ஜெர்ரி’ஸ் ஜர்னி இண்டர்நேஷனல் புரொடக்ஷன் ஹவுஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ஜுன் மோசஸ் இயக்கத்தில் அறிமுக நடிகர் வினோத் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘பேய் கதை’ படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் சென்னையில் வெளியிடப்பட்டது. இவ்விழாவில் இசையமைப்பாளர்கள் சபேஷ் – முரளி சிறப்பு […]
சினிமா
ஶ்ரீ துர்கா கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் V. ரவிச்சந்திரன் தயாரிப்பில், மதுமிதா, வேல்முருகன், ராஜலிங்கம், செந்தில் குமார், முருகேசன், மாரிக்கண்ணு, கோவை உமா உள்ளிட்டோர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் “நாளை நமதே”. கதைப்படி.. சிவகங்கை மாவட்டம் சிவதாணுபுரம் ஊராட்சியில் ஆதிக்க சாதியினர் […]
விமர்சனம்
சென்னை புரொடக்சன்ஸ் நிறுவனம் சார்பில் எழில் இனியன் தயாரிப்பில், மாஸ் ரவி, லட்சுமி பிரியா, மஞ்சு, சூப்பர் சுப்பராயன், சாய் தீனா, கல்லூரி வினோத், தங்கதுரை பவர் ஸ்டார் சீனிவாசன் உள்ளிட்டோர் நடிப்பில், மாஸ் ரவி இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் “காத்துவாக்குல […]
விமர்சனம்
ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பில், ஞானவேல்ராஜா தயாரிப்பில், சூர்யா, திஷா பதானி, பாபி தியோல் நடிப்பில், சிவா இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் “கங்குவா”. கதைப்படி.. ஒரு ஆராய்ச்சி கூடத்தில் சிறுவர்களின் மூளை திறனை அதிகரிக்க ஆராய்ச்சி மேற்கொள்கிறார்கள். அங்கிருந்து அந்த சிறுவன் […]
விமர்சனம்ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பில், ஞானவேல்ராஜா தயாரிப்பில், சூர்யா, திஷா பதானி, பாபி தியோல் நடிப்பில், சிவா இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் “கங்குவா”.
கதைப்படி.. ஒரு ஆராய்ச்சி கூடத்தில் சிறுவர்களின் மூளை திறனை அதிகரிக்க ஆராய்ச்சி மேற்கொள்கிறார்கள். அங்கிருந்து அந்த சிறுவன் தப்பித்து கோவா சென்றடைகிறான்.கோவாவில் பிரான்சிஸ் ( சூர்யா ) அவரது உதவியாளர் யோகி பாபு, திஷா பதானி, அவரது உதவியாளர் ரெடின் கிங்ஸ்லி ஆகிய நான்கு பேரும் இரண்டு குழுக்களாக காவல் ஆணையருக்கு ( கே எஸ் ரவிக்குமார் ) காவல்துறையால் பிடிக்க முடியாத ரவுடிகளை பிடித்துக்கொடுத்து பணம் சம்பாதிக்கிறார்கள். இருவருக்கும் காதல், மோதல் என காட்சிகள் நகர்கிறது.

ஒரு ரவுடியை பிடிக்கும் போது அவனை பிரான்சிஸ் சுட நேரிடுகிறது. அதை அந்த சிறுவன் பார்க்க, சாட்சி இருக்கிறதே என பிரான்சிஸ் அவனை தூக்க வரும்போது, ஆராய்ச்சி குழுவினர் அவனை தூங்குகிறார்கள், சிறுவன் மீது அதீதமான பாசத்தை காட்டும் பிரான்சிஸ், ஏதோ முன்ஜென்ம உறவு இருப்பதாக உணர்கிறான்.
அப்போது 1070 ஆம் ஆண்டு ரோமானிய மன்னன், ஒரு தீவில் இருக்கும் ஐந்து மலைக்கிராமங்களை அடைய நினைத்து வீரர்களுடன் கடலில் பயணிக்கிறான். அப்போது பெருமாச்சி கிராம மக்கள் வீரத்தில் சிறந்தவர்கள். அவர்களை போரிட்டு வெற்றி பெறமுடியாது, சூழ்ச்சியால் வெல்லலாம் என அரத்தி கிராமத்தைச் சேர்ந்த போஸ் வெங்கட் கூறி, கொடுவா என்பவனை ( நட்டி நட்ராஜ் ) அறிமுகப்படுத்த, நட்டியும் தங்க காசுகளுக்கு ஆசைப்பட்டு பெருமாச்சி வீரர்களை பழி கொடுக்கிறார். பெருமாச்சியின் இளவரசனான கங்குவா முன்னிலையில் நட்டி தீக்கிரையாக, அவரது மனைவி தன் மகனை கங்குவா கையில் ஒப்படைத்துவிட்டு அவளும் தீக்குளிக்கிறார். மக்களின் எதிர்ப்பை மீறி, அந்தப் பையனை காப்பாற்றுவதாக கங்குவா வாக்கு கொடுக்கிறார்.

ரோமானிய மன்னன் ஐந்தீவுகளையும் கைப்பற்றினானா ? ஐந்தீவுகளின் மக்கள் என்னானார்கள் ? கங்குவா கொடுத்த வாக்கை காப்பாற்றினானா என்பது மீதிக்கதை…
படத்தில் பிரமாண்டம் இருந்தாலும், அதற்கு இணையாக கதையும் இருக்க வேண்டுமல்லவா, பாகுபலிக்கு இணையாக தமிழில், அதுவும் சூர்யா நடிப்பில் பத்து மொழிகளில், பத்தாயிரம் திரையரங்குகளில் வெளியாகிறது எனத் தெரிந்ததும், தமிழ் திரையுலகிற்கு பெருமை சேர்க்கும் படமாக இருக்கும் என திரையுலகினர் எதிர்பார்ப்புடன் இருந்த நிலையில், மலைப்பிரதேசங்களில் விதவிதமான ஆடை, அணிகலன்கள் முரட்டுத்தனமான மக்களின் வாழ்க்கை முறை, போர் பயிற்சி என கவனம் செலுத்திய இயக்குநர் சிவா, பார்வையாளர்களை கதாப்பாத்திரத்திரத்தோடு கனெக்ட் செய்ய தவறிவிட்டார் என்றே சொல்லலாம்.

சூர்யா மலை பிரதேசத்தில் பாம்பு தேள் முதலை போன்ற உயிரினங்களுடன் சண்டையிடுவது, அவரது தோற்றம், உடல் மொழியால் கங்குவா கதாப்பாத்திரத்தில் பார்வையாளர்களை ஈர்த்து, மொத்த படத்தையும் சுமந்து சென்றிருக்கிறார். இந்த கதாப்பாத்திரத்திற்காக சூர்யா அர்பணிப்போடு மெனக்கெட்டுள்ளார்.

படத்தில் நிறைய முன்னனி நடிகர்கள் நடித்திருந்தாலும், போஸ் வெங்கட், கருணாஸ், பாபி தியோல் போன்ற ஒரு சிலரை மட்டும் அடையாளம் காணமுடிகிறது. தேவி ஶ்ரீ பிரசாத் இசை படம் முழுவதும் வசீகரித்ததோடு, சில இடங்களில் நெருடலை ஏற்படுத்துகிறது. இயக்குநர் கொஞ்சம் கதையில் கவணம் செலுத்தியிருந்தால், வழக்கமான கமர்ஷியல் படமாக இல்லாமல், சரித்திர படமாக மாறியிருக்கும் கங்குவா.
திருப்பூர் மாநகர எல்லைக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் போதை ஊசி, போதை மாத்திரை உள்ளிட்ட போதை வஸ்துக்கள் தாராளமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது என பொதுமக்கள் சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களுக்கு புகார் கொடுத்தால், புகார்தாரர்கள் குறித்த விபரங்களை மொபைல் எண்ணுடன், போதைப் பொருட்கள் […]
தமிழகம் மாவட்ட செய்திகள்திருப்பூர் மாநகர எல்லைக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் போதை ஊசி, போதை மாத்திரை உள்ளிட்ட போதை வஸ்துக்கள் தாராளமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது என பொதுமக்கள் சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களுக்கு புகார் கொடுத்தால், புகார்தாரர்கள் குறித்த விபரங்களை மொபைல் எண்ணுடன், போதைப் பொருட்கள் விற்பனை செய்பவர்களுக்கு கொடுத்துவிடுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இது சம்பந்தமாக வஞ்சிப்பாளைம் பகுதியினர் நம்மிடம் கூறுகையில்.. எங்கள் பகுதியில் போதை ஊசி, போதை மாத்திரை உள்ளிட்ட போதைப் பொருட்கள் சரளமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. விற்பனை செய்பவர்கள் விபரங்கள் அனைத்தும் வீரபாண்டி காவல்துறையினருக்கு நன்கு தெரியும். போதைப் பொருட்கள் விற்பனை செய்பவர்களிடம் மாதம், வாரம் என தவணை முறையில் பணத்தை லஞ்சமாக பெற்றுக்கொண்டு அவர்கள்தான் விற்பனை செய்யச் சொன்னதாகவும் தெரிகிறது. இதனால் கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் சிறுவயதிலேயே போதைப் பழக்கத்திற்கு ஆளாகி சீரழிந்து வருகின்றனர். பல குடும்பங்களில் இளைஞர்கள் படிப்பைத் தொலைத்துவிட்டு போதை ஆசாமிகளாக அழைக்கின்றனர்.

இதுசம்பந்தமாக நாங்கள் வீரபாண்டி காவல்துறையினருக்கு ஆதாரங்களுடன் புகார் கொடுத்தால், அவர்கள் எங்களது விபரங்களுடன், மொபைல் எண்ணையும் கொடுத்து விடுகிறார்கள். போதைப் பொருட்கள் விற்பனை செய்யும் நபர்கள், புகார் கொடுத்தவர்களை சந்தித்து போலீஸ் அனுமதியுடன் தான் விற்பனை செய்கிறோம். அவர்களுக்கு கொடுக்க வேண்டியதைக் மாதம் தவறாமல் கொடுக்கிறோம் எங்களை ஒன்றும் செய்ய முடியாது என புகார் கொடுப்பவர்களை மிரட்டுகிறார்கள் என்கிறார்கள்.
சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் நபர்கள் கொடுக்கும் சொற்ப பணத்திற்கு ஆசைப்பட்டு, எதிர்கால சந்ததியினரை சீரழிக்கும் செயலுக்கு காவல்துறையினரே உடந்தையாக இருப்பதை என்னவென்று சொல்வது… இளைஞர்களின் வாழ்க்கையை சீரழிக்கும் போதைப் பொருட்கள் விற்பனை செய்யும் கும்பல் மீது, திருப்பூர் மாநகர காவல்துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் தமிழ்நாடு அரசும், தமிழக காவல்துறையும் போதைப் பொருட்கள் விற்பனையை ஒழிப்பதற்கு எவ்வளவோ முயற்சிகள் மேற்கொண்டாலும், வீரபாண்டி காவல்துறையினர் போல் இருந்தால்.. வேலியே பயிரை மேய்ந்த கதைபோல்தான் ஆகிவிடும் என்கிறார்கள் ஆதங்கத்துடன்..!
மேற்கு மண்டல ஐ.ஜி,திருப்பூர் மாநகர காவல்துறை ஆணையர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்வார்களா ? காத்திருப்போம்… நம்பிக்கையுடன்…!
-ஹரிதாஸ்
மாவட்ட செய்தியாளர்
இந்திய திரைத்துறையில் தலைசிறந்த இயக்குநர்களில் ஒருவர், இயக்குநர் ஷங்கர். இவர் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘கேம் சேஞ்சர்’ திரைப்படத்தில் குளோபல் ஸ்டார் ராம் சரண் நடித்துள்ளார். இந்தப் படத்தில் கியாரா அத்வானி கதாநாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் எஸ்.ஜே. சூர்யா, அஞ்சலி உள்ளிட்ட […]
சினிமாஇந்திய திரைத்துறையில் தலைசிறந்த இயக்குநர்களில் ஒருவர், இயக்குநர் ஷங்கர். இவர் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘கேம் சேஞ்சர்’ திரைப்படத்தில் குளோபல் ஸ்டார் ராம் சரண் நடித்துள்ளார். இந்தப் படத்தில் கியாரா அத்வானி கதாநாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் எஸ்.ஜே. சூர்யா, அஞ்சலி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். முன்னணி தொழில்நுட்ப கலைஞர்கள் இணைந்துள்ள ‘கேம் சேஞ்சர்’ படத்தை தயாரிப்பாளர் தில் ராஜூவின் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மூவிஸ் மற்றும் ஆதித்யாராம் மூவிஸ் சார்பில் ஆதித்யாராம் இணைந்து தயாரித்துள்ளனர்.
‘கேம் சேஞ்சர்’ படத்தைத் தொடர்ந்து அதிக தமிழ் திரைப்படங்கள் மற்றும் பான் இந்தியா திரைப்படங்களை இணைந்து தயாரிக்க உள்ளதாக ஸ்ரீ வெங்கடேஸ்வரா மூவிஸ் மற்றும் ஆதித்யாராம் மூவிஸ் இணைந்து அறிவித்துள்ளன. இந்த கூட்டணி முதல் முறையாக ‘கேம் சேஞ்சர்’ படத்திற்காக இணைந்துள்ளது. இது தொடர்பான நிகழ்வில் தயாரிப்பாளர் தில் ராஜூ மற்றும் ஆதித்யாராம் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் பேசிய தயாரிப்பாளர் தில் ராஜூ, 21 ஆண்டுகால பயணத்தில் இது எனது 50வது திரைப்படம் ஆகும். மூன்று ஆண்டுகளுக்கு முன் இயக்குநர் ஷங்கர் என்னிடம் கூறிய கதைக்களம் எனக்கு சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியது. என் நண்பர் ஆதித்யாராம் நான்கு திரைப்படங்களை தெலுங்கு மொழியில் தயாரித்துள்ளார், அதன்பிறகு சென்னையில் அவர் ரியல் எஸ்டேட் துறையில் ஈடுபட்டு வந்தார். நான் அவரிடம் ‘கேம் சேஞ்சர்’ என்ற தெலுங்கு படத்தில் பணியாற்றி வருவதாக கூறி, இருவரும் இணைவது குறித்து பரிந்துரைத்தேன். ‘கேம் சேஞ்சர்’ மட்டுமல்ல, நாங்கள் தமிழ் மற்றும் பான் இந்தியன் திரைப்படங்களிலும் இணைந்து பணியாற்ற இருக்கிறோம்.
முதற்கட்டமாக லக்னோவில் வைத்து நவம்பர் 9 ஆம் தேதி திரைப்படத்தின் டீசரை வெளியிடுகிறோம். அதன்பிறகு அமெரிக்கா மற்றும் சென்னையில் வைத்தும் நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. ஜனவரி மாத முதல் வாரத்தில் தெலுங்கானாவில் ஒரு நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. இந்தப் படம் ஜனவரி 10 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
எல்லா இடங்களிலும் மாபெரும் வெற்றி பெறக்கூடிய அம்சங்கள் இந்தப் படத்தில் உள்ளன. எப்போதுமே ஷங்கர் படங்கள் விசேஷமாகவும், வித்தியாசமாகவும் இருக்கும். விசேஷ தீம் மட்டுமின்றி இந்தப் படத்தில் ஏராளமான பொழுதுபோக்கு விஷயங்களும் உள்ளன. ‘ஆர்.ஆர்.ஆர்.’ படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து ராம் சரண் நடிக்கும் படம் இது என்றார்.

ஆதித்யாராம் மூவிஸ் சார்பில் தயாரிப்பாளர் ஆதித்யாராம் பேசும் போது, நாம் பேசக் கூடாது, நமது வேலை தான் பேச வேண்டும்’ என்பதை நம்புவதால், நான் பொதுவாக யூடியூப் அல்லது வீடியோ நேர்காணல்கள் கொடுப்பதில்லை. எனினும், சூழ்நிலைகள் மாறிவிட்டதாலும், தில் ராஜூ கொடுத்த ஊக்கம் காரணமாகவும், இந்த மேடையில் நான் உரையாற்றிக் கொண்டு இருக்கிறேன்.
எங்கள் தயாரிப்பு நிறுவனம் ஏற்கனவே பிரபாஸ் நடித்த படம் உள்பட நான்கு தெலுங்கு திரைப்படங்களை தயாரித்துள்ளது. அதன்பிறகு, நான் ரியல் எஸ்டேட் மீது ஆர்வம் கொண்டு, திரைப்படத் துறையில் இருந்து இடைவெளி எடுத்துக் கொண்டேன். தற்போது தில் ராஜூன் ஆதரவுக்கு நன்றி கூறி, ‘கேம் சேஞ்சர்’ திரைப்படத்துடன் கம்பேக் கொடுப்பதில் சுவாரஸ்யமாக இருக்கிறேன். இருவரும் அதிக தமிழ் மற்றும் பான் இந்தியன் படங்களை எடுக்க ஆர்வமாக இருக்கிறோம். தற்போது நாங்கள் சரியான இயக்குநர்கள் மற்றும் கதைகளை தேர்வு செய்து வருகிறோம். தில் ராஜூவிடம் எனக்கு மிகவும் பிடித்த விஷயம் அவர் சரியான கதை மற்றும் இயக்குநரை தேர்வு செய்யும் விதம் தான். இத்துடன் அவரது அசாத்திய தயாரிப்பு பணிகள் என்னை கவர்ந்துள்ளது. அதிகளவு பிளாக்பஸ்டர் வெற்றிப் படங்களை கொண்ட வெகு சில தயாரிப்பாளர்களில் அவர் ஒருவர். ஆதித்யாராம் மூவிஸ் அவருடன் இணைந்து அடுத்தடுத்த படங்களில் கூட்டணி அமைக்க ஆர்வம் மற்றும் பெருமை கொண்டுள்ளது என்றார்.
நகுல் போலீஸ் பாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘தி டார்க் ஹெவன்’. இப்படத்தை பாலாஜி இயக்கியுள்ளார். இவர் ஏற்கெனவே ‘டி3’ படத்தை இயக்கியவர். கோதை என்டர்டெயின்மென்ட் மற்றும் எம்.எஸ் மீடியா ஃபேக்டரி இணைந்து தயாரித்துள்ளன. இப்படத்தின் சிறப்பு அறிமுக நிகழ்ச்சி சென்னை பிரசாத் […]
சினிமாநகுல் போலீஸ் பாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘தி டார்க் ஹெவன்’. இப்படத்தை பாலாஜி இயக்கியுள்ளார். இவர் ஏற்கெனவே ‘டி3’ படத்தை இயக்கியவர். கோதை என்டர்டெயின்மென்ட் மற்றும் எம்.எஸ் மீடியா ஃபேக்டரி இணைந்து தயாரித்துள்ளன. இப்படத்தின் சிறப்பு அறிமுக நிகழ்ச்சி சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் நடிகர் நகுல், இயக்குநர் பாலாஜி மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் இயக்குநர் பாலாஜி பேசும்போது, இப்படத்தின் பர்ஸ்ட் லுக்கை சசிகுமார் வெளியிட்டுள்ளார். எனது முதல் படத்திற்கும் அவர்தான் வெளியிட்டார், அவரிடம் நான் உரிமையாகக் கேட்டபோது அவர் வெளியிட்டு உதவியுள்ளார். அந்த அளவிற்கு நான் அவரிடம் உரிமை எடுத்துக் கொள்வேன். இந்தப் படம் ரொம்ப நன்றாக வந்திருக்கிறது. நகுலுக்கு இதில் நல்ல பெயர் கிடைக்கும். இதில் நடித்துள்ள இன்னொரு நடிகர் அலெக்ஸ். அவருக்கும் நல்ல பெயர் கிடைக்கும். மூன்று காலகட்டத்தில் மூன்று தோற்றங்களுக்கு அவர் மாற வேண்டி இருந்தது. அவர் அவ்வளவு உழைத்துள்ளார். நகுலைப் பல படங்களில் பார்த்திருக்கிறோம். இதுவரை பார்த்து வந்த நகுல் வேறு. இதில் வேறு மாதிரியாக நகுலைப் பார்ப்பார்கள். டி-3 படம் முடித்த பிறகு எனக்கு தோன்றியது ஒன்றுதான், இது தப்பான படம் இல்லை என்று தோன்றியது. அது கோவிட் கால கட்டத்தில் போராடி எடுத்த படம்.

ஒரு படம் வரவில்லை, வெற்றி பெறவில்லை என்றால் அதற்குப் பல காரணங்கள் இருக்கும். அதற்கு முக்கியமான காரணம் படத்தை நல்ல விதமாக மக்களிடம் கொண்டு போய்ச் சேர்க்க வேண்டும். அது மிகவும் முக்கியம். ஏனென்றால் கடவுளுக்கே விளம்பரம் தேவைப்படும் காலம் இது. இரண்டரை மணி நேரம் ஓடக்கூடிய படத்தையும் நல்ல முறையில் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். இதில் நாட்டார் கதையை வைத்து ஒரு திரில்லராக உருவாக்கி இருக்கிறோம். இந்த திரில்லர் வேறு மாதிரியாக இருக்கும். முதலில் இந்தப் படத்தை எடுக்கலாமா என்று யோசித்தபோது காந்தாரா படத்தின் வெற்றி எனக்குப் பெரிதும் நம்பிக்கை அளித்தது. படத்தில் ஆங்கிலத் தலைப்பை வைத்ததைப் பற்றிக் கேட்கிறார்கள். படத்திற்குப் பொருத்தமாக இருப்பதால் தான் அப்படி வைத்தோம். வேறு வழி இல்லை. மற்றபடி தமிழில் வைக்கக் கூடாது என்று எந்த உள்நோக்கமும் கிடையாது.
என்னைப் பொறுத்தவரை ஒரு இயக்குநருக்கு முடியாது என்று எதையும் சொல்லக்கூடாது என்று நினைப்பவன். நகுல் ஒரு கதாநாயகனுக்குரிய நடிகர். ஆனால் அவரிடம் இருந்து அந்த கதாநாயகத்தனத்தை இன்னும் சரியாக வெளியே கொண்டு வரவில்லை என்று தான் சொல்ல வேண்டும். நகுல் இந்தப் படத்தில் சொன்னபடியெல்லாம் கேட்டு முழு ஒத்துழைப்பு கொடுத்தார். அவருக்குக் கதை தெரியுமா என்று கூடத் தெரியவில்லை. அந்த அளவிற்கு அவர் ஒத்துழைப்பு கொடுத்தார். இந்தப் படம் எல்லா காவல் தெய்வங்களையும் நினைவுபடுத்தும். சிறுவயதில் கேட்ட கேள்விப்பட்ட அனுபவங்களை வைத்துத்தான் இந்தப் படத்தை உருவாக்கி இருக்கிறேன். பட்ஜெட் படமாக ஆரம்பித்தது ஆனால் செலவு ஏழரைக் கோடியை தாண்டி விட்டது. இந்தப் படம் நிச்சயமாக தப்பு பண்ணாது. அனைவருக்கும் பிடிக்கும். எனவே இந்தப் படத்தின் மீது அதிக நம்பிக்கையுடன் இருக்கிறோம் என்றார்.

நடிகர் நகுல் பேசும் போது.. இதில் நான் போலீசாக நடித்திருக்கிறேன். நான் சினிமாவிற்கு வந்து இப்போதுதான் முதல் முறையாக இப்படி நடிக்கிறேன். எனவே முதலில் கொஞ்சம் பதற்றமாக இருந்தது. எனக்குச் சின்ன வயதில் இருந்து ராணுவத்தில் சேர வேண்டும் என்று ஆசை. காக்கி யூனிபார்ம் மீது எனக்கு ஒரு காதல் உண்டு. நான் நடிக்க வந்து 20 ஆண்டு ஆகிவிட்டது என்று இங்கே கூறினார்கள். ஆனால் நான் எதையுமே செய்யாதது போல் இருக்கிறது. இப்போதுதான் ஆரம்பித்தது போல் இருக்கிறது. நான் எந்த ஒரு யோசனையும் இல்லாமல் தான் நடிக்க வந்தேன். இப்படி நடிக்க வேண்டும் அப்படி நடிக்க வேண்டும் என்றெல்லாம் கனவு அப்போது இல்லை. படிப்படியாக இப்போது 20 ஆண்டு கடந்து விட்டேன். இப்போதுதான் ஆரம்பித்து இருக்கிறேன். சினிமா எனது வாழ்க்கை. நான் கடந்த காலத்தை பற்றிக் கவலைப்படுவதில்லை. அதை நினைத்துப் பார்ப்பதில்லை, இன்றைய இந்தத் தருணத்தை மட்டுமே இனிமையாக்க வேண்டும் என்று தான் நினைப்பேன். எதிர்காலத்தைப் பற்றி நான் நினைப்பதில்லை, ஒவ்வொரு நாளும் சிறு சிறு முன்னேற்றத்தைக் காண்கிறேன். ஒவ்வொரு நாளும் கேமரா முன் நிற்கும்போது நாம் ஏதாவது செய்ய வேண்டும் என்று தோன்றுகிறது. சிறுவயதில் யூனிபார்ம் மீது எனக்கு ஒரு ஆசை ஒரு கிரேஸ் இருந்தது. ராணுவம் போலீஸ் மூவி செய்ய ஆசை. ஏற்கெனவே கமல், சூர்யா என்று எல்லாம் ஒரு அடையாளமாக உருவாக்கி வைத்திருக்கிறார்கள். சினிமாவில் போலீஸ் என்றால் ராகவன், அன்புச் செல்வன் என்று பாத்திரங்கள் நினைவுக்கு வருகின்றன. அந்த வரிசையில் இளம் பாரியும் இருக்கும். என் மீது நம்பிக்கை வைத்து பாலாஜி அழைத்த போது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. நான் பட்ஜெட்டை விட ஸ்கிரிப்டை முக்கியமாகப் பார்ப்பேன். நல்ல கதைதான் படத்திற்கு முக்கியம் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை. நான் முடிந்த அளவிற்கு அனைவரையும் கவரும்படி இதில் நடித்துள்ளேன் என்று நம்புகிறேன். நான் இயக்குநர் பாலாஜியிடம் நிறைய கேள்வி கேட்பேன். எனக்குத் தெளிவாகும் வரை, விடமாட்டேன் கேட்டுக் கொண்டே இருப்பேன். ஆனால் பாலாஜி எப்போது கேட்டாலும் பதில் சொல்வதில் தெளிவாக இருந்தார். படப்பிடிப்பின் போது தனக்குத் தேவையானதை வாங்கிக் கொள்வதில் அவர் சமரசம் இல்லாமல் இருந்தார். அப்படியே இப்படத்தை முடித்து இருக்கிறார். திரைக்கதை நடிப்பு எல்லாமும் நன்றாக வந்திருக்கிறது. இது மாஸ் ஆக்சன் படம் போல் இல்லாவிட்டாலும் பாபநாசம் படத்தைப் பார்த்த அந்த உணர்வு ஏற்படும்.
என்னை நினைத்தால் எனக்கே வேடிக்கையாக இருக்கும். நான் மிகவும் கூச்ச சுபாவம் உள்ளவன். நான் ஒரு தனிமை விரும்பி, யாரிடமும் அதிகம் பேச மாட்டேன். ஆனால் உடன் பேசுவரின் மனநிலை அறிந்து அதன்படி பழகுவேன். நான் முன்பே சொன்னேன் ராணுவத்தில் சேர வேண்டும் என்று ஆசைப்பட்டேன் என்று. அப்படிச் சாதாரணமாக நினைத்து விட முடியாது. அதற்கு ஒரு தைரியம் இருக்க வேண்டும்; லட்சியம் இருக்க வேண்டும்; தேசப்பற்று இருக்க வேண்டும். உடல் தகுதி வேண்டும்.

இப்படிப்பட்ட பாத்திரத்தில் நடிக்க,
யூனிபார்ம் போட்டால் மட்டும் போதாது. ஒரு டிராபிக் கான்ஸ்டபிள் ஆக இருந்தால் கூட அந்த யூனிஃபார்முக்கு ஒரு மரியாதை, சக்தி இருக்கிறது. அதை அணிந்த பிறகு வேறு மாதிரியான கம்பீர உணர்வு நமக்கு வரும். அதை நடித்த போது உணர்ந்தேன். நம்மைப் பார்த்து ஒருவர் சல்யூட் அடிக்கும் போது நாம் உணர்வது வேறு வகையிலானது. நான் இந்தப் பாத்திரத்தில் நடிக்கும் போது சிரித்ததே கிடையாது. யூனிஃபார்ம் அணிந்தவர்களின் குறிப்பாக போலீஸ் காவல்துறையின் வாழ்க்கை எப்படி இருக்கும்? அவர்கள் எப்படி வேலையே வாழ்க்கையாக இருக்கிறார்கள். அது சுலபமானதல்ல, அவர்களுக்கு விடுமுறையே கிடையாது எங்கும் எப்போதும் இருப்பார்கள். 100 க்குப் போன் செய்தால் ஐந்து நிமிடத்தில் பேட்ரல் வண்டி வந்து விடுகிறது. ஸ்காட்லாந்து யார்டுக்குப் பிறகு தமிழ்நாடு போலீஸ் தான் என்பார்கள். அப்படி நான் இந்த இளம்பாரி கதாபாத்திரத்தில் நடித்ததில் மிகவும் பெருமைப்படுகிறேன். நான் அந்தப் பெயரையே நேசிக்கிறேன். காதலுடன் நான் சினிமாவில் இருக்கிறேன் ரசித்து ரசித்து செய்கிறேன். இன்னும் என்னவெல்லாமோ செய்ய வேண்டும் என்று ஆசைகள் உள்ளுக்குள் நிறைய உள்ளன. இந்தப் படத்தில் நடித்த போது ஒரு கிரிக்கெட் டீம் போல இருந்தோம். வெங்கட் பிரபுவின் சென்னை 28 குழுவினர் போல் நாங்கள் இருந்தோம். இதில் புதிது புதிதாக நடித்தவர்கள் எல்லாம் ஊரிலிருந்து வந்திருக்கிறோம் சினிமா வெறியோடு வந்திருக்கிறோம் என்றார்கள். அப்படி அனைவரும் ஒத்துழைப்பு கொடுத்து நடித்தார்கள், பணியாற்றினார்கள் என்றார்.
நிகழ்ச்சியில் படத்தின் ஒளிப்பதிவாளர் மணிகண்டன், இசையமைப்பாளர் சக்தி பாலாஜி ஆகியோருடன் படத்தில் நடித்தவர்களும் சின்னத்திரை, யூடியூப் என்று தனக்கான தனிப்பாதையில் பயணம் செய்து வளர்ந்து வரும் கலைஞர்களான
அலெக்ஸ் , அந்தோணி, கோதை சந்தானம், சரண், கேசவன், பிரதீப், சிவா ருத்ரன் ஆகியோரும் கலந்து கொண்டு பேசினார்கள். இந்தப் படம் விரைவில் வெளிவர உள்ளது.
டி-3 படத்திற்கு பட்ட கடனுக்காகத் தனது காரை விற்றிருந்தார் இயக்குநர் பாலாஜி. இந்தப் படத்தில் இலங்கையில் இருந்து வந்து நடித்திருந்த நடிகர் சரண், அந்தக் காரை வாங்கியிருந்த வரிடம் தேடிப் பிடித்து மீட்டு எதிர்பாராத வகையிலான தனது அன்புப் பரிசாக அந்தச் சாவியை இயக்குநர் பாலாஜியிடம் அளித்தார். பாலாஜி நெகிழ்ச்சியால் கண்ணீர் விட்டார், விழாவுக்கு வந்திருந்த அனைவரும் ஒருகணம் ஸ்தம்பித்து நின்றனர்.
ஸ்கிரீன் சீன் மீடியா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிப்பில், ஜெயம் ரவி, பிரியங்கா மோகன், பூமிகா, நட்டி நட்ராஜ், சரண்யா ராவ் ரமேஷ், விடிவி கணேஷ் உள்ளிட்டோர் நடிப்பில், ராஜேஷ் எம் இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் “பிரதர்”. கதைப்படி.. வழக்கறிஞர் படிப்பை பாதியிலேயே […]
விமர்சனம்ஸ்கிரீன் சீன் மீடியா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிப்பில், ஜெயம் ரவி, பிரியங்கா மோகன், பூமிகா, நட்டி நட்ராஜ், சரண்யா ராவ் ரமேஷ், விடிவி கணேஷ் உள்ளிட்டோர் நடிப்பில், ராஜேஷ் எம் இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் “பிரதர்”.
கதைப்படி.. வழக்கறிஞர் படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு, சட்டம் பேசி ஊர் வம்பை விலைக்கு வாங்கி திரிகிறார் கார்த்திக் ( ஜெயம் ரவி ). இவர் வசிக்கும் அடுக்குமாடிக் குடியிருப்பில் உள்ள பிரச்சினை சம்பந்தமாக வழக்குத் தொடர்ந்ததால் தாய், தந்தைக்கு பிரச்சினை ஏற்படுகிறது.அங்கு இதனால் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார் அவரது தந்தை. அவரைப் பார்ப்பதற்காக ஊட்டியிலிருந்து வரும் அவரது அக்கா பூமிகா, கார்த்தியை திருத்துவதற்காக ஊட்டிக்கு அழைத்துச் செல்கிறார்.

அக்கா வீட்டுக்கு சென்றதும் கார்த்தியின் செயல்பாடுகளால், அந்தக் குடும்பமே அமைதி இழந்து சின்னாபின்னமாகிறது. அப்போது அவரது தாய், தந்தை அங்கு வருகிறார்கள். கார்த்திக் பற்றிய சில உண்மைகளைக் கூறி, குடும்பத்தை ஒன்று சேர்க்காமல் என்னை அப்பா என அழைக்கக் கூடாது எனக்கூறி சென்னைக்கு செல்கின்றனர்.
அதனைத் தொடர்ந்து பிரிந்த குடும்பத்தை ஒன்று சேர்க்க முயற்சிக்கிறார் கார்த்திக். அவரது முயற்சிக்கு வெற்றி கிடைத்ததா இல்லையா என்பது மீதிக்கதை..

குடும்பத்தில் பின்விளைவுகளைப் பற்றி கவலைப்படாமல், குடும்ப உறுப்பினர் பேசினால் ஏற்படும் சிக்கல்களை சொல்வதற்காக, எங்கெங்கோ செல்கிறது திரைக்கதை. ராஜேஷின் முந்தைய படங்களை ஒப்பிடுகையில், இந்தப் படத்தில் சுவாரஸ்யம் குறைவுதான்.
கலகலப்பு, லூட்டி, எமோஷன் என நடிப்பில் வித்தியாசங்களை வெளிப்படுத்தியிருக்கிறார் ஜெயம் ரவி. பிரியங்கா மோகன், நட்டி நட்ராஜ், சரண்யா, ராவ் ரமேஷ் உள்ளிட்ட நடிகர், நடிகையர் அனைவரும் அவரவருக்கு கொடுக்கப்பட்ட பணிகளைச் சிறப்பாக செய்திருக்கிறார்கள். விடிவி கணேஷ் வரும் காட்சிகளில் சிரிக்கக் தோன்றுகிறது. மற்றபடி ராஜேஷ் படம் என்றால் காமெடி இருக்கும் என நினைத்துச் சென்றால் ஏமாற்றமே !
ராஜ்கமல் நிறுவனம் தயாரிப்பில், சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடிப்பில் வெளிவந்துள்ள படம் “அமரன்”. கதைப்படி.. சென்னையில் நடுத்தர குடும்பத்தில் பிறந்த முகுந்த் வரதராஜன் ( சிவ கார்த்திகேயன் ) ராணுவத்தில் சேர விரும்புகிறார். அவரது தாய் கீதாவுக்கு ( கீதா கைலாசம் […]
விமர்சனம்ராஜ்கமல் நிறுவனம் தயாரிப்பில், சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடிப்பில் வெளிவந்துள்ள படம் “அமரன்”.
கதைப்படி.. சென்னையில் நடுத்தர குடும்பத்தில் பிறந்த முகுந்த் வரதராஜன் ( சிவ கார்த்திகேயன் ) ராணுவத்தில் சேர விரும்புகிறார். அவரது தாய் கீதாவுக்கு ( கீதா கைலாசம் ) மகன் ராணுவத்துக்கு செல்வதில் விருப்பம் இல்லை. ஆனால் முகுந்த் வரதராஜனின் காதலி இந்து ரெபேக்கா ( சாய் பல்லவி ) துணை நிற்கிறார். பின்னர் ராணுவத்தில் சேர்ந்து காஷ்மீர் சென்று தனது திறமையின் காரணமாக கேப்டன், மேஜர் என உயர் பதவிகளை அடைகிறார்.

கேரளாவிலிருந்து சென்னையில் படிக்க வந்த இடத்தில் முகுந்துடன் ஏற்பட்ட காதலை இந்துவின் பெற்றோர் ஏற்க மறுக்கிறார்கள். முகுந்த் ராணுவத்தில் பணிபுரிவதால் மகளின் வாழ்க்கையை இழக்க நேரிடும் என்பதால் மறுக்கிறார்கள். பின்னர் இருவரும் சமாளித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்கிறார்கள். இவர்களுக்கு பெண் குழந்தை பிறக்கிறது.
பின்னர் காஷ்மீரில் தீவிரவாதிகளை ஒடுக்க RR -44 தனிப்படைக்கு தலைமை பொறுப்பில் நியமிக்கப்படும் மிகுந்த், தீவிரவாதத்திற்கு எதிரான போரில் சாதித்தாரா என்பது மீதிக்கதை..

காஷ்மீரில் தீவிரவாதத்திற்கு எதிராக போரிட்டு வீரமரணம் அடைந்த முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுத்திருக்கிறார் ராஜ்குமார் பெரியசாமி. முகுந்த், இந்து இருவருக்குமான காதல், உணர்வுப்பூர்வமான பரிமாற்றங்கள் என அனைத்து காட்சிகளும் ரசிக்கும் விதமாக காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குநர். காஷ்மீர் எல்லையில் ராணுவம் எப்படி இயங்குகிறது, அங்கிருக்கும் சவால்கள், தீவிரவாதத்தால் அங்குள்ள மக்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளை, நேரில் பார்த்த உணர்வு ஏற்படுகிறது.
சிவ கார்த்திகேயனின் சினிமா வாழ்க்கையில் “அமரன்” திரைப்படம் மறக்க முடியாத திருப்புமுனையை ஏற்படுத்திய படம் என்றே சொல்லலாம். அதேபோல் காதல், மனைவி, தாய் என பல்வேறு பரிமாணங்களில் தனது நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் சாய் பல்லவி. படத்தில் நடித்துள்ள நடிகர், நடிகையர் அனைவரும் அவரவருக்கு கொடுக்கப்பட்ட பணிகளைச் சிறப்பாக செய்திருக்கிறார்கள்.
சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் தயாரிப்பில், வெங்கட் அட்லூரி இயக்கத்தில், துல்கர் சல்மான், மீனாட்சி சௌத்ரி, ராம்கி உள்ளிட்டோர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் “லக்கி பாஸ்கர்”. கதைப்படி.. மும்பையில் தனியார் வங்கியில் காசாளராக பணிபுரியும் பாஸ்கர் ( துல்கர் சல்மான் ), மனைவி சுமதி […]
விமர்சனம்சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் தயாரிப்பில், வெங்கட் அட்லூரி இயக்கத்தில், துல்கர் சல்மான், மீனாட்சி சௌத்ரி, ராம்கி உள்ளிட்டோர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் “லக்கி பாஸ்கர்”.
கதைப்படி.. மும்பையில் தனியார் வங்கியில் காசாளராக பணிபுரியும் பாஸ்கர் ( துல்கர் சல்மான் ), மனைவி சுமதி ( மீனாட்சி சௌத்ரி ), மகன் கார்த்திக் ( ரித்விக் ), அப்பா, தம்பி, தங்கையிடன் வசித்து வருகிறார். நேர்மையாக தனது குடும்பத்துக்காக அர்ப்பணிப்புடன் வாழ்ந்துவரும் அவருக்கு, அன்றாட குடும்பம் நடத்தவே அவரது வருமானம் போதாததால், அக்கம்பக்கத்தில் கடன் வாங்கி குடும்பத்தை நடத்துகிறார்.

இந்நிலையில் வங்கியில் அவருக்கு பதவி உயர்வு வழங்க இருப்பதாக தெரியவருகிறது. பதவி உயர்வு வந்ததும் பல பிரச்சனைகளுக்கு முடிவு கட்டிவிட வேண்டும் என நினைத்திருக்கையில், வேறு நபருக்கு அந்த பதவி உயர்வு கிடைக்க, பாஸ்கர் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து, மேலாளரிடம் சண்டையிட்டு, சமாதானம் ஆகிறார். அப்போது வங்கியில் கடன் கேட்டு விண்ணப்பிக்க ராம்கி வருகிறார். பின்னர் நேர்மையாக இருந்தால் எதுவும் நடக்காது என புதிதாக ஒரு வழியைத் தேர்வு செய்கிறார் பாஸ்கர்.
பாஸ்கரின் அதிரடி முடிவால் அவருக்கு ஏற்பட்ட பிரச்சினைகள் என்ன ? அதிலிருந்து மீண்டு பாஸ்கர் எப்படி லக்கி பாஸ்கர் ஆனார் என்பது மீதிக்கதை…

மும்பை பங்குச்சந்தை வர்த்தகத்தில் நடைபெற்ற மோசடிகள், அதற்கு வங்கிகள் எவ்வாறு துணை புரிந்தது, அதில் பெரும்புள்ளிகளின் பங்களிப்பு பற்றிய உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு, தனது நேர்த்தியான திரைக்கதை மூலம் அற்புதமாக கதையை நகர்த்தியிருக்கிறார் இயக்குநர் வெங்கட் அட்லூரி.
கடன்காரர்களை சமாளிப்பது, உறவினர்களின் அவமானம், குழந்தைக்கு உணவு வாங்கிக் கொடுக்க முடியாமல் தவிப்பது, குடும்பத்துக்காக தவறு செய்யும் போது வரும் பதட்டம் என ஒவ்வொரு காட்சியிலும் தனது அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் துல்கர் சல்மான்.
அதேபோல் மீனாட்சி சௌத்ரி, ராம்கி, சாய்குமார் உள்ளிட்ட நடிகர் நடிகைகளும் அவரவருக்கு கொடுக்கப்பட்ட பணிகளைச் சிறப்பாக செய்திருக்கிறார்கள்.
இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில், சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ் தயாரிப்பில் நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் ’லக்கி பாஸ்கர்’ திரைப்படம் 31 அக்டோபர் 2024 அன்று தீபாவளிக்கு திரையரங்குகளில் வெளியாகிறது. இதன் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடந்தது. இதில் கலந்து கொண்ட நடிகர் ராம்கி, […]
சினிமாஇயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில், சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ் தயாரிப்பில் நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் ’லக்கி பாஸ்கர்’ திரைப்படம் 31 அக்டோபர் 2024 அன்று தீபாவளிக்கு திரையரங்குகளில் வெளியாகிறது. இதன் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடந்தது.

இதில் கலந்து கொண்ட நடிகர் ராம்கி, ‘லக்கி பாஸ்கர்’ படம் பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது. இந்தப் படத்தைத் தயாரித்த சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் சினிமாத் துறையில் மிகப்பெரிய கம்பெனி. இந்தப் படத்தை தமிழுக்கு ஏற்றது போலவும் கொண்டு வந்திருக்கிறார்கள். படம் நன்றாக வந்திருக்கிறது. லக் என்றால் அதிர்ஷ்டம். நாம் ஒரு விஷயத்திற்கு தயாராக இருக்கும்போது வரும் வாய்ப்புதான் அதிர்ஷ்டம் என்போம். துல்கர் திறமையான நடிகர். அப்பா சூப்பர் ஸ்டாராக இருந்தாலும் நம்மிடம் எளிமையாகப் பழகுவார். பழைய பாம்பேவை நம் கண் முன்னே செட் போட்டுக் கொண்டு வந்திருக்கிறார்கள். வெங்கி அட்லூரி அதட்டாமல் எல்லோரிடமும் அமைதியாக வேலை வாங்கி படத்தை சிறப்பாகக் கொண்டு வந்திருக்கிறார். மீனாட்சி செளத்ரி அழகோடு சிறப்பாக நடிக்கவும் செய்திருக்கிறார். இந்தப் படமும் ரூ.100 கோடி வசூலைப் பெற்று எல்லோருக்கும் ‘லக்கி’யாக அமைய வாழ்த்துக்கள். தீபாவளிக்கு குடும்பத்தோடு இந்தப் படம் பாருங்கள் என்றார்.

இயக்குநர் வெங்கி அட்லூரி, இந்தப் படம் எனக்கு ரொம்பவே ஸ்பெஷல். ஏனெனில், ‘வாத்தி’ படம் முடித்ததும் அதிலிருந்து வித்தியாசமாக எதாவது படம் செய்ய வேண்டும் என்று நினைத்தேன். கிரே ஷேட் கேரக்டரில் என் ஹீரோவை கொண்டு வர நினைத்து செய்ததுதான் ‘லக்கி பாஸ்கர்’. என் கனவின் மீது நம்பிக்கை வைத்து படம் தயாரித்துக் கொடுத்த சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸூக்கு நன்றி. படம் பிரம்மாண்டமாக வந்துள்ளது. நடிகர் ரஜினிகாந்தின் ‘அண்ணாமலை’ படத்திற்கு நான் மிகப்பெரிய ரசிகன். அதில் ரஜினி வசனமே இல்லாமல் மாஸான பின்னணி இசையோடு நடந்து வருவதும், ‘கூட்டி கழிச்சு பாரு கணக்கு கரெக்ட்டா இருக்கும்’ என பன்ச் வசனமும் எனக்கும் மிகவும் பிடிக்கும். அதை மனதில் வைத்தும் இந்தக் கதையில் சில ஆக்ஷன் காட்சிகளைக் கொண்டு வர முயன்றேன். ஜிவி பிரகாஷ் இந்தப் படத்திலும் சிறப்பான இசையும் பாடல்களும் கொடுத்துள்ளார். இந்திய சினிமாவில் வங்கியை மையப்படுத்தி குறைவான படங்களே வந்திருக்கும். அதில், ‘லக்கி பாஸ்கர்’ படமும் ஒன்று. படம் நிச்சயம் அனைவருக்கும் பிடிக்கும் என்றார்.

நடிகர் துல்கர் சல்மான் பேசியதாவது, நீண்ட இடைவேளைக்குப் பிறகு என் படம் ‘லக்கி பாஸ்கர்’ வருவதில் மகிழ்ச்சியாக இருக்கிறேன். பாஸ்கர் கேரக்டர் எல்லோருக்கும் கனெக்ட் ஆகும். வீட்டில் சம்பாதிக்கும் ஒரே நபர் பாஸ்கர் என்பதால் அதை சுற்றி கதை இருக்கும். இப்போது என் உடல்நிலை சரியாகி இருப்பதால் இந்தப் படத்திற்கும் டப்பிங் கொடுத்திருக்கிறேன். ரிலீஸின் போது நிச்சயம் படத்தில் என் குரல் இருக்கும். ராம்கியின் மிகப்பெரிய ரசிகன் நான். அவருடைய கதாபாத்திரம் படத்தில் மிக முக்கியமானது. இரண்டு வருடங்களாக வெங்கியுடன் பணிபுரிந்திருக்கிறேன். இப்போது வெங்கி என்னுடைய பிரதர். பாஸ்கர் வாழ்க்கையில் முக்கியமான பங்கு மீனாட்சி செளத்ரிக்கு உண்டு. படம் முழுக்க வருகிறார். எனது மகனாக ரித்விக் நடித்திருக்கிறார். இந்த வயதில் மிகவும் திறமையான நடிகராக இருக்கிறார். நீண்ட நாட்களுக்குப் பிறகு தமிழ் படம் என்பதால் என் மனதுக்கு நெருக்கமாக உள்ளது. தீபாவளிக்கு ‘அமரன்’, ‘பிரதர்’, ‘ப்ளெடி பெக்கர்’ படங்களும் வருகிறது. இதில் ‘லக்கி பாஸ்கர்’ படமும் பார்த்து மகிழ்ச்சியாக இருங்கள் என்றார்.
டான் கிரியேசன்ஸ் L. கணேஷ் தயாரிப்பில், அறிமுக இயக்குனர் அப்பாத்துரை பாரதிராஜா இயக்கும் புதிய படத்தின் துவக்கவிழா சென்னையில் படபூஜையுடன் துவங்கியது. விழாவில் கழுகு படத்தின் இயக்குனர் சத்யசிவா கலந்துகொண்டு கிளாப் அடித்து துவக்கி வைத்தார். நடிகர் கிருஷ்ணா நடிக்கும் 23 […]
சினிமாடான் கிரியேசன்ஸ் L. கணேஷ் தயாரிப்பில், அறிமுக இயக்குனர் அப்பாத்துரை பாரதிராஜா இயக்கும் புதிய படத்தின் துவக்கவிழா சென்னையில் படபூஜையுடன் துவங்கியது. விழாவில் கழுகு படத்தின் இயக்குனர் சத்யசிவா கலந்துகொண்டு கிளாப் அடித்து துவக்கி வைத்தார்.
நடிகர் கிருஷ்ணா நடிக்கும் 23 வது படமாக இந்தபடம் துவங்கியிருக்கிறார்கள்.
வர்ஷா விஷ்வநாத் கதாநாயகியாக நடிக்கிறார்

கிராமத்துக் கதையாக உருவாகவிருக்கும் இந்தப்படம் திருச்சி மற்றும் மதுரை புறநகர் பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெற உள்ளது. சஸ்பென்ஸ் மற்றும் ஆக்ஷன் நிறைந்த கமர்சியல் படமாக அனைவரும் ரசிக்கும் படமாக இருக்கும் என்கிறார் படத்தின் இயக்குனர் அப்பாத்துரை பாரதிராஜா.

விழாவில் இயக்குனர் அப்பாத்துரை பாரதிராஜா, ஒளிப்பதிவாளர் நாகர்ஜூன், இசையமைப்பாளர் சாம் cs,
கலை இயக்குனர் பாப்ப நாடு C . உதயகுமார், எடிட்டர் வெற்றி கிருஷ்ணன்,
மேனேஜர் துரை சண்முகம் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
தொடக்கப் பள்ளி தொடங்கி, அதனை நடுநிலைப் பள்ளியாக உயர்த்தி, அது உயர்நிலைப் பள்ளியாக உயர்வது வரை, கல்விக்கு எதிரானவர்கள் நடத்தும் சூழ்ச்சிகள் எதிர்ப்புகள், போராட்டங்கள், வலிகள் என்பனவற்றைக் கருவாகக் கொண்டு, அவற்றைச் சரியான முறையில் காட்சிப்படுத்தி இருக்கும் திரைப்படம் சார். ஒரு […]
விமர்சனம்தொடக்கப் பள்ளி தொடங்கி, அதனை நடுநிலைப் பள்ளியாக உயர்த்தி, அது உயர்நிலைப் பள்ளியாக உயர்வது வரை, கல்விக்கு எதிரானவர்கள் நடத்தும் சூழ்ச்சிகள் எதிர்ப்புகள், போராட்டங்கள், வலிகள் என்பனவற்றைக் கருவாகக் கொண்டு, அவற்றைச் சரியான முறையில் காட்சிப்படுத்தி இருக்கும் திரைப்படம் சார்.
ஒரு கிராமத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் குழந்தைகளுக்குக் கல்வி கொடுக்க நினைக்கிறார் ஒருவர். அது அவ்வூரில் இருக்கும் உயர் சாதியினருக்குப் பிடிக்கவில்லை. பல்வேறு இடையூறுகள் கொடுக்கிறார்கள். தலைமுறைகள் தாண்டியும் தொடரும் இச்சிக்கல் மூன்றாம் தலைமுறையினருடன் முடிவுக்கு வருகிறது. அது எப்படி ? என்பதைச் சொல்லியிருப்பதுதான் சார் திரைப்படம்.

நாயகனாக நடித்திருக்கும் விமல், துறு துறு இளைஞராகத் தொடங்கி பொறுப்பான ஆசிரியராக மாறும் கதாபாத்திரம் ஏற்றிருக்கிறார். எல்லா நிலைகளிலும் பொருத்தமாக நடித்து தன்னை நிருபித்திருக்கிறார். இறுதிக்காட்சியில் அவர் எடுக்கும் விஸ்வரூபம் அவருடைய நாயக பிம்பத்தைப் பன்மடங்கு உயர்த்தும் விதமாக அமைந்திருக்கிறது.
நாயகியாக நடித்திருக்கும் சாயாதேவியை படத்துக்கும், பாடல்களுக்கும் ஒரு நாயகி தேவை என்பதற்காக வைத்திருக்கிறார்கள் என்று எண்ணும் நேரத்தில், கதைக்குள்ளும் அவரைக் கொண்டு வந்துவிட்டார்கள்.
அவரும் இயல்பாக நடித்து இருக்கிறார்.
கறுப்புச் சட்டையோடு பள்ளி ஆசிரியராக வரும் நடிகர் சரவணன் நடுநிலைப்பள்ளியை உயர்நிலைப்பள்ளியாக்கத் துடிக்கிறார். அவர் பேசும் வசனங்கள், நடத்தும் பாடங்கள், மனநிலை தவறியவராக நடிக்கும் நடிப்பு ஆகியனவற்றில் முத்திரை பதிக்கிறார்.
வ.ஐ.ச. ஜெயபாலன் மற்றும் தயாரிப்பாளர் சிராஜ் ஆகியோர் எதிர்மறை வேடம் ஏற்றிருக்கிறார்கள். எதிரியை அடுத்துக் கெடுக்கும் முயற்சியில் இறங்கும் சிராஜ் அதற்கேற்ற வகையில் நடித்து அந்தப் பாத்திரத்துக்குப் பலம் சேர்த்திருக்கிறார்.

ரமா, எலிசபெத், சரவணசக்தி,
கஜராஜ் உள்ளிட்ட பிற நடிகர்களும் இயல்பாக நடித்திருக்கிறார்கள்.
இனியன் ஒளிப்பதிவில், காட்சிகளில் தெளிவு, திரைக்கதைக்குப் பலம் கூட்டியிருக்கிறார்
சித்துகுமார் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். கதையின் கருத்துகளை பாடல்வரிகளிலும் வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.
எழுதி இயக்கியிருக்கிறார் போஸ்வெங்கட். கிராமங்களில் இன்றும் நிலவும் சாதிய ஏற்றத்தாழ்வுகள் அவற்றின் விளைவுகள் ஆகியனவற்றைப் பின்புலமாக வைத்து கல்வியை முன்னால் நிறுத்தி கதை சொல்கிறார். கஜராஜ் கதாபாத்திரத்தை வைத்து ஆதிக்க சாதியினருள் இருக்கும் ஜனநாயக சக்திகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி இருக்கிறார்.
கல்விக்கு எதிராக கடவுள் பக்தியை முன்னிறுத்தி சூழ்ச்சி செய்வதாகச் சொல்லியிருக்கிறார். சிறுதெய்வ வழிபாடுகள் வர்ணாஸ்ரமத்துக்குள் வராது என்பதைக் கவனத்தில் கொண்டிருக்கலாம்.