன் இருவருக்கும் பதவி ஆசையைத் தூண்டி தேர்தலில் போட்டியிடுங்கள், நாங்கள் வெற்றிபெற வைக்கிறோம் என வாக்குறுதி அளித்து அழைத்து வந்தார்களாம்.
ஆனால் இருவரது எண்ணத்திற்கு மாறாக மன்னன் அணியில் மைக்கேல் ராயப்பன், விடியல் ராஜ் ஆகிய இருவரும் பலமான வேட்பாளர்களாக பேசப்பட்டதால் ஒருவார காலமாக முரளி மிகவும் மோசமான மன உளைச்சலுக்கு ஆளாகினாராம். அப்போது தாணு முரளியை சமாதானம் செய்து மன்னன் அணியில் துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிடும் மைக்கேல் ராயப்பனை தேர்தலில் இருந்து விலகிக் கொள்ள குதிரை பேரம் பேசுமாறு ஆலோசனை வழங்கினாராம். அதன்படி இயக்குனர் லிங்குசாமியின் சகோதரர் சந்திரபோஸை மைக்கேல் ராயப்பனிடம் பேரம்பேசி அழைத்து வருமாறு நியமித்திருக்கிறார்கள்.
மைக்கேல் ராயப்பனை வாபஸ் வாங்க வைப்பதற்காக கார்பரேட் நிறுவனத்தினரிடம் சில கோடிகளைப் பெற்றுக்கொண்டு மைக்கேல் ராயப்பனுக்கு சில கோடியை மட்டும் கொடுத்துவிட்டு மீதியை தாணுவும், முரளியும் பங்கு போட்டுக் கொண்டதாக தயாரிப்பாளர்கள் தரப்பில் கூறுகிறார்கள். அரசியலில் சுயலாபத்துக்காக அணி மாறிய மைக்கேல் ராயப்பன் சங்கத்தில் அணிமாறியது ஒன்றும் புதிதல்ல எனவும் பேசி வருகிறார்கள்.
தமிழ் சினிமாவில் நடிகர், நடிகைகளுக்கு அதிக சம்பளம் கொடுத்து அவர்களிடம் தேதியை பெற்று மற்ற தயாரிப்பாளர்களுக்கு சிரமத்தை உருவாக்கி பல தயாரிப்பாளர்களை அழித்தவர்தான் தாணு. இப்போது தயாரிப்பாளர்கள் சங்கத்தை கார்ப்பரேட் நிறுவனங்களிடம் அடகு வைப்பதற்காக முழு முயற்சியுடன் கூட்டணி சேர்ந்துள்ளார் எனவும் பேசிக்கொள்கிறார்கள்.
அதிமுக செயற்குழு கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் முதல்வர் ஜெயக்குமார், அண்ணாமலையை விமர்சித்துப் பேசினார். அதிமுக- பாஜக தலைவர்கள் இடையே மோதல் தொடர்ந்து வரும் நிலையில், இன்று அதிமுக செயற்குழு கூடியது. எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுச்செயலாளராகத் தேர்வான […]
அரசியல் தமிழகம்அதிமுக செயற்குழு கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் முதல்வர் ஜெயக்குமார், அண்ணாமலையை விமர்சித்துப் பேசினார்.
அதிமுக- பாஜக தலைவர்கள் இடையே மோதல் தொடர்ந்து வரும் நிலையில், இன்று அதிமுக செயற்குழு கூடியது. எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுச்செயலாளராகத் தேர்வான பிறகு நடக்கும் முதல் செயற்குழு கூட்டம் இதுவாகும்.
அதிமுக தலைமைக் கழகத்தில் நடந்த இந்த செயற்குழு கூட்டம் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் நடைபெற்றது. இதில் திமுக அரசைக் கண்டித்து உட்பட மொத்தம் 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
ஜெயக்குமார்: அதிமுக செயற்குழு கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், அண்ணாமலையை விமர்சித்துப் பேசியிருந்தார். அண்ணாமலையின் அரசியல் வாழ்க்கை வெறும் 2 ஆண்டுகள் தான் என்றும் அண்ணாமலை அரசியலில் ஒரு கத்துக்குட்டி என்றும் ஜெயக்குமார் தெரிவித்தார்.
எடப்பாடி கூறியதை போல அவர் ஒரு முதிர்ச்சியில்லாத தலைவர் என்றும் அண்ணாமலையைக் கண்டு அச்சப்பட வேண்டிய அவசியம் அதிமுகவுக்கு இல்லை என்றும் அவர் தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், “அண்ணாமலை பாஜக தலைவராக உள்ளார். எடப்பாடி கூறியதை போல அரசியல் முதிர்ச்சி இல்லாமல் அவர் பேசி வருகிறார். எங்க அரசியல் வாழ்க்கையைப் பாருங்கள். நாங்கள் 30, 40 ஆண்டுகள் அரசியலில் இருந்துள்ளோம். ஆனால், அவர் வெறும் இரண்டு ஆண்டுகள் தான் அரசியலில் இருந்துள்ளார்.
அரசியலில் அவர் ஒரு கத்துக்குட்டியை போன்றவர். முதிர்ச்சி இல்லாமல் பேசுபவர் கருத்துக்கு எல்லாம் பதில் சொல்லிக் கொண்டு இருக்க முடியாது.. அதிமுகவும் பாஜகவும் கூட்டணியில் இருக்கிறது. இதன் காரணமாகவே மாநில தலைவர் என்ற முறையில் அவரை பேசி வருகிறோம். வளர்த்தி கிடா மார்பில் பாய்வதை ஏற்றுக் கொள்ள முடியாது. இந்த விவகாரத்தில் நாங்கள் ரொம்பவே தெளிவாக இருக்கிறோம்.
அண்ணாமலை ஏன் பேயா, பிசாசா.. அவரை கண்டு பயப்பட.. நாங்கள் பல அடக்குமுறைகளை நிறைந்த கருணாநிதி ஆட்சிக் காலத்தையே பார்த்தவர்கள். அதிமுகவை எப்படியாவது ஒழித்துக் கட்ட வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு வேலை செய்தார்கள். ஏகப்பட்ட பொய் வழக்குகளைப் போட்டார்கள். ஆனால், அதையெல்லாம் தாண்டி அதிமுக மிகப் பெரிய மக்கள் இயக்கமாக உள்ளது. எனவே, யாரைக் கண்டும் பயப்பட வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை” என்று அவர் தெரிவித்தார்.
எடப்பாடி தாக்கு: அண்ணாமலைக்கும் அதிமுக தலைவர்களுக்கும் இடையே வார்த்தை மோதல் தொடர்ந்து வருகிறது.முன்னதாக நேற்றைய தினம் எடப்பாடி பழனிசாமி, “அண்ணாமலை கற்பனை கேள்விகளுக்கு எல்லாம் பதில் சொல்ல முடியாது. நான் கட்சிக்கு வந்து 30 ஆண்டுகள் ஆகிறது. அவர் சும்மா பேட்டி கொடுத்து பெரிய ஆள் ஆக வேண்டும் என நினைக்கிறார். தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ளவே அவர் இப்படிப் பேசி வருகிறார். முதிர்ந்த அரசியல்வாதி கருத்து குறித்துக் கேட்டால் பதில் சொல்லலாம். அவர் குறித்து எந்தவொரு கேள்வியும் கேட்க வேண்டாம்” என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.