0 6 mths

ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையத்திற்கு மாமன்னர் ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி பெயர் சூட்ட வலியுறுத்தி, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகேயுள்ள மாமன்னர் ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி சிலை முன்பு தென் தமிழர் கட்சியின் சார்பில் மாநில ஒருங்கிணைப்பாளர் ம. பாலமுரளி தலைமையில் வருகிற ஜுன் 23 ஆம் தேதி  ஆர்ப்பாட்டம் நடத்த இருப்பதாக அக்கட்சியின் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

அந்த ஆர்பாட்டத்தில், தாய்தமிழர் கட்சியின் தலைவர் பி.ம. பாண்டியன், த.மு.மு.க மாவட்ட செயலாளர் கே.அப்துல் ரஹீம், தமிழர் முன்னனியின் பொதுச்செயலாளர் இமயம், சரவணன் ஆகியோர் சிறப்புரை ஆற்ற உள்ளனர். மேலும் பல்வேறு சமுதாய இயக்க நிர்வாகிகள், அரசியல் கட்சியின் பிரதிநிதிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொள்ள இருப்பதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *