0 10 mths

திருப்பூர் மாவட்டம்,மடத்துக்குளம் அடுத்துள்ள காரத்தொழுவு கிராமத்தில் அஇஅதிமுக சார்பில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 77வது பிறந்தநாளை சிறப்பிக்கும் வகையில் அன்னதானம் நிகழ்ச்சி நடைபெற்றது‌.

முன்னதாக அருள்மிகு அழகுநாச்சியம்மன் கோயிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜைகள் செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மடத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினரும், திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் சி.மகேந்திரன், காரத்தொழுவு கிராமத்தை சேர்ந்தவரான நடராஜ், முத்து தம்பதியினருக்கு பிறந்த குழந்தைக்கு சஷ்டிகா என பெயர் சூட்டினார்‌.

இதனையடுத்து அன்னதானம் நிகழ்ச்சியை துவக்கி வைத்து பொதுமக்களுக்கு உணவுகளை பரிமாறினார். அதனை தொடர்ந்து அவர் கூறியதாவது. இந்து சமய அறநிலையத்துறை சார்பாக அழகுநாச்சியம்மன் கோயிலில் நாள்தோறும் 25 பேருக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. இது மிக குறைவான எண்ணிக்கை ஆகும். குறைந்தது நூறு பேருக்கு அன்னதானம் வழங்க வேண்டும். அது சம்பந்தமாக இந்துசமய அறநிலையத்துறை அமைச்சருக்கு கடிதம் மூலமாக தெரிவிக்கப்பட்டு, விரைவில் நூறு பேருக்கு நாள்தோறும் அன்னதானம் வழங்க ஏற்பாடு செய்யப்படும் எனக்கூறினார்.

இந்நிகழ்ச்சியில் மடத்துக்குளம் வடக்கு ஒன்றிய செயலாளர் காளீஸ்வரன், திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட கைத்தறி நெசவாளர் அணி செயலாளர் கண்ணன் (எ) ஆர்.கேபாலகிருஷ்ணன், தாராபுரம் நகர கழக செயலாளர் சி.ராஜேந்திரன், மடத்துக்குளம் வடக்கு ஒன்றிய துணை செயலாளர் எஸ்.சரவணகுமார், கணியூர் பேரூர் கழக செயலாளர் டி.சரவணன் உள்ளிட்ட நிர்வாகிகள், கிராம பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *