குளோபல் பிக்சர்ஸ் அழகராஜ் ஜெயபாலன் தயாரிப்பில் உருவாகியிருக்கும் பல்ஸ் திரைப்படத்தை நவீன் கணேஷ் இயக்கியிருக்கிறார். மாஸ்டர் மகேந்திரன் நாயகனாக நடித்திருக்கிறார். கூல் சுரேஷ், அர்ச்சனா, KPY சரத் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். அபிஷேக் A R இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் டீஸர் மற்றும் […]
சினிமா
அறிமுக நடிகர் எஸ். கார்த்தீஸ்வரன் கதையின் நாயகனாக நடித்து இயக்கியிருக்கும் ‘நிர்வாகம் பொறுப்பல்ல’ திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியிட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் இயக்குநர் கே. பாக்யராஜ் படத்தின் இசை மற்றும் முன்னோட்டத்தை வெளியிட, விருகம்பாக்கம் சட்டமன்ற […]
சினிமா
IDAA Productions மற்றும் Think Studios சார்பில் இயக்குநர் வினீத் வரபிரசாத் இணைந்து தயாரிக்க, ஹரீஷ் கல்யாண், ப்ரீத்தி முகுந்தன் நடிப்பில், இயக்குநர் வினீத் வரபிரசாத் இயக்கத்தில், வட சென்னையின் பின்னணியில், ராப் இசைக் கலையை மையமாக வைத்து உருவாகி வரும் […]
சினிமா
GEMBRIO PICTURES சார்பில் சுதா சுகுமார் மற்றும் சுகுமார் பாலகிருஷ்ணன் தயாரிப்பில், அர்ஜூன் தாஸ், ஷ்வாத்மிகா ராஜசேகர், நாசர் முதன்மை பாத்திரங்களில் நடிக்க, “சில நேரங்களில் சில மனிதர்கள்” புகழ் விஷால் வெங்கட் இயக்கத்தில், வாழ்வின் வினோதங்களைப் பேசும் கமர்ஷியல் எண்டர்டெய்னர் […]
சினிமாGEMBRIO PICTURES சார்பில் சுதா சுகுமார் மற்றும் சுகுமார் பாலகிருஷ்ணன் தயாரிப்பில், அர்ஜூன் தாஸ், ஷ்வாத்மிகா ராஜசேகர், நாசர் முதன்மை பாத்திரங்களில் நடிக்க, “சில நேரங்களில் சில மனிதர்கள்” புகழ் விஷால் வெங்கட் இயக்கத்தில், வாழ்வின் வினோதங்களைப் பேசும் கமர்ஷியல் எண்டர்டெய்னர் டிரமாவாக உருவாகியுள்ள படம் “பாம்” வரும் செப்டம்பர் 12 ஆம் தேதி திரைக்கு வரவுள்ள இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீடு, படக்குழுவினருடன் திரை பிரபலங்கள் கலந்துகொள்ள கோலாகலமாக நடைபெற்றது.
GEMBRIO PICTURES சார்பில் ஷரைலி பாலகிருஷ்ணன் பேசியதாவது… இது எங்கள் தயாரிப்பு நிறுவனத்தின் முதல் படம். இந்தப்படம் பார்த்தபோது எங்களுக்குப் புரிந்தது. இந்தப்படம் அனைத்து தரப்பினருக்குமானது என்பது தான். ஒரு குறிப்பிட்ட தரப்பே பார்க்க வேண்டிய படம் அல்ல; அனைவரும் ரசிக்கும் படம். கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும். அன்பே சிவம். அன்புதான் நம்மை எல்லோரையும் ஒன்றிணைக்கும். அதை இந்தப்படம் செய்கிறது என்றார்.

GEMBRIO PICTURES சார்பில் சம்விதா பாலகிருஷ்ணன் பேசியதாவது… அன்பைத் தாண்டி இந்தப்படத்தில் எல்லோரையும் இணைக்கும் வேறு ஒரு விஷயமும் உள்ளது. டிரெய்லர் பார்த்தால் புரியும். படத்துக்கு அப்பாற்பட்ட வகையில் இசை மிகச்சிறப்பாக வந்துள்ளது. இமான் இசையில் அனைத்து பாடல்களும் அருமையாக வந்துள்ளன. நாங்கள் படம் பார்த்த போது பெற்ற சந்தோஷத்தை, அனைவரும் உணர்வீர்கள். இந்தப் படத்தை வெளியிடும் சக்திவேலனுக்கு நன்றி என்றார்..
ஒளிப்பதிவாளர் ராஜ்குமார் பேசியதாவது… தயாரிப்பாளர் சுதா மேடமுக்கு நன்றி. விஷாலும் நானும் இன்ஸ்டிடியூட்டில் ஒன்றாக படித்தோம். அங்கிருந்து தொடங்கிய பயணம் இன்று இணைந்து படம் செய்வதற்கு வழிவகுத்தது. இமான் சிறப்பான இசையைத் தந்துள்ளார். படத்தில் உழைத்த அனைத்து கலைஞர்களுக்கும் நன்றி என்றார்.
நடிகர் சரவணன் பேசியதாவது… இயக்குநர் விஷால் வெங்கட்டை, நான் வாய்ப்பு தேடி அலையும் போது, “நரை எழுதும் சுயசரிதம்” பட ப்ரிவ்யூவில் சந்தித்தேன். அவர் இயக்கிய “சில நேரங்களில் சில மனிதர்கள்” மிகச்சிறந்த படம். மிக நல்ல கலைஞர். அவரிடம் ஆசைப்பட்டுக் கேட்டு, கெஞ்சியும் வாங்கி நடித்திருக்கிறேன். மகிழ்ச்சி. அனைவருக்கும் நன்றி.
நடிகர் டி. எஸ். கே பேசியதாவது, போன வருடம் லப்பர் பந்து, இந்த வருடம் பாம். அந்தப் படத்தில் நடித்த பல நண்பர்கள் இதிலும் நடித்துள்ளனர். இது எனக்குக் கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பு. இதற்கு முன் காமெடி தான் செய்து கொண்டிருந்தேன்; ஆனால் என்னை நம்பி விஷால் வெங்கட் ஒரு நல்ல வேடம் தந்தார்.அவரின் சில நேரங்களில் சில மனிதர்கள் படம் பார்த்து அவரிடம் வாய்ப்பு கேட்டேன். இரண்டு வருடம் கழித்து அவரே கால் செய்து இந்த வாய்ப்பை தந்தார், அவருக்கு நன்றி. இமான் ரசிகன் நான்; அவருடைய பாடல்களை மிமிக்ரி செய்து வந்தவன். அவருடைய படத்தில் நடித்தது பெருமை. ஏ, பி, சி ஆடியன்ஸை கவரும் இசையமைப்பாளர் இமான், அவருக்கு நன்றி. மாஸ் ஆக்ஷனாக நடித்த அர்ஜூன் தாஸை, முழுக்க முழுக்க சாஃப்டாக காட்டும் படமாக இது இருக்கும். ஷ்வாத்மிகா ஹீரோயின் மாதிரி நடக்கவே மாட்டார்; மிக இயல்பாகப் பழகுவார். ஒரு ஹேப்பியான உணர்வைத் தரும் சிறப்பான படமாக இது இருக்கும் என்றார்.

Trend Music ஜித்தேஷ் பேசியதாவது… இப்படத்தில் இணைந்து பணியாற்றுவது மகிழ்ச்சி. சுதா மேடம் இந்த படத்தை நம்பி தயாரித்ததற்கு வாழ்த்துக்கள். படம் பார்த்தோம் மிகச் சிறப்பாக இருந்தது. அர்ஜூன் தாஸை வேறு கலரில் காட்டியுள்ளார்கள். இந்தப்படத்தின் இசையில் நாங்கள் பங்கு கொண்டது மகிழ்ச்சி. மணிகண்டன், காளி வெங்கட் எனப் பல திறமையாளர்கள் இப்படத்தில் பங்கேற்றுள்ளார்கள். இமான் அற்புதமான இசையை தந்துள்ளார் என்றார்.
எழுத்தாளர்கள் மணிகண்டன் மாதவன், அபிஷேக் சபரிகிரீசன் பேசியதாவது…
விஷாலுடன் நாங்கள் ஒரு டீக்கடையில் பேசி, பேசி உருவானது தான் இந்தப்படத்தின் கதை. அவர் எல்லோரையும் போல எங்களிடமும் வேலை வாங்கினார். இந்தப்படத்தில் பெரிய கருத்தெல்லாம் பேசாமல், உங்களைச் சிந்திக்க வைக்க சிரிக்க வைக்க முயற்சித்துள்ளோம்.
அன்பென்றால் என்ன என்பதை இப்படம் பேசியுள்ளது. ரைட்டிங்கில் இல்லாத பெரிய விஷயத்தை ஒரு ஷாட்டில் காட்டி தான் இயக்குநர் என்பதை விஷால் வெங்கட் நிரூபித்திருக்கிறார். டிரெய்லர் எல்லோருக்கும் பிடித்திருக்குமென நம்புகிறோம். படத்தில் மிகச் சிறந்த செய்தி இருக்கும். அனைவருக்கும் கண்டிப்பாகப் பிடிக்கும் என்றனர்.

சக்தி ஃபிலிம் பேக்டரி சக்திவேலன் பேசியதாவது… இந்தப்படம் பார்த்து மிகவும் பிடித்திருந்தது. தயாரிப்பாளர் சுகுமார் செய்யாத தொழிலே இல்லை. எல்லாவற்றிலும் ஜெயித்துள்ளார். படத்திலும் ஜெயிக்கலாம் என வந்துள்ளார். அடுத்த மாதத்தில் பெண்களுக்கென ஒரு சாட்டிலைட் சேனல் ஆரம்பிக்கவுள்ளார். அவரிடம் நிறைய புது ஐடியாக்கள் உள்ளது. அவர் போல நிறையப் புதுமுகங்கள் திரைக்கு வரவேண்டும். இந்தப்படத்தில் காளி வெங்கட் அற்புதமாக நடித்துள்ளார். இப்படம் மண்டேலா, முண்டாசுபட்டி படங்கள் போல இனிமையான படமாக இருக்கும். அர்ஜூன் தாஸுக்கு ஒரு புதுமையான படமாக இருக்கும். அவர் இயக்குநர் கேட்டதை அப்படியே தந்துள்ளார். இமான் பாமர மக்களுக்கான எளிய இசையைத் தொடர்ந்து தந்து வரும் இசையமைப்பாளர். அவருடைய தேவை இங்கு நிறைய இருக்கிறது. எல்லோரும் இணைந்து அழகான படத்தைத் தந்துள்ளார்கள். இந்தப்படத்தில் பங்குபெற்றுள்ள அனைவரும் முழு உழைப்பையும் தந்துள்ளார்கள். படம் மிகப்பெரிய வெற்றியைப் பெறும் நன்றி.

இயக்குநர் ரா பார்த்திபன் பேசியதாவது, பாம் படத்தை பற்றி என்ன பேசுவது என நிறைய யோசித்தேன். முதலில் வாயு பகவானை வணங்கித் தொடங்குவோம். இந்த மாதிரி கதையை டைட்டிலை தேர்ந்தெடுக்கனும் என்றால் இயக்குநர் விஷால் வெங்கட் எவ்வளவு பெரிய குசும்பனாக இருக்க வேண்டும், இதைத் தயாரிக்க வேண்டுமென்றால் தயாரிப்பாளர் அதைவிட எவ்வளவு பெரிய குசும்பனாக இருக்க வேண்டும். ஆங்கில படங்களில் தான் இது மாதிரி பார்த்திருப்போம். ஆனால் அதைத் தமிழ் சினிமாவில் காட்டுவது சவாலான விஷயம், அதை இந்தப்படக்குழு சாதித்துள்ளது. சக்தி ஃபிலிம் பேக்டரி சக்திவேலன் எப்போதும் கண்டென்ட் சரியாக இருக்கிறதா என்று பார்ப்பார். இந்த கண்டென்ட் அவருக்கு பிடித்திருக்கிறது. இமான் ஏ பி சி செண்டர் மட்டுமில்லை டி செண்டரையும் கவர்ந்து விடுவார், அதனால் தான் அவர் டி. இமான். தயாரிப்பாளர் சுகுமார் இல்லை சதா தான் – ஆம், சதா. சுதாவைப் பற்றித்தான் பேசிக்கொண்டிருப்பார். அதனால் சுதா இல்லை சதா தான் தயாரிப்பாளர். நான் எப்போதும் ஹீரோயின் பார்த்து தான் படம் செய்ய ஆசைப்படுவேன். ஆனால் அர்ஜூன் தாஸைப் பார்த்தால் ஹீரோவை மையமாக வைத்துப் படமெடுக்கத் தோன்றுகிறது. ஷிவாத்மிகாவை சின்ன வயதிலிருந்து பார்த்து வருகிறேன், நல்ல நடிகை. தயாரிப்பாளருக்கு இந்தப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமையட்டும் வாழ்த்துக்கள்.

நடிகர் காளிவெங்கட் பேசியதாவது, இந்தப்படத்தில் இப்படி ஒரு வாய்ப்பை தந்ததற்கு விஷால் வெங்கட்டுக்கு நன்றி. முதலில் கதை சொன்ன போது அவர் நடிப்பேனா என்ற சந்தேகத்திலேயே இருந்தார். அருமையான கேரக்டர் எனக்குக் கிடைத்தது மகிழ்ச்சி. எத்தனை கோடி சம்பாதித்தாலும் தன் பிணக்கோலத்தைப் பார்க்கும் வாய்ப்பு யாருக்கும் கிடைக்காது. அது மாதிரி நிறைய ஆச்சரியங்கள் இப்படத்தில் கிடைத்தது. அர்ஜூன் தாஸுடன் அநீதிக்கு பிறகு சேர்ந்து நடிக்கிறோம். படத்தில் என்னைத் தூக்கிச் சுமந்து நடித்துள்ளார், அவருக்கு என் நன்றி. சக்தி ஃபிலிம் ரிலீஸ் என்றார்கள், படம் வெற்றி தான். தயாரிப்பாளர்கள் என்னை அமெரிக்கா கூட்டிப்போவதாகச் சொல்லியுள்ளார்கள். மறந்து விடாதீர்கள். இது மிக நல்ல படம். ஆதரவு தாருங்கள் என்றார்.
இயக்குநர் கார்த்திகேயன் மணி பேசுகையில், இந்தப்படத்தின் கதைக்கரு சுவாரஸ்யமானதாக உள்ளது. காளிவெங்கட் மெட்ராஸ் மேட்னி படத்தில் நடிக்கும் போது இந்தப்படம் பற்றிச் சொன்னார். அவர் சின்ன வயதிலேயே எத்தனை விதமான பாத்திரங்கள் செய்துவிட்டார். ஒரு முறை சேவலாக நடித்து காட்டி அசத்தினார். சயின்ஸ் ஃபிக்ஷன் படமெடுத்தால் அவரை ஏலியனாக நடிக்க வைக்கலாம் என்று முடிவு செய்துள்ளேன். இந்தப்படம் மிகப்பெரிய வெற்றி பெற வாழ்த்துக்கள்.
இயக்குநர் சண்முகபிரியன் பேசுகையில், விஷால் வெங்கட் மிக நல்ல மனிதர். எனக்குப் படம் காட்டினார், அட்டகாசமாக இருந்தது. ஷிவாத்மிகா ஃபேன் நான், அருமையாக நடித்துள்ளார். அர்ஜூன் தாஸை எப்படி இந்த கதாபாத்திரத்தில் யோசித்தார் எனத் தெரியவில்லை. அவர் என்ன கொடுத்தாலும் செய்வார் என்பதற்கு இந்தப்படம் சாட்சி. எல்லோரும் மிக அட்டகாசமாக நடித்துள்ளனர். படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

இசையமைப்பாளர் டி. இமான் பேசுகையில், இப்படம் முள்ளு மேல் நடப்பது மாதிரியான ஒரு கதை, ஆனால் அதை மிக கவனமாக அழகாக எடுத்துள்ளார் விஷால் வெங்கட். சில நேரங்களில் சில மனிதர்கள் பார்த்தவுடன் அவருடன் வேலை பார்க்க ஆசைப்பட்டேன். அவருடன் பணிபுரிந்தது மிக மிக சந்தோசமாக இருந்தது. நம் மண்ணின் கதை சொல்லும் இந்த மாதிரி படங்களுக்கு நம் மண்ணின் இசை கொடுக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். இப்படத்தில் முறையான புதுமுக பிளேபேக் சிங்கர்ஸ் பாடியிருக்கிறார்கள். அவர்களுக்கும் என் வாழ்த்துக்கள். அர்ஜூன் தாஸ் தன் பிம்பத்தை உடைத்து புதிதாகச் செய்கிறார். வாழ்த்துக்கள். கண்டிப்பாக இந்தப்படம் எல்லோருக்கும் பிடிக்கும் என்றார்.
இயக்குநர் லோகேஷ் பேசுகையில், அர்ஜூன் தாஸ் அவருடைய இமேஜை உடைத்து இப்படத்தைச் செய்துள்ளார். ஷிவாத்மிகா இப்படத்தில் நேரில் நடிப்பதைப் பார்த்தேன், மிகச் சிறப்பாக நடித்துள்ளார், அவருக்கு வாழ்த்துக்கள். காளி வெங்கட் நிறைய இடத்தில் என் அப்பாவைப் பிரதிபலித்தார், மிகச்சிறந்த நடிகர். வாழ்த்துக்கள். விஷால் வெங்கட்டும் நானும் புரொடக்ஷன் மேட், தயாரிப்பு கம்பெனியில் சந்தித்தோம், நெருங்கிய நண்பர்கள் ஆகிவிட்டோம். விஷால் எந்த பிரச்சனையையும் ரொம்ப கேஷுவலாக எடுத்துக்கொள்வார். நம் வெற்றியை அவர் வெற்றியாகக் கொண்டாடுவார். இப்படி ஒரு கதையைப் படமாக்கும் தைரியம் இவரைத் தவிர யாருக்கும் வராது. கண்டிப்பாக இந்தப்படம் மிகச்சிறப்பான வெற்றியைப் பெறும். அனைவருக்கும் வாழ்த்துக்கள் என்றார்.
இயக்குநர் ஶ்ரீகணேஷ் பேசுகையில், விஷாலின் முதல் படம் எனக்கு ரொம்ப பிடிச்ச படம். அவரை தேடி கால் செய்து பேசினேன். அவரின் இந்தப்படம் வெற்றிப்படமாக இருக்கும் என்பது இங்கு பேசியவர்கள் மனதிலிருந்து தெரிகிறது. அர்ஜூன் தாஸுக்கு இந்தப்படம் அவரை புது டைமென்ஷனில் பார்க்கும் படமாக இருக்கும். டி. இமான் செய்யும் புது விஷயம், இவ்வளவு புதுமுக பாடகர்களுக்கு வாய்ப்பு தருவது மிகப்பெரிய விஷயம். காளி வெங்கட் இந்தியாவில் மிகச்சிறந்த நடிகர்களில் ஒருத்தர். அனைவருக்கும் வாழ்த்துக்கள் என்றார்.
இயக்குநர் சிபி சக்கரவர்த்தி பேசுகையில், விஷால் கதை சொன்ன போது யார் நடிக்கிறார்கள் எனக் கேட்டேன், அர்ஜூன் தாஸ் என்று சொன்னார். எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. ஆனால் படம் பார்த்து அசந்து விட்டேன். வில்லன் நடிகர் இன்னொசன்ஸை செய்வதை இந்தியாவிலேயே சிறப்பாக செய்பவர் ரஜினி. அவருக்கு அப்புறம் அர்ஜூன் தாஸ் தான். காளி வெங்கட் டான் பைலட் ஃபிலிமில் எந்த தயக்கமும் இல்லாமல் நடித்து தந்தார். சினிமாவை உண்மையாக நேசிப்பவர், அவர் திறமைக்கு ஏற்ற கதாப்பாத்திரங்கள் அவருக்குக் கிடைக்கவில்லை. விஷால் வெங்கட்டும் நானும் நெருங்கிய நண்பர்களாகிவிட்டோம். இப்படத்தில் அவர் இயக்குநராக இல்லாமல் எல்லா வேலையும் பார்த்துள்ளார். இந்தப்படம் மிகப்பெரிய விஷயத்தை மிக எளிமையாகப் பேசுகிறது. கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும் என்றார்.

நடிகர் மணிகண்டன் பேசுகையில், இந்தப்படத்தில் வேலை பார்த்த அனைவருமே என் நெருங்கிய நண்பர்கள் தான். கிட்டதட்ட எல்லா துறையில் வேலை பார்த்தவர்களும் என் நண்பர்கள். அவர்கள் எல்லோரும் இப்படத்தில் வேலை பார்த்துள்ளார்கள் என்பது மகிழ்ச்சி. காளி வெங்கட் யார் என்ன உதவி, எந்த சமயத்தில் கேட்டாலும் செய்யத் தயங்காதவர். அவரைப் பற்றி எவ்வளவு சொன்னாலும் பத்தாது. இமான் வெரைட்டியான சாங்ஸ் தரும் வெகு சில இசையமைப்பாளர்களில் ஒருத்தர். அவர் இசையமைத்தது மகிழ்ச்சி. இப்படி ஒரு கதையைத் தயாரித்த தயாரிப்பாளருக்கு நன்றி. அர்ஜூன் தாஸ் அவர் முதல் படத்திலேயே எப்படி அவ்வளவு கான்ஃபிடன்ஸ்-ஆ அந்த கதாப்பாத்திரத்தை செய்தார் என ஆச்சரியமாக இருந்தது. தொடரும் அவர் முயற்சிக்கு வாழ்த்துக்கள். ஷிவாத்மிகா அருமையாக நடித்துள்ளார். விஷால் வெங்கட் 2008 ல் இருந்து பழக்கம். அவன் அனுபவித்த தடைகளை, அனுபவித்த வலிகளை அருகிலிருந்து பார்த்திருக்கிறேன். அவன் எனக்குப் பெரிய இன்ஸ்பிரேஷன். அவன் வெற்றி எனக்கு மிகப்பெரிய பெருமை. இந்தப்படம் கண்டிப்பாகப் பெரிய வெற்றிபெறும் என்றார்.

நடிகை ஷிவாத்மிகா பேசுகையில், எனக்கு வாய்ப்பு தந்த சுகுமார், சுதா இருவருக்கும் நன்றி. இமான் இசைக்கு நான் ரசிகை. அவர் இசையில் நடித்தது மகிழ்ச்சி. காளி வெங்கட் மாதிரியான ஒரு நடிகரோடு நடித்தது பெருமை. படத்தில் உழைத்த அனைவருக்கும் நன்றி. விஷால் பல தடங்கல்களைத் தாண்டி இந்தப்படம் செய்துள்ளார். எங்களை விட அவருக்காக இப்படம் பெரிய வெற்றி பெறும். என்னை இந்த கதாபாத்திரத்திற்காக நம்பியதற்கு நன்றி. அர்ஜூன் தாஸ் நல்ல நண்பராகக் கிடைத்துள்ளார். அவருடன் நடித்ததும் மகிழ்ச்சி என்றார்.

இயக்குநர் விஷால் வெங்கட் பேசுகையில், GEMBRIO PICTURES சுதா சுகுமார் மற்றும் சுகுமார் பாலகிருஷ்ணன் இருவருக்கும் பெரிய நன்றி. ஒரு ஐடியா மேல் நம்பிக்கை வைத்து வாய்ப்பளிப்பது மிகப்பெரிய விஷயம், என்னை நம்பி இன்று வரை ஆதரவாக இருக்கிறார்கள் நன்றி. அர்ஜூன் தாஸுக்கு இந்தக் கதை சொன்னேன், அவர் என்னை நம்பியதற்கு நன்றி. கதை எழுதியது முதல் ஷிவாத்மிகா தான் என் மைண்டில் இருந்தார், சிறப்பாக நடித்து தந்ததற்கு நன்றி. காளிவெங்கட்டிடம் கதை சொன்ன போது அவர் நடிப்பாரா எனச் சந்தேகம் இருந்தது. படம் முழுக்க பிணமாக நடிக்க வேண்டும், மூச்சு விடக்கூடாது, ஆனால் அசத்தியிருக்கிறார். சிங்கம்புலியை நிறையக் கஷ்டப்படுத்தியுள்ளோம், சகித்துக்கொண்டதற்கு நன்றி. நாசர் என் படத்தில் ஒரு ஃப்ரேமிலாவது இருக்க வேண்டும் என ஆசைப்படுவேன், அதே போல் தான் அபிராமி மேடமும். இருவருக்கும் நன்றி. ராஜ்குமார் கேமரா பற்றி எதுவுமே தெரியாத ஆள், நான் இயக்கம் என்றால் என்னவென்று தெரியாத ஆள். ஆனால் நாங்கள் படித்து இப்போது இந்த மேடையில் ஒளிப்பதிவாளராக, இயக்குநராக இருக்கிறோம், மகிழ்ச்சி. இப்படத்தில் எனக்காக உழைத்த அனைவருக்கும்நன்றி, எல்லோருக்கும் இந்தப்படம் பிடிக்குமென நம்புகிறேன் என்றார்.

நடிகர் அர்ஜூன் தாஸ் பேசுகையில், எல்லோருக்கும் நன்றி சொல்ல வேண்டும். இந்த கதாப்பாத்திரம் தந்த விஷாலுக்கு நன்றி. இங்கு வந்து வாழ்த்தும் அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி. GEMBRIO PICTURES சுதா சுகுமார் மற்றும் சுகுமார் பாலகிருஷ்ணன் இருவருக்கும் நன்றி. இருவரும் டீமோடு ஷூட்டில் கலந்துகொண்டு ஆதரவு தந்ததற்கு நன்றி. விஷால், இமான் தான் இசை என்றவுடன், அவர் படத்தைப் பார்த்துக்கொள்வார் என்று சொன்னேன். காளி வெங்கட், அநீதி படத்தில் நடித்திருந்தாலும் அதில் ஒன்றாக நடிக்கவில்லை, ஆனால் இப்படத்தில் அந்த வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சி. இந்தப்படத்தில் நான் லீட் இல்லை, விஷால் அவர் டீம் தான் லீட். நான் ஒரு குட்டி பார்ட். இப்படத்தில் வேலை பார்த்த அனைவருக்கும் என் நன்றிகள். ஷிவாத்மிகா அருமையாக நடித்துள்ளார், அவருடன் வேலை பார்த்தது சந்தோஷம். விஷால் கதை சொன்னவுடன், நான் தான் பண்ணனுமா ? எனக் கேட்டேன். எல்லோரும் சொல்லியும் என்னை நம்பி தந்ததற்கு நன்றி. இப்படம் கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும் என்றார்.
ஜி.கே.ஆர் சினி ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘குற்றம் புதிது’. நோவா ஆம்ஸ்ட்ராங் எழுதி இயக்கி இருக்கும் இந்தப் படத்தில் தருண் விஜய் கதாநாயகனாக அறிமுகமாகிறார். கதாநாயகியாக சேஷ்விதா கனிமொழி நடிக்கிறார். இவர்களுடன் மது சூதனராவ், நிழல்கள் ரவி, […]
சினிமாஜி.கே.ஆர் சினி ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘குற்றம் புதிது’. நோவா ஆம்ஸ்ட்ராங் எழுதி இயக்கி இருக்கும் இந்தப் படத்தில் தருண் விஜய் கதாநாயகனாக அறிமுகமாகிறார். கதாநாயகியாக சேஷ்விதா கனிமொழி நடிக்கிறார். இவர்களுடன் மது சூதனராவ், நிழல்கள் ரவி, ராமச்சந்திரன் துரை, பாய்ஸ் ராஜன், பிரியதர்ஷினி ராஜகுமார் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். க்ரைம் த்ரில்லர் ஜானரில் உருவாகி இருக்கும் இந்தப் படம் ஆகஸ்ட் 29 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதன் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.
இணைத்தயாரிப்பாளர் எஸ். கார்த்திகேயன் பேசுகையில், ஜிகேஆர் சினி ஆர்ட்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் முதல் படம் இது. இந்தப் படத்தை எனது மகன் தருண் விஜய் தயாரித்து கதையின் நாயகனாக நடித்துள்ளார். அவருடன் இந்த படத்தில் இரண்டு வருடங்கள் இணைத்தயாரிப்பாளராக நான் பணிபுரிந்து தமிழ் சினிமா பற்றி நிறைய கற்றுக் கொண்டேன். இந்த அனுபவத்தை வைத்து அடுத்தடுத்து படங்கள் தயாரிக்க உள்ளேன். அடுத்து ஒரு ஃபேமிலி எண்டர்டெயினர் ரொமாண்டிக் படத்திற்கான கதை விவாதம் நடந்து கொண்டிருக்கிறது. அடுத்து அந்தப் படத்தின் பணிகள் தொடங்கும் என்றார்.

நடிகை சேஷ்விதா கனிமொழி பேசுகையில், நான் நடிக்க கமிட் ஆன முதல் படம் ‘குற்றம் புதிது’. எனக்கு ரொம்பவே ஸ்பெஷல், தருணுக்கு ஆல் தி பெஸ்ட். வாய்ப்பு கொடுத்த இயக்குநர், தயாரிப்பாளருக்கு நன்றி. ஹீரோயின் ஆனால் ஜாலியாக இருக்கலாம் என்று நினைத்தேன். ஆனால், பயமும் நிறைய இருக்கிறது என்றார்.

நடிகை பிரியதர்ஷினி பேசுகையில், இந்த படத்தில் அம்மா கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். வாய்ப்பு கொடுத்த இயக்குநர், தயாரிப்பாளருக்கு நன்றி. இயக்குநர் கதை சொல்லும் போதே புதிய முயற்சி என்பது புரிந்தது. தருண் எந்த தயக்கமும் இல்லாமல் தனது முழு நடிப்பு திறனையும் காட்டி நடித்துள்ளார். நிச்சயம் அவர் அடுத்த கட்டத்திற்கு செல்வார். சஸ்பென்ஸ் திரில்லர் படத்திற்கான உழைப்பை தொழில்நுட்பக் குழுவும் கொடுத்துள்ளது என்றார்.
‘கெவி’ பட இயக்குநர் தமிழ் தயாளன் பேசுகையில், ஒவ்வொரு வெள்ளிக்கிழமையையும் நம்பி தமிழ் சினிமாவில் பல தொழிலாளர்களுடைய வாழ்க்கை உள்ளது. ஒரு படத்திற்காக 20, 30 வருடங்கள் காத்திருந்தவர்களை எனக்கு தெரியும். அப்படி இருக்கும் பொழுது தமிழ் சினிமாவில் ஒரு சிலர் விமர்சித்தால் மட்டும்தான் அந்த படம் கவனிக்கப்படும் என்ற பிம்பம் கட்டமைத்திருப்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. பார்வையாளர்கள் நீங்கள் வந்து படம் பார்த்து உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள். உங்களை நம்பி நாங்கள் வாழ்கிறோம் என்றார்.
தயாரிப்பாளர் கணேஷ் பேசுகையில், எத்தனை படங்கள் நடித்தாலும் அதனை முதல் படமாக நினைத்து வேலை செய்தால் மட்டுமே அடுத்தடுத்த உயரத்திற்கு போக முடியும். சமீபத்தில் நிறைய சின்ன படங்கள் விமர்சன ரீதியாக வெற்றியடைந்து இருக்கிறது. அதுபோல இந்த படமும் பேசப்படும் என்றார்.

நடிகர், தயாரிப்பாளர் தேனப்பன் பேசுகையில், படத்தின் டிரெய்லர் பார்க்கும் போதே படக்குழுவின் உழைப்பு தெரிகிறது. தமிழ் சினிமாவில் ஒரு வருடத்திற்கு 200க்கும் மேற்பட்ட படங்கள் வந்தால் அதில் ரஜினி, கமல், ஷங்கர் என பெரிய நட்சத்திரங்களின் படமும் வருகிறது. மீதம் வரும் 200 படங்களில் வெறும் பத்து படங்கள் தான் வெற்றி பெறுகிறது. அதனால் நல்ல படங்குக்கு ஆதரவு கொடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் வைக்கிறேன் என்றார்.

தயாரிப்பாளர், நடிகர் தருண் விஜய் பேசுகையில், சினிமா துறையில் இதுதான் என்னுடைய முதல் படம். என்னுடைய அம்மா, அப்பா ஆதரவு இல்லாமல் நான் ஹீரோவாக முடியாது. அவர்களுக்கு நன்றி, இயக்குநர் நோவா ஆம்ஸ்ட்ராங் என்னுடைய முதல் படத்திலேயே வித்தியாசமான கதாபாத்திரம் கொடுத்துள்ளார். பொறுமையாக தொடங்கும் படம் போகப்போக ஆடியன்ஸை சீட்டின் நுனியில் அமர வைக்கும். கதிரேசன் என்ற ஃபுட் டெலிவரி பையனாக நடித்திருக்கிறேன். உடன் நடித்தவர்கள் எல்லோரும் அனுபவசாலிகள் என்பதால் கொஞ்சம் பதட்டம் இருந்தது. ஆனால், எல்லோரும் ஆதரவு கொடுத்தார்கள் என்றார்.

இயக்குநர் பேரரசு பேசுகையில், வழக்கமாக தந்தை தன் மகனை ஹீரோவாக அறிமுகப்படுத்தும் பொழுது கலர் கலரான காஸ்டியூம், அறிமுக பாடல் என்றுதான் அழகு பார்ப்பார். ஆனால், இப்படி ஒரு வித்தியாசமான கதையை தேர்ந்தெடுத்திருக்கிறார் கார்த்திகேயன். திரில்லர் படத்தில் அந்த த்ரில்லை பார்வையாளர்களுக்கு கடத்துவது சாதாரண விஷயமில்லை. அது ‘குற்றம் புதிது’ படத்தில் இருக்கிறது என்று நினைக்கிறேன். இயக்குநர்கள், ஹீரோவாக மாறுவது தான் இப்பொழுது ட்ரெண்ட். அதனால், இயக்குநர் ஆம்ஸ்ட்ராங் இரண்டு படங்கள் ஹிட் படங்கள் பிறகு ஹீரோ வாய்ப்பு கிடைத்தால் அதிலும் நடித்து விடுங்கள். விமர்சனங்களை நம்பாமல் எல்லா படங்களையும் மக்கள் நீங்கள் பார்த்து ஆதரவு கொடுக்க வேண்டும் என்றார்.

இயக்குநர் நோவா ஆம்ஸ்ட்ராங் பேசுகையில், கதை சொல்ல போன முதல் நாளில் இருந்து தற்போது இந்த விழா சிறப்பாக நடப்பது வரை அதற்கு முதல் காரணம் கார்த்திகேயன் சார். தருணுக்கு மிகச் சிறப்பான எதிர்காலம் உள்ளது. கொரிலாவாக நடிக்க கடுமையான பயிற்சி எடுத்தார். நடிகர்கள் சேஷ்விதா, பிரியதர்ஷினி, நிழல்கள் ரவி, தினேஷ் என எல்லாருமே சிறப்பாக நடித்துக் கொடுத்திருக்கிறார்கள். அதுபோல தொழில்நுட்பக் குழுவும் சிறப்பாக பணிபுரிந்து இருக்கிறார்கள். இது திரில்லர் படமாக இருந்தாலும் நிறைய எமோஷன் உள்ளது. படம் முடிந்து வரும் பொழுது ‘குட்’டாக ஃபீல் செய்வீர்கள். என்னுடைய அண்ணன், அண்ணி, என்னுடைய மனைவி எல்லோருக்கும் நன்றி என்றார்.
உத்ரா புரொடக்சன்ஸ், ஹரி உத்ரா பேசுகையில் கேரளா, தமிழ்நாடு என எல்லா மாநிலங்களிலும் ‘குற்றம் புதிது’ ஆகஸ்ட் 29 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த வாய்ப்பு எனக்கு கொடுத்த கார்த்திகேயன் சாருக்கு நன்றி. படத்தை ரசிகர்களிடம் கொண்டு போய் சேர்ப்பதற்காக இரவு பகல் பாராது உழைத்திருக்கும் ஹீரோ, ஹீரோயின், இயக்குநர் மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள் என்றார்.
கடலூர் மாவட்டம் ஶ்ரீ முஷ்ணம் வட்டாரத்தில் உள்ள ஶ்ரீ நெடுஞ்சேரி கிராமத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் பயன்பாட்டிற்காக 2023-2024 ஆம் நிதியாண்டில் கழிவறை கட்டிடம் கட்டப்பட்டது. பொதுமக்களின் அத்தியாவசிய தேவைகளில் ஒன்றான கழிவறை கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு ஓராண்டுகளைக் கடந்தும், மக்களின் பயன்பாட்டிற்கு […]
தமிழகம்கடலூர் மாவட்டம் ஶ்ரீ முஷ்ணம் வட்டாரத்தில் உள்ள ஶ்ரீ நெடுஞ்சேரி கிராமத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் பயன்பாட்டிற்காக 2023-2024 ஆம் நிதியாண்டில் கழிவறை கட்டிடம் கட்டப்பட்டது. பொதுமக்களின் அத்தியாவசிய தேவைகளில் ஒன்றான கழிவறை கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு ஓராண்டுகளைக் கடந்தும், மக்களின் பயன்பாட்டிற்கு திறக்கப்படாமல் இருப்பது மிகவும் வேதனையான விஷயமாக அப்பகுதியினர் கருதுகின்றனர்.
மேலும் மக்களின் அத்தியாவசிய தேவைகளுக்காக கழிப்பறைகள் கட்டி முடிக்கப்பட்டு ஓராண்டு களை கடந்தும், பயன்பாட்டிற்கு கொண்டு வராமல் மெத்தனமாக இருக்கும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை மேற்கொள்வதோடு, கழிவறை கட்டிடத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு உடனடியாக திறக்க வழிவகை செய்ய வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
_ பாலகிருஷ்ணன்
தமிழ் திரையுலகின் முன்னணி சண்டை பயிற்சி இயக்குநர் சில்வா. ஸ்டண்ட் சில்வா என அறியப்படும் இவர் தமிழ் மட்டுமின்றி தென்னிந்திய திரையுலகில் இதுவரை 100-க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு ஸ்டண்ட் இயக்குநராக பணியாற்றி இருக்கிறார். சண்டை காட்சிகளில் தனக்கென ஒரு பாணியை பின்பற்றி […]
சினிமாதமிழ் திரையுலகின் முன்னணி சண்டை பயிற்சி இயக்குநர் சில்வா. ஸ்டண்ட் சில்வா என அறியப்படும் இவர் தமிழ் மட்டுமின்றி தென்னிந்திய திரையுலகில் இதுவரை 100-க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு ஸ்டண்ட் இயக்குநராக பணியாற்றி இருக்கிறார். சண்டை காட்சிகளில் தனக்கென ஒரு பாணியை பின்பற்றி வரும் ஸ்டண்ட் சில்வா வித்தியாசம் கலந்த விறுவிறுப்பான ஆக்ஷன் காட்சிகளை படமாக்குவதில் கைத்தேர்ந்தவர்.
ஸ்டண்ட் மட்டுமின்றி திரையுலகின் பல பரிவுகளில் தன்னை ஆர்வமுடன் ஈடுபடுத்தி வருகிறார் ஸ்டண்ட் சில்வா. அதன்படி திரைக்கு பிந்தைய பணிகள் தவிர்த்து, பல்வேறு திரைப்படங்களில் முக்கிய வேடங்களில் நடித்து, ரசிகர்களை கவர்ந்துள்ளார். முன்னணி இயக்குநர்கள், திரையுலகின் உச்ச நடிகர்கள் என ஸ்டண்ட் இயக்கத்திலும், வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பதிலும் உச்சம் தொட்டவர் ஸ்டண்ட் சில்வா.

இவரது தலைசிறந்த பணிகளை பாராட்டி பல்வேறு திரைப்படங்களுக்காக இவர் பலமுறை SIIMA விருது, எடிசன் விருது மற்றும் தமிழ் நாடு மாநில அரசு விருதுகளை வென்றுள்ளார். இந்த வரிசையில் ஸ்டண்ட் சில்வா தற்போது மனோரமா கேரளா மாநிலம் சார்பில் வழங்கப்பட்ட 2025-ம் ஆண்டின் சிறந்த ஸ்டண்ட் இயக்குநர் விருதை வென்றுள்ளார்.
நடிகர் பிருத்விராஜ் இயக்கி, நடித்து வெளியான எம்புரான் L2 மற்றும் நடிகர் மோகன்லால் நடிப்பில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற துடரும் ஆகிய படங்களுக்காக ஸ்டண்ட் சில்வாவுக்கு 2025 ஆண்டின் சிறந்த ஸ்டண்ட் இயக்குநர் விருது வழங்கி கேரளா மாநில அரசு கவுரவித்துள்ளது.
சன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் கலாநிதி மாறன் தயாரிப்பில், ரஜினிகாந்த், நாகர்ஜுனா, ஸ்ருதிஹாசன், அமீர்கான், உபேந்திரா, சவுபின் சாஹிர் உள்ளிட்டோர் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் “கூலி”. கதைப்படி.. சென்னையில் மேன்சன் நடத்திவரும் தேவா ( ரஜினி ), […]
விமர்சனம்சன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் கலாநிதி மாறன் தயாரிப்பில், ரஜினிகாந்த், நாகர்ஜுனா, ஸ்ருதிஹாசன், அமீர்கான், உபேந்திரா, சவுபின் சாஹிர் உள்ளிட்டோர் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் “கூலி”.
கதைப்படி.. சென்னையில் மேன்சன் நடத்திவரும் தேவா ( ரஜினி ), தனது நண்பர் ராஜசேகர் ( சத்யராஜ் ) திடீரென மரணம் அடைந்த தகவல் அறிந்து, அவருடைய இறுதிச்சடங்கில் பங்கேற்க விசாகப்பட்டினம் செல்கிறார். அங்கு அவரின் மூத்த மகள் ப்ரீத்தி ( ஸ்ருதிஹாசன் ) தேவாவை அவமானப்படுத்தி வெளியே அனுப்புகிறார். தனது நண்பனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக விசாரிக்க தொடங்குகிறார். சில தகவல்கள் அவரை அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

இந்நிலையில் விசாகப்பட்டினம் துறைமுகத்தில் சின் பின் ஏற்றுமதி நிறுவனம் 14 ஆயிரம் கூலி தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தி செயல்பட்டு வருகிறது. அதன் உரிமையாளர் சைமன் ( நாகர்ஜுனா ), அவருக்கு எல்லாமுமாக செயல்படும் தயாளன் ( சவுபின் சாஹிர் ) பற்றியும் கிடைத்த தகவல்கள், தேவாவிற்கு சந்தேகத்தை ஏற்படுத்தவே, அந்த துறைமுத்திற்குள் சென்று சைமனை சந்திக்க முற்படுகிறார் தேவா.
சைமனின் தொழில்கள் மற்றும் பின்னணி ? தயாளன் யார் ? அவரது பின்னணி என்ன ? இவர்களுக்கும் ராஜசேகருக்கும் என்ன தொடர்பு ? ராஜசேகர் எதற்காக, எப்படி மரணம் அடைந்தார் ? தேவா, ராஜசேகர் நட்பு எத்தகையது ? என்பது மீதிக்கதை..

மேன்சன் ஓனராக ரஜினிகாந்த் தோன்றும் காட்சிகள் தொடங்கி அடுத்தடுத்த காட்சிகள் நகரும்போது, ரசிகர்களின் இதயத்துடிப்பை எகிர வைக்கும் அளவுக்கு விருவிருப்பாக நகர்த்தியிருக்கிறார் இயக்குநர். ஆனால் ரஜினியின் வழக்கமான படங்களைவிட சற்று திசைமாறிய திரைக்கதை என்றும் கூட சொல்லலாம். ரஜினி கொடுத்த அழகான வாய்ப்பை இயக்குநர் பயன்படுத்திக்கொள்ள தவறிவிட்டார் என்றும் சொல்லலாம்.
இளைஞர்களின் இதயத்துடிப்பாக மூன்று தலைமுறைகள் தாண்டியும் எதிர்பார்க்கும் நாயகன் ரஜினியின் தோற்றமும், நடிப்பும் சிறப்பு. ஸ்ருதிஹாசன் இதுவரை நடித்திராத குணச்சித்திர கதாப்பாத்திரத்தில் சிறப்பாக நடித்து, எந்த கதாப்பாத்திரத்திரமாக இருந்தாலும் சிறப்பாக நடிக்கக் கூடிய நடிகை என பெயரெடுத்துள்ளார். திரைக்கதை சற்று மிதமாக நகரும்போது, அனிருத்தின் இசை அந்த குறையை நிவர்த்தி செய்கிறது. அனிருத்தின் இசையே படத்திற்கு பக்கபலம் எனலாம்.
அமீர்கான், ரஜினி சந்திக்கும்போது சொல்லப்படும் ஃப்ளாஷ் பேக் ரசிக்க வைக்கிறது. சவுபின் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
ஜெர்ரி’ஸ் ஜர்னி இண்டர்நேஷனல் புரொடக்ஷன் ஹவுஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ஜுன் மோசஸ் இயக்கத்தில் அறிமுக நடிகர் வினோத் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘பேய் கதை’ படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் சென்னையில் வெளியிடப்பட்டது. இவ்விழாவில் இசையமைப்பாளர்கள் சபேஷ் – முரளி சிறப்பு […]
சினிமாஜெர்ரி’ஸ் ஜர்னி இண்டர்நேஷனல் புரொடக்ஷன் ஹவுஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ஜுன் மோசஸ் இயக்கத்தில் அறிமுக நடிகர் வினோத் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘பேய் கதை’ படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் சென்னையில் வெளியிடப்பட்டது. இவ்விழாவில் இசையமைப்பாளர்கள் சபேஷ் – முரளி சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு, படத்தின் இசை மற்றும் முன்னோட்டத்தை வெளியிட, படக்குழுவினர் பெற்று கொண்டனர்.
‘பேய் கதை’ திரைப்படத்தில் வினோத், ஆர்யலட்சுமி, கானா பல்லவ், சுகன்யா, ஆஷ் மெலோ, செல்வா, எலிசபெத் சுராஜ், ஜீ.வி. மகா, மைக்கேல், ஸ்ரீசுமந்த், ஆஷிக் பீட்டர், ரோடஸ், ஜீவிதா, ருச்சி பிங்க்லே உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பிரவீண் எஸ். ஜி. ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு போபோ சசி இசையமைத்திருக்கிறார். கலகலப்பும் திகிலும் நிறைந்த குதூகல திரில்லராக தயாராகி இருக்கும் இப்படத்தை ஜெர்ரி’ஸ் ஜர்னி இன்டர்நேஷனல் புரொடக்ஷன் ஹவுஸ் நிறுவனம் சார்பில் ஜெர்ரி தயாரித்திருக்கிறார். இந்த திரைப்படத்தை தமிழகம் முழுவதும் ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் சுரேஷ் வழங்குகிறார்.

ஆகஸ்ட் 29ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் ‘பேய் கதை’ படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழாவில் படத்தின் இயக்குநர் ஜுன் மோசஸ் பேசுகையில், எனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி இருக்கிறேன் என நம்புகிறேன்.
படத்தின் இசையமைப்பாளரான போபோ சசி என்னுடைய பால்ய கால நண்பர். அவரும் நானும் இணைந்து பணியாற்றி இருக்கிறோம். இந்த விழாவிற்கு இசையமைப்பாளர்கள் சபேஷ் – முரளி அவர்களை சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்ள வேண்டும் என அழைப்பு விடுத்தோம். அவர்களும் இங்கு வருகை தந்திருக்கிறார்கள். இதற்காக அவர்களுக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இப்படத்தில் இணைந்து பணியாற்றிய நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இப்படத்தை பார்த்து உற்சாகமடைந்து தமிழகம் முழுவதும் வெளியிடும் ஸ்ரீ தேனாண்டாள் சுரேஷூக்கும் நன்றி.
‘பேய் கதை’ கம்ப்ளீட் ஃபேமிலி என்டர்டெய்னர். திரில்லர்-காமெடி -சஸ்பென்ஸ் என ஏராளமான திரைப்படங்கள் வெளியாகி இருக்கின்றன. அந்த படங்களில் ரத்தம், வன்முறை, பயங்கரம் ஆகியவை இருக்கும். ஆனால் இந்தப் படத்தில் அவை எதுவும் இருக்காது. குழந்தைகள் கூட இந்த படத்தை தாராளமாக பார்க்கலாம். அவர்களுக்கும் இது ஒரு திரில்லிங்கான தருணமாக இருக்கும். இப்படத்தின் திரைக்கதையில் புதிய முயற்சிகளை செய்திருக்கிறோம். கதை சொல்லும் பாணியிலிருந்தும், அதனை விவரிக்கும் வகையிலும், அதில் உள்ள தொழில்நுட்ப விஷயங்கள் வரை புதிதாக முயற்சித்து இருக்கிறோம். திரையரங்க அனுபவத்திற்காக பல விஷயங்களை புதிதாக செய்திருக்கிறோம். படத்தில் எட்டு நிமிட அளவிற்கு வி ஆர் மோஷன் (V. R. Motion) தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இருக்கிறோம். தற்போதுள்ள குழந்தைகள் வி ஆர் மோஷன் தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறார்கள். அவர்களை கவர்வதற்காக தொடர்ந்து எட்டு நிமிட அளவிற்கு இந்த தொழில்நுட்பத்தையும் பயன்படுத்தி இருக்கிறோம். படம் முழுவதும் எதிர்பாராத சுவாரசியமான திருப்பங்கள் இருக்கின்றன. இது ரசிகர்களை உற்சாகப்படுத்தும். இந்தப் படத்தில் பார்வையாளர்கள் முகம் சுழிக்கும் வகையில் எந்த காட்சியும் இடம்பெறவில்லை. சிறிய முதலீட்டில் உருவாக்கப்பட்ட நல்லதொரு முயற்சி. அனைவரும் திரையரங்கத்திற்கு வருகை தந்து இந்த படத்திற்கு ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

வசனகர்த்தா நவீன் பேசுகையில், இந்தப் படத்திற்காக வசனம் எழுதிய அனுபவமும், அதற்கான பயணமும் வித்தியாசமாக இருந்தது. இயக்குநர் என்னிடம் ரசிகர்களின் கோணத்திலிருந்து உரையாடலை எழுது என்றார். முதல் 15 நிமிடங்களை மட்டும் தான் என்னிடம் எழுதுவதற்காக வழங்கினார்கள். பத்து நாட்கள் எடுத்துக்கொண்டு எழுதிக் கொடுத்தேன். அதன் பிறகு படத்தின் முதல் பாதி வரை எழுதிக் கொடுங்கள் என கேட்டனர். அப்போதும் நான் குழம்பினேன். அதன் பிறகு இரண்டாம் பாதி கதையை முழுவதுமாக என்னிடம் விவரித்தார். அதைக் கேட்டவுடன் எனக்கு ஆச்சரியம் அதிகமாகி விட்டது. ஏனெனில் இந்த படத்தில் திரில்லர், சஸ்பென்ஸ் என நிறைய விஷயங்கள் இருக்கின்றன. அனைவரும் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக பார்க்கும் வகையில் அமைந்திருக்கிறது. இதுவரை தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு மட்டுமே உரையாடல்களை எழுதி வந்த எனக்கு முதன் முதலாக பெரிய திரையில் உரையாடல் எழுத வாய்ப்பு அளித்துள்ளனர். இதற்காக இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
பாடலாசிரியர் யூகி பிரவீண் பேசுகையில், 2017ம் ஆண்டில் வெளியான ‘அட்டு’ படத்திற்கு அனைத்து பாடல்களையும் எழுதி இருந்தேன். போபோ சசி எனக்கு எல்லா பாடல்களையும் எழுதுவதற்கு வாய்ப்பளித்தார். நான் இதுவரை 30 பாடல்களை எழுதி இருக்கிறேன். இதில் 20 பாடலை போபோ சசிக்காக எழுதியிருக்கிறேன். எங்கள் கூட்டணியில் இன்னும் ஏராளமான ஹிட் பாடல்கள் வரவேண்டும் என பிரார்த்திக்கிறேன். இந்த படத்திலும் எல்லா பாடல்களையும் எழுதும் வாய்ப்பை போபோ சசி அளித்திருக்கிறார். இதற்கு ஒப்புதல் அளித்த இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

நடிகை ஆஷ் மெலோ பேசுகையில், கன்னடத்தில் நடிகர் துனியா விஜய் உடன் நடித்திருக்கிறேன். தமிழில் நான் நடித்திருக்கும் முதல் படம் இது. இதற்கு வாய்ப்பளித்த இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். படப்பிடிப்பு தளத்தில் அனைவரும் எனக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கினார்கள் என்றார்.
நடிகை எலிசபெத் பேசுகையில், இளம் திறமைசாலிகள் இணைந்து இப்படத்தை உருவாக்கி இருக்கிறார்கள். இப்போது இளம் திறமைசாலிகள் பலரும் திரைப்படத்தை இயக்கி வருகிறார்கள். எங்களைப் போன்ற மூத்த நடிகைகளை மறந்து விடுகிறார்கள். இந்தப் படத்திற்கு இசை மிக சிறப்பாக அமைந்திருக்கிறது, படமும் நன்றாக வந்திருக்கிறது, நாயகனுக்கு அம்மாவாக நடித்திருக்கிறேன். அனைவரும் பார்த்துவிட்டு ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என்றார்.
நடிகை ஜீ.வி.மகா பேசுகையில், இந்தப் படத்தின் மூலமாகத்தான் நான் நடிகையாக அறிமுகமாகிறேன். இந்த வாய்ப்பை எனக்கு வழங்கிய இயக்குநருக்கும், படக்குழுவினருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இயக்குநர் என்னுடைய நண்பராக இருந்தாலும் ஆடிஷன் வைத்து தான் குறிப்பிட்ட கதாபாத்திரத்துக்கு என்னை தேர்வு செய்தார். அத்துடன் எனக்கு அவர் அளித்த ஊக்கம் காரணமாகவே இப்படத்தில் நடித்திருக்கிறேன். இந்த திரைப்படம் ஏனைய பேய் படங்களை போல் இல்லை, புதுமையான நாகரீகமான நல்லதொரு ஃபேமிலி என்டர்டெய்னராக உருவாகி இருக்கிறது என்றார்.

இசையமைப்பாளர் போபோ சசி பேசுகையில், இயக்குநரும், நானும் 25 ஆண்டு கால நண்பர்கள். நாங்கள் இருவரும் ஏற்கனவே இணைந்து பணியாற்றி இருக்க வேண்டும். ஆனால் அதற்கான தருணம் தற்போது தான் அமைந்திருக்கிறது. ‘பேய் கதை’ படத்தை தனித்துவமாக உருவாக்கியிருக்கிறார். தற்போது தான் இப்படத்திற்கான பின்னணி இசை சேர்ப்பு பணிகளை நிறைவு செய்தேன். படம் சிறப்பாக வந்திருக்கிறது, பாடல்களும் சிறப்பாக இருக்கின்றன என்றார்.
இசையமைப்பாளர் சபேஷ் பேசுகையில், படத்தின் முன்னோட்டத்தை பார்க்கும் போது இயக்குநர் எதையோ புதுமையாக செய்திருக்கிறார் என்ற எதிர்பார்ப்பு எழுகிறது. படம் சிறப்பாக இருக்கிறது. இந்த விழாவிற்கு அழைப்பு விடுப்பதற்காக இயக்குநர் எங்களை சந்தித்தார். அப்போது நான் உங்களை பார்த்திருக்கிறேன் என அவர் கூறினார் அப்போது அவரிடம் நாங்கள் வருடத்திற்கு 25 திரைப்படங்களில் பணியாற்றினோம். அப்போது கழுத்தை திருப்பி பக்கத்தில் யார் இருக்கிறார்கள் என்று பார்ப்பதற்கு கூட நேரம் இருக்காது. எங்கள் பார்வை முழுவதும் திரையிலும், கீ போர்டிலும் தான் இருக்கும் என்று விளக்கம் அளித்தேன்.
எங்கள் குடும்பத்தை சேர்ந்த இசையமைப்பாளர் போபோ சசி இதில் பணியாற்றி இருக்கிறார். தற்போதெல்லாம் ஒரு பாடல் நிலைத்து நிற்கிறது என்றால் அது வெஸ்டர்ன் பாணியிலான பாடலாக இருந்தாலும் அதில் சிறிதளவு மெலோடி இடம்பெற்றிருக்க வேண்டும். மெலோடி இருந்தால்தான் அந்தப் பாடல் ஹிட் ஆகும். இது நூறு சதவீதம் போபோ சசி பாடல்களில் இருக்கிறது. அதனால் இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெறும் என்றார்.

இசையமைப்பாளர் முரளி பேசுகையில், இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியை பெறும் என்று எனக்கு நம்பிக்கை இருக்கிறது. படத்தின் முன்னோட்டத்தை பார்க்கும் போது இசையும், ஒளிப்பதிவும் சிறப்பாக இருக்கிறது. இந்த திரைப்படம் ஹாலிவுட் தரத்தில் இருக்கிறது. அதற்கு ஏற்றாற் போல் பின்னணி இசையும், பாடல்களும் அமைந்திருக்கின்றன.
இயக்குநர் ஜுன் மோசஸை சிறிய வயதில் இருந்தே பார்த்திருக்கிறேன். அவர் எப்போதும் எங்களுடைய வீட்டில் போபோ சசியுடன் தான் இருப்பார். இந்த இருவரும் சின்ன வயதிலிருந்து எதையாவது செய்து கொண்டே இருப்பார்கள். அதனால் தான் தற்போது இருவரும் திரையில் ஜொலிக்கிறார்கள். இந்தப் படத்தில் பணியாற்றிய அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் வாழ்த்துக்கள் என்றார்.

நாயகன் வினோத் பேசுகையில், இந்தத் திரைப்படத்தில் பணியாற்றிய நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நான் இசையமைப்பாளர்கள் சபேஷ் – முரளியின் ரசிகன். ஏனெனில் ‘வாலி’ படத்திற்கு பின்னணி இசையமைத்தது இவர்கள்தான். அவர்கள் இங்கு சிறப்பு விருந்தினராக வருகை தந்து வாழ்த்தியமைக்கு நன்றி.
இயக்குநர் ஜுன் மோசஸ் என்னுடைய நண்பர் தான். நானும் அவரும் பிசினஸ் பார்ட்னர்ஸ். ஒரு நாள் சாதாரணமாக பேசிக் கொண்டிருக்கும்போது திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்ற என் விருப்பத்தை சொன்னவுடன் அவர் ஒரு வரியில் கதையை சொன்னார். அதன் பிறகு அதனை விரிவுபடுத்தி பணியாற்றத் தொடங்கி அந்தப் பணி தற்போது இங்கு வரை வந்திருக்கிறது. அவருக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அவருடைய எதிர்காலம் சிறப்பாக இருக்க வேண்டும் என வாழ்த்துகிறேன். நான் கார்ப்பரேட் நிறுவனத்தில் 22 ஆண்டு காலம் பணியாற்றி இருக்கிறேன். அங்கு கற்றுக் கொள்ளாத பல விஷயங்களை சினிமாவில் ஒரே வருடத்தில் கற்றுக் கொண்டேன் என்றார்.
ஶ்ரீ துர்கா கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் V. ரவிச்சந்திரன் தயாரிப்பில், மதுமிதா, வேல்முருகன், ராஜலிங்கம், செந்தில் குமார், முருகேசன், மாரிக்கண்ணு, கோவை உமா உள்ளிட்டோர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் “நாளை நமதே”. கதைப்படி.. சிவகங்கை மாவட்டம் சிவதாணுபுரம் ஊராட்சியில் ஆதிக்க சாதியினர் […]
விமர்சனம்ஶ்ரீ துர்கா கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் V. ரவிச்சந்திரன் தயாரிப்பில், மதுமிதா, வேல்முருகன், ராஜலிங்கம், செந்தில் குமார், முருகேசன், மாரிக்கண்ணு, கோவை உமா உள்ளிட்டோர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் “நாளை நமதே”.
கதைப்படி.. சிவகங்கை மாவட்டம் சிவதாணுபுரம் ஊராட்சியில் ஆதிக்க சாதியினர் அதிகமாக வசித்து வருகின்றனர். இங்கு ஒடுக்கப்பட்ட மக்கள் வசிக்கும் காலனியும் இருக்கிறது. ஆதிக்க சாதியினர் சார்பில் விருமாண்டி குடும்பத்தினர் ஊராட்சி மன்றத் தலைவர் பதவியில் இருந்து வருகின்றனர். இந்நிலையில் அந்த ஊராட்சியை தனி தொகுதியாக மாற்றி அறிவிப்பு வெளியாகிறது. தேர்தலில் போட்டியிட ஒடுக்கப்பட்ட மக்களின் சார்பில் முன்னாள் இராணுவ வீரர் வேட்புமனு தாக்கல் செய்ய செல்லும்போது கொலை செய்யப்படுகிறார். பின்னர் ஆதிக்க சாதியினர் ஒருவரை வெட்டி ஊரில் கலவரத்தை ஏற்படுத்தி தேர்தலை நிறுத்துகின்றனர். மீண்டும் பொதுத் தொகுதியாக மாற்றப்படுகிறது.

பின்னர் 15 ஆண்டுகள் கழித்து மீண்டும் தனி தொகுதியாக மாற்றப்படுகிறது. இம்முறை தனது வீட்டில் வேலை பார்க்கும் தாழ்த்தப்பட்டவரான பெருமாள் என்பவரை வேட்பாளர் ஆக்குகின்றனர். ஆனால் பெருமாளின் மருமகள் அமுதா அவரை எதிர்த்து வேட்புமனு தாக்கல் செய்கிறார். இதனால் வெகுண்டெழுந்த ஆதிக்க சாதியினர் அமுதாவின் கதையை முடித்து பெருமாளை போட்டியின்றி தேர்வு செய்ய வேண்டும் என மும்முரமாக வேலை செய்கின்றனர்.
பின்னர் தேர்தல் நடந்ததா ? அமுதாவுக்கு என்னானது ? அதன்பிறகு என்ன ஆனது என்பது மீதிக்கதை..

கடந்த காலங்களில் பொதுத் தொகுதியாக இருந்த ஊராட்சிகள், தனி தொகுதியாக மாறியதால் அந்த கிராமங்களில் நடைபெற்ற சம்பவங்களை வைத்து, சினிமாவுக்காக தனது கற்பனைகளை திரைக்கதையில் புகுத்தி, ஆதிக்க ஜாதியினருக்கு எதிராக ஜாதிய வன்மத்தை தினித்திருக்கிறார் இயக்குநர். அமைதியாக இருக்கும் சமூகத்தில், பழைய கதைகளை பேசி கலவரத்தை தூண்ட நினைப்பதும் ஒருவகை வன்முறை தானே !
அமுதாவாக நடித்துள்ள மதுமிதா சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். அவரது குரல்வளமும் அருமை. அதேபோல் வேல்முருகன் காமெடி கதாப்பாத்திரம் என்றாலும், சில இடங்களில் சலிப்படைய வைக்கிறார். பங்காளிகளாக நடித்துள்ள இருவர், நாயகியின் அம்மா, பெருமாள் கதாப்பாத்திரம் உள்ளிட்ட அனைவரும் அவரவருக்கு கொடுக்கப்பட்ட பணிகளைச் சிறப்பாக செய்திருக்கிறார்கள்.
சென்னை புரொடக்சன்ஸ் நிறுவனம் சார்பில் எழில் இனியன் தயாரிப்பில், மாஸ் ரவி, லட்சுமி பிரியா, மஞ்சு, சூப்பர் சுப்பராயன், சாய் தீனா, கல்லூரி வினோத், தங்கதுரை பவர் ஸ்டார் சீனிவாசன் உள்ளிட்டோர் நடிப்பில், மாஸ் ரவி இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் “காத்துவாக்குல […]
விமர்சனம்சென்னை புரொடக்சன்ஸ் நிறுவனம் சார்பில் எழில் இனியன் தயாரிப்பில், மாஸ் ரவி, லட்சுமி பிரியா, மஞ்சு, சூப்பர் சுப்பராயன், சாய் தீனா, கல்லூரி வினோத், தங்கதுரை பவர் ஸ்டார் சீனிவாசன் உள்ளிட்டோர் நடிப்பில், மாஸ் ரவி இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் “காத்துவாக்குல ஒரு காதல்”.
கதைப்படி.. ஜீவாவும் ( மாஸ் ரவி ) மேகாவும் ( லட்சுமி பிரியா ) ஒருவரையொருவர் உண்மையாக நேசித்து காதலித்து வருகின்றனர். இதற்கிடையில் வடசென்னை பகுதியில் டாஸ்மாக் பார் ஏலம் உள்ளிட்ட பல்வேறு தொழில் போட்டியில் சூப்பர் சுப்பராயன், சாய் தீனா உள்ளிட்ட ரவுடிகள் ஒருவருக்கொருவர் சண்டையிட்டு பலபேர் கொல்லப்படுகின்றனர். சாய் தீனா அனைத்து தாதாக்களையும் அழித்துவிட்டு தனி சாம்ராஜ்யத்தை உருவாக்குகிறார். இந்நிலையில் காதலர் தினத்தன்று தனது காதலை சொல்ல வருவதாக கூறிய காதலன் ஜீவா வராததால் அவனோடு பழகிய இடங்களிலெல்லாம் தேடி அழைக்கிறார் மேகா.

சாய் தீனா தனது சுயநலத்திற்காக அப்பகுதி இளைஞர்களை தவறான பாதைக்கு அழைத்துச் செல்கிறார். இளைஞர்கள் கத்தியை பிடிக்காமல் படித்து நல்ல நிலைமைக்கு வர வேண்டும் என ஜிம் நடத்திவரும் மாஸ் போராடுகிறார். அவரை பல்லவி ( மஞ்சு ) காதலிக்கிறார். ஆனால் மாஸ் காதலுக்கு முற்றிலும் எதிரான மனநிலையில் இருந்து வருகிறார். மாஸ் தாக்குதலுக்கு உள்ளாகி ரவுடிகளை விரட்டிச் செல்கிறார். அப்போது தனது காதலன் ஜீவாவை தேடி மேகா அந்த வழியாக செல்லும் போது, மாஸ் ரவுடிகளை விரட்டி செல்வதைப் பார்த்து, தனது ஜீவா மாதிரி இருந்ததால் அவனை பின் தொடர்கிறார்.

மேகா தனது காதலன் ஜீவாவுடன் இணைந்தாரா ? மாஸ் யார் ? வடசென்னை ரவுடிகள் கலாச்சாரத்திலிருந்து மீண்டதா ? என்பது மீதிக்கதை..
காத்துவாக்குல ஒரு காதல் என படத்திற்கு பெயர் வைத்துவிட்டு, படம்முழுவதும் ரவுடிகள் கலாச்சாரத்தை புகுத்தி பார்வையாளர்களை ஏமாற்றமடைய செய்திருக்கிறார் இயக்குநர். கதாப்பாத்திர தேர்விலும் கோட்டைவிட்டாரா ? அல்லது வேண்டுமென்றே செய்தாரா என தெரியவில்லை. எல்லா கதாபாத்திரங்களும் எண்ணெய் வடிந்த முகத்துடன் ஒரே கலரில் தேர்வு செய்தால், சினிமாவிற்கான அழகியல் குறைவாகவே உள்ளது. வட சென்னையில் பெண்களைத் தவிர ஆண் கதாப்பாத்திரங்கள் அனைவரும் கருப்பு நிறம் தான் என காட்சிப்படுத்தியது ஏனோ ?
ஶ்ரீ காளிகாம்பாள் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில், மாணிக்கம் தயாரிப்பில், விக்னேஷ், மனிஷா ஜித், நாசர், ஒய்ஜி மகேந்திரன், தலைவாசல் விஜய், யோகி, அஜய் ரத்னம், ஜான் விஜய் உள்ளிட்டோர் நடிப்பில், ஆண்ட்ரு பாண்டியன் இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் “ரெட் ஃபிளவர்”. கதைப்படி.. […]
விமர்சனம்ஶ்ரீ காளிகாம்பாள் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில், மாணிக்கம் தயாரிப்பில், விக்னேஷ், மனிஷா ஜித், நாசர், ஒய்ஜி மகேந்திரன், தலைவாசல் விஜய், யோகி, அஜய் ரத்னம், ஜான் விஜய் உள்ளிட்டோர் நடிப்பில், ஆண்ட்ரு பாண்டியன் இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் “ரெட் ஃபிளவர்”.
கதைப்படி.. உலகத்தில் பெரும்பாலான நாடுகளை ( 2047 ஆம் ஆண்டு ) மால்கம் டைனஸ்டி ( தலைவாசல் விஜய் ) தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார். இந்தியாவை அதிக வரி செலுத்த வேண்டும் என நிர்பந்திக்கிறார். இந்திய பிரதமர் ( ஒய்ஜி மகேந்திரன் ) மறுப்பு தெரிவிக்கிறார். இதனால் கொந்தளித்த மால்கம் உலக நாடுகளில் வசிக்கும் இந்திய பெண்களை கொடூரமாக கொலை செய்ய உத்தரவிடுகிறார். அதோடு இந்திய பொருளாதாரத்தை அழித்து, மக்களை அனாதைகளாக்க முக்கியமான இடங்கள் மீது ஏவுகணை தாக்குதல் நடத்த ஏற்பாடு செய்கிறார். இதற்கிடையில் இந்தியாவின் சீக்ரெட் ஏஜெண்டான விக்னேஷ், மால்கம் டைனஸ்டியின் திட்டங்களை முறியடிக்க முயற்சி செய்து வருகிறார்.

நாடு இக்கட்டான நிலையில் இருப்பதால், பிரதமர் முப்படை தளபதிகளை அழைத்து ஆலோசனை நடத்துகிறார். அப்போது 1947 ஆம் ஆண்டு சுபாஷ் சந்திரபோஸ் ரெட் ஃபிளவர் ஆபரேஷன் என்கிற பெயரில் போரிட்டு, எதிரிகளை வீழ்த்தி வெற்றி பெற்றதால், அதே பெயரில் ஆபரேஷன் மேற்கொண்டு எதிரிகளை வீழ்த்தி நாட்டை காப்பாற்றலாம் என்கின்றனர்.
மால்கம் டைனஸ்டியின் ஆக்ரோஷத்திற்கு இந்தியா அடிபணிந்ததா ? ரெட் ஃபிளவர் ஆபரேஷன் என்னானது என்பது மீதிக்கதை..

மூன்றாம் உலகப்போர் நடந்தால் என்னவெல்லாம் நடக்கும், 2047 ஆம் ஆண்டு இந்தியா எந்த சக்தியாலும் அழிக்க முடியாத ஒரு வல்லரசு நாடாக இருக்கும் என்பதை சொல்லியிருக்கிறார் இயக்குநர். திரைக்கதையில் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம்.
நீண்ட நாட்களுக்குப் பிறகு பிரமாண்டமான ஒரு படத்தில் நடிகர் விக்னேஷ் நடித்திருக்கிறார் என்பதால் அவருக்கான எதிர்பார்ப்பும் அதிகரித்திருந்தது. இதுவரை அவர் நடித்திராத புதுவிதமான பரிணாமத்தில், இரட்டை வேடங்களில் தோன்றி தனது நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார். இந்தப் படத்தின் மூலம் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியிருக்கிறார் என்றே சொல்லலாம். அதேபோல் நாயகி மனிஷா ஜித், ரசிகர்கள் மனங்களில் இடம்பிடிக்கும் வகையில், தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் என்றே சொல்லலாம்.
ஆரஞ்ச் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில், ராஜேஷ் பத்மநாபன், சுஜாதா ராஜேஷ் தயாரிப்பில், ஶ்ரீராம் பத்மநாபன் இயக்கத்தில், பிஜேஷ் நாகேஷ், அக்ஷயா, தீபா சங்கர், நாஞ்சில் விஜயன், பேபி வர்ஷா, ஆதேஷ் பாலா, ஜூனியர் டிஆர் உள்ளிட்டோர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் “வானரன்”. […]
விமர்சனம்ஆரஞ்ச் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில், ராஜேஷ் பத்மநாபன், சுஜாதா ராஜேஷ் தயாரிப்பில், ஶ்ரீராம் பத்மநாபன் இயக்கத்தில், பிஜேஷ் நாகேஷ், அக்ஷயா, தீபா சங்கர், நாஞ்சில் விஜயன், பேபி வர்ஷா, ஆதேஷ் பாலா, ஜூனியர் டிஆர் உள்ளிட்டோர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் “வானரன்”.
கதைப்படி.. ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த அனுமந்தராவ் ( பிஜேஸ் ) பிழைப்புக்காக தமிழகத்தில் ஆஞ்சநேயர் வேடமிட்டு கோவில் திருவிழாக்களில் மக்களை சந்தோசப்படுத்துவது, விஷேச நாட்கள் இல்லாத சமயத்தில் தெருக்களில் பணம் வசூலித்து வாழ்க்கை நடத்தி வருகிறார். இந்நிலையில் ஒரு கிராமத்திற்கு சென்றிருந்தபோது, ஒயிலாட்டம் கற்றுக்கொடுக்கும் பெண் கலைஞரை சந்திக்கிறார். சமூகத்தில் பெண் கலைஞர்கள் சந்திக்கும் துயரங்களையும், வலிகளையும் கேட்டு வேதனையடைந்து, அந்தப் பெண்ணுக்கு பாது காவலராக வலம் வருகிறார். பின்னர் இருவரும் திருமணம் செய்து ஒரு பெண் குழந்தை பிறக்கிறது. மனைவி இறந்த நிலையில், தனது குழந்தையே உலகம் என வாழ்ந்து வருகிறார்.

இந்நிலையில் ஒருநாள் அந்த குழந்தை பள்ளியில் மயங்கி விழுகிறது. பின்னர் மருத்துவமனையில் பரிசோதித்தபோது மூளையில் கட்டி இருப்பதாகவும், உடனடியாக அற்றவேண்டும், அதற்கு நான்கு லட்சம் ரூபாய் தேவைப்படும் என மருத்துவர் கூற செய்வதறியாது தவிக்கிறார் அனுமந்தராவ். பின்னர் ஹஜ் பயணத்திற்காக சேமித்து வைத்திருந்த பணத்தை கொடுக்கிறார் ( குணா பாபு ) இஸ்லாமியர். பணத்துடன் பேருந்தில் வரும்போது பணம் காணாமல் போகிறது.
அதன்பிறகு என்ன நடந்தது ? அனுமந்தராவ் தனது குழந்தையை காப்பாற்றினாரா ? இல்லையா ? என்பது மீதிக்கதை…

கூத்து கலைஞர்களின் வலி, ஒற்றுமை, காதல், மத நல்லிணக்கம், மனிதாபிமானம், தந்தை, மகள் அன்பு என திரைக்கதை அமைத்து நிகழ்காலத்தை கண்முன்னே நிறுத்தி, யோசிக்க வைத்திருக்கிறார் இயக்குநர்.
அனுமன் வேடமிட்டு தெருத்தெருவாக சுற்றி யாசகம் பெறுவது, பொறுப்பான கணவர், பாசமுள்ள தந்தை என கதாப்பாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார் பிஜேஷ். அதேபோல் விஜயகாந்த் வேடத்தில் நடித்துள்ள நாமக்கல் விஜயகாந்த், ஆதேஷ் பாலா, குழந்தை நட்சத்திரம் என அனைவரும் அவரவருக்கு கொடுக்கப்பட்ட பணிகளைச் செய்திருக்கிறார்கள்.